20
Nov
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம்… 4 வருடத்தில் 4 ஆலோசகர்களுக்கு 4 கோடி சம்பளம்… ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்!! கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில், நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகளில், நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் தரப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த ஆட்சி ஏராளமான ஊழல்களும் முறைகேடுகளும் நடந்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களையும் முறைகேடுகளையும் களைய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில், நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகளில், நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் தரப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 1,142 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பில் 73 பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, இதுவரை 322.62 கோடி ரூபாய் மதிப்பிலான 56…
