சினிமா

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம்… 4 வருடத்தில் 4 ஆலோசகர்களுக்கு 4 கோடி சம்பளம்… ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்!! கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில், நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகளில், நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் தரப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த ஆட்சி ஏராளமான ஊழல்களும் முறைகேடுகளும் நடந்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களையும் முறைகேடுகளையும் களைய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில், நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகளில், நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் தரப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 1,142 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பில் 73 பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, இதுவரை 322.62 கோடி ரூபாய் மதிப்பிலான 56…
Read More
விஜய் சேதுபதி கதை சொல்லும் ‘கடைசீல பிரியாணி’…

விஜய் சேதுபதி கதை சொல்லும் ‘கடைசீல பிரியாணி’…

நிஷாந்த் கலிதிண்டியின் கடசீல பிரியாணி முழுக்க முழுக்க சினிமா விறுவிறுப்பும், ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை கவர்ந்து இழுத்துச் செல்லும். இருண்ட காமிக் அதிர்வுடன் கூடிய த்ரில்லர் போல இந்த படம் விரிவடைகிறது மற்றும் வண்ணமயமான கதாபாத்திரங்களால் நிரம்பியுள்ளது. பெரிய பாண்டியின் கொதித்தெழுந்த ஆத்திரம் இருந்தபோதிலும், பாண்டி சகோதரர்கள் தங்கள் லீக்கிலிருந்து வெளியேறும் ஏதோவொன்றில் இறங்கிய புத்திசாலித்தனமான மனிதர்களாக வருகிறார்கள். எதிரி மிகவும் வன்முறையான ஒரு மனிதன், அவர் ஒரே நேரத்தில் பயங்கரமாகவும் கேலிச்சித்திரமாகவும் உணர்கிறார். ஒளிப்பதிவு இயக்கவியல் (கதாப்பாத்திரங்களுடன் கேமரா நகரும் போது, ​​நாம் அவர்களுடன் சேர்ந்து நகர்வதைப் போல உணர்கிறோம்) மற்றும் மிகவும் கச்சிதமாக (ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப் மற்றும் ஆசீம் முகமது உருவாக்கும் காட்சி தொனி பளபளப்பாகவோ அல்லது மோசமான புதுப்பாணியானதாகவோ இல்லை, ஆனால் உணர்கிறது. ஃபிலிம் ஸ்டாக் மீது யாரோ மணல துகள்கள் கொண்ட காகிதத்தை தேய்த்தது போல). கதாபாத்திரங்கள் அனைத்தும் கரடுமுரடான விளிம்புகள்…
Read More

ஜாக்கிரதை, நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!

நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பது மட்டும் நிச்சயம். நம்மில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.   அண்மையில் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள ஒரு முடிவு நமது நாட்டின் ஜனநாயக உணர்வுகளின் மீதான தாக்குதலாக அமைந்திருக்கிறது. மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசு என்பது ஆபிரஹாம் லிங்கன் ஜனநாயக அரசுக்குக் கொடுத்த அற்புதமான விளக்கம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த நாட்டை விட்டுச் சென்ற பிறகு நமக்கு அமையும் அரசு இத்தகைய ஜனநாயக உணர்வு கொண்ட அரசாக இருக்கும் என்று நாம் நம்பினோம். கடந்த 70 ஆண்டுகளில் இந்த நம்பிக்கை பல முறை ஆட்டம் கண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அது மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது.இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்த பாஜக, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. 40 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்களின் ஆதரவைப் பெற்ற அக்கட்சி பெரும்பான்மை வாக்காளர்களின் விருப்பத்தின் பேரில் தனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்திருப்பதாகச் சொல்லிக்கொள்கிறது. பெரும்பான்மை பெறும்…
Read More
ஸ்மார்ட் சிட்டி ஊழல் ? சிக்குகிறார் வேலுமணி? சென்னையில் ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்னு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அந்தப் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனங்கள் இப்போது ஆடிப் போயிருக்காங்க. மேலும் ஒப்பந்தத்தை நிறுவனங்களுக்கு கொடுக்க காரணமான அதிகாரிகள் முதல் அப்போது அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி வரை பலர் இந்த விவகாரத்தில் சிக்குவாங்கங்கிறாங்க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானதாக கூறப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தத்தில் பணிகள் கொடுக்கப்பட்டதாக தெரியுது. அந்த வகையில் சென்னை தி.நகர் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தப் பணியை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்ட பெரிய நிறுவனத்துக்கு மொத்தமாக கொடுக்கப்பட்டு, பிறகு அந்த நிறுவனம் பணிகளை சப் காண்ட்டிராக்ட் முறையில் பிரித்து கொடுத்ததாக சொல்லப்படுது. மனிதர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் உருவாக்குவதன் அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்தவகையில் எங்கு ஸ்மார்ட்…
Read More
அரசு வேலை வாங்கித்தர்றேன்னு சொல்லி ரூ70 லட்சம் மோசடி; அதிமுக மாஜி அமைச்சர் சரோஜா தலைமறைவு? அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ70 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வர்றாங்க. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த அதிமுகவை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் சரோஜா. இவர், அமைச்சராக இருந்த போது சத்துணவு திட்டத்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று கொண்டு மோசடி செஞ்சிட்டதா அவரது உறவினர் குணசீலன் பரபரப்பு புகார் அளிச்சிருந்தாரு. இதன்பேரில் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் மேல மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செஞ்சிருக்காங்க. இந்த புகாரின் பேரில் ரூ70 லட்சம் வரை பலரிடம் சரோஜா பணம் வாங்கி கொண்டு மோசடி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தவுடன், சரோஜா மற்றும் அவரது…
Read More
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் படம் பற்றிய பேச்சுகள் இன்னமும் முடியவில்லை. அந்த படத்தில் பழங்குடியின இளைஞர் ராஜாக்கண்ணு என்பவரை கொலை செய்த காவல்துறை அதிகாரியின் உண்மையான பெயரான அந்தோணிசாமி என்பதற்கு பதில் குருமூர்த்தி என்று சூட்டப்பட்ட இருக்கும். இந்த படத்தில் வன்னியர் சமுதாயத்தை திட்டமிட்டு இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் எழுப்பி இருந்தார். அவரது கேள்விகள் பற்றிய விமர்சனங்கள் மீம்சுகளாக மாறி இணையத்தில் உலா வந்தன. படைப்பு சுதந்திரத்தில் தலையிட வேண்டும் என்றும் கருத்துகள் கூறப்பட்டன. உங்க ஜாதிக்காரங்க எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்தீங்க... அன்புமணியை அட்டாக் செய்த ஜோதிகா..! உங்களுக்கு அடிமையா பத்து பேர்... அடியாளுங்களா பத்து பேரை உருவாக்கியிருக்கீங்களே தவிர வேறு என்ன செய்திருக்கீங்க தலைவரே பதில் சொல்லுங்க நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் படம்…
Read More
5 ஆயிரம் கோடியை வாயில் போட்ட S.P வேலுமணி ? வேலுமணி தப்பிக்க வாய்ப்பில்லை. ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை நிச்சயம் ? ஸ்டாலின் அதிரடி!! 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்ற சென்னையின் முக்கிய நகர்களில் உள்ள சாலைகள் ஒரு நாள் மழைக்கே தாக்குபிடிக்காமல் வெள்ளக்காடாக மாறியது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் மூன்றாவது நாளாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. தியாகராயர் நகர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் தவிச்சுகிட்டு வர்றாங்க.சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி திநகர்லேயே முகாமிட்டு மழை நீரை வெளியேற்றும் முயற்சில இருக்காரு.யாரோ செஞ்சு தப்புக்கு யாருக்கு தண்டனைன்னு பாருங்க. தியாகராயர் நகரில் முக்கிய சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரால் போக்குவரத்து பாதிப்போட வியாபாரமும்…
Read More
5 ஆண்டில் 5 ஆயிரம் கோடியை வாயில் போட்ட S.P வேலுமணி..ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க மாட்டார்.. கதறும் மாஜி அமைச்சர். இது அனைத்தையும் தெரிந்துகொண்டு எதற்காக திமுக வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்கிறது என்று புரியவில்லை, எஸ். பி வேலுமணி மீது திமுக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இல்லை, இந்த மழை வெள்ளத்திற்கு பிறகாவது ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது முதலமைச்சர் ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்காதது அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல் கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்.பி வேலுமணி ஊழலுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளே இப்போது மாநகராட்சியில் அதிகாரிகளாக இருக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.…
Read More

பச்சைக்கொடி காட்டிய விஜய்.. பக்காவா பிளான் போட்ட விஜய் மக்கள் இயக்கம். பதறும் திமுக, அதிமுக.

நகராட்சித் தேர்தல்ல விஜய் மக்கள் இயக்கம். போட்டி ? பதறும் திமுக, அதிமுக.. இப்போதிலிருந்தே விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் களம் இறங்கி விட்டதால் வருகின்ற நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிக அளவில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக தெரியுது. நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் நகராட்சிமன்றத் தேர்தலையும் குறிவைத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகமாக களமிறங்கியுள்ளனர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் முகாமில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமா வேலை செய்ய அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 169 பேர் போட்டியிட்டாங்க., அதில் 129 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்ற…
Read More
தமிழக அரசியலில் அனாதையாகும் அதிமுக? பாமகவைப் போல கூட்டணியை முறிக்கும் பாஜக..? ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததுமே கூட்டணியிலிருந்து வெளியேறுறதப் பத்தி பாஜக தலைவர்கள் வெளிப்படையாக கருத்து சொல்லிக்கிட்டே வந்தாங்க.. சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் அதிமுகவை எதிர்த்து பாஜகவினர் களமிறங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இப்போ நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நோக்கில் தான் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.கர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் விதமாக, தங்கள் கட்சியில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் விருப்ப மனுக்களை பெற உள்ளது பாரதிய ஜனதா கட்சி. தேர்தல்களுக்கு முன் அனைத்து கட்சிகளும் செய்யும் வழக்கமான நடைமுறை தான்னாலும், பாரதிய ஜனதா கட்சித் தலைமையிடமான கமலாலயத்திலிருந்து வரும் தகவல் வேறு விதமா இருக்குது. சட்டசபை தேர்தல் சமயத்தில், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், அவர்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கலைங்கிற மனக்கசப்பு இருந்தது.…
Read More