சினிமா

தமிழகத்தில் கொரோனா பிளாஸ்மா சிகிச்சை!

தமிழகத்தில் கொரோனா பிளாஸ்மா சிகிச்சை!

தமிழகத்தில் கொரோனா பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்து இருக்கிறது. வேகமாக குணமாகும் கொரோனா நோயாளிகள்... இதான் காரணமா? கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா சிகிச்சை தற்போது உலகம் முழுக்க பிரபலம் அடைந்து வருகிறது. இந்த சிகிச்சையை மேற்கொள்ள உலகம் முழுக்க பல நாடுகள் முயன்று வருகிறது. ஏற்கனவே தென்கொரியாவில் இந்த சிகிச்சை மூலம் பலர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அமெரிக்காவிலும் தற்போது இதை வைத்து சோதனைகளை செய்து வருகிறார்கள். விரைவில் அங்கும் பிளாஸ்மா கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்று கூறுகிறார்கள். பிளாஸ்மா தெரபி என்பது ஒருவரின் ரத்தத்தில் இருந்து இன்னொருவரின் ரத்த செல்களுக்கு ஆண்டிபாடிகளை கடத்துவது ஆகும். அதாவது ஒருவரின் ரத்தத்தின் பிளாஸ்மாவில் இருக்கும் எதிர்ப்பு சக்தி செல்களை இன்னொருவரின் ரத்தத்திற்கு அனுப்புவார்கள். பொதுவாக கொரோனா தாக்கி அதில் இருந்து குணமடைந்த ஒருவரின் உடலில் அந்த கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி செல்கள் அதிகம் இருக்கும். இந்த…
Read More
மீண்டும் திறக்கப்படுமா தியேட்டர்கள் ?

மீண்டும் திறக்கப்படுமா தியேட்டர்கள் ?

திரைப்பட தயாரிப்பு அதிகம் ரிஸ்க் உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள்.அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும் அப்படத்தை வெளியிட யாரும் முன்வருவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இத்தகைய பிரச்சனைகள் பெரிய நடிகர்கள்-இயக்குனர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை.இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். ஹிந்தி, தெலுங்கு மற்றும் பல மொழி திரைப்படங்களை இந்த கொரோனா லாக் டவுன் சூழ்நிலையில் அங்குள்ள தயாரிப்பாளர்கள் அவர்களின்…
Read More
நாட்டிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட சேனலாக மாறிய தூர்தர்ஷன் !

நாட்டிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட சேனலாக மாறிய தூர்தர்ஷன் !

கடந்த வாரத்தில் நாட்டிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட சேனலாக தூர்தர்ஷன் சேனல் மாறியுள்ளதாக தொலைக்காட்சி பார்வையாளர் ஆய்வு அமைப்பு (பிஏஆர்சி) தெரிவித்துள்ளது.கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி 21 நாட்கள் லாக் டவுனை பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது மக்கள் வீட்டுக்குள்ளே இருக்கும் விதத்தில் மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தத் தொடரால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலையும் மாலையும் ஒளிபரப்பான ராமாயணத் தொடரை மக்கள் ஆர்வத்துடன் பார்த்ததால், பார்வையாளர்கள் சதவீத்தில் 40 சதவீத வளர்ச்சியை தூர்தர்ஷன் சேனல் பெற்றுள்ளது. தூர்தர்ஷன் சேனல் மட்டுமல்லாமல் தனியார் சேனல்களுக்கும் பார்வையாளர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர் என தொலைக்காட்சி பார்வையாளர் ஆய்வு அமைப்பு (பிஏஆர்சி) தெரிவித்துள்ளது.ராமாயணம் மட்டுமல்லாமல் மகாபாரதம், சக்திமான், புனியாத் ஆகிய தொடர்களையும் மக்கள் விரும்பிப் பார்த்துள்ளனர். இதில் தூர்தர்ஷன் சேனலுக்கு ராமாயணம், மகாபாரதவ்ம் தொடர்கள்தான் பெரும் பார்வையாளர்களைப்…
Read More
அடுத்தப் படத்திலும் மிரட்டலுக்குப் பஞ்சம் இருக்காது ? இயக்குநர் மோகன் ஜி.!

அடுத்தப் படத்திலும் மிரட்டலுக்குப் பஞ்சம் இருக்காது ? இயக்குநர் மோகன் ஜி.!

நாடகக் காதலை மையமாக வைத்து திரவுபதி படத்தை எடுத்திருந்தார் இயக்குநர் மோகன் ஜி. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே பெரும் சர்ச்சையில் சிக்கியது. இருந்தபோதும், அந்த சர்ச்சைகளே படத்துக்கு மிகப் பெரிய விளம்பரத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா, ஜீவா ரவி, பாரதி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்க, ஜுபின் படத்துக்கு இசையமைத்திருந்தார். கூட்டு முதலீட்டின் கீழ் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரிலீசாகி பெரும் வெற்றி பெற்றது. கிட்டதட்ட படம் பத்து கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்தது. படத்துக்கு முதலீடு என்பது மிகவும் குறைவுதான். ஒரு கோடி ரூபாக்கும் கீழாகவே செலவு இருந்தது.இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை யாரும் வாங்க முன் வரவில்லை எனக் கூறி, தன்னுடைய ஆதங்கத்தை டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் மோகன் ஜி. இதையடுத்து, படம் சாட்டிலைட் டி.வி.,க்களில் வெளியிட முடியாத அளவுக்கு மோசமாக இருந்ததுதான் காரணம் என பலரும் இயக்குநர் மோகன்…
Read More
ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் YES BANK ? PHONE PE க்கு பாதிப்பு?

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் YES BANK ? PHONE PE க்கு பாதிப்பு?

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த ஆண்டு அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அதிரடி காட்டிய ரிசர்வ் வங்கி. இந்த நிலையில் வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் மாட்டித் தவிக்கும் Yes Bank, கடந்த ஆண்டு ரூ.1,500 கோடி இழப்பை சந்தித்தது. இதன் காரணமாக அந்த வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. இதனால், Yes Bank-யுடன் கூட்டு வைத்திருந்த PhonePe போன்ற செயலிகளும் பாதிப்படைந்துள்ளன. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வங்கியின் மூலதனத்தை பெருக்கவும், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மீட்டெடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் அடுத்த 30 நாட்களுக்கு Yes Bank நிர்வாகம் செயல்படும் என அறிவித்தது. இதையடுத்து வரும் ஏப்ரல்…
Read More
சொத்து வாங்குபவர்கள் கவனியுங்கள்!

சொத்து வாங்குபவர்கள் கவனியுங்கள்!

ஒரு முன்னோட்டம் அவிநாசி பாபு என்பவரிடமிருந்து ஆனந்த் என்பவர், கட்டடம் / காலி மனை போன்று ஒரு சொத்து வாங்க விரும்புகிறார். அதன் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். இந்திய வருமான வரிச்சட்டப்படி, அசையா சொத்து விற்கும்போது மூலதன லாப வரி செலுத்துவதற்கு அவிநாசி பாபுதான் பொறுப்பாகிறார். ஆனால் சொத்தை வாங்கும் ஆனந்த் பணத்தை கொடுக்கும் போது அதற்குரிய வரி பிடித்தம் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்.பின்னர் அந்த தொகையை பாபு பெயரில் வருமான வரியாக செலுத்த வேண்டும். பாபு தனது ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது அதை கழித்துக்கொள்ளலாம். அசையா சொத்துக்கள் வாங்கும்போது பின்பற்றவேண்டிய வரி நடைமுறைகள் இவ்வளவு சிம்பிள்தாங்க. இனி வரி விவரங்களை பார்ப்போம்; 'கருப்பு' தடுக்க வரிப்பிடித்தம் இந்தியாவில் நடக்கும் கருப்பு பணப்புழக்கத்தில் கணிசமான தொகை அசையாச் சொத்து பரிவர்த்தனைகளில் நடைபெறுவதாக நம்பப்படுகிறது. வருமான வரித்துறை கருப்பு பணத்தின் பயன்பாட்டை…
Read More
மொபைல்போன் தொழிலுக்கு ரூ.48,000 கோடி! 2 லட்சம் பேருக்கு வேலை !!

மொபைல்போன் தொழிலுக்கு ரூ.48,000 கோடி! 2 லட்சம் பேருக்கு வேலை !!

இந்தியாவை,மொபைல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு மையமாக மாற்றும் நோக்கில், 48ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தை, மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது.உலகளவில், மொபைல் போன் தயாரிப்பில்,சீனா முதலிடத்திலும்,இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. அதேசமயம் , மொபைல் போன் ஏற்றுமதியில், இந்தியா, ‘டாப் 10’ பட்டியலில் கூட இடம் பெறாத அளவிற்கு மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ், உள்நாட்டில் மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, விற்பனை அடிப்படையில், ஐந்து ஆண்டுகளுக்கு, 48ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மத்திய நிதி மற்றும் வர்த்தக அமைச்சகம், ‘நிடி ஆயோக்’ ஆகியவை இணைந்து தயாரித்து உள்ள இந்த திட்டத்தை, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், உதிரிபாகங்கள் தயாரிப்பில், சீனா, வியட்னாம் போன்ற நாடுகள் முன்னணியில்…
Read More
என்னவாயிற்று தமிழர்களுக்கு? பணப்புழக்கம்  ஏன் இங்கு இல்லை.?.

என்னவாயிற்று தமிழர்களுக்கு? பணப்புழக்கம் ஏன் இங்கு இல்லை.?.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது இதற்கு காரணம் எது ஏன் ? பல நண்பர்கள் மோடி தான் காரணம் என்று சொல்கிறார்கள். எல்லா தொழில்களிலும்.தமிழர்களுக்கு திமிரு அதிகம் ஆகிவிட்டது அதனால் உடல் உழைப்பை விரும்புவதில்லை.... அதோடு மது மற்றும் சோம்பேறித்தனம் லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூரு ரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலை. அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம், அரசியல்வாதிகளைப் போல் கொள்ளையடித்து ஏமாற்றி பொய் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல் ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன்.அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன். வண்டி வாகனங்கள் இதை யெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த தமிழர்கள் இப்பொழுது வேலை செய்வது இல்லை,…
Read More
‘வோடபோன் ஐடியா’ நிறுவனம் மூச்சு விட வழி பிறந்துள்ளது!

‘வோடபோன் ஐடியா’ நிறுவனம் மூச்சு விட வழி பிறந்துள்ளது!

மொபைல் கோபுர வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களான, ‘இண்டஸ் டவர்ஸ் மற்றும்பார்தி இன்ப்ராடெல்’ ஆகியவற்றின் இணைப்புக்கு, தொலைதொடர்பு துறை அனுமதி வழங்கி இருக்கிறது. இதையடுத்து, ‘வோடபோன் ஐடியா’ மூச்சு விடுவதற்கு வழி பிறந்து உள்ளது.இந்த இரு நிறுவனங்களின் இணைப்புக்கு, தொலைதொடர்பு துறை அனுமதி வழங்கி இருப்பதை அடுத்து, வோடபோன் ஐடியா நிறுவனம், அதன் வசம் இருக்கும், இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து, நிதி திரட்டிக்கொள்ளும்வாய்ப்பு உருவாகி இருக்கிறது.வோடபோன் ஐடியாவிடம், இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின், 11.15 சதவீத பங்குகள் உள்ளன. இந்த பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக, வோடபோன் ஐடியா, 4,500 கோடி ரூபாய் திரட்ட முடியும் என்கின்றனர் இத்துறையைச் சேர்ந்தவர்கள். இரு நிறுவனங்களின்இணைப்புக்கு அனுமதி கிடைத்திருக்கும் நிலையில், ‘பார்தி இன்ப்ராடெல்’ நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம், நாளை அன்று கூடி, இணைப்பு பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளது.இந்த இணைப்பை அடுத்து, புதிய நிறுவனம் உருவாகும். புதிய நிறுவனத்தின் வசம் இருக்கும்…
Read More
செல்போன் டவர் வைக்க 80 லட்சம் அட்வான்ஸ்! மாசம் 50,000 வாடகை! உஷார்!!

செல்போன் டவர் வைக்க 80 லட்சம் அட்வான்ஸ்! மாசம் 50,000 வாடகை! உஷார்!!

இணையதளம் முழுக்கவே வோடோபோன், ஏர்டெல் நெட்வொர்க் தனது சேவையைத் தொடர முடியாமல் தத்தளித்து வருகிறது என்று செய்திகள் வாட்ஸ்-அப், ட்விட்டர் என்று வலம் வந்துக் கொண்டிருக்கிறது. 92,000 கோடி ரூபாய் பாக்கித் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று அதிரடியாக வசூல் வேட்டையில் இறங்கியிருக்கும் நிலையில், இந்த செல்போன் நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஒரு நெட்வொர்க் சேவைக்கு மாறி வரும் அளவிற்கு செல்போன் பயனாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், பேராசையுடன் காத்திருக்கும் நில உரிமையாளர்களுக்கு பொறி வைத்து ஏமாற்றுவதற்கு ஒரு கும்பல் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. பிரபல செல்போன் நிறுவனங்களின் டவர் வைப்பதற்கு ஒன்றிலிருந்து, ஒன்றரை செண்ட் வரையில் நிலம் தேவைப்படுகிறது. காலி இடமாக இருந்தாலும் சரி, அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும் சரி. அபார்ட்மெண்ட்டாக இருந்தால், குடியிருப்பவர்கள் அத்தனைப் பேரும் வாடகையைப் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளைச் சொல்லி வலை விரிக்கிறார்கள். குறைந்தது 15லிருந்து 20…
Read More