ஆன்மீகம்

சாய் சஹஸ்ரநாமம் தெலுங்கு புத்தகத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார் !

சாய் சஹஸ்ரநாமம் தெலுங்கு புத்தகத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார் !

சாய் சஹஸ்ரநாமம் தெலுங்கு புத்தகத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார் அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், ஹரிஜன சேவக் சங்க தமிழ்நாடு மாநில தலைவர் பிடிக்கிட்டி மாருதி, திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ் சாய் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்.சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்சங்கர் தெருவில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'சாய் சஹஸ்ரநாமம்' புத்தகத்தின் தெலுங்கு பதிப்பை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். ஸ்ரீ ஷீரடி சாய் சேவா சமாஜ் தலைவர் பி ஸ்ரீநிவாஸ் இப்புத்தகத்தை தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். புத்தகத்தின் பிரதிகளை ஆளுநரிடம் இருந்து அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் டாக்டர் கிருஷ்ணன், ஹரிஜன சேவக் சங்க தமிழ்நாடு மாநில தலைவர் பிடிக்கிட்டி மாருதி, பிரபல திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ் சாய் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.புத்தகத்தை சிறப்பாக மொழிபெயர்த்த ஆசிரியர் ஸ்ரீநிவாஸை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு…
Read More
மாமன்னன் ராஜ ராஜ சோழனின் புகழ் பரப்புவோம்! உலகறியச் செய்வோம்!

மாமன்னன் ராஜ ராஜ சோழனின் புகழ் பரப்புவோம்! உலகறியச் செய்வோம்!

    மாமன்னன் ராஜ ராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? சைவம் இந்து மதமா? – பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்று கொண்டிருக்கிறது. சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கி.பி. 8 – ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் என வரையறுத்துள்ளது. 1790 - ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது, கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களை சேர்த்து, சிந்து நதியில் (Indus Valley) இருந்து மருவிய இந்து (Indus) என்ற பெயரிடப்பட்டது. குரங்கிலிருந்து வந்தவன் மனிதன், மனிதகுரங்கு எதிலிருந்து வந்தது? குரங்கு விலங்கு என்றால், விலங்கினத்திற்கு மனிதன் என பெயரிட்டது…
Read More
47,000 ஏக்கர் நிலங்கள் எங்கே?

47,000 ஏக்கர் நிலங்கள் எங்கே?

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களின் விவரங்களை, இணையத்தில் பதிவேற்றும் வேலைகள் நடந்து வருகின்றன. `கோவில் நிலங்களை பயன்படுத்துவோர் குறித்த தகவல்கள் இணையத்தில் இல்லாததால், தவறுகள் நடக்கவே வாய்ப்புகள் அதிகம்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். என்ன நடக்கிறது? சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், ` தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38,600 கோவில்கள் இருந்தாலும் இதில் 331 கோவில்களில் மட்டுமே ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. மற்ற கோவில்களில் வருமானம் என்பதே இல்லை. அதேநேரம், இந்தக் கோவில்களுக்குச் சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் தொடர்பான விவரங்கள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி, கடந்த 1985-87 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கோவில்களுக்கு சொந்தமாக 5.25…
Read More
தைப்பூச விழாவைப் பற்றிப் பார்ப்போம். !

தைப்பூச விழாவைப் பற்றிப் பார்ப்போம். !

தை பூசம் என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில், பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும். முருகனுக்கு உகந்த நாள். தைப்பூச தினம். தைமாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும்.சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடக ராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க, சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடன் இணைந்த பவுர்ணமியில் நிகழும். இந்தச் சிறப்பு மிக்க தினம் தான் தைப் பூச தினம். தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகிறது. சிவசக்தி ஜக்கியம் இந்த நாளிலேயே நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்று கூறப்படுகிறது. அதாவது சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக…
Read More
பிராது கொடுக்கும் வழிபாடு :

பிராது கொடுக்கும் வழிபாடு :

கடலூர் மாவட்டம் மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த இறைவன், தன்னை மனமுருகி மெய்யுருகி வேண்டுவோருக்கு வேண்டியதை அருள்பவன். அந்த அருளாளன் உருவமாகவும் அருவமாகவும் அருள்பாலிக்கும் ஆலயங்கள், நம்முடைய ஆன்மாவுக்கு சக்தி அளிக்கும் கேந்திரங்களாகும். இதை வலியுறுத்தும் விதமாகவே அவ்வை பிராட்டி ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று பாடினார். பண்டைய அரசர்கள் இத்தகைய ஆலயங்களை மையமாக வைத்தே ஆட்சி செய்தனர். இதனால் நாடும் சுபீட்சமாக இருந்தது; நல்லாட்சியும் நடந்தது. அதற்காக எந்த மன்னரும் தன்னிச்சையாக எந்த ஆலயத்தையும் உருவாக்கிவிடவில்லை. புராண வரலாறு அல்லது வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆலயத்தையும் உருவாக்கினர். இப்படிப்பட்ட வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றே ‘கொளஞ்சியப்பர் திருக்கோவில்.’ சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த காடாக இருந்த பகுதியில் உருவாக்கப்பட்ட இவ்வாலயம், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து…
Read More