26
Jul
சென்னை மாநகராட்சியில் ரத்தாகும் ஒப்பந்தங்கள் - எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலா? சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களில் மட்டும் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. `அ.தி.மு.க அரசின் கடைசி சில மாதங்களில் பல தேவையற்ற ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுது. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கல் வரலாம்' என்கின்றார்கள் மாநகராட்சி அதிகாரிகள். என்ன நடக்குது மாநகராட்சியில் ? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிர்வாகரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க அரசு கையில் எடுத்து வருது. இதில், உள்ளாட்சி, பால்வளம், போக்குவரத்து ஆகிய துறைகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துகிட்டே இருக்குது. இதுதவிர, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை, பொதுப்பணித்துறை, சுகாதாரம் என முக்கியமான துறைகளில் நடந்த முறைகேடுகளையும் தீவிரமாக ஆய்வு செஞ்சுக்கிட்டு வர்றாங்க.. இதன் தொடர்ச்சியாக, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய ரெய்டு, அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துச்சு.இந்த…
