08
Aug
*25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து படையில் இணைப்பு – 1,000 பள்ளிகளுக்கு விரிவுபடுத்த இலக்கு**தமிழ்நாடு காவல்துறை போக்குவரத்து வார்டன்ஸ் அமைப்பின் (TPTWO) – சென்னை பெருநகரப் பிரிவு, நகரப் பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை, **சாலை பாதுகாப்பு ரோந்து (Road Safety Patrol – RSP)* பிரிவுகள் மூலம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. 49-வது ஆண்டில் செயல்பட்டு வரும் TPTWO, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு என்ற முன்னோடி முயற்சியில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு, சென்னை மாநகரில் உள்ள *250 பள்ளிகளைச் சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட RSP மாணவர் படையினர்* இம்முயற்சியில் இணைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை, TPTWO அதிகாரிகள் மூலம் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிப்பதை உறுதி செய்து வருகிறது. அந்தந்த பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட *RSP ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர்கள்* இப்பயிற்சிக்கு…
