06
Aug
மருத்துவ சேவை எளிதில் கிடைக்காத கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிபுணத்துவ மருத்துவ உதவியை விரிவாக்கும் நோக்கில், ‘பியாண்ட் ஃப்ரான்டியர்ஸ் டிரஸ்ட்’ (Beyond Frontiers Trust - BFT) என்ற பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்ற, மதச்சார்பற்ற அமைப்பு இன்று சென்னையில் உள்ள எம்எம்ஏ மேலாண்மை மையத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. மூத்த மருத்துவர் முனைவர் எஸ்.சி. சண்டில்யா என்பவரால் தொடங்கப்பட்ட பிஎப்டி அமைப்பு, முதற்கட்டமாக ஜவாது மலையில் தனது பணிகளைத் தொடங்கியது. கரடுமுரடான நிலப்பரப்பு, நீண்ட தூரம் மற்றும் போதிய போக்குவரத்து வசதியின்மை ஆகியவற்றால் அங்குள்ள பல பழங்குடியின மக்களுக்கு நிபுணத்துவ மருத்துவ சேவை கிடைப்பது சவாலாக இருந்தது. இதுவரை நடத்தப்பட்ட 18 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம், இந்த அறக்கட்டளை சுமார் 150 கிராமங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 4,000 மக்களின் வாழ்நாளில் நல்மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பக்கட்ட நோய்க்கண்டறிதல் மற்றும் பரிசோதனைகளுடன் தொடங்கி, தேவையான மருந்துகள், மேல் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள்,…
