18
Sep
நாயகன் ஹரிஷ், டாஸ்மாக் பார் நடத்தி வருவதோடு ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கி அதற்கு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். பொதுவாக பார் நடத்துபவர்கள் அனைத்து பணிகளும் முடிந்த பிறகே மது அருந்துவார்கள், ஆனால் நாயகன் ஹரிஷ், அவரது பாரை திறப்பதற்கு முன்பாகவே மது குடிக்கிறார். எந்த நேரத்திலும் போதையிலேயே இருக்கும் அவரை மருத்துவம் படிக்கும் நாயகி தனலக்ஷ்மி காதலிக்கிறார்.எந்நேரமும் குடியில் மூழ்கி இருக்கும் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு மது கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். அதன் பிறகு அவர்களது வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் கதை. சமூகப் பொறுப்புடன் இப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் மது பழக்கத்தால் பலரது வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சொல்வதற்காக மதுவை குடிப்பதற்கு என்று ஒரு கூட்டத்தை படத்தில் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். ஹீரோ ஹரிஷ் தலைமையில் இயங்கும் அந்தக் கூட்டம் எந்நேரமும் குடியும் கும்மாளமுமாக இருப்பது சற்று…
