06
Nov
வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து: யார் காரணம்? வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கில் திமுக அரசு அக்கறை காட்டலைன்னு வன்னியர் அமைப்புகள் விமர்சிக்கிக்கிறாங்க. அதிமுக அரசு உரிய முறையில் அரசாணை வெளியிடத் தவறிவிட்டதுதான் நீதிமன்றத் தீர்ப்புக்குக் காரணம்னு ம் விமர்சனம் வருது. இந்தத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சொல்லியிருக்கிறாரு. இட ஒதுக்கீட்டில் வன்னியர் உள்ளிட்ட பல சாதியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கின்றாங்க. இதில் தங்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு வேண்டும்னு நீண்ட நாட்களாக வன்னிய இனத்தவர் கேட்டுகிட்டுவந்தாங்க. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக அரசு, வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு அளித்து உத்தரவிட்டது. அதிமுக. கூட்டணி கட்சியான பாமக, தங்களால்தான் இந்த ஒதுக்கீடு அளிக்கப்பட்டது என மகிழ்ந்தது. பிற வன்னிய சமூக…
