சினிமா

‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ – மூன்று திரைப்படங்களின் டீஸர் வெளியீடு –

‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ – மூன்று திரைப்படங்களின் டீஸர் வெளியீடு –

ஈரோஸ் இண்டர்நேஷனல் ஹாட்ரிக்!! ‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று திரைப்படங்களின் டீஸர் வெளியீடு - பிரபு சாலமன் இயக்கத்தில் நாயகனாக ராணா தக்குபதி, முக்கிய வேடத்தில் விஷ்ணு விஷால். வெள்ளித்திரையில் உலகமெங்கும் 02 ஏப்ரல் 2020 முதல்!நம் நாட்டின் பிரசித்திப்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஈரோஸ் இண்டர்நேஷனல், தனித்துவமான மற்றும் முக்கியமான உள்ளடக்கத்தை ஆதரிப்பதிலும், இந்திய சினிமாவை ஒரு முற்போக்கான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்வதிலும் முன்னணி வகிக்கிறது.தற்போது ஈரோஸ் இண்டர்நேஷனல் ஒரே நேரத்தில், தமிழில் ‘காடன்’, தெலுங்கில் ‘அரண்யா’ மற்றும் இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என மூன்று படங்களின் டீஸரை வெளியிட்டு இருக்கிறது! இம்மூன்று படங்களுமே ஒரு மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் எடுத்துரைக்கிறது. அதிலும் குறிப்பாக உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்த மும்மொழி திரைப்படம் உருவாகியிருக்கிறது என்பதால் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.மிகுந்த எதிர்பார்ப்புகளைப்…
Read More
“ஓ மை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு  – ஹைலைட்ஸ்!

“ஓ மை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு – ஹைலைட்ஸ்!

வரும் பிப்ரவரி 14ல் திரைக்கு வர இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். அசோக் செல்வன்–ரித்திகா சிங் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து உள்ளனர். ஜி.டில்லிபாபு தயாரிக்க அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி டில்லி பாபு “காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்துக் கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. ‘ஓ மை கடவுளே’ படம் இன்றைய நாகரிக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இதில் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ் கர், வாணி போஜன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படம், காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.. சிம்பிளாக சொல்வதானால் எல்லோருடமும் இளமை மாறாத ஒரே…
Read More
சென்னையில் 3 நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறை !

சென்னையில் 3 நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறை !

( CBT Therapeutic Supervision Masterclass ) பயிற்சியளிப்பவர் மருத்துவர் Dr . ANDREW BECK , UK , DclinFsych , President - Elect of the British Association of Cognitive and Behavioural Psychotherapists ( BABCP ) , Consultant Clinical Psychologist & BABCP accredited supervisor , UK . மன நலம் சார்ந்த உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு கானும் வகையில் , மூன்று நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறை , 2020 பிப்ரவரி 06 , 07 & 08 ஆகிய தேதிகளில் , சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள “ வெல்கம் ஹோட்டலில் " ( Member ITC ' s Hotel group ) நடைபெற உள்ளது . இங்கிலாந்தில் புகழ்பெற்ற உளவியல் மருத்துவர் மற்றும் BABCP தலைவருமான Dr . ANDREW BECK தலைமையில்…
Read More
குரோனா வைரஸைத் தடுக்கும் ஆயுர் வேத மருந்து கண்டுபிடிப்பு !

குரோனா வைரஸைத் தடுக்கும் ஆயுர் வேத மருந்து கண்டுபிடிப்பு !

உலகில் முதன் முறையாக ஆயுர் வேத முறையில் குரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது , இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருப்பது குரோனா வைரஸ் . இந்த வைரஸ் சீனாவில் பரவியதாக 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி சீன அரசு அறிவித்தது . இதனைத்தொடர்ந்து இந்த வைரஸால் இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர் . மேலும் பல ஆயிரக்கணக்கான சீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது . இந்த வைரஸின் பதிப்புகள் உலகின் 16 நாடுகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது . இந்தியாவில் கேரளாவில் மூன்று பேருக்கு இந்த நோய் தாக்கம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . மேலும் , தமிழகத்தில் குரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது . குரோனா வைரஸ் என்பது ஹச்.ஐ.வி, சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகை வைரஸ் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது . இது…
Read More
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- ரஜினிக்கு சம்மன்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- ரஜினிக்கு சம்மன்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நேரில் பார்வையிட்டு திரும்பும் போது ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் தூத்துக்குடி அலுவலகத்தில் வரும் 25- ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சீமான் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்திய நிலையில் தற்போது ரஜினிக்கும் அனுப்பியுள்ளனராம். அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச்சூடு தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு…
Read More
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்க கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்க கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்க கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா? என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உததரவிட்டுள்ளது. இந்தியாவில் எத்தனை குடும்பங்களுக்கு சொந்த வீடு உள்ளது என்றும், தமிழகத்தில் எத்தனை பேருக்கு சொந்த் வீடு உள்ளது என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
Read More
நாடோடிகள் 2… ஜாதியற்ற ஜனங்களாவோம்..!

நாடோடிகள் 2… ஜாதியற்ற ஜனங்களாவோம்..!

தமிழகத்தை உலுக்கிய சங்கர் கௌசல்யாவின் ஜாதி ஆணவக்கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இது.இதில் தமிழ் சினிமாவுக்கே தேவையான காதல், சமூக பிரச்சினை, அதிரடி சண்டை காட்சிகள், நண்பர்கள், கிராம பஞ்சாயத்து, தோழர் கதை, மக்கள் போராட்டம், காப்பர் கேன்சர் என அனைத்தையும் கலந்து அசத்தியிருக்கிறது சமுத்திரக்கனி மற்றும் சசிகுமாரின் கூட்டணி ஊர் பிரச்சினைகளுக்கு தன் ஊதியத்தை செலவழிக்கும் நல்லவர் சசிகுமார்.இவரின் தோழர்கள் டாக்டர் அஞ்சலி ,பரணி மற்றும் சிலர்.ஊர் பிரச்சினைகளை சசிகுமார் கவனிப்பதால் உறவினர் ஞானசம்பந்தம் பெண் தர மறுக்கிறார். இதனால் வயது ஓடிக் கொண்டே இருக்கிறது.ஒரு கட்டத்தில் பெண் ஓகே சொல்லிவிட்டால் போதும் என் சம்மதம் கூட தேவையில்லை என சொல்கிறார் சசி,அப்போது அவர்களது ஜாதியை சேர்ந்த அதுல்யாவின் பெற்றோர் சம்மதிக்க திருமணம் நடக்கிறது.ஆனால் சாந்தி முகூர்த்த சமயத்தில் ஒரு அதிர்ச்சி குண்டை போடுகிறார் அதுல்யா.இதனால் சசியின் வாழ்க்கையே மாறுகிறது. நாடோடிகள் 2 படத்தை பொருத்தவரை பெரும்பாலான கேரக்டர்கள் படத்தின்…
Read More
ரூ.84 கோடியில், 240 புதிய பஸ்கள் ! முதல்வர் துவக்கி வைத்தார்.!

ரூ.84 கோடியில், 240 புதிய பஸ்கள் ! முதல்வர் துவக்கி வைத்தார்.!

சென்னை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக, 83.83 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட, 240 புதிய பஸ்களின் சேவையை, முதல்வர் இ.பி.எஸ்., கொடியசைத்து துவக்கி வைத்தார்.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு, 37 பஸ்கள்; அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு, 103; விழுப்புரத்திற்கு, 25; சேலத்திற்கு, 10; கோவைக்கு, 20, கும்பகோணத்திற்கு, 35; மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு, தலா, ஐந்து பஸ்கள் என, மொத்தம், 240 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. மோட்டார் வாகன பராமரிப்பு துறை சார்பில், முதல் கட்டமாக, திருச்சி மற்றும் தஞ்சாவூருக்கு, இரண்டு, 'அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்கள்' வாங்கப்பட்டுள்ளன.இவற்றை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார். அத்துடன்,கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில்,திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுாரில், 1.55 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, பஸ் பணிமனை; கோவை போக்குவரத்துக் கழகம் சார்பில், ஊட்டியில், 2 கோடி ரூபாயில் நவீனமயமாக்கப்பட்ட, பஸ் நிலையம் ஆகியவற்றை, முதல்வர், 'வீடியோ கான்பரன்ஸ்'…
Read More
உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. !

உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. !

உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. ! இந்நிகழ்ச்சியில் உற்றான் திரைப்படத்தின் இயக்குநர் ஓ.ராஜாகஜினி, மற்றும் கானா சுதாகர், தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்க மாநிலத் தலைவரும், உற்றான் பட புதுமுக நாயகன் தந்தையுமான டி.எஸ்.ஆர் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளார்கள் கேட்ட கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமாக பதிலளித்தார்.இயக்குநர் ஆக வேண்டும் என்று திரையுலகக்கு வந்த நீங்கள் நடிப்புத் துறைக்கு வந்தது பற்றி நிருபர் கேள்விக்கு பதிலளித்த ரோஷன்: நான் சிறுவயது முதற்கொண்டு சினிமாவை நேசித்தது வருகிறேன்.எனக்கென்று திரைத் துறையில் என்ன வேலையென்றாலும் ஏற்றுக் கொள்ளும் மனபக்குவத்துடன் இருக்கிறேன்.நான் உதவி இயக்குநாகவும் பணியாற்றியிருக்கிறேன்.அடுத்து இயக்குநர், தயாரிப்பாளர் என எந்த பணி அமைத்தாலும் அதை ஈடுபாட்டுடன் செய்வேன்.லைட் பாய் வேலை கிடைத்திருந்தாலும் அதை ஈடுபாட்டுடன் செய்திருப்பேன். எக்காரணம் கொண்டும் நான் நேசிக்கும் சினிமாவை விட்டு விலகியிருக்க மாட்டேன். நான் சிறுவயதில் இயக்குநர்களை கண்டு…
Read More
எம் ஜி இசட் எஸ் எலக்ட்ரிக் எஸ் யூ வி காரை களமிறக்கியுள்ளது. !

எம் ஜி இசட் எஸ் எலக்ட்ரிக் எஸ் யூ வி காரை களமிறக்கியுள்ளது. !

பிரிட்டனை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெக்டர் காருக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதனை தொடர்ந்து எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை களமிறக்கியுள்ளது. கடந்த மாதம் 21ல் முன்பதிவு துவங்கியது. முதல் கட்டமாக ரூ. 50,000 செலுத்தி 2,300 பேர் 'புக்கிங்' செய்துள்ளனர். ஜன. 23ல் விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் 44.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மின் மோட்டார் 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் தரும். பாஸ்ட் சார்ஜர் மூலமாக 50 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்றலாம். முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கி.மீ., துாரம் பயணிக்கலாம். 0 - 100 கி.மீ.,வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டும்.
Read More