சினிமா

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்து, உயர்கல்வித் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இவ்வளாகத்தை Zoho நிறுவனத்தின் இணை நிறுவுநரும் தலைமை விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி தேசிய கவுன்சில் உறுப்பினரும், எமிரேட்ஸ் ஏர்லைன் ஃபவுண்டேஷன் இயக்குநர் குழு உறுப்பினருமான மேதகு அஹ்மத் மீர் ஹாஷிம் அஹ்மத் கூரி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், துபாயைச் சேர்ந்த Economic Group Holdings LLC நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. எம். எப். ராவூஃப் அலியும் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தலைமை தாங்கினார். வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ் முன்னிலை வகித்தார். சென்னையின் தகவல்…
Read More
“என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை அணுகிய விதத்தை நீதிமன்றத்திற்கு நேரில் சென்ற அனுபவம் முழுமையாக மாற்றியது” – நடிகை நிமிஷா சஜயன்!

“என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை அணுகிய விதத்தை நீதிமன்றத்திற்கு நேரில் சென்ற அனுபவம் முழுமையாக மாற்றியது” – நடிகை நிமிஷா சஜயன்!

                                                                         இந்திய திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை தொடர்ந்து நிரூபித்து வருபவர் நிமிஷா சஜயன். வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். வழக்கமான கதாபாத்திரங்களுக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைகளில் நடித்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிகையாக தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். அந்த வரிசையில், சஜீவ் பழூரின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள 'என்ன விலை' திரைப்படத்தில் நிமிஷா சஜயன் வழக்கறிஞராக நடித்துள்ளார். குறிப்பாக நீதிமன்ற காட்சிகளிலும், வசன…
Read More
தறிகெட்டு போய்க் கொண்டிருக்கும் யூ டியுபர்ஸ் உலகம்!

தறிகெட்டு போய்க் கொண்டிருக்கும் யூ டியுபர்ஸ் உலகம்!

இது யூ டியூப் யுகமாக இருக்கிறது. யாரையாவது வம்புக்கு இழுப்பது, அபத்தமான கேள்விகளைக் கேட்பது, மரண வீடுகளில் மைக் பிடிப்பது என ஊடக அறத்திற்குப் புறம்பாக வேலை செய்கிறார்கள் அல்லது செய்ய ஏவிவிடப்படுகின்றனர். தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் பிரபலங்களின் பலவீனம் இவர்களுக்கு மூலதனமாகிறது; நன்மைகளும், தீமைகளும் கலந்து பெருகி வரும் இந்த ‘யூடியூபர்ஸ்’ ஊடக உலகு குறித்த ஒரு அலசல்; சென்னைச் சாலைகளிலோ, பரபரப்பான பொது இடத்திலோ இன்று நாம் அடிக்கடி காணும் ஒரு காட்சி, கையில் ஒரு மைக்கும், தோளிலோ அல்லது கைகளிலோ கனத்த கேமராக்களுடனும் அலைபாயும் கண்கள் கொண்ட இளைஞர் கூட்டம். அவர்களின் முகங்களில் தெரிவது ஊடக உலகிற்குள் நுழைந்து விட்ட பெருமிதம் மட்டுமல்ல; மாறாக, இன்றைய ஓட்டத்தை எப்படியாவது கடந்து விட வேண்டும் என்கிற எளிய மனிதர்களின் பசி கலந்த பதற்றமும் கூட. இன்றைய தமிழகத்தின் மிக முக்கியமான ஒரு சமூக-பொருளாதாரக் காயத்தின்…
Read More
*ஹர்ஷ் மற்றும் சந்தனா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்வை கோலாகலமாக நடத்திய லால்வானி குடும்பம்!

*ஹர்ஷ் மற்றும் சந்தனா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்வை கோலாகலமாக நடத்திய லால்வானி குடும்பம்!

லால்வானி குடும்பம் சார்பில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் திங்கள்கிழமை ஹர்ஷ் மற்றும் சந்தனா ஆகியோரின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் திரைப்படத்துறை, தொழில், சட்டத் துறை என பல்வேறு துறைகளைச சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த வரவேற்பு விழாவை பிரகாஷ் சந்த் லால்வானி, சஞ்சய் லால்வானி, பிரவீன் லால்வானி, சுஷில் லால்வானி மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, இனிய விருந்தோம்பலுடன் உபசரித்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்து கொண்டு, மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழ் திரையுலகில் இருந்து, நடிகர்கள் ஜெயம் ரவி, பாபி சிம்ஹா, சதீஷ், ஸ்ரீகாந்த், கருணாஸ் மற்றும் கென் கருணாஸ் ஆகியோர் வரவேற்பு விழாவில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். மேலும்,…
Read More
Yamaha’s Performance EV Aerox E launched in India at Rs 2.81 lakh!!!

Yamaha’s Performance EV Aerox E launched in India at Rs 2.81 lakh!!!

Developed in India for premium urban mobility, the Aerox E delivers 117-km certified range and 95.5 km/h performance; sales beginning in select cities via Blue Square Showrooms.Reinforcing its commitment to sustainable mobility and building on the momentum of its expanding EV portfolio, India Yamaha Motor (IYM) Pvt. Ltd. today announced the price and availability of the Aerox E, its high-performance electric scooter developed in India for premium urban mobility. Offered in Bluish White Cocktail, the Aerox E will be available at Yamaha Blue Square Showrooms in select cities at a price of Rs 2.81 lakh (Ex-showroom, Delhi). The Aerox E…
Read More
“உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!

“உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!

யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டும் புதிய தலைமுறை கலைஞர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், 'மிஸ்டர் பாரத்' திரைப்படமும் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு கிளிம்ப்ஸில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நகைச்சுவை ததும்ப, தயாரிப்பாளராக இப்படத்தை அறிமுகப்படுத்திய விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் குறித்து நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் தங்களது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். ஒரு திரைப்படத்தின் முதல் அடையாளம் அதன் டைட்டில் தான். 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்திற்கு முதலில் 'மாஸ்டர் பீஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், அதே தலைப்பில் கன்னடம் மற்றும் தெலுங்கில் திரைப்படங்கள் இருந்ததால் மாற்று தலைப்பாக ‘மிஸ்டர் பாரத்‘ தேர்வு செய்தனர். இந்த தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்தார். அந்த தலைப்பு படக்குழுவினருக்கும் மிகவும் பிடித்துவிட்டது.…
Read More
*அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!*

*அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!*

சமீபத்தில் வெளியிடப்பட்ட ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின்  கதைக்களத்தை மேலும் வெளிப்படுத்தும் வகையில் இன்னும் இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் 'சூப்பர் ஹீரோ' திரைப்படத்தை வழங்குகிறார். மேலும், நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் ஆர்வமுள்ள ரெடாக்டட் ஸ்டுடியோஸின் ஷான்ஜன் ஜி, இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். புதுமையான கதைகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் கே.எஸ். சினிஷ். இயக்குநராக 'பலூன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் தயாரிப்பாளராக 'டிக்கிலோனா' மற்றும் தேசிய விருது பெற்ற 'பார்க்கிங்' போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த வரிசையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் பொழுதுபோக்கு திரைப்படமாக 'சூப்பர் ஹீரோ' உருவாகியுள்ளது. வில்லனாக நடிப்பில் மிரட்டி, தற்போது கதாநாயகனாகவும் வெற்றி ஈட்டி வரும் அர்ஜுன்…
Read More
*சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!*

*சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!*

நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பேஷன் ஸ்டுடியோஸ். வித்தியாசமான கதைக்களங்களையும் புதுமையான திரைக்கதைகளையும் கொண்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இந்த நிறுவனம், தற்போது ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ’அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை நடிகர், எழுத்தாளர் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் இயக்குகிறார். அவர் இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். டார்க் காமெடி, ஆழமான உணர்வுகள், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் இயல்பான கிராமத்து மண்வாசனை என வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக ’அல்மோஸ்ட் நல்லவன்’ உருவாகிறது. ’அல்மோஸ்ட்’ என்ற வார்த்தைக்கு சந்தேகம், தெளிவின்மை என பல அர்த்தங்கள் உண்டு. ‘அல்மோஸ்ட் தேர்...’, ’அல்மோஸ்ட் டன்...’ போன்ற சொற்களைப் போலவே, இப்படத்தின் கதையிலும்…
Read More
*நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!*

*நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!*

  விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு, அதிவேக சூப்பர் கார் அனுபவத்துடன் இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் பிரம்மாண்டமாக வெளியானது. *கோயம்புத்தூர்:* இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடு அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. பாரம்பரியம், புதுமை, ஆட்டோமொபைல் உலகம் மற்றும் சினிமா என அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு வித்தியாசமான திரைப்பட புரோமோஷன்களில் ஒன்றாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ளார். இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. ஜி.டி. மியூசியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய விண்டேஜ் கார்களில் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வருகை தர…
Read More
நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி - ஆரவ் ,ரம்யா பாண்டியன் -கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்திருக்கும் 'அருள்வான்' திரைப்படத்தினை பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி டி வி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, 'பருத்திவீரன்' சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கவனிக்க.. லாரன்ஸ் கிஷோர் படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஜி சரவணன் தயாரித்திருக்கிறார். இப்படத்தை சக்தி…
Read More