சினிமா

’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.!*

’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.!*

*’மேன் ஆஃப் மாஸ்’ நடிகர் என்.டி.ஆர். நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமாகத் தொடங்கியது. இதன் படப்பிடிப்பில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி என்.டி.ஆர். இணைகிறார். படப்பிடிப்புக்காக என்.டி.ஆர். ஹைதராபாத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்கிறார். என்.டி.ஆர். வருகையை படக்குழுவினரும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. பல பிளாக்பஸ்டர் ஹிட்…
Read More
நடிகர் வசந்த் ரவி ரசிகப் பெரு மக்களுக்கு  நன்றி தெரிவித்தார்.!

நடிகர் வசந்த் ரவி ரசிகப் பெரு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.!

நடிகர் வசந்த் ரவி அவர்களின் நன்றி அறிவிப்பு சில சிறப்பான தருணங்கள் அன்பும் சிந்தூரமும் ஒளிவிடும் நினைவுகளாக மாறுகின்றன. நேற்று என் பிறந்த நாளாக இருந்தது மட்டுமல்ல, நீங்கள் எல்லாரும் காட்டிய அன்பும் ஆசிகளும் என்னை நெகிழவைத்ததாலேயே, அது என்றென்றும் எனது மனதில் நிறைந்திருக்கும் ஒரு இனிய நினைவாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, எனது பிரியமான சினிமா துறை நண்பர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும், என்னை ஆதரித்து அன்பு செலுத்தும் என் ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஒவ்வொரு வாழ்த்தும் என் இதயத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றது. உங்கள் அன்பும் அக்கறையும் எனக்குள் ஒரு புதிய உற்சாகத்தையும், எல்லைகளைத் தாண்டி சிறப்பாக வெற்றி காணும் முனைப்பையும் உருவாக்குகின்றன. நீங்கள் எனக்கு தந்த அந்த புன்னகையை மறக்க முடியாது. மீண்டும் ஒருமுறை, உங்களுக்குத் தனிப்பட்ட நன்றியினை தெரிவிக்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்து, என்னுடைய எதிர்வரும்…
Read More
*’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்!*

*’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்!*

நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது.    நிகழ்வில் கலந்து கொண்ட படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி பேசியதாவது, “’மார்க் ஆண்டனி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வாய்ப்பு கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் சாருக்கு நன்றி. இந்தப் படம் ப்ளே கிரவுண்ட் போல. எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற சுதந்திரத்தை இயக்குநர் கொடுத்தார். அஜித் சார் படத்தில் பணிபுரிந்தது எனக்கு பாக்கியம். என்னுடைய அணி மற்றும் படக்குழுவினருக்கு நன்றி”   டான்ஸ் மாஸ்டர் கல்யாண், “’குட் பேட் அக்லி’ படத்தின் அனுபவம் செம மாஸ். ஒவ்வொரு ஃபிரேமையும் ஆதிக் செதுக்கி இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் வந்தது மிகப்பெரிய…
Read More
”உதவும் மனிதம்” சிறப்புவிழா: 300 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

”உதவும் மனிதம்” சிறப்புவிழா: 300 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

நடிகர் பிளாக் பாண்டி தலைமையில் நடைபெற்ற விழா சமூகத்தில் மாற்றம் உருவாக்கும் நிகழ்வாக மாறியது “இயன்றதை செய்வோம்! இணைந்தே செய்வோம்!” என்ற தத்துவத்தில் செயல்பட்டு வரும் “உதவும் மனிதம்” அறக்கட்டளை, அதன் சிறப்புவிழாவை நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான பிளாக் பாண்டி தலைமையில் சென்னையில் வெகுவிமர்சையாக நடத்தியது. இந்த விழாவில் மொத்தம் 300 பயனாளிகள் பன்முக நலத்திட்ட உதவிகளை பெற்றனர். நிகழ்வின் முக்கிய நன்கொடையாளர் இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு. தியாகி ஐயா ஆவார். வழங்கப்பட்ட முக்கிய நலத்திட்ட உதவிகள்: 100 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் எழுதும் உபகரணங்கள் 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000 நிதியுதவி மற்றும் உணவுப்பொருட்கள் 30 பார்வையற்ற நபர்களுக்கு வியாபார உபகரணங்கள் (ரூ.3000 மதிப்பு) 20 பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கு பவர் கண்ணாடிகள் 6 திருநங்கைகளுக்கு ரூ.2000 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் 3 ஏழை மாணவர்களுக்கு தலா ரூ.3000 கல்வி உதவித் தொகை 2…
Read More
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி”.சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் Sports Action Drama படமாக உருவாகிறது.!

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி”.சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் Sports Action Drama படமாக உருவாகிறது.!

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட்,  எல்ரெட் குமார் தலைமையில், தனது 16வது தயாரிப்பு முயற்சியாக “மண்டாடி” எனும் புதிய திரைப்படத்தை உருவாக்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. உணர்வும் உறுதியும் கலந்த, ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு ஆக்‌ஷன் டிராமா திரைப்படம், பாரம்பரிய சூழலோடு எதிர்பார்ப்புகளை தூண்டும் படமாக அமையவிருக்கிறது. “செல்ஃபி” என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இப்படத்தையும் எழுதி இயக்குகிறார். கடந்த படத்தைவிட பெரிய களம் மற்றும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கவுள்ளார். கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தனது நடிப்புத்திறனை நிரூபித்து வரும் அவர், இப்படத்தினால் மேலும் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வார். இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார், இதனால் படம் தெற்கிந்தியாவில் பரந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கதா நாயகியாக மஹிமா…
Read More
‘டென் ஹவர்ஸ்’ –விமர்சனம்.!

‘டென் ஹவர்ஸ்’ –விமர்சனம்.!

தமிழில் ‘வெற்றிவேல் சக்திவேல்’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சிபி சத்யராஜ்,  அறிமுக இயக்குனர் இளையராஜா கலியப்பெருமாள் இயக்கத்தில், சிபி ராஜ் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம்  'டென் ஹவர்ஸ்', ஆம்னி பஸ் ஒன்றில் ஒரு பெண்ணை சித்திரவதை செய்வதாக போலீசாருக்கு போன் வருகிறது . சுறுசுறுப்பான – சபரி மலைக்கு மாலை  போட்டு இருக்கிற இன்ஸ்பெக்டர் (சிபிராஜ்) நடவடிக்கை எடுக்க கிளம்புகிறார் . போனில் சொன்ன பேருந்து நம்பரை வைத்து பஸ்ஸைப் பிடித்தால் அங்கே இறந்து கிடப்பது ஓர் இளைஞன் .இது தவிர  ஒரு  இளம்பெண்ணைக் காணவில்லை என்று ஒரு புகார் வந்திருக்க அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது..சித்திரவதை செய்யப்பட்ட பெண் எங்கே ? செத்துப் போன நபர் யார்? காரணம் என்ன? கதை என்ன?  என்பதே படம்.பத்து மணி நேரத்தில் நடக்கும் படம் என்பதால் அந்தப் பெயர் .…
Read More
புதிய சங்கத்தின் மூலம் உதவி இயக்குனர்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் – சங்கத்தின் தலைவர் முஜீப்!

புதிய சங்கத்தின் மூலம் உதவி இயக்குனர்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் – சங்கத்தின் தலைவர் முஜீப்!

தமிழ்நாடு திரைப்பட உதவி இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர்கள் சற்குணம், ரா வெங்கட், சரவண சக்தி ஆகியோர் கலந்துகொண்டு, உதவி இயக்குநர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்கள். இந்நிகழ்வினில்.. செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் முஜீப்…. இந்த சங்கத்தில் 400க்கும் மேற்பட்டோர், உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சினிமா தொடங்கி நூற்றாண்டுகள் கடந்தும் திரைப்படத்துறையில் உதவி இயக்குனர்களின் அடையாளமும், அங்கீகாரமும், உரிமையும் முழுமையாக கிடைக்காமல் உள்ளது.இந்த சங்கத்தின் மூலம் உதவி இயக்குனர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படும். தொழிலாளர் சம்மேளத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பது எங்களின் நோக்கம் என்றார்
Read More
நாங்கல்– விமர்சனம்!

நாங்கல்– விமர்சனம்!

நடந்து கொண்டிருக்கும் 15வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய சினிமா போட்டியின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது தமிழ் திரைப்படமான 'நாங்கல் நாங்கல் படத்தின் கதை 1990களில், ஊட்டியில் நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் வசித்து வரும், ராஜ்குமார் (அப்துல் ரஃபே), பத்மா (பிரார்த்தனா ஶ்ரீகாந்த்) பிரிந்து வாழும் தம்பதியினர். இவர்களின் குழந்தைகளான கார்த்திக் (மிதுன் வி), துருவ் (ரித்திக் எம்), கௌதம் ( நிதின் டி) ஆகிய மூவரும்,  மிகவும் கண்டிப்பான அப்பாவின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இவர்களின் தோழனாக கேத்தி (ராக்ஸி) எனும் நாயும் இருந்து வருகிறது. ஊட்டியில் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி  கொண்டு, சிறிய அளவில் விவசாயம் செய்து வரும் ராஜ்குமார் கரண்ட் பில் கூட கட்ட முடியாத, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத நிலையில் இருந்து வருகிறார். இந்த நிலைக்கு அவர் வர காரணம் என்ன? தம்பதியினர் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதை மூன்று சிறுவர்களின் உணர்ச்சிப் போராட்டத்தை,…
Read More
குட் பேட் அக்லி –விமர்சனம்!

குட் பேட் அக்லி –விமர்சனம்!

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, பிரபு, சுனில், ஜாக்கி ஷெராஃப், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் இரட்டை வேடங்களில் நடித்து உருவாகியுள்ள படத்திற்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காணலாம். படத்தின் கதையை பொறுத்தவரையில், கேங்ஸ்டராக இருக்கும் அஜித் குமார், தனது மனைவி த்ரிஷா சொன்ன காரணத்திற்காக ஜெயிலில் 18 ஆண்டுகள் இருக்கிறார். தனது மகனின் 18 வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என ஜெயிலரின் உதவியுடன் முறைப்படி ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார். இந்த சமயத்தில் ஸ்பெயினில் உள்ள மகனை யாரோ கடத்தி விடுகிறார்கள். அ… அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் குட்…
Read More
நடிகர் ரங்கராஜ் நடிக்கும் ‘கட்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா1

நடிகர் ரங்கராஜ் நடிக்கும் ‘கட்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா1

புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கட்ஸ் ( GUTS) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 'கட்ஸ்' திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்களின் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் இயக்குநர் ரங்கராஜ், நடிகை ஸ்ருதி நாராயணன், ஜாக்குவார் தங்கம், கில்ட் செயலாளர் துரைசாமி, டைகர் சக்கரவர்த்தி, ஷிவானி செந்தில், சத்யபதி, இஸ்மாயில், ஸ்ரீலேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இயக்குநர் ஷிவானி செந்தில் பேசுகையில், ''இப்படத்தின் இயக்குநர்-நடிகர் ரங்கராஜ் எனது நண்பர். சினிமா மீது அளவு கடந்த ஆசை கொண்டிருப்பவர். சினிமாவிற்காக…
Read More