22
Sep
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இணையதளம் மூலம் உடனடி கடனை வழங்குகின்றன. நிதி நுட்ப நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் வாயிலாக கடன் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளன. இந்த வகை டிஜிட்டல் கடன் வசதியை, இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். எளிதாக கிடைப்பது சாதகமாக அமைந்தாலும், இந்த வகை கடன் பெறும் போது, வழக்கமாக பலரும் செய்யும் தவறுகளை தவிர்ப்பது நல்லது.எளிதாக கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே, கடன் வசதியை கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தக்கூடாது. மொத்தமாக பார்க்கும் போது, கடன் வசதி அதிக செலவு இல்லாததாக தோன்றலாம். ஆனால் வட்டியை கணக்கிட்டு பார்க்க வேண்டும். பல நேரங்களில் வட்டி விகிதம், செயல்பாட்டு கட்டணத்தில் உள்ளடங்கியிருக்கலாம். பலரும் கடன் பெறும் அவசரம் அல்லது ஆர்வத்தில் விதிமுறைகளை பொறுமையாக படிப்பதில்லை. இணையதளம் அல்லது செயலி வாயிலாக கடன் பெறும் போது, தொடர்ந்து தகவல்களை சமர்ப்பித்து, கடன் அனுமதி பெறும் நிலையில், நிபந்தனைகளை அறிவதில் நேரம் செலவிடுவதில்லை; இது பாதகமாக…
