சினிமா

படிப்பு தான் முக்கியம் என்பார் அப்பா! தந்தையைப் பற்றி பாடகி எஸ்.பி. ஷைலஜா!!

படிப்பு தான் முக்கியம் என்பார் அப்பா! தந்தையைப் பற்றி பாடகி எஸ்.பி. ஷைலஜா!!

படிப்பு தான் முக்கியம் என்பார் அப்பா!தன் தந்தையைப் பற்றி, பாடகி, எஸ்.பி. ஷைலஜா: நாங்கள் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அப்பா பெயர், சாம்பமூர்த்தி; ஹரிகதை சொல்வதில் வல்லவர். அம்மா, சகுந்தலா, குடும்பத் தலைவி, நன்றாக பாடுவார். என்னுடன் பிறந்தவர்கள், ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள். 'ஸ்ரீபதி பண்டித்தாராஜுலா' என்ற பெயரில், எங்கள் வம்சத்தில் மகான் இருந்தார். அவர் பெயரை, எங்களின் இனிஷியலாக சேர்ப்பது வழக்கம்.அந்த வகையில் என் பெயர், எஸ்.பி.ஷைலஜா; அண்ணன் பெயர், எஸ்.பி.பாலசுப்ரமணியம். அப்பா ரொம்ப, 'ஜோவியல்!' ஆனால், படிப்பின் மீது அலாதி நம்பிக்கை கொண்டவர். புத்தகம் வாசிப்பது தான் அவரின் விருப்பம். அவர் போலவே, நானும், அண்ணனும் புத்தகங்களை விரும்பி படிப்போம்.அப்பா ரொம்ப மென்மையானவர்; எங்களைத் திட்டவே மாட்டார். அதிக சினிமா படங்களைப் பார்க்க மாட்டார். அப்பாவின் முதல் மனைவி இறந்து விட்டார். அவருக்கு, ஒரு பெண் குழந்தை. அதன் பிறகு, எங்கள் அம்மா சகுந்தலாவை, அப்பா திருமணம்…
Read More
கல்யாண விஷயத்தில், நான் எடுத்த முடிவு தவறு?நடிகை சீதா!

கல்யாண விஷயத்தில், நான் எடுத்த முடிவு தவறு?நடிகை சீதா!

மீண்டும் நடிக்க வந்தது பற்றி நடிகை சீதா: சென்னை தான் சொந்த ஊர். அப்பா, மோகன் பாபு, குணச்சித்திர நடிகர். புதிய பாதை படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே, அதன் இயக்குனர், பார்த்திபன் சாருடன் காதல் ஏற்பட்டு விட்டது. ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறி, கல்யாணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பின் நடிப்பதில், பார்த்திபன் சாருக்கு பிடித்தம் இல்லை. அதனால், படங்களில் நடிக்க வாங்கிய, 'அட்வான்ஸ்' தொகையை திருப்பிக் கொடுத்தேன்.நான்கரை ஆண்டு களில், மூன்று மொழிகளில்,60 படங்களுக்கு மேல், கதாநாயகியாக நடித்திருந்தேன். ஏராளமான வாய்ப்புகள் வந்த நேரத்தில், அவற்றை வேண்டாம் என உதறி, திருமண வாழ்வில் புகுந்தேன். பெற்றோரை எதிர்த்து, நான் சென்ற இல்லற வாழ்க்கையில் நிறைய மனக் கசப்புகளையும், கஷ்டங்களையும் சந்தித்தேன். அப்போது தான், கல்யாண விஷயத்தில், நான் எடுத்த முடிவு தவறு என உணர்ந்தேன். திருமண பந்தத்திலிருந்து இருவரும் விலகி, சுமுகமாக விவாகரத்து பெற்றோம். அது போன்ற…
Read More
சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா சொகுசு கார்களுக்கான  ஒருங்கிணைந்த டீலர்ஷிப் ஷோரூம்!

சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா சொகுசு கார்களுக்கான ஒருங்கிணைந்த டீலர்ஷிப் ஷோரூம்!

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா, இந்திய சொகுசு கார் சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது: சென்னையில் இந்நிறுவனம் சொகுசு கார்களுக்கான மிகப் பெரிய ஒருங்கிணைந்த டீலர்ஷிப் ஷோரூம் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது! சொகுசு கார் பிராண்டில், தொடர்ந்து 5 ஆண்டுகளாக 10,000 சொகுசு கார்களை உற்பத்தி செய்த ஒரே நிறுவனம் என்ற சாதனையை தக்க வைத்துள்ளது.மெர்சிடிஸ் பென்ஸ் – சுந்தரம் மோட்டார்ஸ் தற்போது தமிழ்நாட்டில் மிகப் பெரிய 3 எஸ் டீலர்ஷிப் [3S luxury car dealerships] நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.சுமார் 72 ஆயிரம் சதர அடி பரப்பளவில், மிகவும் விசாலமாக அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது | திறன் பயிற்சி பெற்ற 136 ஊழியர்கள் | 6 கார் பார்வைப்பகுதிகள் (car display) 63 சேவை தளங்கள் (service bays) | இந்த டீலர்ஷிப் 5 மாத காலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது | ஆண்டுக்கு 15 ஆயிரம் கார்களை சர்வீஸ் செய்யும் ஆற்றல், வசதிகளைக் கொண்டது.அதிநவீன…
Read More
தி.நகரில் 100 சிசிடிவி கேமராக்கள் ! காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.!

தி.நகரில் 100 சிசிடிவி கேமராக்கள் ! காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.!

தீபாவளி ஷாப்பிங் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் சென்னை தி.நகரில் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தீபஒளி திருநாளை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து வருவதால் சென்னை தியாகராய நகர், காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தியாகராய நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 100 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.நகர் பகுதியில் 1,200 கேமராக்கள் ஏற்கனவே நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளன என்றும் மேலும் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த எண்ணிக்கை 1,300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தீபாவளி பண்டிகையின் போது தியாகராயநகர் பகுதியில் எந்த குற்றச்சம்பவங்களும் நடைபெறவில்லை என்று கூறிய அவர், இந்த ஆண்டும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.…
Read More
40 ஆண்டுகளுக்கு பின் நடிகைக்கு சம்பள பாக்கியை திருப்பி கொடுத்த தயாரிப்பாளர்!

40 ஆண்டுகளுக்கு பின் நடிகைக்கு சம்பள பாக்கியை திருப்பி கொடுத்த தயாரிப்பாளர்!

நடிகை ஊர்வசி சாரதா பழம்பெரும் நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் துலாபாரம், ஞான ஒளி, என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தயாரிப்பாளர் வி.வி.ஆண்டனி, 1979-ம் ஆண்டு புஷ்யராகம் என்ற பெயரில் மலையாளப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த படம் வெளியாகி அவர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இந்த படத்தில் நடித்த நடிகை ஊர்வசி சாரதாவுக்கு பேசிய சம்பளத்தை கொடுக்காமல், குறிப்பிட்ட தொகையை மட்டுமே கொடுத்துள்ளார். அதன் பின் வி.வி.ஆண்டனி எடுத்த படங்கள் பெரிய அளவில்வெற்றியை பெறாத நிலையில், சாரதாவுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை அவரால் கொடுக்க முடியாமலே போய்விட்டது. 40 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், வி.வி.ஆண்டனி தனது பிள்ளைகளின் பொருளாத நிலை உயர்ந்ததையடுத்து, சாராதாவுக்கு சம்பளபாக்கியை கொடுத்துவிட விரும்பியுள்ளார்.இந்நிலையில், நடிகை ஊர்வசி சாரதா, சினிமா விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கொச்சி டவுன் ஹாலுக்கு வருவதாக தயாரிப்பாளர்…
Read More
90 வயது தாத்தாவுக்கு சண்டை காட்சிகள் அமைப்பது மிகவும் சவாலாக உள்ளது ! பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்!!

90 வயது தாத்தாவுக்கு சண்டை காட்சிகள் அமைப்பது மிகவும் சவாலாக உள்ளது ! பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்!!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முதல் பாகத்தின் இறுதியில் தப்பித்து போன சேனாபதி மீண்டும் வந்து இந்தியாவில் நடக்கும் ஊழல்வாதிகளுக்கு மரண பயம் காட்டுவார் என தெரிகிறது. இந்த படத்தில் சண்டை இயக்குநராக பணிபுரியும் பீட்டர் ஹெயின், 90 வயது தாத்தாவுக்கு சண்டை காட்சிகள் அமைப்பது மிகவும் சவாலாக உள்ளது என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெளியான இந்தியன் படத்தில் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் வயதான தாத்தா என இரு கெட்டப்களிலும், சந்துரு என மகனாகவும் நடித்து கமலஹாசன் அசத்தியிருந்தார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் இன்றளவும் ஷங்கரின் சிறந்த படமாக விளங்குகிறது. ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன் மற்றும் 2.0 என மூன்று பிரம்மாண்ட படங்களை ஷங்கர் கொடுத்தாலும், ஷங்கரின் ரசிகர்கள் இந்தியன் 2வையே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த…
Read More
பல் மருத்துவத்தில் ஆசியா அளவில் ராஜன் பல் மருத்துவமனை சாதனை !

பல் மருத்துவத்தில் ஆசியா அளவில் ராஜன் பல் மருத்துவமனை சாதனை !

ராஜஸ்தானை சேர்ந்த 5 வயது சிறுவன் சமக்ஸ்க்கு இ.டி.எனப்படும் எக்டோடெர்மல் டிஸ்ப்ளஷ்யா எனும் பாதிப்பு இருந்தது . அதன் காரணமாக சிறுவனுக்கு கீழ்த்தாடையில் பற்களே இல்லாமலும், மேல் தாடையில் இரண்டே பற்கள் மட்டுமே இருந்தன. ராஜஸ்தானில் சிறுவனுக்கு கழற்றி மாட்டக்கூடிய பல்செட் கொடுக்கப்பட்டது. ஆனால் கீழ்த்தாடை வெறுமையாக இருந்ததால், பல்செட்டை பொருத்தி பயன்படுத்த முடியவில்லை. அதனால் போதுமான உணவு சாப்பிட முடியாமல் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. மேலும், மற்ற குழந்தைகளுடன் இயல்பாக பழகமுடியாத தாழ்வு மனப்பான்மையால் சிறுவனும் அவனது பெற்றோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உலக அளவில் இந்த பிரச்னைக்கு, டைட்டானியம் டென்டல் இம்ப்ளான்ட் பொருத்துவது மட்டும்தான் ஒரே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது . இந்த சிகிச்சை முறை குறித்து மைலாப்பூர் ராஜன் பல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் குணசீலன் ராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது: ஆசியாவில் முதலாவதாக மிகக்குறைந்த வயதில் இம்ப்ளான்ட் சிகிச்சை பெற்றவர் சிறுவன் சமக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில்…
Read More
ரூ.8.64 லட்சம் விலையில் கேடிஎம் 790 ட்யூக் பைக் !

ரூ.8.64 லட்சம் விலையில் கேடிஎம் 790 ட்யூக் பைக் !

போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை எதிர்பாராத வகையில் கேடிஎம் 790 ட்யூக் பைக் விற்பனையில் அசத்தி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம். ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் பஜாஜ் கூட்டணியில் இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் ட்யூக் மற்றும் ஆர்சி என்ற இரண்டு வகை பாடி ஸ்டைலில் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இதில், ட்யூக் என்ற திறந்தமேனி வகை ஸ்போர்ட்ஸ் பைக்குகள் இந்திய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துவிட்டன. இதனால், ட்யூக் வரிசையில் 125, 200, 250, 390 ஆகிய மாடல்களை விற்பனை செய்து வந்தது. இவை அனைத்துமே சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள். இந்த நிலையில், அண்மையில் ட்யூக் வரிசையில் மிக சக்திவாய்ந்த இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாக 790 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 23ந் தேதி இந்த புதிய ட்யூக் பைக்கை…
Read More
இடையீட்டு கதிரியக்கவியல் வழிகாட்டுதலில் முடநீக்கியல் அறுவை சிகிச்சைக்கு மறுவிளக்கம் அளிக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர்

இடையீட்டு கதிரியக்கவியல் வழிகாட்டுதலில் முடநீக்கியல் அறுவை சிகிச்சைக்கு மறுவிளக்கம் அளிக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர்

நகரின் மையத்தில் அமைந்துள்ள நான்காம் நிலை மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், நாட்டிலேயே முதன் முறையாக இடையீட்டு கதிரியக்கவியல் வழிகாட்டுதலுடன் சிடி சூட்டில் காணப்பட்ட எலும்புக் கட்டிக்கான குறைந்தபட்சத் துளைஅறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இது எலும்பு மற்றும் மெல்லிய திசுக் கட்டிகளை அதிகத் துல்லியத்துடன் கண்டுபிடித்து அகற்றும் அணுகுமுறையாகும். இந்தியாவில் இந்தப் புதுமையான அணுகுமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் முழுமையான மற்றும் குறைந்தபட்சத் துளைஅறுவை சிகிச்சையை முறையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல எம்ஜிஎம் ஹெல்த்கேர் முனைந்துள்ளது. குறைந்தபட்சத் துளைஅறுவை சிகிச்சை முறை சென்னையைச் சேர்ந்த 30 வயது ஸ்ரீதருக்கு நடத்தப்பட்டது. இது குறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் கூறுகையில் ‘சிறப்பு மருத்துவங்களின் கலவையாகவும், பல்துறை அணுகுமுறை கொண்ட மருத்துவமனையாகவும், எம்ஜிஎம் ஹெல்த்கேர் திகழ்கிறது. இரு வித்தியாசமான சிறப்பு மருத்துவப் பிரிவுகளைஅதிகத் திறனுடன் ஒருங்கிணைத்து நோயாளிக்குப் புதிய சிகிச்சை முறையை உருவாக்கி உள்ளோம்’என்றார். ஒரு வருடத்துக்கு முன்பு…
Read More
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் நடித்திராத துணிச்சலான காட்சியில் நடித்த சிருஷ்டி டாங்கே !

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் நடித்திராத துணிச்சலான காட்சியில் நடித்த சிருஷ்டி டாங்கே !

பல்லாட் கொக்காட் பிலிம் ஹவுஸ் சார்பில் மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘ராஜாவுக்கு செக்.. மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார் சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா சுண்டாட்டம், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல் படத்தின் எடிட்டிங்கிற்காக பேசப்பட பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். ஆக்சன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார். ஒட்டுமொத்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தெலுங்கில் முன்னூறுக்கும் அதிகமான படங்களில் பணியாற்றி, தனது பின்னணி இசைக்காகவே பிரபலமான வினோத் யஜமானியா இந்தப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நேற்று மாலை விழா நடைபெற்றது.…
Read More