25
Aug
உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்.மல்லுக்கட்டும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள். அசைந்து கொடுக்காத இபிஎஸ் ஓபிஎஸ். என்ன நடக்கப் போகுது.தமிழ்நாட்டில் விரைவில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலும், நகராட்சி தேர்தலும் நடக்கப் போகுது. இதில அதிமுக தனித்து போட்டியிடணும்னு அதிமுக நிர்வாகிகள் சொல்லிட்டு வர்றாங்க.. பாஜக உடன் இனியும் கூட்டணி வேண்டாம்னு நிர்வாகிகள் குமுறுவதாக கூறப்படுகிறது.இதுக்கு பல காரணங்கள் சொல்லப் படுது. இன்னமும் தமிழக மக்கள் மத்தியில் மத்திய அரசு மேல் கோபம் இருந்து கிட்டே வருது.பெட்ரோல் விலை உயர்வு கேஸ் விலை உயர்வுன்னு நெறைய சொல்லிகிட்டே போகலாம்.தமிழக அரசு பெட்ரோல் விலையில் ₹ 3 ரூபாய் கொறைக்கும் போது மத்திய அரசால் ஏன் கொறைக்க முடியலன்னு கேள்வி கேக்குறாங்க.இது கீழ் மட்டத்தில எறங்கி பிரச்சாரம் பண்றவங்களுக்குத் தான் தெரியும்.ஜீப்ல வேன்ல நின்னு பிரச்சாரம் பண்ற மேல்மட்டத் தலைவர்களுக்குத் தெரியாது அதனால்தான் பாஜகவோட கூட்டணி வேண்டாம்னு சொல்றாங்க. தமிழகத்தில் விரைவில்…
