சினிமா

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்.மல்லுக்கட்டும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்.

  உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்.மல்லுக்கட்டும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள். அசைந்து கொடுக்காத இபிஎஸ் ஓபிஎஸ். என்ன நடக்கப் போகுது.தமிழ்நாட்டில் விரைவில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலும், நகராட்சி தேர்தலும் நடக்கப் போகுது. இதில அதிமுக தனித்து போட்டியிடணும்னு அதிமுக நிர்வாகிகள் சொல்லிட்டு வர்றாங்க.. பாஜக உடன் இனியும் கூட்டணி வேண்டாம்னு நிர்வாகிகள் குமுறுவதாக கூறப்படுகிறது.இதுக்கு பல காரணங்கள் சொல்லப் படுது. இன்னமும் தமிழக மக்கள் மத்தியில் மத்திய அரசு மேல் கோபம் இருந்து கிட்டே வருது.பெட்ரோல் விலை உயர்வு கேஸ் விலை உயர்வுன்னு நெறைய சொல்லிகிட்டே போகலாம்.தமிழக அரசு பெட்ரோல் விலையில் ₹ 3 ரூபாய் கொறைக்கும் போது மத்திய அரசால் ஏன் கொறைக்க முடியலன்னு கேள்வி கேக்குறாங்க.இது கீழ் மட்டத்தில எறங்கி பிரச்சாரம் பண்றவங்களுக்குத் தான் தெரியும்.ஜீப்ல வேன்ல நின்னு பிரச்சாரம் பண்ற மேல்மட்டத் தலைவர்களுக்குத் தெரியாது அதனால்தான் பாஜகவோட கூட்டணி வேண்டாம்னு சொல்றாங்க. தமிழகத்தில் விரைவில்…
Read More
தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1.25 லட்சம் கோடி கடனில் இருந்து மீளுமா? தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வுதான் தீர்வா? தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மிகப் பெரிய கடன் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக் கடனில் இருந்து தமிழ்நாடு மின்வாரியம் மீள முடியுமா? ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு (டான்ஜெட்கோ) கடந்த நிதியாண்டின் முடிவில் 1,34,119.94 கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் கடன் நீங்கலாக டான்ஜெட்கோவின் மொத்தக் கடன் 1,24,974.49 கோடி ரூபாய். இந்த வெள்ளை அறிக்கையின்படி ஒரு யூனிட் மின்சாரத்தை வழங்க டான்ஜெட்கோவிற்கு ரூ. 9.06 செலவாகும் நிலையில் சராசரியாக ஒரு யூனிட்டிற்கு 6.7 ரூபாய் மட்டுமே வசூலிக்க முடிகிறது. இதனால், ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனையில் 2.36 ரூபாய்…
Read More

தமிழகத்தில் மின் கட்டணம், பேருந்து கட்டணம் உயரப் போகிறதா..? பிடிஆர் சொல்வதென்ன..!

கடந்த ஆட்சியின் சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 120 பக்க வெள்ளை அறிக்கையை இன்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.முதல்-அமைச்சர் காட்டிய பாதையில் வந்த அறிக்கை இது என அவர் கூறினார். மேலும் அவர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் முக்கிய விவரங்கள் வருமாறு:- வரியே வசூலிக்காவிட்டால் எப்படி ஆட்சி நடத்த முடியும். சரியான வரியை வசூலித்து, மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். வரி அல்லாத வருமானம் முந்தைய திமுக ஆட்சியில் 1 சதவீதம் ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 0.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. 10 ஆண்டுகளில் வரி மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் வரி வருவாயும் 33 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. 5 ஆண்டுகளில் மறைமுக கடன்…
Read More
திமுக அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள்

திமுக அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள்

திமுக அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரும் ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்றாலும் ஐந்து விஷயங்கள் மக்கள் கவனத்தை ஈர்க்கும் என்கிறார்கள். போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்வு, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிப்பு, நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்வு உள்ளிட்ட ஐந்து விஷயங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். மே 7-ம் தேதி தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இவர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கி வரும் இந்த…
Read More
சென்னை மாநகராட்சியில் ரத்தாகும் ஒப்பந்தங்கள் – எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலா?

சென்னை மாநகராட்சியில் ரத்தாகும் ஒப்பந்தங்கள் – எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலா?

சென்னை மாநகராட்சியில் ரத்தாகும் ஒப்பந்தங்கள் - எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலா? சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களில் மட்டும் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. `அ.தி.மு.க அரசின் கடைசி சில மாதங்களில் பல தேவையற்ற ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுது. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கல் வரலாம்' என்கின்றார்கள் மாநகராட்சி அதிகாரிகள். என்ன நடக்குது மாநகராட்சியில் ? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிர்வாகரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க அரசு கையில் எடுத்து வருது. இதில், உள்ளாட்சி, பால்வளம், போக்குவரத்து ஆகிய துறைகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துகிட்டே இருக்குது. இதுதவிர, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை, பொதுப்பணித்துறை, சுகாதாரம் என முக்கியமான துறைகளில் நடந்த முறைகேடுகளையும் தீவிரமாக ஆய்வு செஞ்சுக்கிட்டு வர்றாங்க.. இதன் தொடர்ச்சியாக, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய ரெய்டு, அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துச்சு.இந்த…
Read More
சவுந்தர்யா எடுத்த இந்த முடிவுதான் இப்போது வரை திமுகவுக்கு சாதகமாகி கொண்டிருக்கிறது..!

சவுந்தர்யா எடுத்த இந்த முடிவுதான் இப்போது வரை திமுகவுக்கு சாதகமாகி கொண்டிருக்கிறது..!

ரஜினி சம்பந்தப்பட்ட 2 விஷயங்கள் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.. அதற்கு காரணம் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரப்போவதால்தான்..! அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, தனது மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்தார் . ஆலோசனைக்கு பிறகு , எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று தெரிவித்து மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும், மீண்டும் ரசிகர் நற்பணி மன்றமாகவே செயல்படும் என்றும் அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு ஏதோ ஒரு வகையில் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. தனது அரசியல் வருகைக்காகத்தான் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார் ரஜினி. அரசியலுக்காக சௌந்தர்யாவின் தலைமையில் ஐ.டி.விங்கும் தொடங்கப்பட்டது. அப்பா ரஜினி 150-க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குரூப்புகளுடன் பல்வேறு சோசியல் நெட் வொர்க் தொடங்கப்பட்டன. இதன் மூலம் ரஜினி ரசிகர்கள், சோசியல் மீடியாக்களில் தூள்150-க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குரூப்புகளுடன் பல்வேறு சோசியல் நெட் வொர்க் தொடங்கப்பட்டன. இதன் மூலம் ரஜினி…
Read More
நடிகர் விஜய்க்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்து கோர்ட்  உத்தரவிட்டது!

நடிகர் விஜய்க்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது!

நடிகர் விஜய் சமீபத்தில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு கோர்ட்டில் வழக்கு கொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி. நடிகர்கள் உண்மையான வாழ்க்கையிலும் ஹீரோவாக இருங்கள். ரீல் வாழ்க்கையில் மட்டும் ஹீரோவாக இருக்காதீர்கள். இந்த வழக்கை தொடர்ந்ததால் அவருக்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவும்உத்தரவிட்டது.  நடிகர் விஜய் சமீபத்தில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு கோர்ட்டில் வழக்கு கொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி. நடிகர்கள் உண்மையான வாழ்க்கையிலும் ஹீரோவாக இருங்கள். ரீல் வாழ்க்கையில் மட்டும் ஹீரோவாக இருக்காதீர்கள். இந்த வழக்கை தொடர்ந்ததால் அவருக்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவும்உத்தரவிட்டது. இந்நிலையில் பலருக்கு இது என்ன வரி, எதற்காக இந்த வரி என பல சந்தேகங்கள் இருக்கும். அதை பற்றிய தெளிவா பாக்கலாம்.…
Read More
கேப்டன் விஜயகாந்த் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு ! கூட்டணிக்கு ஆச்சாரமா !!

கேப்டன் விஜயகாந்த் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு ! கூட்டணிக்கு ஆச்சாரமா !!

இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். இந்த திடீர் சந்திப்பு பல கேள்விகளை எழுப்பி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இல்லத்திற்கே சென்று அவருடன் சந்திப்பு நடத்தினார். உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் ஆக்டிவாக இல்லாத விஜயகாந்தின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் இன்று நேரில் கேட்டறிந்தார். இந்த சந்திப்பில் கொரோனா நிவாரண நிதி ரூ.10 லட்சத்தை முதல்வரிடம் விஜயகாந்த் வழங்கினார். இந்த சந்திப்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடன் இருந்தார். முன்னதாக கடந்த லோக்சபா தேர்தலின் போது துரைமுருகன் மற்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துரைமுருகனும், பிரேமலதாவும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர்.லோக்சபா தேர்தலின் போது துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சார்பாக ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. அவரின் வீடு, அலுவலகத்தில் ஐடி…
Read More
நல்ல காலம் பொறக்குது ! உடன்பிறப்புகளுக்கு நல்ல காலம் பொறக்குது !!

நல்ல காலம் பொறக்குது ! உடன்பிறப்புகளுக்கு நல்ல காலம் பொறக்குது !!

தமிழக அரசுக்கு அதிகப்படியான வருமானம் வருதுன்னா அது டாஸ்மாக் கடைகள்ல  விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் மூலம் மட்டும்தான். அதாவது ஆண்டு ஒன்றுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வர்றதாலத்தான், எண்ணற்ற இலவசங்களை மக்களுக்கு எந்தவொரு ஆளும்கட்சியாலும் வாரி வழங்க முடியுது. மதுபானங்கள் விற்பனை மூலம் நேரடியாக அரசுக்கு வருமானம் கிடைத்து வருவது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம், டாஸ்மாக் மதுபானக் கடைகளையொட்டி இயங்கும் பார்கள் மூலம் (மது அருந்தும் இடம்) அரசுக்கும், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் பணமழை கொட்டுது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், 1983 ஆம் ஆண்டு எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஒரு மாநில அரசு நிறுவனம். தமிழ் நாடு அரசே இதன் நூறு சதவிகித உரிமையாளர். இந்நிறுவனம் அரசின் மதுவிலக்கு மற்றும் சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதன் இயக்குநர் குழுமத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்திய…
Read More
ஓ.பி.எஸ் ஐ கைவிட்டது பாஜக.

ஓ.பி.எஸ் ஐ கைவிட்டது பாஜக.

கைவிட்டது பாஜக... ஓ.பி.எஸ்-ன் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கப் போகும் எடப்பாடி-சசிகலா அதிமுகவில் மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அடிக்கடி ஆடியோ வெளியிடும் சசிகலாவும் அனேகமாக ஓ. பன்னீர்செல்வம் என்னும் மற்றொரு மாஜி முதல்வரின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்காமல் ஓயமாட்டார்கள் என்றே தெரிகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜகவின் தயவால் முதல்வராக்கப்பட்டார் ஓ. பன்னீர்செல்வம். தமக்குப் பின்னால் மத்தியில் ஆளும் பாஜக இருக்கிறது என்கிற அதீத நம்பிக்கையில் இருந்தார் ஓ. பன்னீர்செல்வம். னால் அப்போது முதல்வர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டார். இதனால் பதவி பறிபோகிறதே என கொந்தளித்த ஓ. பன்னீர்செல்வம், அதே பாஜகவின் தயவில்தான் தர்மயுத்தம் நடத்தினார். அன்று இதே ஓ. பன்னீர்செல்வத்துக்காகவே சசிகலாவும் பழிவாங்கப்பட்டார். 3 மணி நேரம்.. அனல் பறந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. ஓபிஎஸ் பாஜக கன்ட்ரோலில் அதிமுக ஓ. பன்னீர்செல்வம் எனும் தர்மயுத்த நாயகனை வைத்து அதிமுகவை ஒட்டுமொத்தமாக தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பாஜக. பின்னர்…
Read More