சினிமா

இயக்குனர் சச்சின் இயக்கத்தில்,ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ !

இயக்குனர் சச்சின் இயக்கத்தில்,ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ !

*புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ - ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம்* ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம். இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா தயாரித்த முதல் படம் ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’. அதனைத் தொடர்ந்து, கன்னட திரையுலகில் சிறந்த திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு வல்லமைமிக்க சக்தியாகவும், புதிய சிந்தனைகளையும் தொழிட்நுட்ப யுக்திகளையும் கொண்டு அனைத்து வகை திரைப்படங்களையும் மொழி வேறுபாடுகளையும் கடந்து வெற்றிப் பெற செய்வதில் முனைப்புடன் செயல்படுபவராகவும் திகழ்கிறார். அவரது முதல் திரைப்படத்தை…
Read More
ஆன்லைனில் உடனே பான் கார்டு ! எங்கேயும் அலைய வேண்டாம்!

ஆன்லைனில் உடனே பான் கார்டு ! எங்கேயும் அலைய வேண்டாம்!

ஆதார் கார்டில் உள்ள தகவல்களைக் குறிப்பிட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் ரகசிய பாஸ்வேர்ட் (OTP) மூலம் தகவல்களை உறுதிசெய்தால் போதும். ஆன்லைனில் கட்டணமின்றி ஈ-பான் கார்டு வாங்கும் வசதி விரைவில் அறிமுகம்.ஆதார் எண் இருந்தால் உடனே பான் கார்டு கிடைத்துவிடும்.ஆன்லைன் வழிமுறையில் உடனடியாக பான் கார்டுகளை வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.ஆதார் தகவல்கள் மூலம் உடனடியாக ஆன்லைனில் பான் கார்டு பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய மத்திய அரசு ஆயத்தம் செய்துவருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்த வசதி நடைமுறைக்கு வரும் என தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் கார்டு தொலைந்துவிட்டால்,மாற்று பான் கார்டு வாங்குவதும் மிக எளிதாகவிடும்.மேலும் ஈ-பான் கார்டு பெற எந்த கட்டணமும் பெறப்படாது. ஆதார் கார்டில் உள்ள தகவல்களைக் குறிப்பிட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் ரகசிய பாஸ்வேர்ட் (OTP) மூலம்…
Read More
2020ம் ஆண்டில் ஜீ தமிழ் சினி விருதுகள் !

2020ம் ஆண்டில் ஜீ தமிழ் சினி விருதுகள் !

தமிழில் உள்ள தனியார் சாட்டிலைட் டிவிக்களில் 2008ல் துவங்கப்பட்ட ஜீ தமிழ் டிவிக்கும் தனி இடம் உண்டு.பல வித்தியாசமான நிகழ்ச்சிகளால் அவர்களும் முன்னணி இடத்திற்கு தங்களை முன்னேற்றிக் கொண்டார்கள்.தங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி தொடர்களையும், அதன் நட்சத்திரங்களையும் ஊக்கப்படுத்துவதற்காக ஜீ தமிழ் குடும்ப விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்தி ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றார்கள்.தற்போது தமிழ் சினிமா உலகில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஜீ தமிழ் சினி விருதுகள் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள். 2020ம் ஆண்டில் இந்த விருது விழா நடைபெற உள்ளது.இந்த விருதுகளுக்கான தேர்வுக் குழுவில் சுகாசினி மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், பரத்பாலா, கரு பழனியப்பன், பரத்வாஜ் ரங்கன் ஆகியோர் உள்ளனர். தமிழ் சினிமா விருதுகள் பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடுவர் குழுவினருடன் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். ஜீ தமிழ் டிவியின் சுஜு பிரபாகரன், தமிழ்தாசன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில்…
Read More
தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலையை இழந்தால் உதவித்தொகை வழங்கப்படும் !

தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலையை இழந்தால் உதவித்தொகை வழங்கப்படும் !

தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் தங்கள் வேலையை இழந்தால் அல்லது வேலையில்லாமல் போனால் தற்போது கவலைப்பட வேண்டியதில்லை. மத்திய அரசின் 'அடல் பிமிட் வியாகி கல்யாண் யோஜ்னா' திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.சி) அறிவித்துள்ளது. இதன்படி தனியார் துறையில் வேலை பார்க்கும் ஒருவர் வேலையை இழந்தால் மத்திய அரசாங்கம் அவருக்கு 24 மாதங்களுக்கு அதாவது 2 ஆண்டுகளுக்கு மாத ஊதியம் வழங்கப்படும். இது தொடர்பாக ESIC(தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்) ஞாயிற்றுக்கிழமை தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் வலைத்தள பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதைப்பெற விண்ணப்பிப்பது எப்படி? நீங்கள் ESICன் வலைத்தள பக்கத்தில் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதை நிரப்பிய பிறகு, நீங்கள் அதை ESIC இன் எந்த கிளைக்கும் சமர்ப்பிக்கலாம். இந்த படிவத்துடன் 'நோட்டரி பப்ளிக்' கையெழுத்துடன் ரூ.20 மதிப்புள்ள முத்திரைத்தாள் அதில் ஏபி -1…
Read More
யூ பி ஐ பயன்படுத்துபவர்கள் உஷார் !

யூ பி ஐ பயன்படுத்துபவர்கள் உஷார் !

யூ பி ஐ (UPI-Unified Payment Interface) என்று அழைக்கப்படும் இந்த சேவையை இன்று இந்தியாவில் சுமாராக 100 மில்லியன் (10 கோடி) மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த அக்டோபர் 2019 ஒரே மாதத்தில் மட்டும் இந்த யூ பி ஐ சேவையைப் பயன்படுத்தி 100 கோடி பணப் பரிமாற்றங்கள் நடந்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதுவரை செக், நெட் பேங்கிங், ஏடிஎம், டெபிட் கார்ட்கள் வழியாக மட்டுமே, அப்பாவி மக்களிடம் பணம் பறித்துக் கொண்டிருந்த ஆன்லைன் திருடர்கள், இப்போது இந்த யூ பி ஐ சேவையைக் குறி வைத்து திருடத் தொடங்கி இருக்கிறார்கள். உதாரணம் 1 வங்கி வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் அல்லது வங்கி அதிகாரிகளைப் போலவே நம்மிடம் பேசத் தொடங்குவார்கள். அதன் பின் கொஞ்சம் அதிகார தொனியில், நம் டெபிட் கார்ட் விவரங்களைக் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். தரவில்லை என்றால், வங்கிக் கணக்கு மூடப்படும் என…
Read More
இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்…! இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் ?

இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்…! இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் ?

தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில், இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும். ஆம். மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் இரண்டு மருத்துவர்கள் மூலம். மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே, “ Dissenting Diagonisis" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நோயாளிகளின் நலன் அல்ல, பங்குதாரர்களின் நலனே முக்கியம்:' மருத்துவச் சுற்றுலாவில் இந்தியா, குறிப்பாக சென்னை கோலாச்சுகிறது' என்று இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிதற்றிக் கொள்ளும் இந்த தருணத்தில், இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியர்களான மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே முன் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, “ இங்குள்ள பெரிய மருத்துவமனைகள் நோயாளிகளின்…
Read More
‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங் !

‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங் !

நடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும். ’83 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். அது டுன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம். அந்த இந்தியா – ஜிம்பாப்வே போட்டி, மிகவும் மறக்கமுடியாத போட்டிகளில் ஒன்றாக இன்றும் கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் அந்த போட்டியானது எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பப்படவும் இல்லை, பதிவு செய்யவும் பட்டிருக்கவில்லை.ரன்வீர்சிங்கின் ஒரு வியத்தகு ஒப்பனை, அச்சு அசல் கபில்தேவை ஒத்திருக்கும் வகையில் அமைந்திருந்தது, அது உண்மையான கபில்தேவுக்கும், திரையில் வரும் கபில்தேவுக்கும் உள்ள வித்தியாசங்கள் ஒன்றுமே…
Read More
டெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது’ பெறுகிறார் !

டெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது’ பெறுகிறார் !

டெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது’ பெறுகிறார்.அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மல்டி எத்னிக் அட்வைசரி டாஸ்க் ஃபோர்ஸ் அதாவது பல்வேறு இன மக்களுக்கான பணிக்குழுவின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது. 2019 ஆம் ஆண்டுக்கான இந்த நிறுவனத்தின் விருதுகள் வழங்கும் விழா, இன்று இல்லினாயிஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் நடைபெறுகிறது. இந்த மாபெரும் விழாவில், அரசு முறை பயணமாக அமெரிக்கா வந்திருக்கும் தமிழக துணை முதல்வர் மேதகு ஓ பன்னீர் செல்வம் அவர்களும் கலந்துக் கொண்டுச் சிறப்பிக்கிறார்கள்.இந்த விழாவில் இப்பணிக் குழுவினருடன் அமெரிக்கவாழ் இந்திய சமூகமும் இணைந்து, தமிழக துணை முதல்வருக்கு ‘உதய நட்சத்திரம்’ எனும் விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். இதே விழா மேடையில், ‘இந்த ஆண்டின் சிறந்த பிலிம்மேக்கர்’ விருது எனக்கு வழங்கப்படுகிறது என்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. 2010 ஆம் ஆண்டு டேனி கே டேவிஸ் எனும் அமெரிக்க காங்கிரஸ்காரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த குழுவானது,…
Read More
நில உச்சவரம்பு சட்டப்படி  16ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது ? கூடுதல் நிலம் அரசால் கையகப்படுத்தப்படும். ?

நில உச்சவரம்பு சட்டப்படி 16ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது ? கூடுதல் நிலம் அரசால் கையகப்படுத்தப்படும். ?

நில விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும் போது, நில உச்சவரம்பு சட்டப்படி, கூடுதல் விபரங்களை பெற வேண்டும்' என, சார் பதிவாளர்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். இது, சார் பதிவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், நில உச்ச வரம்பு சட்டம், 1961ல் அமலுக்கு வந்தது. இதன்படி, தனி நபர்கள், 16 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது. இந்த அளவுக்கு மேல் நிலம் வைத்து இருந்தால், கூடுதல் நிலம் அரசால் கையகப்படுத்தப்படும். இவ்வாறு பெறப்படும் மிகை நிலங்கள், அந்தந்த பகுதியில், நிலம் இல்லாத ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்; அரசு துறைகளின் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும். திட்டத்தை செயல்படுத்த, நில உச்சவரம்பு தாசில்தார்கள் இருந்தனர். சில ஆண்டுகளாக, நில உச்சவரம்பு தாசில்தார்கள், முறையாக நியமிக்கப்படாததால், மிகை நிலங்களை கையகப்படுத்துவது முடங்கி உள்ளது.இந்நிலையில், தற்போது நில உச்சவரம்பு சட்ட விதிகளை தீவிரமாக அமல்படுத்த, கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சொத்து பரிமாற்றங்களின் போது,…
Read More
ரூ. 2.20 லட்சம் விலையில் மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம் !

ரூ. 2.20 லட்சம் விலையில் மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம் !

கைனடிக் க்ரீன் எனர்ஜி என்கிற வாகன தயாரிப்பு நிறுவனம் மூன்று சக்கரத்தில் இயங்கக்கூடிய மின்சார வாகனத்தை ரூ. 2.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் புனே) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.ஒரு கி.மீ-க்கு ரூ. 0.50 பைசா மட்டுமே..!இந்தியாவுக்கான மிட் ஸ்பீடு எலெக்ட்ரிக் வாகன செக்மென்டில் சாபர் ஸ்டார் என்கிற பெயரில் மூன்று சக்கர மின்சார வாகனத்தை கைனடிக் கிரீன் எனர்ஜி என்கிற நிறுவனம் கொண்டு வந்துள்ளது.வர்த்தக வாகன பயன்பாட்டுக்கான இந்த வாகனம் அதிகப்பட்சமான 400 கிலோ எடை வரை சுமந்து செல்லும். இதனுடைய காம்பேக்ட் வடிவிலான தோற்றம் மற்றும் வலிமையான கட்டமைப்பு நகர பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கும். முற்றிலும் ஸ்டீல் கட்டமைப்பை பெற்றுள்ள இந்த மூன்று சக்கர மின்சார வாகனம், மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தில் சலுகைகளை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் 48வி லித்தியம்-ஐயன் பேட்டரி உள்ளது. இது 150 ஏ.எச் பவரை வெளிப்படுத்தக்கூடியது. இந்த பேட்டரியை முழுமையாக…
Read More