17
Nov
ஸ்மார்ட் சிட்டி ஊழல் ? சிக்குகிறார் வேலுமணி? சென்னையில் ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்னு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அந்தப் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனங்கள் இப்போது ஆடிப் போயிருக்காங்க. மேலும் ஒப்பந்தத்தை நிறுவனங்களுக்கு கொடுக்க காரணமான அதிகாரிகள் முதல் அப்போது அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி வரை பலர் இந்த விவகாரத்தில் சிக்குவாங்கங்கிறாங்க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானதாக கூறப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தத்தில் பணிகள் கொடுக்கப்பட்டதாக தெரியுது. அந்த வகையில் சென்னை தி.நகர் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தப் பணியை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்ட பெரிய நிறுவனத்துக்கு மொத்தமாக கொடுக்கப்பட்டு, பிறகு அந்த நிறுவனம் பணிகளை சப் காண்ட்டிராக்ட் முறையில் பிரித்து கொடுத்ததாக சொல்லப்படுது. மனிதர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் உருவாக்குவதன் அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்தவகையில் எங்கு ஸ்மார்ட்…
