சினிமா

ஹம்ஸா அறக்கட்டளையின் மூலம் வசதிவாய்ப்பற்றவர்களுக்கு இலவச சிகிச்சை !

ஹம்ஸா அறக்கட்டளையின் மூலம் வசதிவாய்ப்பற்றவர்களுக்கு இலவச சிகிச்சை !

சென்னையின் புகழ் பெற்ற முதுகெலும்பு மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை வல்லுனர்களில் ஒருவரான டாக்டர் பாலமுரளி அவர்களின் தலைமையில் , முதுகெலும்பு மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஹம்ஸா பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தில் ஹம்ஸா மையம் துவங்கப்பட்டது. புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த மறுவாழ்வு மையத்தில் 20 படுக்கைகள் உள்ளன, இங்கு தண்டுவட பாதிப்புகள், மூளை பாதிப்புகள், பக்கவாதம், கழுத்து மற்றும் முதுகு வலி, செரிபிரல் பால்ஸி என்னும் பெருமூளை வாதம், மற்றும் பல நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவியும், சிகிச்சையும் அளிக்கப்படும் இருபது உள்நோயாளிகளுக்கான படுக்கைகளைக் கொண்ட ஹம்ஸா மையம், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் மற்றும் தினசரி பராமரிப்பு சேவைகளை வழங்கும். சென்னையில் முதல் முதலில் இம்மாதிரியான சேவைகளை பிரத்தியேகமாகவும் முழுமையாகவும் ஹம்ஸா மையம் வழங்குகிறது. மறுவாழ்வு சேவைகளோடு சேர்த்து கூடுதலாக பேச்சு மற்றும் முழுங்கும் சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை, சக ஆலோசகர், சமூக சேவகர், அறிவாற்றல் சிகிச்சை மற்றும் மனநல…
Read More
எளிதில் தீப்பற்றாத லித்தியம் பேட்டரி ! அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!

எளிதில் தீப்பற்றாத லித்தியம் பேட்டரி ! அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!

செல்லிடப்பேசிகளில் ( Mobile Phone ) பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் எளிதில் தீப்பிடிக்கும், சூடாகும் என்று புகார்கள் இருந்து வரும் நிலையில், எளிதில் தீப்பிடிக்காத லித்தியம்-அயன் பேட்டரிகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாக்கின்ஸ் இயற்பியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசி முதல் கார் வரை அனைத்திலும் பேட்டரி பயன்பாடு உள்ளது. இத்தகைய பேட்டரிகள், மின்னணு சாதனங்களின் ஆற்றல் சேமிப்பு கலனாக இருக்கின்றன. செல்லிடப்பேசிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் லித்தியம்-அயன் பேட்டரிகளின் மூலப்பொருள்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களாக உள்ளதால், செல்லிடப்பேசிகள் வெடித்து தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்து அந்த பேட்டரிகளில் எந்தவித எச்சரிக்கை குறியீடுகளும் வெளியிடப்படுவதில்லை. இத்தகைய பேட்டரிகளினால், பல செல்லிடப்பேசிகளை விமானங்களில் எடுத்துச் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க கடற்படையில், கப்பல்களில் இ-சிகரெட் எடுத்துச் செல்ல தடை உள்ளது. இவற்றைக்…
Read More
கூடுதல் கட்டணம் வசூலித்த 7 தனியாா் பேருந்துகள் பறிமுதல்! அமைச்சா் விஜயபாஸ்கா் தகவல் !!

கூடுதல் கட்டணம் வசூலித்த 7 தனியாா் பேருந்துகள் பறிமுதல்! அமைச்சா் விஜயபாஸ்கா் தகவல் !!

தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலித்த 7 தனியாா் பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்துத் துறை சாா்பாக 3 நாள்களுக்கு மாநிலம் முழுவதும் 21,586 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் இருந்து மட்டும் 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாதவரம், கே.கே.நகா், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து ஏராளமானோா் முன்பதிவு செய்தும், நேரடியாகவும் பயணம் செய்கின்றனா். மேலும், பலா் தனியாா் பேருந்துகளில் பயணத்துக்காக பதிவு செய்துள்ளனா். நிகழாண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி சொந்த ஊா்களுக்கு 8 லட்சம் போ் பயணிப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, போக்குவரத்துத் துறை சாா்பில் செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக…
Read More
ரீமேக் ஆகும் அஜித்தின் உல்லாசம் ! 22 ஆண்டுகளுக்கு பின்..!!

ரீமேக் ஆகும் அஜித்தின் உல்லாசம் ! 22 ஆண்டுகளுக்கு பின்..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவரது நடிப்பில் வெளியான விசுவாசம், வீரம் போன்ற படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், 1997-ம் ஆண்டு அஜித், விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் 'உல்லாசம்'. இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனையடுத்து உல்லாசம் படத்தை இயக்கிய, ஜேடி - ஜெரி இயக்குனர்களே இந்த ரிமேக் படத்தையும் இயக்கவுள்ளார்களாம். மேலும், இப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தில், விக்ரம் பிரபுவும், விக்ரம் கதாபாத்திரத்தில், துல்கர் சல்மானும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read More
தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு !

தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு !

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை அக்டோபர் இறுதிக்குள் வெளியிட்டு, அதனை நடத்துவோம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றாத தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்காக கடந்த 2016 அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி தற்போது வரை மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை பரிசீலனை செய்து விசாரித்த நீதிமன்றம், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது…
Read More
வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் தாமதம்… ?

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் தாமதம்… ?

எலெக்ட்ரிக் வேகன் ஆர் கார் அறிமுகம் குறித்து மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா தெரிவித்துள்ள தகவல் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகியவை ஏற்கனவே மின்சார கார்களை சந்தைக்கு கொண்டு வந்துவிட்டன. இதில், டாடா டிகோர் தனிநபர் பயன்பாட்டிற்கும் கிடைக்கிறது. நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் கூட கடந்த ஜூலையில் முதல் மின்சார மாடலாக கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் சாலை சோதனை ஓட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி பொது பார்வைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், மாறாக வேகன்…
Read More
விவசாயிகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி கட்டித் தந்த கட்டடம் !

விவசாயிகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி கட்டித் தந்த கட்டடம் !

விஜய்சேதுபதி புரொடக்சன், 7Cஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் 'லாபம்'.விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடமாகவே கட்டச்சொல்லி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக் கட்டடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லி இருக்கிறார் விஜய்சேதுபதி. அந்த ஊரில் லாபம் படப்பிடிப்பு நடந்ததால் தங்களுக்கும் லாபம் என ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.படம் பற்றி இயக்குனர் ஜனநாதன் கூறுகையில்,"என் படத்தின் டைட்டில் லாபம் என்றதும் பலரும் ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள். இந்தப் படம் யாருக்கு லாபம் என்பதையும் எது லாபம் என்பதையும் பேசும்.இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்தி தான். நம்மிடம் இருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும் தான் பிரிட்டிஷ் காரன் கண்களை உறுத்தியது.நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத்தான்…
Read More
மல்டி மீடியா மாணவர்களுக்கு மவுசு! படித்து கொண்டிருக்கும் போதே வேலை!!

மல்டி மீடியா மாணவர்களுக்கு மவுசு! படித்து கொண்டிருக்கும் போதே வேலை!!

எஞ்சினியரிங் உள்பட பல பெரிய படிப்புகளை படித்து விட்டு வேலையில்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கும் நிலையில், மல்டிமீடியா மாணவர்களுக்கு படித்துக் கொண்டிருக்கும் போதே வேலைவாய்ப்பு அவர்கள் இருக்கும் இடத்தை தேடி வருகின்றது சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மல்டிமீடியா மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்ய அமேசான் உள்பட பெரிய நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு அடுத்த மாதம் வரவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.அமேசான், டிசிஎஸ் போன்ற பெரிய கம்பெனிகளுக்கு மல்டிமீடியா மாணவர்கள், குறிப்பாக டிசைனிங் மாணவர்கள் அதிக அளவில் தேவைப்படுவதாகவும் அதனால் அந்த வேலைக்கு படித்துக் கொண்டிருக்கும் போதே பகுதிநேர ஊழியராக சேர்த்துக் கொள்ள இந்த நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ ஒன்றை அடுத்த மாதம் நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது இதனை அடுத்து மல்டிமீடியா மாணவர்களுக்கு மவுசு அதிகரித்து உள்ளதால் அந்த படிப்பை படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் கொள்கின்றனர். மல்டிமீடியா படிப்பிற்கு கொஞ்சம் அதிகம் செலவானாலும் படித்து முடித்தவுடன் அல்லது படித்துக் கொண்டிருக்கும்…
Read More
மீண்டும் வரும் அர்னால்டின்   Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) !

மீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) !

உலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது. இந்த Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்‌ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய Terminator படம் மூலம்தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் Arnold Schwarzenegger. இன்றும் உலகில் பெரு வெற்றி பெற்று அதிக வசூல் குவித்த படங்களுல் Terminator முதல் பாகமும் இரண்டாம் பாகமும் நிலைத்து நிற்கிறது. இந்த இரண்டு பாகங்களையும் உலகப்புகழ் James Cameron இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கதையில் பங்காற்றி தயாரித்திருக்கும் இப்படத்தில் Terminator ஆக Arnold Schwarzenegger மீண்டும் நடித்துள்ளார். இந்தியாவில் இப்படத்தினை Fox Studios வெளியிடுகிறது. உலகளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டு பேசிய போது, “ ரொம்ப சந்தோஷமாயிருக்கு. இவ்வளவு நாள் ஜிம்…
Read More
எப்பா.. இந்த ஆதித்யா வர்மா படத்தாலே எனக்கு ஏகப்பட்ட டென்ஷன் – விக்ரம் பேச்சு!

எப்பா.. இந்த ஆதித்யா வர்மா படத்தாலே எனக்கு ஏகப்பட்ட டென்ஷன் – விக்ரம் பேச்சு!

துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக கால் பதிக்கிறார். கிரி சாயா இயக்கிய இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங் கள் நடித்துள்ளனர். திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இசை விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில்,“ஆதித்ய வர்மா படப்பிடிப்பு தளத்தில், நடிகர் விக்ரம் ஒருபோதும் உச்ச நட்சத்திரம் போல நடந்து கொள்ளவில்லை.. பாசமிகு தந்தையாகவே திகழ்ந்தார். 2021-ம் ஆண்டில், விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடித்து நம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.” என்றார் ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் பேசுகையில்,…
Read More