சினிமா

‘பிழை’ – பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது ஒரு பாடம் !

‘பிழை’ – பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது ஒரு பாடம் !

பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று பாடம் சொல்லிக் கொடுக்கிறது இந்தப்படம் , அதே சமயம் குழாதை படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்கிற கருத்தை வலுவாகச் சொல்லியிருக்கிறார்கள்.நடிகர்கள் சார்லி , ஜார்ஜ் ,மைம்கோபி மூன்று பேருமே கல் உடைக்கும் தொழிலாளர்கள்.நாங்கள் தான் படிக்க வில்லை . குழந்தைகளாவது நன்றாகப் படுக்கட்டும் என்கிற எண்ணத்தில் அவர்களை படிக்க வைக்கிறார்கள். காக்கா முட்டை ராஜேஷ் தலைமையிலான 3 பேர் அடிக்கும் லூட்டி இடை வேளை வரைத் தொடருது. கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை இடைவேளை வரை கணிக்க முடியாதபடி இயக்குநர் கதையை நகர்த்தி இருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு அந்த ஊரைச் சேர்ந்த கதாநாயகன் ஊரை விட்டு காணாமல் போய் விட்டு உஊருக்குத் திரும்பியதைப் பார்த்து 3 நிறவா காடுக்கும் 13 சிறுவர்களுக்கும் இது போல பணம் சமாதிக்கணும் என்று முடிவு செய்து வீட்டை விட்டு ஓடுகிறார்கள் . அந்த…
Read More
திரையரங்கில் ஓடும்போதே ஹாட்ஸ்டாரில் ‘கைதி’ ? காரணம் என்ன?

திரையரங்கில் ஓடும்போதே ஹாட்ஸ்டாரில் ‘கைதி’ ? காரணம் என்ன?

கைதி திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகியுள்ளது தமிழ்த் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், மூன்றாவது வாரத்திற்கு மேல் தங்களுக்கு பெரிதாக வருவாய் வருவதில்லை என்பதில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.கார்த்தி நடித்து தீபாவளி தினத்தன்று வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதால் ஒரு மாதம் கழிந்த நிலையிலும், தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தப் படம் சில நாட்களுக்கு முன்பாக ஹாட் ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியானது.படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே, ஹாட் ஸ்டாரில் வெளியானதற்கு பல திரையரங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கின் நிர்வாகியான நிகிலேஷ், "கைதி திரைப்படம் வெளியாகி 30வது நாளன்றுகூட இரண்டு காட்சிகள் முழுமையாக நிரம்பின. ஆனால், தற்போது படம் ஆன்லைனில் வெளியாகியிருக்கிறது. இதனால், உடனடி பாதிப்பு இருக்காது என்றாலும்கூட, மிக அபாயகரமான முன்னுதாரணம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இந்தியில் பேச வற்புறுத்திய நபர், 'தமிழில் பேசலாமா'…
Read More
பஞ்சபூத கதாபாத்திரங்களுடன் ‘பஞ்சராக்ஷரம்’ !

பஞ்சபூத கதாபாத்திரங்களுடன் ‘பஞ்சராக்ஷரம்’ !

பேரடாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பாலாஜி வைரமுத்து இயக்கத்தில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பில், சந்தோஷ் பிரதாப், அஷ்வின் ஜெரோம், கோகுல், மது ஷாலினி, சனா அல்டாப் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பஞ்சராக்ஷரம்'.இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது,"நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே இந்தப் படத்தை எடுத்துள்ளேன்," என்றார். பாடலாசிரியர் ஜிகேபி பேசுகையில்,என்னை வெளிகாட்டுவதை நான் விரும்புவதில்லை. 'வாயாடி பெத்த புள்ளை' மாதிரியான பாடல்களை எளிமையாக எழுதிவிடுவேன். ஆனால், கர்மா, அண்டம் பற்றியான படத்திற்கு பாடல்கள் எழுதுவது சவாலாக இருந்தது. இசையமைப்பாளர் சுமோ எனக்கு ஒரு நோட்ஸ் அனுப்பியிருந்தார். பொதுவாகவே நான் பாடல்கள் எழுதுவதாக இருந்தால் மிகவும் ஆழமாக சிந்தித்து நேரம் எடுத்து எழுதுவேன். ஆனால், அந்த இசையைக் கேட்டவுடன் பாடல் வரிகள் சரளமாக வந்தது. அதை நேரடியாக பாலாஜிக்கு அனுப்பினேன்.…
Read More
வித்தியாசமான பரிமாணத்தில் உருவாகியுள்ள ‘தேடு’ !

வித்தியாசமான பரிமாணத்தில் உருவாகியுள்ள ‘தேடு’ !

கிஷோர் சினி ஆர்ட் சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குனர் சுசி. ஈஸ்வர் இயக்கத்தில், சஞ்சய், மேக்னா நடிப்பில் வித்தியாசமான பரிமாணத்தில் திரைக்கு வரவிருக்கும் ஆக்ஷன் திரைப்படம் 'தேடு' கிஷோர் சினி ஆர்ட் சார்பாக சிவகாசி முருகேசன் தயாரித்து, தானே ஒரு முக்கிய வேடத்தில் எதிர்நாயகனாக நடித்திருக்கும் இப்படம், முற்றிலும் புதிய பரிமாணத்தில், வித்தியாசமான கதை களத்துடன் ஒரு அதிரடித் திரைப்படமாக ரசிகர்களை ஈர்க்க தயாராகி வருகிறது. ‘இணைய தலைமுறை’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுசி. ஈஸ்வர் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். மது மயக்கத்தில் ஒருவர், காதல் மயக்கத்தில் இளம் காதலர்கள், செல்ஃபி மயக்கத்தில் இளம் மாணவ-மாணவியர் என முப்பரிமாணத்தில் பயணப்படும் இக்கதை, வித்தியாசமான கதைகளத்துடனும், எதிர்பாராத திருப்புமுனைகளுடனும், விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடனும், ஜனரஞ்சகமாக படமாக்கப்பட்டு இருக்கிறது. மயக்கம் கலைந்து, தவறுகள் களைந்து, இலக்கை அடைந்தார்களா என்பதே இப்படத்தின் கதைகளம்.இப்படம் முழுவதுமே ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில்…
Read More
அமெரிக்காவில் ’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’-ஜனவரி 08 ல் பிரீமியர் ஷோ

அமெரிக்காவில் ’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’-ஜனவரி 08 ல் பிரீமியர் ஷோ

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது. வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பிரைம் மீடியா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்து வருகிறது. மிகக் குறைந்த வருடங்களிலேயே இந்நிறுவனம் சுமார் 200 திரைப்படங்களை வெளியிட்ட பெருமையை பெற்றிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுவதற்கு எங்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தவர் கல்ராமன், தலைமை டிஜிட்டல் அதிகாரி, சாம்சுங் அமெரிக்கா. இவர் ஒரு தமிழர். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு மதிநுட்பமான தொழிலதிபர்.வருகின்ற ஜனவரி 08ம் தேதி பிரிமியராகவுள்ள இப்படம், சூப்பர் ஸ்டாருடன் இயக்குனர் முருகதாஸ் இணைந்துப் பணியாற்றும் முதல் படம் என்பதால் திரைப்பட ரசிகர்களிடையே ஒரு…
Read More
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது !

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது !

தமிழ் சினிமாவின் இசைபகுதியை கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக தனது அற்புதமான இசையால் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவருக்கு உலகின் பலப்பகுதிகளும் கோடான கோடி இசை ரசிகர்கள் மட்டுமல்லாது, தனது அற்புதமான இசை ஆற்றலால் இசைக் கலைஞர்களையும் வியக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர். சோகத்தில் இருக்கும் பொழுது, பயணம் மேற்கொள்ளும்போது, உற்சாகமாக இருக்கும்போது என பல தருணங்களிலும் இவரது பாடல்கள் ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகிறது. இவ்வாறு ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்டு விளங்கும் இளையராஜா தற்போது துப்பறிவாளன் 2 ,சைக்கோ, மாமனிதன், தமிழரசன்,கிளாப் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்கவுள்ளார். இசைஞானி இளையராஜா தனது பாடலுக்காக ஏராளமான பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், தற்போது கேரள அரசு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்குவதாகக் அறிவித்துள்ளது.மேலும் இந்த விருதை அடுத்த மாதம் 15ஆம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் விருதுடன் அவருக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்க பரிசும்…
Read More
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.230 கோடி அபராதம் விதிப்பு

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.230 கோடி அபராதம் விதிப்பு

ஜான்சன் அண்ட் ஜான்சன் வாடிக்கையாளர்களிடமிருந்து தவறாக பணம் வசூலித்ததால் ரூ .230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு உற்பத்தியாளரான ஜான்சன் அண்ட் ஜான்சன், வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி (GST) விலக்கின் பயனை வழங்காததற்காக தேசிய மிகை லாப தடுப்பு (The National Anti-profiteering Authority) அபராதம் விதித்துள்ளது. தேசிய மிகை லாப தடுப்பு ஆணையத்தின் தலைவர் பி.என்.ஷர்மன் தனது உத்தரவில், 15 நவம்பர் 2017 முதல் டிசம்பர் 2018 வரை வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் ஜிஎஸ்டி (GST) விகிதத்தை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அரசாங்கம் குறைத்தது. ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்த பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை. மேலும் மூன்று மாதங்களுக்குள் நிறுவனம் 230 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. அபராதத்தை நிறுவனம் செலுத்தாவிட்டால், இந்த பணம் ஜிஎஸ்டி அதிகாரத்தால்…
Read More
ஜி.எஸ்.டி.தாக்கல் செய்யாதவர்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் ?

ஜி.எஸ்.டி.தாக்கல் செய்யாதவர்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் ?

சரக்கு மற்றும் சேவை வரி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும், அவர்களது வங்கி கணக்கு முடக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் மீது, நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறை தான் இது. ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ், ஒருவர் மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில், 20 சதவீதம் பேர் கணக்கை தாக்கல் செய்வதில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ஜி.எஸ்.டி., வருமான வசூலை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்வதில் போதாமைகள் இருக்கிற காரணத்தால், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம், ஒரு வசதியை வழங்குகிறது. இதன்படி, கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்குள் தாக்கல் செய்யாதவர்களுக்கு, கெடு தேதிக்குப் பின், ‘மெயில்’ அல்லது குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படும்.அடுத்த, ஐந்து நாட்களுக்குப் பின், 15…
Read More
QR கோடு மோசடி ? ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களே உஷார்!

QR கோடு மோசடி ? ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களே உஷார்!

சமீப காலங்களில் QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. QR கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையும் பரவலான ஒன்றாக இருக்கிறது. ஆனால், முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்யும்போது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.ஆன்லைன் மூலமே இந்த வகையான மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அவர்கள், ``பணம் செலுத்துகிறேன், இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள்" எனக் கூறினால் கண்டிப்பாக ஸ்கேன் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து அவர்களால் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். கடந்த சில வாரங்களாக இதேபோல் பணத்தை இழந்த பல பேர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஹைதராபாத்திலும், பெங்களுரிலும் இதே போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக…
Read More