29
Oct
சென்னையின் புகழ் பெற்ற முதுகெலும்பு மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை வல்லுனர்களில் ஒருவரான டாக்டர் பாலமுரளி அவர்களின் தலைமையில் , முதுகெலும்பு மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஹம்ஸா பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தில் ஹம்ஸா மையம் துவங்கப்பட்டது. புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த மறுவாழ்வு மையத்தில் 20 படுக்கைகள் உள்ளன, இங்கு தண்டுவட பாதிப்புகள், மூளை பாதிப்புகள், பக்கவாதம், கழுத்து மற்றும் முதுகு வலி, செரிபிரல் பால்ஸி என்னும் பெருமூளை வாதம், மற்றும் பல நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவியும், சிகிச்சையும் அளிக்கப்படும் இருபது உள்நோயாளிகளுக்கான படுக்கைகளைக் கொண்ட ஹம்ஸா மையம், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் மற்றும் தினசரி பராமரிப்பு சேவைகளை வழங்கும். சென்னையில் முதல் முதலில் இம்மாதிரியான சேவைகளை பிரத்தியேகமாகவும் முழுமையாகவும் ஹம்ஸா மையம் வழங்குகிறது. மறுவாழ்வு சேவைகளோடு சேர்த்து கூடுதலாக பேச்சு மற்றும் முழுங்கும் சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை, சக ஆலோசகர், சமூக சேவகர், அறிவாற்றல் சிகிச்சை மற்றும் மனநல…
