நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா!

*”நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா*

பல உயிர்களை காக்கும் நாளைய மருத்துவ நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தேர்வுக்கு மிகப்பெரிய பொறுப்புள்ளது. ஆனால், அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படும்போதுதான் திறமைக்கு உண்மையான மதிப்பு கிடைக்கும்.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அளவுகோலாக நீட் தேர்வு தொடருமானால், அந்த தேர்வுக்கான முன் தயாரிப்பும், வாய்ப்பும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு மற்றும் கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான நீட் பயிற்சி மற்றும் கல்வி கிடைக்க வேண்டும். நானும் முன்பு நீட் தேர்வு மாணவி என்பதன் அடிப்படையில் இதை கூறுகிறேன்.

தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மேலும், தேர்வு முறையின் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்தும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு இயக்கமாகவே தொடர வேண்டும். இதை அரசியல் நோக்கங்களுக்காக பிளவுபடுத்தக் கூடாது. இந்த இயக்கத்தின் மையமாக மாணவர்களின் நலன், சமத்துவம், பொறுப்பேற்றல் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களாக இருக்க வேண்டும்.

Related posts:

ஒண்டிமுனியும் நல்லபாடனும் --விமர்சனம் |

QR கோடு மோசடி ? ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களே உஷார்!

ஏர்டெல், வோடபோன், ஜியோ தங்களது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது.!

“வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு ஐந்து நாள் விழா நடத்துகின்றனர்”

*வரலட்சுமி சரத்குமார் – இலங்கையில் எடுத்த புகைப்படங்களில் மென்மையும் மின்னலும்! அழகு, ஆற்றல் மற்றும் தனித்துவ திறமையின் சின்னமாக ஜொலிக்கிறார்!*

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன்சென்னை, இராயப்பேட்டை, பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் தமிழ்நாடு அரசின் ஆ...

’காட்டாளன்’ திரைப்பட விமர்சனம் !