நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா!

*”நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா*

பல உயிர்களை காக்கும் நாளைய மருத்துவ நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தேர்வுக்கு மிகப்பெரிய பொறுப்புள்ளது. ஆனால், அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படும்போதுதான் திறமைக்கு உண்மையான மதிப்பு கிடைக்கும்.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அளவுகோலாக நீட் தேர்வு தொடருமானால், அந்த தேர்வுக்கான முன் தயாரிப்பும், வாய்ப்பும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு மற்றும் கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான நீட் பயிற்சி மற்றும் கல்வி கிடைக்க வேண்டும். நானும் முன்பு நீட் தேர்வு மாணவி என்பதன் அடிப்படையில் இதை கூறுகிறேன்.

தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மேலும், தேர்வு முறையின் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்தும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு இயக்கமாகவே தொடர வேண்டும். இதை அரசியல் நோக்கங்களுக்காக பிளவுபடுத்தக் கூடாது. இந்த இயக்கத்தின் மையமாக மாணவர்களின் நலன், சமத்துவம், பொறுப்பேற்றல் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களாக இருக்க வேண்டும்.

Related posts:

விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பரத் – சக்திவாய்ந்த நட்சத்திர கூட்டணியின் புதிய பரிமாணம்!

'காமெடி கிங்' கவுண்டமணி நடிக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு!

பிளே ஸ்டோரில் 85 ஆப்கள் நீக்கம்! கூகுள் அதிரடி!

நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' இசை வெளியீட்டு விழா!

*நடிகர் சனந்த் நடிக்கும் 'ஹார்ட்டின் ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*!

‘மிகமிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் தமிழ்க்குடிமகன்

கிரெடிட் கார்டு பயன்பாட்டில் உள்ள இடர்களை தவிர்ப்பதற்கான வழிகள் !

'டியூட்' --- விமர்சனம் !