07
Aug
பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு மின்னணு பண பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது. எனவே இத்தகைய பரிவர்த்தனைகளில் நிகழ வாய்ப்புள்ள மோசடிகள் குறித்தும், அதுசார்ந்து கிடைக்கும் உதவிகள் குறித்தும் ‘ ஜாங்கார் பானியே, சதார்க் ராஹியே’ முன்னெடுப்பின் மூலம் ரிசர்வ் வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துவருவதைப் பார்க்கமுடிகிறது. ஆன்லைன் முறையில் நடக்கக்கூடிய இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்றவற்றை மின்னணு பரிவர்த்தனைகள் எனலாம். கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளின் மூலம் நடைபெறும் ஏடிஎம் அல்லது பாயிண்ட் ஆஃப் சேல் பரிவர்த்தனைகளையும் மின்னணு பரிவர்த்தனைகள் எனலாம். இந்தப் பரிவர்த்தனைகள் குறித்து நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன, அவற்றைப் பார்ப்போம். மின்னணு பரிவர்த்தனை முறையில் நீங்கள் மோசடிக்கு உள்ளானது வங்கியின் குறைபாடு மற்றும் அலட்சியத்தால் நிகழ்ந்தால் அதற்கு சட்டப்படி நீங்கள் பொறுப்பாளி அல்ல. இந்த மோசடி குறித்து நீங்கள் வங்கிக்கு தெரிவித்தாலும், தெரிவிக்காவிட்டாலும் நீங்கள் பொறுப்பாளி அல்ல. எது எப்படி இருந்தாலும், இழந்த தொகையை முழுமையாக…
