சினிமா

வசீகர குரல் மன்னன்’ சித் ஸ்ரீராமின் ‘All Love No Hate’-தென்னிந்திய இசைப் பயணம் 2020 !

வசீகர குரல் மன்னன்’ சித் ஸ்ரீராமின் ‘All Love No Hate’-தென்னிந்திய இசைப் பயணம் 2020 !

2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்து துவங்குகிறார். ‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்குதல், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டு வரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, எஸ் பி பாலசுப்பிரமணியம் - யேசுதாசின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சிகளை…
Read More
“பண்டிகை காலங்களில் சிறிய படங்களை வெளியிட முன்னுரிமை !‘அடவி’ இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேச்சு !!

“பண்டிகை காலங்களில் சிறிய படங்களை வெளியிட முன்னுரிமை !‘அடவி’ இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேச்சு !!

“பண்டிகை காலங்களில் சிறிய படங்களை வெளியிட முன்னிரிமை அளித்திட வேண்டும்” – ‘அடவி’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பேச்சு.‘ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ்’ சார்பாக கே சாம்பசிவம் தயாரிப்பில், ஆழ்வார், திருடா திருடி, கண்ணோடு காண்பதெல்லாம், கிங் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு இயக்குனராக இருந்து திரைப்பட இயக்குனராக உயர்ந்திருக்கும் ரமேஷ் ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கிறது ‘அடவி’. இந்த சமுதாயத்தில், ‘இயற்கை வளங்கள் அனைவருடைய தேவைக்கும் போதுமானதாக இருக்கிறது. ஆனால் ஒரே ஒருவருடைய பேராசைக்கு கூட அது பத்தாது’ எனும் முதுமொழிக்கேற்ப, இப்படம் இயற்கை, இயற்கையோடு இயைந்து வாழும் மக்கள் என்றிருக்கும் வாழ்க்கை, ஒரே ஒருவரது பேராசையால் என்ன கதிக்கு உள்ளாகிறது என்பதை உணர்வுபூர்வமாக படம் பிடித்து காட்டி இருக்கிறது. வியப்பூட்டும் திருப்புமுனைகளும், பசுமையான காட்சி அமைப்புகளும், சுவராஸ்யமான அதிரடி காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் விதத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…
Read More
சென்னையில் நடிகர் மோகன்–ரசிகர்கள் சந்திப்பு!

சென்னையில் நடிகர் மோகன்–ரசிகர்கள் சந்திப்பு!

1980களின் அனைத்து திரையுலக ரசிகர்கள் மற்றும் இசைப்பிரியர்களின் மனங்கவர்ந்த நாயகனாக வலம் வந்த நடிகர் மோகன் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார்.வெகுகால அமைதிக்குப் பின், சென்னை மைலாப்பூர் வி ஏ தெருவில் அமைந்துள்ள நிவேதனம் ஹாலில் அவர் தனது ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்தார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு செய்தி வெளியான உடனேயே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும் அவரது ரசிகர்கள் அவரை சந்திப்பதற்கு முன்பதிவு செய்து, மிகுந்த ஆவலுடன் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர், சுமார் 200 பேருக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர் ரமேஷ், குமாரசாமி, ஜெரால்டு, அம்மாப்பேட்டை கருணாகரன், கிருபானந்தம் ஆகியோரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்து, தங்களது வாழ்வில் இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியதற்காக நன்றியும் தெரிவித்தனர்.
Read More
திருவள்ளூர் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் ஏ ஆர் ரகுமான்

திருவள்ளூர் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் ஏ ஆர் ரகுமான்

திருவள்ளூர் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் முயற்சி த என்ற புதிய இசை திட்டத்தை ஏ ஆர் ரகுமான் தனது பிறந்த நாளான நேத்திக்கு வெளியிட்டார். இதன் மூலம் தமிழக கிராமபுரத்தில் உள்ள இசையை உலக அளவில் கொண்டு செல்வதே தனது இலக்கு என்று அவர் கூறினார். கொஞ்சம் கிராமிய மணம் கமழும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஐயர் கண்டியிலுள்ள திரைப்பட இசை ஒளிப்பதிவு மற்றும் படப்பிடிப்பு ஸ்டுடியோ வில் நடைபெற்ற விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய வகையில் கொண்டு செல்லும் முயற்சியாக த என்ற இசை ஆசையை தனது பிறந்த நாளையொட்டி வெளியிட்டார்.. இதையடுத்து செய்தியாளர் பேசிய அவர் தற்போது நடைபெற்று வரும் விரும்பத்தகாத போர் போராட்டங்களால் இளைஞர்கள் மனதில் தவறான எண்ணங்கள் வேரூன்றி வருவதாகவும் இதிலிருந்து விடுபட இசை பேருதவி புரியும் என்றும் கூறியவர்…
Read More

ரஜினியின்’தர்பார்’ அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஏர்டெல்.!

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியில் நேர்காணல்கள் மற்றும் திரைக்குப்பின்னால் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்கள் உட்பட ' தர்பார் திரைப்பட உள்ளடக்கத்திற்கு பிரத்யேக அணுகுவசதியை இது வழங்குகிறது • ஏர்டெல் ரீடெய்ல் ஸ்டோர்களில் குறுகிய பதிப்பாக ' தாபார் ' பிராண்டுடன் கூடிய சிம்கள் கிடைக்கப் பெறுகின்றன. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியில் அதிக அளவிலான இன்ட்ராக்டிவ் முறையிலான தர்பார் க்விஸ் ( வினாடி வினா ) செயல் திட்டத்தில் பங்கேற்பதன் மூலம் தர்பார் திரைப்பட டிக்கட்டுகளையும் மற்றும் தர்பார் திரைப்பட நட்சத்திரங்களையும் வாடிக்கையாளர்கள் வெல்லும் வாய்ப்பை பெறுவார்கள். ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவைகள் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான பார்தி ஏர்டெல் " ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ' தர்பார் திரைப்படத்துடனான ஒரு பிரத்யேக கூட்டு வகிப்பு செயல்பாட்டை அறிவித்திருக்கிறது . இந்த ஒத்துழைப்பு செயல்பாட்டின் ஒரு பகுதியாக தனது வாடிக்கையாளர்களுக்கு தர்பார் " திரைப்படத்தின் மீது வரம்பற்ற அபைவத்தை தரும் உறுதிமொழியோடு கிளர்ச்சியூட்டும்…
Read More
பச்சை விளக்கு இசை வெளியீட்டு விழா ! பாரதிராஜா, பாக்யராஜ் பாராட்டு !!

பச்சை விளக்கு இசை வெளியீட்டு விழா ! பாரதிராஜா, பாக்யராஜ் பாராட்டு !!

டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் 'பச்சை விளக்கு'.புதுமுகங்கள் தீசா, தாரா, 'அம்மணி' புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு 'வேதம் புதிது' தேவேந்திரன் இசை அமைத்திருக்கிறார்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் கே.பாக்யராஜ், மதுரா பாலன், மலேசிய எழுத்தாளர் நெல்லையப்பன் நாயக்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் இயக்குனர் பாரதிராஜா பேசும் போது, "இன்று மீடியா வளர்ந்துள்ளது. நாங்கள் படம் எடுத்த காலத்தில் இரண்டு மூன்று பேர் தான் கேமராக்களோடு வருவார்கள். இன்று மாறன் படத்திற்கு இத்தனை பேர் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மாறனின் இந்தப்பச்சை விளக்குப் படம் அரசாங்கம் எடுக்க வேண்டிய படம்.…
Read More
மருத்துவக் கழிவுகள் பற்றிய படம் ‘கல்தா’.!

மருத்துவக் கழிவுகள் பற்றிய படம் ‘கல்தா’.!

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'கல்தா'.ஹரி உத்ரா இயக்கத்தில், ஜெய் கிரிஷ் இசையமைப்பில், சிவநிஷாந்த், ஆண்டனி, அய்ரா, திவ்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.வெளிமாநிலத்திலிருந்து வரும் மருத்துவக் கழிவுகள், நம் தமிழ்நாட்டில் வந்து கொட்டப்படுவதால் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதைச் சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் பற்றி இயக்குநர் ஹரி உத்ரா கூறியதாவது, 'கல்தா'ங்கிறது வழக்கமா நம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க. அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம்.அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த இயல்பான படமா இதை உருவாக்கி இருக்கோம். நிஜத்தில் இங்க நடந்துட்டு இருக்குற சம்பவங்கள மையமா வச்சு இந்தப் படம் உருவாகியிருக்கு. எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் படம் இருக்கும். 'மேற்கு தொடர்ச்சி மலை' ஆண்டனி என்னுடைய நெடு நாள் நண்பர். நான் கதை…
Read More
அவனே ஸ்ரீமன் நாராயணா…அதிக திருப்பங்கள் நிறைந்த திரைப்படம். !

அவனே ஸ்ரீமன் நாராயணா…அதிக திருப்பங்கள் நிறைந்த திரைப்படம். !

அவனே ஸ்ரீமன் நாராயணா... திருப்பங்கள் நிறைந்த திரைப்படம். புஷ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சச்சின் இயக்கத்தில் நாயகனாக ரக்ஷித் நாயகியாக சார்லி நடித்திருக்கிறார்கள்.முற்றிலும் கற்பனையான கதை என்றாலும் காட்சிகளைப் பார்க்கும்போது நம்ப முடியாத அளவுக்கு காட்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார் இயக்குனர்.அமராவதி எனும் ஒரு பழமையான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தை தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம்.அமராவதி கிராமத்தில் புதையல் இருப்பதாக ஒரு நாடக கோஷ்டி.ஒரு கொள்ளைக் கும்பல் என்று புதையலைத் தேடி புறப்படுகிறார்கள். இதற்கிடையில் அந்த ஊரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஸ்ரீமன் நாராயணாவும் கிளம்புகிறார்.இதற்கிடையில் அந்த நாடக கோஷ்டியிடம் புதையல் சிக்கியதை அறிந்து அவர்கள் 6 பேரில் 5 பேரை சுட்டுக் கொல்கிறது.பேண்டு வாசிக்கும் நபரைக் கூட்டிச் செல்கிறது கொள்ளை கோஷ்டி.அந்த தலைவன் மூச்சிறைப்பு நோயால் அவதிப்படும் போது வேலைக்காரிக்கு பிறந்த ஜெயராமன் அப்பாவைக் கொன்று விட்டு தான் தலைவராகிறான். சொந்த மகன் துக்காராம் கோபித்துக் கொண்டு…
Read More
ஆஹா.. அறுசுவை! உணவே மருந்து!!

ஆஹா.. அறுசுவை! உணவே மருந்து!!

சமைப்பது, ஒரு வகையில் தவம். மாங்காய்க் குழம்பு, பாயசம், பாகற்காய் பொரியல், வாழைப்பூ கூட்டு, கார வறுவல், வடுமாங்காய் என அன்றாட உணவில் அறுசுவையையும் படைத்து, ருசித்து மகிழ்ந்த காலம் ஒன்று உண்டு. ''நாம் உண்ணும் உணவில் தினசரி அறுசுவைகளும் சரியான அளவில் இருந்தாலே, எந்த நோயும் கிட்ட நெருங்காது!'' என்று கூறும் சித்த மருத்துவர் வீரபாபு, அறுசுவையின் அருமை பெருமைகளை விளக்குகிறார். ''சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கைப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு என்ற இந்த ஆறு சுவைகள்தான் உணவுக்கு அடிப்படை. நம் உடலில் உள்ள தாதுக்கள் சரிவர இயங்க இந்த அறுசுவையும் சரியாக இருக்க வேண்டும். இன்றோ, நம்மில் பலர், குறிப்பிட்ட சில சுவைகளைத் தொட்டுக்கூடப் பார்ப்பது இல்லை. தொடர்ந்து ஒரேவிதமான சுவையுடைய உணவை அதிகம் உண்பதும், ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளுக்கு வழி வகுத்து விடும்'' என்கிற வீரபாபு, எந்தச் சுவையை, எப்படிச் சாப்பிடலாம்…
Read More