சினிமா

தமிழ்நாட்டில் கருவுறாமை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது !

தமிழ்நாட்டில் கருவுறாமை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது !

சென்னையில் கிடைக்கும் கருப்பை இருப்புக்கள் மற்றும் சிகிச்சை விருப்பங்கள் குறித்து கவலை தெரிவித்த NOVA INI கருவுறுதல் மற்றும் கருவுறுதல் ஆலோசகர் டாக்டர் மதுப்ரியா , " தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நகரங்களில் கருவுறாமை வழக்குகளில் கணிசமான அதிகரிப்பு உள்ளது என்கிறார் குறைந்த தரமான விந்து முட்டைகள் பொதுவான வளர்ந்து வரும் கவலை கருவுறுதல் சிகிச்சைக்காக வரும் தம்பதிகளுக்கு ஐவிஎஃப் பற்றிய நியாயமான அறிவு மட்டுமே இருக்கலாம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் , பலர் ஐவிஎஃப் சுழற்சிகளை தோல்வியுற்றிருப்பார்கள் , இதனால் அவர்கள் மீண்டும் கருத்தரிக்க முடியாது என்று நம்புகிறார்கள் . இருப்பினும் , ஐவிஎஃப் உடன் , பல கருவுறுதல் சிகிச்சைகள் உள்ளன . அவை அவற்றின் சொந்த உயிரியல் உயிரணுக்களை பெற வழிவகுக்கும் . இந்த சுழற்சி தோல்வியுற்றால் , இந்த ஜோடி நன்கொடையாளர் உயிரணுக்கள் மூலம் சிகிச்சையை தொடரலாம் . தற்போதைய மருத்துவ நிலைமைகள் மற்றும்…
Read More
10 லட்சம் பேர் வேலை பறிபோகும் ? கார் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

10 லட்சம் பேர் வேலை பறிபோகும் ? கார் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளதால் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.பொருளாதார மந்தநிலை காரணமாக, ஆட்டோ மொபைல் துறை கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாதிப்பை சந்திக்க தொடங்கியது. அந்த பாதிப்பின் தாக்கம் தற்போது எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதற்கு, பணப்புழக்கம் குறைந்தது, ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் வாகன விற்பனை சரிந்தது. இதனால், வாகன விற்பனையில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட டீலர்கள் தங்களது கம்பெனியை மூடி விட்டனர்.இந்நிலையில், விற்பனை சரிந்ததால், கார் நிறுவனங்கள் உற்பத்தி செய்த லட்சக்கணக்கான கார்கள் தேக்கம் அடைந்தன. இதன் காரணமாக, தற்போது கார் உற்பத்தியை குறைக்க அந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதை தொடர்ந்து தொழிலாளர்களுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது, தற்காலிக பணியாளர்கள்…
Read More
விலை ஒரு மேட்டரே இல்ல..! கார் ஸ்டைல்தான் ரொம்ப முக்கியம்.! அதிரடியாக மாறும் இந்தியர்களின் அணுகுமுறை !

விலை ஒரு மேட்டரே இல்ல..! கார் ஸ்டைல்தான் ரொம்ப முக்கியம்.! அதிரடியாக மாறும் இந்தியர்களின் அணுகுமுறை !

இந்திய கார் வாடிக்கையாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. புதிய கார் வாங்கும்போது இந்திய வாடிக்கையாளர்கள் விலைக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது உலகம் அறிந்த சங்கதி. ஆனால் நிலைமை தற்போது தலை கீழாக மாறி வருவது உண்மையில் ஆச்சரியமளிக்கிறது. ஆம், இந்திய கார் வாடிக்கையாளர்கள் விலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக காரின் ஸ்டைலுக்குதான் இந்தியர்கள் சிறப்பு கவனம் கொடுக்கின்றனர். மார்க்கெட்டிங் ஆய்வு நிறுவனமான ஜேடி பவர் இதனை தெரிவித்துள்ளது. ஜேடி பவர் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் இருந்து காரின் லுக் மற்றும் ஸ்டைலிங் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்திய வாடிக்கையாளர்களின் அணுகுமுறை மாறி வருவது தெரியவந்துள்ளது. அதுவே விற்பனை திருப்தி என வந்து விட்டால் ஹூண்டாய் முதலிடம் பிடிக்கிறது. மஹிந்திரா மற்றும் டொயோட்டா அதற்கு அடுத்த இடங்களில் உள்ளன. புதிய மாடலை…
Read More
டிரைவிங் லைசென்ஸ் பெற வந்துவிட்டது தொழில்நுட்பம் !

டிரைவிங் லைசென்ஸ் பெற வந்துவிட்டது தொழில்நுட்பம் !

மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள ஹாம்ஸ் என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் வாகனம் ஓட்டும் திறனை மதிப்பீடு செய்து லைசென்ஸ் வழங்கப்படும் முறை உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.வாகன ஓட்டிகள் லைசென்ஸ் பெறுவதற்கு '8' அல்லது 'S' போட்டால் போதும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், தற்போது தகுதியான ஓட்டுநர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சில சோதனை முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.அதன்படி, மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள ஹாம்ஸ் (HAMS) என்ற தொழில்நுட்பத்தை சோதனை முயற்சியாக உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன்களில் இந்த செயலியை பதிவேற்றி, அதை வாகன ஓட்டிகளின் முன்பக்கமாய் பொருத்துகின்றனர். இந்த செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், போனின் முன் மற்றும் பின்பக்க கேமராக்கள், சென்சார்கள் ஆகியவற்றின் மூலம் வாகன ஓட்டுபவரின் திறனை துல்லியமாக கண்காணிக்கிறது. மேலும், வாகனைத்தை பின்நோக்கி சென்று நிறுத்துதல் (ரிவர்ஸ் பார்க்கிங்), 'S'…
Read More
திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து  100 உயிர்களை காப்பாற்றியுள்ளது காவேரி மருத்துவமனை !

திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து 100 உயிர்களை காப்பாற்றியுள்ளது காவேரி மருத்துவமனை !

SCD எனப்படும் திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து 100 உயிர்களை வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உகந்த சிகிச்சை வழங்குவதில் காவேரி மருத்துவமனை முக்கியப் பங்கு வகிக்கிறது.நடிகர் பத்மஸ்ரீ விவேக் முன்னிலையில் நடைபெற்ற திடீர் மாரடைப்புத் தடுப்பு நிகழ்ச்சியில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 10 SCD சிகிச்சை பெற்று பயனுற்றவர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், பத்மஸ்ரீ நடிகர் விவேக் பேசியபோது கூறியதாவது: “இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியினை அளிக்கிறது. திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களிலிருந்து காக்க காவேரி மருத்துவமனை மேற்கொண்டு வரும் பெரும் முயற்சிகளை என்னால் காண முடிகிறது.விழிப்புணர்வு இல்லாததும், வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள தயங்குவதுமே, இந்தியாவில் திடீர் மாரடைப்பினால் மரணங்கள் (SCD) ஏற்பட முக்கியக் காரணங்களாகும். திடீரென மாரடைப்பினால் ஏற்படும் மரணம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம் தேவை. பொதுமக்கள் திடீர் மாரடைப்பிலிருந்து காக்கும் சிறப்பு SCD மருத்துவமனைகளை அணுகி,…
Read More
‘அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா ? சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி கேள்வி ?

‘அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா ? சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி கேள்வி ?

'அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா? ஒவ்வொரு முறையும் உயிர் பலி தரப்பட வேண்டுமா?' என, 'போர்வெல்' விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம், சாட்டையடி கேள்வி எழுப்பியது. இதற்கு முன், சட்டவிரோத பேனர் பிரச்னையில், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது போல், ஆழ்துளை கிணறு விஷயத்திலும், சரமாரியான உத்தரவுகளை, உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. திருச்சி, மணப்பாறை அருகே, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில், 2 வயது குழந்தை சுஜீத் வில்சன், மாலை விழுந்தான். உயிருடன் சிறுவனை மீட்பதற்கு, எவ்வளவோ முயற்சிகள் செய்தும், பலன் அளிக்கவில்லை. கடைசியில், நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டான். இதற்கிடையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் பணியாற்றிய, விஞ்ஞானி பொன்ராஜ், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில் கூறியிருப்பதாவது:ஆழ்துளை கிணறுகள் விஷயத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கிலும், ஆழ்துளை கிணறுகள் விஷயத்தில், சிறப்பு சட்டம்…
Read More
ஏர்டெல், வோடபோன் கடன் பிரச்னையால் பதறும் வங்கிகள்..?

ஏர்டெல், வோடபோன் கடன் பிரச்னையால் பதறும் வங்கிகள்..?

சில தினங்களுக்கு முன், உச்ச நீதிமன்றம், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்கள், மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கி இருப்பதை அறிவோம். இந்த பிரச்னை ஏதோ டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் டெலிகாம் துறைக்கு இடையில் நடந்த பிரச்னையாக மட்டும் தானே நமக்குத் தெரியும்..! ஆனால் இப்போது இந்த தீர்ப்பினால், வங்கிகள் தங்கள் தலையில் கை வைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏன் ஏர்டெல், வொடாபோன் ஐடியா, ஏர்செல் போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக வெளி வந்த தீர்ப்புக்கு இவர்கள் வருத்தப்படுகிறார்கள் என்று கேட்டால்... கடன் என்கிறார்கள். அட ஆமாங்க. நம் ஏர்டெல், வொடாபோன் ஐடியா தொடங்கி பல முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் பெரிய அளவில் கடன் கொடுத்து இருக்கிறார்கள் நம் வங்கிகள். ஏர்டெல் நிறுவனம், தன்னுடைய கடந்த ஜூன் 2019 காலாண்டு நிதி நிலை…
Read More
ரூ.1.54 லட்சம் கோடிக்கு வீடுகள் விற்பனை!

ரூ.1.54 லட்சம் கோடிக்கு வீடுகள் விற்பனை!

ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மொத்தம் 2.02 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.சென்னையில் ரூ.5,580 கோடி மதிப்புக்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் வீடு விற்பனை 7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்தம் ரூ.1.54 லட்சம் கோடிக்கு புதிய வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் பிராப்பர்ட்டி, இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடு விற்பனை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மொத்தம் 2.02 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.2018ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் மொத்தம் 1.78 லட்சம் வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. மதிப்பு அடிப்படையில் இந்த ஆண்டில் ரூ.1.54 லட்சம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 16 சதவீத வளர்ச்சியாகும். இந்திய நகரங்களிலேயே அதிகபட்சமாக மும்பையில் ரூ.62,970 கோடி மதிப்புக்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2018ஆம்…
Read More
போக்ஸ்வேகன் – ஸ்கோடா நிறுவனங்கள் இணைப்பு !

போக்ஸ்வேகன் – ஸ்கோடா நிறுவனங்கள் இணைப்பு !

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான, போக்ஸ்வேகன் குழுமம், அதன் மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து, ஒரே நிறுவனமாக மாற்றப் போவதாகவும், புதிய நிறுவனம், ‘ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் இந்தியா’ என, அழைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. மேலும், இந்த இணைப்பு மற்றும் புதிய நிறுவனம் சம்பந்தமான அனைத்து அனுமதிகளையும், ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து பெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.‘போக்ஸ்வேகன் இந்தியா, போக்ஸ்வேகன் குழுமம் விற்பனை இந்தியா, ஸ்கோடா ஆட்டோ இந்தியா’ ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்றிணைகின்றன.தற்போது உள்நாட்டு சந்தையில் மிகக்குறைந்த பங்களிப்புடன் இருக்கும் போக்ஸ்வேகன் நிறுவனம், தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த மூன்று கார் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் முடிவை எடுத்துள்ளது. இணைக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக குர்பிரதாப் போபராய் இருப்பார். போபராய், தற்போது போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.’இந்தியா 2.0’ எனும், 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தின்படி, இந்த இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன் மூலம், 2025ல்…
Read More
லாரி ஓட்டுவது எளிதல்ல? ‘கைதி’ பற்றி கார்த்தி !

லாரி ஓட்டுவது எளிதல்ல? ‘கைதி’ பற்றி கார்த்தி !

'கைதி' படம் வெளிவந்துள்ளதற்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் நடிகர் கார்த்தி.அப்போது அவர் பேசுகையில்,''கைதி' படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும். படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஓட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இடது வலது என்று வளைத்து ஓட்டுவது மிகவும் கடினம்.லாரியில் பயணம் செய்பவர்களை விட எல்லா வகையிலும் ஓட்டுனருக்குத்தான் ஆபத்து அதிகம். மற்ற வாகனங்களை விட லாரி ஓட்டுவதற்கு மட்டுமல்ல, லாரியில்…
Read More