26
Oct
அதிரடி கிளப்பும் சசிகலா.. எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் சிக்கல்? அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு நாளை அதாவது அக்டோபர் 27ம் தேதி வரஉள்ள நிலையில், கட்சிக்குள் பூசல்களும், குழப்பங்களும் ஆங்காங்கே வெடித்து கிளம்பி வருகின்றன. இந்த 2 நாட்களாகவே சசிகலாவின் பெயர் பலமாக அடிபட்டு வருகிறது.. அதிலும் அதிமுகவுக்குள்ளேயே அடிபட்டு வருகிறது.. சசிகலாவை கட்சிக்குள் சேர்த்து கொள்ள ஆதரவுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெருகி கொண்டிருக்கின்றன. ஒருபக்கம் ஓபிஎஸ்ஸின் பேட்டி, மறுபக்கம் சசிகலாவின் எழுச்சி என கிளம்பி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கான நிலைப்பாடு என்னவாக இருக்கிறது, அவரது அடுத்தக்கட்ட காய் நகர்த்தல் எப்படி இருக்க போகிறது? என்பன போன்ற கேள்விகளும் இயல்பாகவே எழுகின்றன. அதிமுக இதுகுறித்து நாம் ஒருசில அரசியல் நோக்கர்களிடம் பேசியபோது, அவர்கள் சொன்னதாவது: "தேவர் ஜெயந்திக்கு அனுமதி தர வேண்டும் என்று அதிமுகவினர் மனு அளிக்கும் அளவுக்கு அவருக்கான ஆதரவுகள் பெருகி வருகிறது. இத்தனைக்கும் சசிகலா அரசியல் ரீதியிலான அறிவிப்புகள்…
