சினிமா

20 ஆண்டுகளில் இல்லாத அளவு பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.75 சதவீதம் சரிவு !

20 ஆண்டுகளில் இல்லாத அளவு பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.75 சதவீதம் சரிவு !

கடந்த ஆண்டில் பல மாதங்களாகவே மோட்டார் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வந்தது. விற்பனை சரிவால் வாகனத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக உற்பத்தி குறைப்பில் ஈடுபட்டு வந்தன. எனினும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவை உயர்ந்ததால் நவம்பர் மாதத்தில் வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில், 2019 காலண்டர் ஆண்டில் கார்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்கள் விற்பனை 13 சதவீதம் சரிவடைந்து 29.50 லட்சமாக குறைந்து இருக்கும் என வாகனத் துறையைச் சேர்ந்தவர்கள் முன்னறிவிப்பு செய்து இருந்தனர். அதனை உறுதி செய்யும் விதத்தில் விற்பனை 12.75 சதவீதம் சரிவடைந்து 29.62 லட்சம் வாகனங்களாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பின் இந்த அளவு சரிவு ஏற்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். 1998-ம் ஆண்டில் ஏற்பட்ட 8 சதவீத சரிவிற்குப் பின் இதுவே பெரிய வீழ்ச்சி என்று கூறப்படுகிறது. 2018-ஆம் ஆண்டில் 33.90 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி…
Read More

NORWAY TAMIL FILM FESTIVAL -TAMILAR AWARDS 2020. [30th April-03th May] !

NTFF Board members, Festival Director Mr. Vaseeharan Sivalingam and NTFF Jury President Dr.Mrs.GlorianaSelvanathan LCTL(from Berlin, Germany) announced the WINNERS of Tamilar Awards 2020 for Feature films from Tamil Nadu at the Stovner, Oslo City in Norway. NTFF which gives the awards with an unbiased attitude had successfully decided the nominees and the winners for the 11th award ceremony in 2020. The nominees and the winners for the diaspora and foreign films categories will be announced shortly. The whole hearted recognition of the festival by the film makers and the audience is purely based on the selection made by the NTFF…
Read More
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் ! புரட்சித்தலைவரின் கனவு நனவாகிறது  !

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் ! புரட்சித்தலைவரின் கனவு நனவாகிறது !

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு. கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர் வரை வந்து அந்தப்படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது. ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரித்துள்ளது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது. ‘பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாகுபலி எந்திரன் போன்ற வெற்றிப்படங்களில் வசனம் பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த…
Read More
இந்தியாவில் களமிறங்கும் சீன பேட்டரி ஸ்கூட்டர் !

இந்தியாவில் களமிறங்கும் சீன பேட்டரி ஸ்கூட்டர் !

சீனாவை சேர்ந்த டொவ் இ.வி. டெக் நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சீனாவில் பிரபலமாகத் திகழும் டொவ் இ.வி.டெக் நிறுவனம் இந்தியாவில் தனது பேட்டரி ஸ்கூட்டர்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற பேட்டரி வாகன தொழில்நுட்ப கண்காட்சியில் இந்நிறுவன தயாரிப்பான பேட்டரி ஸ்கூட்டர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் மிகவும் மேம்பட்ட எல்.எஃப்.பி. பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் மோதல் தடுப்பு பாதுகாப்பு வசதி உள்ளது. தானியங்கி முறை, ரிவர்ஸ் பார்க்கிங் வசதி, அவசர கால மீட்பு வசதி, ஸ்மார்ட் லைட் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாக இந்த ஸ்கூட்டர் விளங்குகிறது. இதில் 15 கிலோவாட் பி.எல்.டி.சி. மோட்டாரானது 72 வோல்ட் மின்சாரம் கொண்ட பேட்டரியில் இயங்கக் கூடியது. எகானமி மோடில் இது மணிக்கு 38 கி.மீ. வேகத்திலும் ஸ்போர்ட் மோடில் 45 கி.மீ. வேகத்திலும் செல்லக் கூடியது. இந்த ஸ்கூட்டரை தினசரி பயன்படுத்தும்போது வாகனம் பற்றிய அனைத்து விவரங்களும் உங்களது…
Read More
இந்தியாவில் ஏத்தர் லிமிட்டெட் எடிஷன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் !

இந்தியாவில் ஏத்தர் லிமிட்டெட் எடிஷன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் !

பெங்களூருவை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. ஏத்தர் 450 எக்ஸ் பெயரில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதற்கட்டமாக ஏத்தர் 450 எக்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவின் பத்து நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.பத்து நகரங்கள் பட்டியலில் பூனே, மும்பை, பெங்களூரு, டெல்லி என்.சி.ஆர்., சென்னை மற்றும் ஐதராபாத் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் கோயம்புத்தூர், கொச்சி, கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் மாடல் தற்சமயம் விற்பனை செய்யப்படும் 450 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ஏத்தர் 450 மாடலில் 2.4kWh, IP67 தரச்சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பி.எல்.டி.சி. மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.இது 7.1 பி.ஹெச்.பி. பவர், 20.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. ஏத்தர் 450 ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர்…
Read More
ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுகம் !

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுகம் !

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 63,912 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் ஆக்டிவா மாடலை விட ரூ. 8000 விலை அதிகம் ஆகும்.புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி: ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் டீலக்ஸ் வேரியண்ட் விலை ரூ. 65,412 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவா 6ஜி மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஆக்டிவா 6ஜி மாடலில் 109சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹோண்டா பிராண்டின் மூன்றாவது பி.எஸ். 6 வாகனமாக ஆக்டிவா 6ஜி இருக்கிறது.ஆக்டிவா 6ஜி மாடலில் ஹோண்டாவின் PGM-Fi எனும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்பம் முன்னதாக…
Read More
மாரடைப்பு ஏற்பட்டால், செய்ய வேண்டியது என்ன ?

மாரடைப்பு ஏற்பட்டால், செய்ய வேண்டியது என்ன ?

உடனிருப்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், செய்ய வேண்டியது பற்றி, டாக்டர் ஜோஸ்: மாரடைப்பு என்பது, இதயத்திற்கு வரும் ரத்தக் குழாயில், ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படுகிறது. ஒரு மனிதனுக்கு, 15 ஆயிரம் லிட்டர் காற்று தேவை. தினமும், 15 ஆயிரம் முதல், 30 ஆயிரம் லிட்டர் வரை காற்றை சுவாசித்தால், ரத்தக் குழாய்கள் உள்ளிட்ட உடலின் எந்த உறுப்பும் பழுதாகாது; மாரடைப்பும் வராது.மாரடைப்பு ஏற்பட்ட நபர், நினைவோடு இருந்தால், அவருக்கு சில முதலுதவி சிகிச்சை அளித்தபடியே, ஆம்புலன்ஸ் வரவழைத்து, மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அந்த நபர் அறிந்ததும், பயத்தால் பாதிப்பு அதிகமாகும். அச்ச உணர்வு அதிகரிக்கும் போது, உடலில் ரத்தக் குழாய்கள் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் தான், பயம் ஏற்படும் போது, சிலருக்கு மயக்கம் வருகிறது. எனவே, மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதலில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.ஒரு டம்ளர் சுடுநீரை குடிக்க கொடுக்கலாம். அந்த நேரத்தில், 'ஆஸ்பிரின்…
Read More
MSME-க்கு 5,000 கோடி ரூபாய் இடர்பாட்டு நிதி -மத்திய அரசு திட்டம்!

MSME-க்கு 5,000 கோடி ரூபாய் இடர்பாட்டு நிதி -மத்திய அரசு திட்டம்!

வரவிருக்கும் 2020-21 வரவுசெலவுத் திட்டத்தில் பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்ளும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) 5,000 கோடி ரூபாய் இடர்பாட்டு நிதியை அரசாங்கம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.MSME துறையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள தனியார் ஈக்விட்டி நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு அரசு வழங்கும் நிதியுதவி ரூ.10,000 கோடியுடன் வரவுசெலவுத் திட்டம் வெளிவரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டு நிதிகளும் கடந்த ஆண்டு சிறுதொழில்களுக்காக முன்னாள் பத்திரங்கள் மற்றும் இந்திய பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) முன்னாள் தலைவர் UK சின்ஹாவின் கீழ் அமைக்கப்பட்ட ரிசர்வ் வங்கி குழுவால் பரிந்துரைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது."இந்த இரண்டு நிதிகளும் பட்ஜெட் அமர்வில் ஒப்புதல் பெறும், இந்த நிதி செயல்பாட்டைப் பெறுவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த நிதியின் நன்மைகளைப் பெற சிறு வணிகங்கள் சில அளவுருக்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் தகவல் அறிந்த அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன."வறட்சி, வெள்ளம்…
Read More
‘சோனி விஷன் -எஸ்’ மின்சார கார்!

‘சோனி விஷன் -எஸ்’ மின்சார கார்!

இனி மின்சார வாகனங்களுக்குத்தான் எதிர்காலம். இதை புரிந்துகொண்ட ஜப்பானின், 'சோனி' அண்மையில் ஒரு மின்சார காரின் மாதிரியை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறது. 'சோனி விஷன் -எஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாதிரி காரில், 33 வகை மின்னணு உணரிகள் உள்ளன. அது மட்டுமல்ல, காருக்குள் இசை, ரேடியோ, வீடியோ என்று பொழுதுபோக்கு கருவிகள் அனைத்தையும் பொருத்தியுள்ளது சோனி. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்கும் பிரமாண்டமான நுகர்வோர் மின்னணு கண்காட்சியில், யாரும் எதிர்பாராத விதத்தில் விஷன் எஸ் மின் வாகனத்தை சோனி அறிமுகப்படுத்தியது. காரின் வடிவமைப்பு வித்தியாசமாக இருந்தாலும், விலையுயர்ந்த, 'போர்ஸ்ச்' கார்களின் சாயல் இருப்பதாக விமர்சகர்கள் சொல்கின்றனர். தவிர, மின் காரின் இயந்திரப் பகுதி, கார் பாகங்களைத் தயாரிக்கும் மேக்னாவால் உருவாக்கப்பட்டது என்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் தானோ என்னவோ, சோனி தற்போதைக்கு தன் மின்சார கார் திட்டத்தைப் பற்றி விரிவாக எதையும் சொல்லாமல் மவுனம் காக்கிறது. ஆனாலும், மின் வாகனத்…
Read More
ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ !

ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ !

ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ - நமது பாரம்பரிய கலை, இசை, கலாச்சார வடிவங்களை பாதுகாத்து பராமரிக்கும் ஒரு முற்றிலும் புதுமையான கூட்டு முயற்சி. கலாச்சாரம் என்பது தொடர்ச்சியானது; கலாச்சாரம் என்பது கால அடைவுகளுக்கு அப்பாற்பட்டது; அத்தகைய ஒரு பாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும் பாதுகாத்து பராமரிக்கும் ஒரு புதிய, புதுமையான கூட்டு முயற்சியாக ‘தa பியூச்சர்ஸ்’ உருவாகி இருக்கிறது. இந்த பிரமிப்பூட்டுமொரு மகத்தான முயற்சியில், அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் - இசை விஞ்ஞானி ஏ.ஆர். ரஹ்மான், மற்றும் உலகின் மிக முக்கியமான இசை கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட எம்ஐடியின் புகழ்பெற்ற ஊடக ஆய்வகத்தின் இசையமைப்பாளர் - இசை விஞ்ஞானி டோட் மக்கோவர், மற்றும் காலத்தால் அழியாத தமிழ்நாட்டு…
Read More