சினிமா

‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங் !

‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங் !

நடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும். ’83 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். அது டுன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம். அந்த இந்தியா – ஜிம்பாப்வே போட்டி, மிகவும் மறக்கமுடியாத போட்டிகளில் ஒன்றாக இன்றும் கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் அந்த போட்டியானது எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பப்படவும் இல்லை, பதிவு செய்யவும் பட்டிருக்கவில்லை.ரன்வீர்சிங்கின் ஒரு வியத்தகு ஒப்பனை, அச்சு அசல் கபில்தேவை ஒத்திருக்கும் வகையில் அமைந்திருந்தது, அது உண்மையான கபில்தேவுக்கும், திரையில் வரும் கபில்தேவுக்கும் உள்ள வித்தியாசங்கள் ஒன்றுமே…
Read More
டெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது’ பெறுகிறார் !

டெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது’ பெறுகிறார் !

டெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது’ பெறுகிறார்.அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மல்டி எத்னிக் அட்வைசரி டாஸ்க் ஃபோர்ஸ் அதாவது பல்வேறு இன மக்களுக்கான பணிக்குழுவின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது. 2019 ஆம் ஆண்டுக்கான இந்த நிறுவனத்தின் விருதுகள் வழங்கும் விழா, இன்று இல்லினாயிஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் நடைபெறுகிறது. இந்த மாபெரும் விழாவில், அரசு முறை பயணமாக அமெரிக்கா வந்திருக்கும் தமிழக துணை முதல்வர் மேதகு ஓ பன்னீர் செல்வம் அவர்களும் கலந்துக் கொண்டுச் சிறப்பிக்கிறார்கள்.இந்த விழாவில் இப்பணிக் குழுவினருடன் அமெரிக்கவாழ் இந்திய சமூகமும் இணைந்து, தமிழக துணை முதல்வருக்கு ‘உதய நட்சத்திரம்’ எனும் விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். இதே விழா மேடையில், ‘இந்த ஆண்டின் சிறந்த பிலிம்மேக்கர்’ விருது எனக்கு வழங்கப்படுகிறது என்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. 2010 ஆம் ஆண்டு டேனி கே டேவிஸ் எனும் அமெரிக்க காங்கிரஸ்காரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த குழுவானது,…
Read More
நில உச்சவரம்பு சட்டப்படி  16ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது ? கூடுதல் நிலம் அரசால் கையகப்படுத்தப்படும். ?

நில உச்சவரம்பு சட்டப்படி 16ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது ? கூடுதல் நிலம் அரசால் கையகப்படுத்தப்படும். ?

நில விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும் போது, நில உச்சவரம்பு சட்டப்படி, கூடுதல் விபரங்களை பெற வேண்டும்' என, சார் பதிவாளர்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். இது, சார் பதிவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், நில உச்ச வரம்பு சட்டம், 1961ல் அமலுக்கு வந்தது. இதன்படி, தனி நபர்கள், 16 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது. இந்த அளவுக்கு மேல் நிலம் வைத்து இருந்தால், கூடுதல் நிலம் அரசால் கையகப்படுத்தப்படும். இவ்வாறு பெறப்படும் மிகை நிலங்கள், அந்தந்த பகுதியில், நிலம் இல்லாத ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்; அரசு துறைகளின் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும். திட்டத்தை செயல்படுத்த, நில உச்சவரம்பு தாசில்தார்கள் இருந்தனர். சில ஆண்டுகளாக, நில உச்சவரம்பு தாசில்தார்கள், முறையாக நியமிக்கப்படாததால், மிகை நிலங்களை கையகப்படுத்துவது முடங்கி உள்ளது.இந்நிலையில், தற்போது நில உச்சவரம்பு சட்ட விதிகளை தீவிரமாக அமல்படுத்த, கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சொத்து பரிமாற்றங்களின் போது,…
Read More
ரூ. 2.20 லட்சம் விலையில் மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம் !

ரூ. 2.20 லட்சம் விலையில் மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம் !

கைனடிக் க்ரீன் எனர்ஜி என்கிற வாகன தயாரிப்பு நிறுவனம் மூன்று சக்கரத்தில் இயங்கக்கூடிய மின்சார வாகனத்தை ரூ. 2.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் புனே) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.ஒரு கி.மீ-க்கு ரூ. 0.50 பைசா மட்டுமே..!இந்தியாவுக்கான மிட் ஸ்பீடு எலெக்ட்ரிக் வாகன செக்மென்டில் சாபர் ஸ்டார் என்கிற பெயரில் மூன்று சக்கர மின்சார வாகனத்தை கைனடிக் கிரீன் எனர்ஜி என்கிற நிறுவனம் கொண்டு வந்துள்ளது.வர்த்தக வாகன பயன்பாட்டுக்கான இந்த வாகனம் அதிகப்பட்சமான 400 கிலோ எடை வரை சுமந்து செல்லும். இதனுடைய காம்பேக்ட் வடிவிலான தோற்றம் மற்றும் வலிமையான கட்டமைப்பு நகர பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கும். முற்றிலும் ஸ்டீல் கட்டமைப்பை பெற்றுள்ள இந்த மூன்று சக்கர மின்சார வாகனம், மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தில் சலுகைகளை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் 48வி லித்தியம்-ஐயன் பேட்டரி உள்ளது. இது 150 ஏ.எச் பவரை வெளிப்படுத்தக்கூடியது. இந்த பேட்டரியை முழுமையாக…
Read More
பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.96,000 கோடி நஷ்டம் ! உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி?

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.96,000 கோடி நஷ்டம் ! உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி?

இந்தியாவில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரியை உற்பத்தி செய்ய மத்திய அரசு முறைகேடாக வழங்கிய 204 உரிமங்களை சுப்ரீம் கோட் ரத்து செய்தது. இதனால் பொதுத்துறை வங்கிகள் சுமார் 96,484 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என மத்திய நிதியியல் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். உரிமம் ரத்து கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் இந்தியாவில் 1993ஆம் ஆண்டும் முதல் ஒதுக்கப்பட்ட சுமார் 204 நிலக்கரி சுரங்க உற்பத்தியில் முறைகேடுகள் உள்ளதை கண்டறிந்து அனைத்து உரிமங்களையும் ரத்து செய்தது. இதனால் இந்திய மின் உற்பத்தியில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மார்ச் 31 இந்தியாவில் மின்சார உற்பத்தி பாதிக்காத வண்ணம் நிதிமன்றம் 2015ஆம் ஆண்டு மார்ச் 31 வரை உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள் உற்பத்தி செய்துகொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிகளுக்கு தலைவலி... இந்நிலையில் உரிமம் ரத்து செய்த சில நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் நிலக்கரியை மையமாக வைத்து…
Read More
6 ஆண்டுகளில் 90 லட்சம் பேருக்கு வேலை இல்லை ! அதிர்ச்சி ரிப்போர்ட்!

6 ஆண்டுகளில் 90 லட்சம் பேருக்கு வேலை இல்லை ! அதிர்ச்சி ரிப்போர்ட்!

கடந்த 6 ஆண்டுகளில் 90 லட்சம் பேருக்கு வேலை இல்லாமல் போயுள்ளதாக ஒரு தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. ஸ்=அசிம் பிரேம்ஜி பல்கலை கழகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 2004 - 05 காலகட்டத்தில் சுமார் 45.9 கோடி பேர் வேலை பெற்றுள்ளனர். அந்த எண்ணிக்கை அடுத்த 6 ஆண்டுகளில் 2011 - 12 ஆண்டுகளில் 47.7 கோடியாக உயர்ந்தது ஆனால், அடுத்த 6 ஆண்டான 2017 -18 ஆண்டுகளில் வேலை பெற்றவர்கள் எண்ணிக்கை 46.5 கோடியாக உள்ளத. இது சென்ற 6 ஆண்டை விட 90 லட்சம் பேருக்கு வேலை இல்லாமல் இருந்த்துள்ளனர். இந்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வேளாண் துறையிலும், உற்பத்தி துறையிலும் ஏற்பட்ட வீழ்ச்சிதான் இதற்க்கு முக்கிய காரணம் ஆகும். உற்பத்தி துறையில் ஏற்படும் வீழ்ச்சியானது நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Read More
போரூரில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் டிரை ஐ சூட் சாதன தொகுப்பு ! அமைச்சர்  D. ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். !!

போரூரில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் டிரை ஐ சூட் சாதன தொகுப்பு ! அமைச்சர் D. ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். !!

போரூரில் அமைந்தள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனையில் டிரை ஐ சூட் என்ற புதிய சாதன தொகுப்பை மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்.இந்நாட்டில் மொத்த மக்கள்தொகையில் 5-லிருந்து 15% வரையிலான நபர்களுக்கு உலர்ந்த கண் பிரச்சனை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.தரமான கண்ணீர் சுரப்பதை இப்புதிய தொழில்நுட்பம் தூண்டிவிடும் மற்றும் இதன்மூலம் பக்கவிளைவுகள் இல்லாமல், உலர்ந்த கண் பாதிப்பை சரிசெய்ய முடியும்.உலர்ந்த கண் பாதிப்பு அறிகுறியை கண்டறியவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் மிக நவீன தொழில்நுட்பத்தின் ஒரு விரிவான சாதன தொகுப்பை போரூரிலுள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தொடக்கவிழா நிகழ்வில் உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் D. ஜெயக்குமார், கண் மருத்துவவியல் உட்பட, அனைத்து துறைகளுக்கும் தரம் மற்றும் சேவையை கருத்தில்கொண்டு இயங்குகின்ற பல உயர் மற்றும் சிறப்பு மருத்துவமனைகளை கொண்டிருப்பதால் இந்நாட்டில் மருத்துவ சேவையை நாடி மக்கள் திரளாக வருகின்ற அமைவிடமாக சென்னை மாநகரம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது…
Read More
ZEE5 app-ல் போலீஸ் டைரி 2.0 வெற்றி பெறும் ! தயாரிப்பாளர் குட்டிபத்மினி நம்பிக்கை !

ZEE5 app-ல் போலீஸ் டைரி 2.0 வெற்றி பெறும் ! தயாரிப்பாளர் குட்டிபத்மினி நம்பிக்கை !

இந்தியாவில் பெரிதாக வளர்ந்து வரும் பன்மொழி வாய்த்த ZEE5 app அத்துடைய புத்தம்புது தமிழ் தொடர் போலீஸ் டைரி 2.0வை வெளியேற உள்ளது. இத்தொடரில் வின்சென்ட் அசோகன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கன், பூஜா ராமசந்திரன், அஞ்சனா ஜெயபிரகாஷ் மற்றும் பாலாஜி மோகன் நடித்துள்ளனர். வாழ்க்கை சம்பவங்களின் அடிப்படையில் நடைபெரும் இத்தொடர் நவம்பர் ஒன்று முதல் ZEE5 appஇல் மட்டுமே பிரத்தியேகமாக ஒளிபெற உள்ளது. ZEE5 வெளியிட்ட மற்ற சுவாரசியமான தொடர்கள் கள்ளச்சிரிப்பு, ஆட்டோ ஷங்கர், சிகை, களவு, அலாரம், வாட்ஸ் ஆப் வேலைக்காரி, மிட்டா, திரவம், பிங்கர் டிப், போஸ்ட்மேன், இக்லூ மற்றும் நிஷா ஆகியன. இதுமற்றுமின்றி Zee5 இல் காணப்படும் வெற்றிபெற்ற தமிழ்ப்படங்கள், சிலவற்றை பெயரிட, தேவி 2, நேர்கொண்ட பார்வை, விக்ரம் வேதா, கோலமாவு கோகிலா, மெர்சல் மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகியன. குட்டி பத்மினி(அர்பாட் சினி பாக்டரி) தயாரித்துள்ள போலீஸ் டைரி 2.0, ஒரு…
Read More
தி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனர் பிரியதர்ஷினி விளக்கம்!

தி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனர் பிரியதர்ஷினி விளக்கம்!

தி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனராக உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இங்கே விவாதிக்கப்பட்ட சில உண்மைகளை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் என்றாலும், சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதிலளிக்க அவற்றை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன். தி அயர்ன் லேடி திரைப்படம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் "அம்மா" செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் முழு வாழ்க்கைக் கதையையும் உள்ளடக்கியது. உண்மை கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு அம்சங்களை கவனமாக பட்டியலிட்ட பிறகு, நித்யா மேனன் அவர்களை அம்மாவின் பாத்திரத்திற்கான சரியான நடிகை ஆக தேர்வு செய்தேன். அம்மா அவர்களை போல முக அமைப்பு முதல் நிகர் இல்லா ஆளுமை திறன் வரை நித்யா மேனன் இயற்கையாகவே அம்மா அவர்களின் பண்புகளையும் உள்ளடக்கியிருக்கிறார். நமது அம்மா புரட்சி தலைவி அவர்களை போலவே தமிழ் உள்ளடக்கி ஆறு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர், சிறு வயது முதலே "பரதநாட்டியம்"…
Read More
வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம் ? அதிர வைக்கும் மோசடி…?

வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம் ? அதிர வைக்கும் மோசடி…?

வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் என்னென்ன தந்திரங்களை செய்கின்றனர் என தெரியுமா? அந்த தில்லுமுல்லுகளை இந்த செய்தியில் அம்பலப்படுத்தியுள்ளோம். புதிய கார் வாங்குவது என்பது, ஒருவர் தன் வாழ்க்கையில் எடுக்கும் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்வதே இதற்கு காரணம். பொதுவாக எந்த காரை வாங்க போகிறோம்? என்பதை முடிவு செய்த பின், டீலர்ஷிப் பணியாளர்களிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்வது நல்லது. ஏனெனில் நீங்கள் காரை தேர்வு செய்த பின் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக அவர்கள் சில தந்திரங்களை செய்வார்கள். இதனை நீங்கள் கவனமாக கையாளாவிட்டால், காரின் உண்மையான விலையை விட அதிக தொகையை கொடுக்க வேண்டியதாக இருக்கும். எனவே கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக, கார் டீலர்கள் செய்யும் தந்திரங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்தியாவில் உள்ள கார் டீலர்ஷிப்களில் அரங்கேற்றப்படும் அதிர வைக்கும் மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாப்பதுடன்,…
Read More