வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து: யார் காரணம்?

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வழக்கில் திமுக அரசு அக்கறை காட்டலைன்னு வன்னியர் அமைப்புகள் விமர்சிக்கிக்கிறாங்க.
அதிமுக அரசு உரிய முறையில் அரசாணை வெளியிடத் தவறிவிட்டதுதான் நீதிமன்றத் தீர்ப்புக்குக் காரணம்னு ம் விமர்சனம் வருது.
இந்தத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சொல்லியிருக்கிறாரு.
இட ஒதுக்கீட்டில் வன்னியர் உள்ளிட்ட பல சாதியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கின்றாங்க. இதில் தங்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு வேண்டும்னு நீண்ட நாட்களாக வன்னிய இனத்தவர் கேட்டுகிட்டுவந்தாங்க.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக அரசு, வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு அளித்து உத்தரவிட்டது.

அதிமுக. கூட்டணி கட்சியான பாமக, தங்களால்தான் இந்த ஒதுக்கீடு அளிக்கப்பட்டது என மகிழ்ந்தது. பிற வன்னிய சமூக அமைப்புகளும் இந்த அறிவிப்பை வரவேற்றன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் செய்யப்படுகிறதுங்கிற விமர்சனம் வந்தது.
இதப்பத்தி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டாரு. அதையடுத்து, 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது.

இதற்கிடையே, 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இறுதியில், ‘’சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டிருக்கிறதுன்னு சொன்ன நீதிமன்றம், “இந்த உத்தரவை பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா, இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை அளிக்க முடியுமா என்பது உள்ளிட்ட ஏழு கேள்விகளை எழுப்பினோம். அதற்கு மாநில அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. ஆகவே வன்னியர் சமூகத்தினருக்கான உள் ஒதுக்கீடு செல்லாது’ன்னு தீர்ப்பளித்தது. இந்தத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சொல்லியிருக்கிறாரு.

நீதிமன்றத் தீர்ப்பப் பத்தி பாமக நிறுவனர் ராமதாஸ், ‘”தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கிலும் இதே வாதங்களைத்தான் சமூகநீதிக்கு எதிரான சக்திகள் முன்வைத்து. ஆனால், 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அந்த வாதங்களை ஏற்கவில்லை. 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் உள் இடஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபோதும் நீதிமன்றங்கள் தடை விதிக்கவில்லை. வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இடஒதுக்கீடை மட்டும் ரத்து செய்துள்ளது” என்று ஆதங்கத்துடன் பேசுகிறார்.

இதற்கிடையே வன்னிய சத்திரியர் கூட்டு இயக்கத்தின் தலைவர் சி.ஆர்.ராஜன், “இந்த வழக்கில் திமுக அரசு அக்கறை காட்டலை. இதை நீதிமன்றமே தெரிவித்துள்ளது. நீதிமன்றம் எழுப்பிய ஏழு கேள்விகளுக்கு திமுக. அரசு உரிய பதில் அளிக்கவில்லை. இந்த உள் ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி அறிவித்தபோதே எதிர்ப்பு வந்தது. பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை அமல்படுத்தாமல் இழுத்தடித்தது. இந்த நிலையில் எங்களது வற்புறுத்தலுக்குப் பிறகு திடீரென 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை ஏற்று அரசாணை வெளியிட்டது. அப்போதே எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. இப்போது அது உறுதியாகிவிட்டது. இந்த விஷயத்தில் திமுக நாடகமாடுகிறதுங்கிறார்.

அரசு வழக்கறிஞரும் திமுகவின் சட்டத் துறை இணைச் செயலாளருமான வீ.கண்ணதாசன், “இந்த உள் ஒதுக்கீட்டை அதிமுக கொண்டுவந்தது எனப் புறந்தள்ளாமல், திமுக அரசு அரசாணை வெளியிட்டது. தற்போதைய தீர்ப்பை எதிர்த்து நிச்சயமாக மேல்முறையீடு செய்வோம்ங்கிறார்.
இதற்கிடையே, திமுக. அரசு வழக்கில் சரியாகச் செயல்படவில்லை எனக் குற்றம் சாட்டிப் பேருந்துகள் மீது கல்லெறி சம்பவங்கள் நடந்தன.

இன்னொரு பக்கம், “அதிமுக அரசு உரிய முறையில் அரசாணை வெளியிடத் தவறிவிட்டது. அதனால்தான் தற்போது உள் ஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்கிறார் வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என். ராமமூர்த்தி.

“மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் முதன் முதல் வழக்கு தொடுத்தவர் சி என் ஆர். இதையடுத்து ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அறிவிப்பு வெளியானது. பிறகு நீதிமன்றத்திலும் இது குறித்து இறுதி ஆணை கிடைச்சது. மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல் இல்லாத நிலையில் எப்படி உள் ஒதுக்கீடு அளிக்க முடியும் என நீதிமன்றம் கேட்கிறது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என நான் வழககு தொடுத்தபோது, 2011ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி வன்னிய மக்கள் 2 கோடியே 52 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஆகவே 15 சதவிகித உள் ஒதுக்கீடு வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது அத்தீர்ப்பில் 13.5 சதவிகிதம் வரை உள் இட ஒதுக்கீடு அளிக்கலாம் என தீர்ப்பு வந்தது. அதைப் பயன்படுத்தி அதிமுக அரசு முறையாக அரசாணை வெளியிட்டிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது” என்கிறார் ராமமூர்த்தி.

யார் மீது தவறு என ஒரு பக்கம் விவாதம் நடந்துகொண்டிருக்க, இந்த உள் ஒதுக்கீட்டின்படி, பணியில் சேர்ந்தவர்கள், கல்லூரிகளில் சேர்ந்தவர்களின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது. இதை மனதில் கொண்டு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.