சினிமா

கார்ப்பரேட்டுகளின் கூடாரமாகும் அரசியல் கட்சிகள் !

கார்ப்பரேட்டுகளின் கூடாரமாகும் அரசியல் கட்சிகள் !

தொண்டர்களை மட்டுமே நம்பி களத்தை சந்தித்து பழகிய அரசியல் கட்சிகள், இப்போ வியூக வகுப்பு நிறுவனங்களை நம்பியே களம் இறங்குகிறது. அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுதுங்கிற காலம் போய், அரசியல் கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாகவும், தங்களது கட்சியை அடமானம் வைக்கும் இடமாகவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மாறி வருது.. அந்த வகையில், வருகிற 2024 மக்களவை தேர்தல் போட்டி, இரு பெரும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளான, அதாவது; பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக விமர்சிக்கப்படும் பிரஷாந்த் கிஷோர் அப்புறம் காங்கிரஸுக்கு பணியாற்ற அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள சுனில் கனுகோலுவுக்கும் இடையேயானதாக பார்க்கப்படுது. 2024 மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழுவில் தேர்தல் உத்தி வகுப்பாளர் சுனில் கனுகோலு இடம்பெற்றுள்ளதன் மூலம் அக்கட்சியின் தேர்தல் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளது அதிகாரப் பூர்வமாக தெரியவந்திருக்குது.. முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் இணைய பிரபல தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் மறுப்பு தெரிவிச்சிட்டதுனால, அக்கட்சிக்காக 2024 மக்களவை…
Read More
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்

  பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாக தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளது அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் எனக் கூறி விட்டு, தற்போது, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிலைப்பாட்டை மாற்றுவது ஏற்புடையது அல்ல என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். தொடர்ந்து அரசை சந்தித்து முறையிடும் முடிவையும் எடுத்துள்ளார்கள். இருப்பினும் கூட, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. நிதி ஆதாரம் இல்லாததால் சிக்கலா?: பழைய ஓய்வூதிய திட்டத்தை ராஜஸ்தான் அரசு நடைமுறைப்படுத்துகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் நடைமுறைப்படுத்துவதாக கூறியது. ஆனால், நடைமுறைப்படுத்த சட்ட சிக்கல் மற்றும் நிதி பற்றாக்குறை…
Read More
அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் ! ஸ்டாலின் மனமாற்றம் ?

அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் ! ஸ்டாலின் மனமாற்றம் ?

அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் ! ஸ்டாலின் மனமாற்றம் ?துபாய் சென்று வந்த கையோடு அமைச்சரவையில் முதல் மாற்றத்தை அரங்கேற்றியிருக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் மீது எந்த புகார் வந்தாலும் அது குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்னு முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நேரத்திலேயே எச்சரிக்கை பண்ணியிருந்தாரு. இந்த விஷயத்தில் கலைஞர் கருணாநிதி போல் விட்டுபிடிப்பவர் அல்ல ஸ்டாலின், ஜெயலலிதா போல் உடனடியாக மாற்றம் தான்னு திமுகவினரே கசொல்லிட்டு வந்தாங்க. இந்நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற பத்து மாதங்களில் அமைச்சரவையில் முதல் மாற்றம் நடந்திருக்குது.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் எஸ்.எஸ்.சிவசங்கரை போக்குவரத்து துறை அமைச்சராகவும், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் மாற்றி உத்தரவு போட்டிருக்காரு முதல்வர் ஸ்டாலின்.ராஜ கண்ணப்பனை குறிவைத்து தான் இந்த மாற்றம் அரங்கேறியிருக்கிறது என்பது அரசியல் வட்டாரம் அறிந்த செய்தி தான். உண்மையில் பத்து மாதம் என்பதே அதிகம்…
Read More

5 மாநிலங்களில் சறுக்கிய காங்!ஸ்டாலினின் மெகா பிளான்!

சைலண்ட்டாக இருந்தது ஏன்?.. 5 மாநிலங்களில் சறுக்கிய காங்! இதுதான் "சான்ஸ்".. ஸ்டாலினின் மெகா பிளான்! 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து திமுக தரப்பில் சில முக்கிய திட்டங்கள் போடப்பட்டு இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. முக்கியமாக உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்ததன் மூலம் 2024 லோக்சபா தேர்தலிலும் பாஜக ஆட்சி அமைக்குமோ என்ற அச்சம் எதிர்க்கட்சிகள் இடையே எழுந்துள்ளது.இதன் காரணமாக மாநில அளவில் வலுவாக இருக்கும் கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்து 2024ல் தேர்தலை சந்திக்கும் திட்டத்தில் இருக்கின்றன. முதல்வர்கள் மம்தா பானர்ஜி, கேசிஆர் ஆகியோர் இது தொடர்பான ஆலோசனைகளை செய்து வருகின்றனர். Ads by Ads by சட்டசபை தேர்தல் வரலாற்றிலேயே.. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் தேர்தல் முடிவு…
Read More
சல்லி சல்லியாக நொறுங்கிய "கணக்கு".. எப்படி இருந்த காங்கிரஸ்.. வெறும் 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி! By Hemavandhana Updated: Thursday, March 10, 2022, 15:52 [IST] சென்னை: இன்றைய 5 மாநலி தேர்தல் ரிசல்ட் வெளிவந்து வரும் நிலையில், பாஜக பெருவாரியான வெற்றியை பெற்று, தான் நேரடியாக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.. அதேசமயம், காங்கிரஸின் பலம் மாநிலங்களில் குறைந்து வருகிறது. UP Election Result | இதுவரை நடந்ததே இல்லை.. பாஜக-வுக்கு வரலாற்று வெற்றியை பெற்று கொடுத்த யோகி ஆதித்யநாத் டெல்லியைத் தாண்டி தற்போது பஞ்சாப் மாநிலத்தையும் ஆம் ஆத்மி தனது வசமாக்கி தனது கட்சியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. by TaboolaSponsored Links M.Tech in Data Science for Working Professionals SRM, Chennai IIT Madras CCE & Intellipaat - Learn from IIT Madras Faculty Intellipaat உத்தரகாண்ட், மணிப்பூர்,…
Read More
மேயர் தேர்வு: யார் பாணியைப் பின்பற்றினார் ஸ்டாலின்?! ` ``தலைவர் கலைஞர் பாணி வேறு... என் பாணி வேறு" என்று கருணாநிதி மறைந்த பிறகு நடந்த தி.மு.க பொதுக்குழுவில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் சொல்லியிருந்தார். அதைத்தான் இன்றளவும் கடைபிடித்து வருகிறார்' என்கிறார்கள். ``தலைவர் கலைஞர் பாணி வேறு... என் பாணி வேறு" என்று கருணாநிதி மறைந்த பிறகு நடந்த தி.மு.க பொதுக்குழுவில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் சொல்லியிருந்தார். அதைத்தான் இன்றளவும் கடைபிடித்து வருகிறார். 9 மாதகால ஆட்சியில் அவ்வளவாக கருணாநிதி சாயல் எங்குமே தென்படவில்லை. மாறாக ஸ்டாலினுக்கு சமீபகாலமாக ஜெயலலிதா சாயல் தென்படத் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள் சிலர். அரசியல் பார்வையாளர் ஒருவர் இதுபற்றி நம்மிடம் விளக்கமாக பேசுகையில், ``ஜெயலலிதாவின் பாணி எப்போதுமே அதிகாரம் என்பது ஒற்றை இடத்தில்தான் இருக்க வேண்டும் என்பதுதான். 32 அமைச்சர்கள் இருந்தபோதும், எவரையுமே முழுமையாக செயல்படவிடாமல் அதிகாரத்தை தன் கையிலேயே வைத்திருந்தார்.…
Read More
மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் ?

மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் ?

மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் ? இது சாத்தியமா ! ..  "அச்சாரம்" போட்ட அண்ணா அறிவாலயம் பிரதமர் ஸ்டாலின் என்ற முழக்கம் இன்று தமிழகமெங்கும் ஒலிக்க தொடங்கியிருக்குது..தேசிய அளவில் முன்னணியில் இருக்கும் முதல்வர்.ஸ்டாலின். இதற்கு என்ன காரணம்? திமுக தொண்டர்களின் உண்மை மனநிலை என்னங்கிறதப் பாப்போம்.10 வருடம் கழித்து ஆட்சியை பிடித்ததில் இருந்து, தன்மீதான கவனத்தை நாட்டு மக்களிடம் குவித்து வருகிறது திமுக அரசு..  திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில், நாட்டிலேயே மிகவும் பிரபலமான முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பெற்றிருந்ததே இதற்கு சாட்சியாக அமைஞ்சிருக்குது. இதைதவிர, ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே கொரோனாவை சிறப்பாக கையாண்ட விதம், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், அதேநேரத்தில் நிதிச் சுமையை சீரமைக்க எடுத்துக்கொண்ட சீரிய முயற்சிகள் தமிழக மக்களிடமும் நாளுக்கு நாள் ஆதரவு ஸ்டாலினுக்கு பெருகியதும் இதற்கு முக்கியமான காரணமா அமைஞ்சது. மேலும், மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கணும்னு…
Read More
முதல்முறையாக இரணியல் பேரூராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2 சுயேட்சைகளும், ஒரு நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். அங்கு போட்டியிட திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 55 பேரூராட்சிகளுக்கு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்கு சாதகமான முடிவுகள் அனேகமாக இருக்கும். அதாவது ஆளும் கட்சி தான் அதிக இடங்களில் வெற்றி பெறுவது வழக்கம். இதற்கு முன் நடைபெற்ற பல தேர்தலின் முடிவுகள் அதை தான் உணர்த்துகின்றன.   அதேநேரத்தில் சில இடங்களில் ஆளும் கட்சி…
Read More
 கூட்டணி கட்சிகளை மதிக்காத செந்தில் பாலாஜி .கரூரில், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செந்தில் பாலாஜி, போட்டி வேட்பாளர்களை சுயேட்சையாக களம் இறக்கி, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்குது. சமீபத்திய ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுக்க பெரிய வெற்றியை பெற்றாலும், கரூர் மாவட்டத்தில் திமுகவுக்கு பலத்த அடிதான் கிடைச்சது! மாவட்டத்தின் 12 மாவட்ட கவுன்சிலர்களில் ஒன்பது இடங்களில் அதிமுக ஜெயிச்சது. மூணுல தான் திமுக ஜெயிச்சது. மொத்தம் உள்ள 115 ஒன்றிய கவுன்சிலர்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் ஜெயிச்சாங்க. திமுகவிற்கு 33 கவுன்சிலர்கள் தான் கிடைச்சாங்க. அதோட கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களையும் அதிமுக அருதிப் பெரும்பான்மையுடன் ஜெயிச்சது. இதனால் கரூர் மாவட்ட கவுன்சிலை மட்டுமில்லாம எல்லா ஒன்றியங்களையும் திமுக இழந்தது. இதற்கு காரணம், இங்கே திமுக என்ற இயக்கம் செந்தில்…
Read More
ஸ்டாலினின் நடவடிக்கைகளால் திமுகவை விட்டு விலகுது இஸ்லாமிய வாக்கு வங்கி?! ஏன்? எப்படி? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு வழக்கம்போல் முழுமையான ஆதரவினை இஸ்லாமியர்கள் வழங்குவார்களா? கர்நாடகாவில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் ‘ஹிஜாப்’ விவகாரத்துக்கு எதிராக தமிழகத்தில் முஸ்லீம் அமைப்புகள் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால் அதன் பின் ‘தமிழகத்தை ஆள்வது தி.மு.க. அரசு. இது சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கும் அரசு. நாம் போராட்டம் நடத்த, அதை எதிர்த்து வேறு சிலர் குரல் கொடுக்க துவங்கினால் விவகாரம் வேறு மாதிரி போக துவங்கலாம். அது சட்டம் ஒழுங்குக்கு சிக்கல் தந்து அரசுக்கு சிரமம்  உருவாகிட கூடாது. அதனால் பொறுமை காப்போம்.’ என்று முடிவெடுத்து அமைதியாகி விட்டார்கள். இதுதான் இதுவேதான் தி.மு.க. மீது சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. அதற்கு காரணம், கடந்த காலங்களில் அவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்காக குரல் கொடுத்த மிக…
Read More