25
May
தொண்டர்களை மட்டுமே நம்பி களத்தை சந்தித்து பழகிய அரசியல் கட்சிகள், இப்போ வியூக வகுப்பு நிறுவனங்களை நம்பியே களம் இறங்குகிறது. அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுதுங்கிற காலம் போய், அரசியல் கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாகவும், தங்களது கட்சியை அடமானம் வைக்கும் இடமாகவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மாறி வருது.. அந்த வகையில், வருகிற 2024 மக்களவை தேர்தல் போட்டி, இரு பெரும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளான, அதாவது; பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக விமர்சிக்கப்படும் பிரஷாந்த் கிஷோர் அப்புறம் காங்கிரஸுக்கு பணியாற்ற அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள சுனில் கனுகோலுவுக்கும் இடையேயானதாக பார்க்கப்படுது. 2024 மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழுவில் தேர்தல் உத்தி வகுப்பாளர் சுனில் கனுகோலு இடம்பெற்றுள்ளதன் மூலம் அக்கட்சியின் தேர்தல் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளது அதிகாரப் பூர்வமாக தெரியவந்திருக்குது.. முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் இணைய பிரபல தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் மறுப்பு தெரிவிச்சிட்டதுனால, அக்கட்சிக்காக 2024 மக்களவை…
