சினிமா

5 ஆண்டில் 5 ஆயிரம் கோடியை வாயில் போட்ட S.P வேலுமணி..ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க மாட்டார்.. கதறும் மாஜி அமைச்சர். இது அனைத்தையும் தெரிந்துகொண்டு எதற்காக திமுக வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்கிறது என்று புரியவில்லை, எஸ். பி வேலுமணி மீது திமுக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இல்லை, இந்த மழை வெள்ளத்திற்கு பிறகாவது ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது முதலமைச்சர் ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்காதது அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல் கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்.பி வேலுமணி ஊழலுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளே இப்போது மாநகராட்சியில் அதிகாரிகளாக இருக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.…
Read More

பச்சைக்கொடி காட்டிய விஜய்.. பக்காவா பிளான் போட்ட விஜய் மக்கள் இயக்கம். பதறும் திமுக, அதிமுக.

நகராட்சித் தேர்தல்ல விஜய் மக்கள் இயக்கம். போட்டி ? பதறும் திமுக, அதிமுக.. இப்போதிலிருந்தே விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் களம் இறங்கி விட்டதால் வருகின்ற நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிக அளவில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக தெரியுது. நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் நகராட்சிமன்றத் தேர்தலையும் குறிவைத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகமாக களமிறங்கியுள்ளனர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் முகாமில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமா வேலை செய்ய அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 169 பேர் போட்டியிட்டாங்க., அதில் 129 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்ற…
Read More
தமிழக அரசியலில் அனாதையாகும் அதிமுக? பாமகவைப் போல கூட்டணியை முறிக்கும் பாஜக..? ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததுமே கூட்டணியிலிருந்து வெளியேறுறதப் பத்தி பாஜக தலைவர்கள் வெளிப்படையாக கருத்து சொல்லிக்கிட்டே வந்தாங்க.. சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் அதிமுகவை எதிர்த்து பாஜகவினர் களமிறங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இப்போ நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நோக்கில் தான் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.கர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் விதமாக, தங்கள் கட்சியில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் விருப்ப மனுக்களை பெற உள்ளது பாரதிய ஜனதா கட்சி. தேர்தல்களுக்கு முன் அனைத்து கட்சிகளும் செய்யும் வழக்கமான நடைமுறை தான்னாலும், பாரதிய ஜனதா கட்சித் தலைமையிடமான கமலாலயத்திலிருந்து வரும் தகவல் வேறு விதமா இருக்குது. சட்டசபை தேர்தல் சமயத்தில், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், அவர்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கலைங்கிற மனக்கசப்பு இருந்தது.…
Read More
வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து: யார் காரணம்? வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கில் திமுக அரசு அக்கறை காட்டலைன்னு வன்னியர் அமைப்புகள் விமர்சிக்கிக்கிறாங்க. அதிமுக அரசு உரிய முறையில் அரசாணை வெளியிடத் தவறிவிட்டதுதான் நீதிமன்றத் தீர்ப்புக்குக் காரணம்னு ம் விமர்சனம் வருது. இந்தத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சொல்லியிருக்கிறாரு. இட ஒதுக்கீட்டில் வன்னியர் உள்ளிட்ட பல சாதியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கின்றாங்க. இதில் தங்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு வேண்டும்னு நீண்ட நாட்களாக வன்னிய இனத்தவர் கேட்டுகிட்டுவந்தாங்க. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக அரசு, வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு அளித்து உத்தரவிட்டது. அதிமுக. கூட்டணி கட்சியான பாமக, தங்களால்தான் இந்த ஒதுக்கீடு அளிக்கப்பட்டது என மகிழ்ந்தது. பிற வன்னிய சமூக…
Read More
சென்னா ரெட்டி, பன்வாரிலால் வரிசையில் ஆளுநர் ரவி? இறையன்பு விளக்கமும், திமுக அமைதியும்! கொந்தளிக்கும் கூட்டணி கட்சிகள் ! தமிழக முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டி முதல் பன்வாரிலால் புரோகித் வரிசையில் ஆர்.என். ரவி தொடர்பான செய்திகளும் அரசியலில் பரபரப்பாக அடிபட ஆரம்பிச்சாச்சு. இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக, அதிகாரிகள் நேரடியாக ஆளுநருக்கு, திட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக வெளியான தகவல் தான் இதற்கு காரணம். சில நாட்களுக்கு முன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கும், தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களை பவர்பாயிண்ட் மூலம் தயார் செய்து வைக்க வேணும்னு கேட்டிருந்தார். அலுவல் ரீதியாக அனுப்பிய கடிதம் விவாதப்பொருளாக மாறிடிச்சி - வெளியான கடிதம் மத்திய மாநில அரசுகளின் திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத் துறை செயலாளர்கள் தயாராக இருக்கணும் இதை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பின்பு தெரிவிக்கப்படும்ணு…
Read More
அதிரடி கிளப்பும் சசிகலா.. எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் சிக்கல்? அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு நாளை அதாவது அக்டோபர் 27ம் தேதி வரஉள்ள நிலையில், கட்சிக்குள் பூசல்களும், குழப்பங்களும் ஆங்காங்கே வெடித்து கிளம்பி வருகின்றன. இந்த 2 நாட்களாகவே சசிகலாவின் பெயர் பலமாக அடிபட்டு வருகிறது.. அதிலும் அதிமுகவுக்குள்ளேயே அடிபட்டு வருகிறது.. சசிகலாவை கட்சிக்குள் சேர்த்து கொள்ள ஆதரவுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெருகி கொண்டிருக்கின்றன. ஒருபக்கம் ஓபிஎஸ்ஸின் பேட்டி, மறுபக்கம் சசிகலாவின் எழுச்சி என கிளம்பி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கான நிலைப்பாடு என்னவாக இருக்கிறது, அவரது அடுத்தக்கட்ட காய் நகர்த்தல் எப்படி இருக்க போகிறது? என்பன போன்ற கேள்விகளும் இயல்பாகவே எழுகின்றன. அதிமுக இதுகுறித்து நாம் ஒருசில அரசியல் நோக்கர்களிடம் பேசியபோது, அவர்கள் சொன்னதாவது: "தேவர் ஜெயந்திக்கு அனுமதி தர வேண்டும் என்று அதிமுகவினர் மனு அளிக்கும் அளவுக்கு அவருக்கான ஆதரவுகள் பெருகி வருகிறது. இத்தனைக்கும் சசிகலா அரசியல் ரீதியிலான அறிவிப்புகள்…
Read More
கையெழுத்து போட மாட்டேன்" - முரண்டு பிடித்த பன்னீர் அ.தி.மு.க தலைவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலெல்லாம் வரிசைக்கட்டி ரெய்டு நடத்தி வருகிறது லஞ்ச ஒழிப்புத்துறை. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி, சி.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமுமான இளங்கோவனுக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த திடீர் ரெய்டுக்கு அறிக்கை மூலமாக கண்டனம் தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, "கழகப் பணிகளையும் தேர்தல் பணிகளையும் சுறுசுறுப்புடன் ஆற்றிவரும் செயல்வீரர் இளங்கோவன் மீது இந்த சோதனை நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலினின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்" என்று கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி பெயரில் மட்டுமே வெளியாகியிருக்கும் இந்த அறிக்கையில்தான் பஞ்சாயத்து நடந்ததாகச் சொல்கிறது அ.தி.மு.க வட்டாரம் நம்மிடம் பேசிய அ.தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், "ஆயுர்வேத சிகிச்சைக்காக கோவையில் பன்னீர்செல்வம் முகாமிட்டிருக்கிறார்.…
Read More
சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிய விவகாரம், கொரோனா காலத்தில் உபகரணங்களை கொள்முதல் செய்ததுல முறைகேடுன்னு அதையும் தாண்டி இபபோ வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிச்ச வழக்குன்னு வசமாக சிக்கியிருக்காரு முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.  சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை மிக இழிவாக விமர்சனம் செய்தாருங்கிறதுக்காகவே விஜயபாஸ்கருக்கு 2013-ல் அமைச்சர் பதவியை கொடுத்தவர் ஜெயலலிதா. 2011-ல் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே குவாரி தொழில், கல்வி நிறுவனங்கள் என சகலத்திலும் கால் பதித்துவிட்டார் விஜயபாஸ்கர்.  2016 சட்டசபை தேர்தலில் அதிமுக ஜெயிச்சதும் சுகாதாரத்துறை அமைச்சரானார் விஜயபாஸ்கர். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 75 நாட்களும் அங்கேயே முகாமிட்டு சர்வ வல்லமை பொருந்திய சக்தியாக, சசிகலா தரப்பின் ஆகப் பெரும் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் விஜயபாஸ்கர். சசிகலா தரப்பில் செல்வாக்கு தாம் உட்பட மூத்த அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதாவை பார்த்துவிடக் கூடாது என விஜயபாஸ்கரும் அவரது ஆதரவாளர்களும் தடுத்தனர்…
Read More
    சென்னை அடேங்கப்பா! 4.87 கிலோ தங்கம், ரூ.23 லட்சம் ரொக்கம் பறிமுதல்.. விஜயபாஸ்கர் வீடுகளில் தொடரும் சோதனை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 23 லட்சம், 4.87 கிலோ தங்க நகைகள், 136 கன ரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நடவடிக்கை என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதலில் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்தச் சூழலில் இன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.   அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை, சென்னை, திருச்சி எனத் தமிழகம் முழுவதும்…
Read More

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையக் குழு உறுப்பினராக சுனில்குமார் ஐபிஎஸ்

கூடுதல் இயக்குனர் அந்தஸ்தில் இருந்த சுனில்குமார் ஐபிஎஸ் அண்மையில் ஓய்வுப் பெற்றார். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையக் குழு உறுப்பினராக அவரை தமிழக அரசு நியமித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் சாலை மறியல் நடைபெற்ற போது, காவல்துறையினரால் திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிந்தாரிப்பேட்டை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்களை பார்ப்பதற்காக அப்போதைய திமுக இளைஞரணிச் செயலாளர் மு.க.ஸ்டாலின் திருமண மண்டபத்திற்குச் சென்றார். அந்தநேரத்தில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியான இதே சுனில்குமார் ஐபிஎஸ், மு.க.ஸ்டாலினை அனுமதிக்கவில்லை. அப்போது நியாயம் கேட்டு, மண்டபத்திற்குள் நுழைய முயன்ற மு.க.ஸ்டாலினை நெஞ்சில் கைது தள்ளிவிட்டவரும் இதே சுனில்குமார் ஐபிஎஸ். அந்த நிகழ்வின் படம் மறுநாள் நாளிதழ் ஒன்றில் வந்தது. அப்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் அப்போது எதிரொலித்தது. நாளிதழில் வெளியான புகைப்படத்தை பேரவையில் காட்டி, போலீஸ் அதிகாரியை பணி…
Read More