11
Nov
2014-ம் வருஷம் ரிலீஸான படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்த அப்படம் வெற்றி பெற்றதோடு, நேஷனல் அவார்டும் வாங்கியது. இந்த நிலையில், தற்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற பெயரில் எடுத்து ரசிகர்களைக் கவர முயன்றிருக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். முந்தைய பாகத்தை விட இதில் கூடுதல் கற்பனை திறனை பயன்படுத்தியிருக்கிறார்.வழக்கமா பார்ட் 2 எடுக்கும் போது வேறு கதைக்களத்தைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் இயக்குனர்கள்.ஆனால் முதல் ஜிகர்தண்டா போலவே இதிலும் ஒரு ரவுடி & சினிமா டைரக்டர் என்ற கான்செப்ட்தான் என்றாலும் இந்த டபுள் எக்ஸ்-சில் மலை வாழ் மக்களைப் பாடாய்படுத்தி, அங்குள்ள வளங்களை சுரண்ட முயலும் அரசாங்கத்தின் போக்கைச் சுட்டிக் காட்டி இருப்பதாலேயே கொஞ்சம் பார்க்கும் படியாக இருக்கிறது. ஜிகர்தண்டாவை போலவே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் இரண்டு கதாநாயகர்களைச் சுற்றியே கதை நகர்கிறது.…
