10
Nov
5 ஆண்டில் 5 ஆயிரம் கோடியை வாயில் போட்ட S.P வேலுமணி..ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க மாட்டார்.. கதறும் மாஜி அமைச்சர். இது அனைத்தையும் தெரிந்துகொண்டு எதற்காக திமுக வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்கிறது என்று புரியவில்லை, எஸ். பி வேலுமணி மீது திமுக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இல்லை, இந்த மழை வெள்ளத்திற்கு பிறகாவது ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது முதலமைச்சர் ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்காதது அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல் கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்.பி வேலுமணி ஊழலுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளே இப்போது மாநகராட்சியில் அதிகாரிகளாக இருக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.…
