சினிமா

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது !

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது !

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக டைம் லூப் எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது இந்த படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.தேனியைச் சேர்ந்த மனோ கார்த்திகேயன், இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் தான் சினிமாவுக்கு ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார். அறிவழகன் இயக்கிய ஈரம் மற்றும் வல்லினம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டியில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் மனோ கார்த்திகேயன்.இதை தவிர்த்து சில குறும்படங்களையும் ஆவண படங்களையும் மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ளார்.ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய படம் தான் ஜாங்கோ என்று மனோ கார்த்திகேயன் கூறுகிறார். "தமிழ் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்)…
Read More
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு இந்த மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றம் போயிருக்காங்க. ஆனா கடந்த முறையே கூடுதல் கால அவகாசம் கிடையாதுன்னு உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி சொல்லிடுச்சி. உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் பிரதான கட்சிகள்லா தீவிரமா வேலை பாத்துகிட்டு வர்ற நிலையில வழக்கம் போல் திக்கு தெரியாமல் தேமுதிக தொண்டர்கள் தவிச்சுகிட்டு வர்றாங்க ளாம்.. உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றம் போயிருக்குது. ஆனால் கடந்த முறையே கூடுதல் கால அவகாசம் கிடையாதுன்னு உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திடுச்சி. அந்த வகையில் அவகாசம் கிடைக்கவில்லைன்னா இந்த மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனை முன்னாடியே உணர்ந்த திமுக ஏற்கனவே மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தை போட்டு முடிச்சாச்சு.. அதிமுகவும் கூட அவங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் வேலைகள் ஜரூராகவே…
Read More
கோடநாடு கொலை வழக்கை எனக்கு எதிராக ஸ்டாலின் பயன்படுத்த நினைத்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை பதிலடி கடுமையாக இருக்கும்னு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக எச்சரிக்கிறதுக்குத்தான் ஆளுநருடனான சந்திப்புங்கிறாங்க. கொடநாடு கொலை வழக்கை ஸ்டாலின் கையில் எடுத்த நிலையில் திமுக அரசின் கலெக்சன் விவகாரங்களை கிளறியுள்ள எடப்பாடி பழனிசாமி திமுகஅரசின் அதிகார மையங்கள் தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் கொடுத்திருக்காரு. கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி பெயரை சேர்ப்பதற்கான பணிகள் வேகமெடுத்த நிலையில் சட்டப்பேரவையில் அமளி செய்த எடப்பாடியார், தொடர்ந்து வெளியே தர்ணாவில் ஈடுபட்டதோட சுடச்சுட பிரஸ் மீட் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு அடுத்த நாள் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பல்வேறு புகார்கள் அடங்கிய மனுவையும் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசிற்கு புதிய பெயர் கொடுத்தார். அதாவது தற்போதைய திமுக அரசை கமிசன், கலெக்சன் வென்ஜன்ஸ் அரசு அதாவது பழிவாங்கும் அரசுன்னு…
Read More
  கோடநாடு வழக்கு: சயானிடம் நடந்த மறுவிசாரணை அறிக்கை இன்று உதகை கோர்ட்டில் தாக்கல்-சிக்குவது எடப்பாடியா? கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிக்கி உயிர் தப்பிய சயான், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் நடத்தப்பட்ட மறு விசாரணை அறிக்கை உதகை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. கோடநாடு விவகாரத்தில் மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை தொடர்புபடுத்தி சயான் வாக்குமூலம் தந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானதால் நாளைய விசாரணை அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கோடநாடு எஸ்டேட் பங்களா. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக கோடநாடு பங்களாவுக்கு தோழி சசிகலாவுடன் செல்வது வழக்கம். இந்த கோடநாடு எஸ்டேட் பங்களாவில் ஏராளமான ஆவணங்கள், பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வரும். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 2017-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவின் 4…
Read More
    தமிழ்நாடு அரசு வங்கி" உதயமாகிறது! ✨✨✨ தமிழ்நாடு அரசின் சார்பாக வங்கி ஆரம்பிப்பதை கொண்டாடுகிறீர்களே அதனால் என்ன பலன் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். அவற்றை விரிவாக பார்ப்போம். 1. எந்த ஒரு வங்கியிலும் பொதுமக்களின் சேமிப்பு பணம் பல்லாயிரம் கோடி இருக்கும். இன்றைய நிலையில் தமிழர்கள் பல்லாயிரம்கோடி சேமிப்பு பணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தனியார் வங்கிகளிலும் இருக்குன்றன. அந்த பணம் வட இந்திய பெருமுதலாளிகளின் தொழிலுக்கு கடனாக கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக ஆஸ்திரேலியாவில் சுரங்க்த்தொழில் செய்ய அதானிக்கு ஆறாயிரம் கோடி கடனை SBI வங்கி வழங்கியது. தமிழ்நாட்டில் இருப்பவர்களின் பல நூறுகோடி சேமிப்பு பணம் SBI வங்கியில் இருக்கும். ஆனால் அவை முதலீடாக தமிழ்நாட்டிலேயே வருமா என்றால் அது கேள்விக்குறிதான். அவை பெரும்பாலும் வட இந்திய பெருமுதலாளிகளுக்கு கடனாக கொடுக்கப்பட்டு அவற்றில் பல நூறு கோடி வாராக்கடனாக கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழர்களின் சேமிப்பு தமிழ்நாட்டிலேயே முதலீடு செய்யப்படும்போது வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்.…
Read More
தமிழ்நாடு அரசு வங்கி" உதயமாகிறது! ✨✨✨ தமிழ்நாடு அரசின் சார்பாக வங்கி ஆரம்பிப்பதை கொண்டாடுகிறீர்களே அதனால் என்ன பலன் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். அவற்றை விரிவாக பார்ப்போம். 1. எந்த ஒரு வங்கியிலும் பொதுமக்களின் சேமிப்பு பணம் பல்லாயிரம் கோடி இருக்கும். இன்றைய நிலையில் தமிழர்கள் பல்லாயிரம் கொடி சேமிப்பு பணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தனியார் வங்கிகளிலும் இருக்குன்றன. அந்த பணம் வட இந்திய பெருமுதலாளிகளின் தொழிலுக்கு கடனாக கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக ஆஸ்திரேலியாவில் சுரங்க்த்தொழில் செய்ய அதானிக்கு ஆறாயிரம் கோடி கடனை SBI வங்கி வழங்கியது. தமிழ்நாட்டில் இருப்பவர்களின் பல நூறுகோடி சேமிப்பு பணம் SBI வங்கியில் இருக்கும். ஆனால் அவை முதலீடாக தமிழ்நாட்டிலேயே வருமா என்றால் அது கேள்விக்குறிதான். அவை பெரும்பாலும் வட இந்திய பெருமுதலாளிகளுக்கு கடனாக கொடுக்கப்பட்டு அவற்றில் பல நூறு கோடி வாராக்கடனாக கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழர்களின் சேமிப்பு தமிழ்நாட்டிலேயே முதலீடு செய்யப்படும்போது வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும். 2.…
Read More

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்.மல்லுக்கட்டும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்.

  உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்.மல்லுக்கட்டும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள். அசைந்து கொடுக்காத இபிஎஸ் ஓபிஎஸ். என்ன நடக்கப் போகுது.தமிழ்நாட்டில் விரைவில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலும், நகராட்சி தேர்தலும் நடக்கப் போகுது. இதில அதிமுக தனித்து போட்டியிடணும்னு அதிமுக நிர்வாகிகள் சொல்லிட்டு வர்றாங்க.. பாஜக உடன் இனியும் கூட்டணி வேண்டாம்னு நிர்வாகிகள் குமுறுவதாக கூறப்படுகிறது.இதுக்கு பல காரணங்கள் சொல்லப் படுது. இன்னமும் தமிழக மக்கள் மத்தியில் மத்திய அரசு மேல் கோபம் இருந்து கிட்டே வருது.பெட்ரோல் விலை உயர்வு கேஸ் விலை உயர்வுன்னு நெறைய சொல்லிகிட்டே போகலாம்.தமிழக அரசு பெட்ரோல் விலையில் ₹ 3 ரூபாய் கொறைக்கும் போது மத்திய அரசால் ஏன் கொறைக்க முடியலன்னு கேள்வி கேக்குறாங்க.இது கீழ் மட்டத்தில எறங்கி பிரச்சாரம் பண்றவங்களுக்குத் தான் தெரியும்.ஜீப்ல வேன்ல நின்னு பிரச்சாரம் பண்ற மேல்மட்டத் தலைவர்களுக்குத் தெரியாது அதனால்தான் பாஜகவோட கூட்டணி வேண்டாம்னு சொல்றாங்க. தமிழகத்தில் விரைவில்…
Read More
தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1.25 லட்சம் கோடி கடனில் இருந்து மீளுமா? தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வுதான் தீர்வா? தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மிகப் பெரிய கடன் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக் கடனில் இருந்து தமிழ்நாடு மின்வாரியம் மீள முடியுமா? ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு (டான்ஜெட்கோ) கடந்த நிதியாண்டின் முடிவில் 1,34,119.94 கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் கடன் நீங்கலாக டான்ஜெட்கோவின் மொத்தக் கடன் 1,24,974.49 கோடி ரூபாய். இந்த வெள்ளை அறிக்கையின்படி ஒரு யூனிட் மின்சாரத்தை வழங்க டான்ஜெட்கோவிற்கு ரூ. 9.06 செலவாகும் நிலையில் சராசரியாக ஒரு யூனிட்டிற்கு 6.7 ரூபாய் மட்டுமே வசூலிக்க முடிகிறது. இதனால், ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனையில் 2.36 ரூபாய்…
Read More

தமிழகத்தில் மின் கட்டணம், பேருந்து கட்டணம் உயரப் போகிறதா..? பிடிஆர் சொல்வதென்ன..!

கடந்த ஆட்சியின் சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 120 பக்க வெள்ளை அறிக்கையை இன்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.முதல்-அமைச்சர் காட்டிய பாதையில் வந்த அறிக்கை இது என அவர் கூறினார். மேலும் அவர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் முக்கிய விவரங்கள் வருமாறு:- வரியே வசூலிக்காவிட்டால் எப்படி ஆட்சி நடத்த முடியும். சரியான வரியை வசூலித்து, மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். வரி அல்லாத வருமானம் முந்தைய திமுக ஆட்சியில் 1 சதவீதம் ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 0.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. 10 ஆண்டுகளில் வரி மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் வரி வருவாயும் 33 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. 5 ஆண்டுகளில் மறைமுக கடன்…
Read More
திமுக அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள்

திமுக அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள்

திமுக அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரும் ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்றாலும் ஐந்து விஷயங்கள் மக்கள் கவனத்தை ஈர்க்கும் என்கிறார்கள். போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்வு, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிப்பு, நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்வு உள்ளிட்ட ஐந்து விஷயங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். மே 7-ம் தேதி தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இவர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கி வரும் இந்த…
Read More