சினிமா

இறைவன் மிகப் பெரியவன் திரைப்பட துவக்க விழா!

இறைவன் மிகப் பெரியவன் திரைப்பட துவக்க விழா!

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “இறைவன் மிகப்பெரியவன்”. JSM Pictures சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் துவக்கவிழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது இவ்விழாவினில் இயக்குநர் அமீர் பேசியதாவது… இது என்னுடைய விழா. பொதுவா ஒரு படம் வெறும் ஸ்கிரிப்டை வைத்து பூஜை போடுவோம். இந்த விழா அப்படியில்லை. இது ஒரு படத்தின் அறிமுக விழா. ஒரு புதிய தயாரிப்பாளர், இந்த காலத்தில் படம் செய்வதே கடினம் அதிலும் என்னை மாதிரி இயக்குநரை வைத்து படமெடுப்பது இன்னும் கடினம். அவருக்காக தான், அவரை அறிமுகப்படுத்தும் நோக்கம் தான் இந்தவிழா. பாரதிராஜா சார் படம் செய்யும் போதே நிறைய கதைகளை வெளியில் வாங்கி செய்வார் ஆனால் எல்லோரும் அவர் கதை என நினைப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேறொருவரின்…
Read More
ஸ்டாலினின் கரங்களை விட்டு விலகுகிறதா இஸ்லாமிய வாக்கு வங்கி?! ஏன்? எப்படி? ஒரு பரபர அலசல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு வழக்கம்போல் முழுமையான ஆதரவினை இஸ்லாமியர்கள் வழங்குவார்களா? Ganesh Ramachandran Chennai, First Published Feb 11, 2022, 10:31 AM IST கர்நாடகாவில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் ‘ஹிஜாப்’ விவகாரத்துக்கு எதிராக தமிழகத்தில் முஸ்லீம் அமைப்புகள் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்பாட்டம் நடத்திட திட்டமிட்டன. ஆனால் அதன் பின் ‘தமிழகத்தை ஆள்வது தி.மு.க. அரசு. இது சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கும் அரசு. நாம் போராட்டம் நடத்த, அதை எதிர்த்து வேறு சிலர் குரல் கொடுக்க துவங்கினால் விவகாரம் வேறு மாதிரி போக துவங்கலாம். அது சட்ட ஒழுங்குக்கு சிக்கல் தந்து அரசுக்கு சிரமம்  உருவாகிட கூடாது. அதனால் பொறுமை காப்போம்.’ என்று முடிவெடுத்து அமைதியாகினர். இதுதான் இதுவேதான் தி.மு.க. மீது சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மக்கள் வைத்திருக்கும்…
Read More
 தமிழக ஆளுநர் பதவி விலகுவாரா ? இல்லை மாற்றப்படுவாரா ? இதுதான் ஹாட் டாபிக்கா போய்க்கிட்டு இருக்கு ? ஏன் என்ன பிரச்சினைன்னு பாக்கலாம். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக உள்ளதாக கூறப்படும் தகவல் அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்குது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்ட சபையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி, தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை சட்டப்பேரவையின் சபாநாயகர் மறுபரிசீலனைக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிட்டாரு. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட சுமார் 5 மாதங்களுக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது முடிவை அறிவித்துள்ளார். அதே சமயம் இந்த சட்ட முன்வடிவு மாணவர்கள் நலன்களுக்கு எதிரானது எனவும், ஆளுநர் மாளிகை கூறி இருக்குது. பொதுவாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 200வது விதியின்படி ஒரு மாநில சட்ட பேரவையால் மசோதா நிறைவேற்றப்பட்டால் முதலில்…
Read More
நீட் தேர்வு பற்றி உண்மை நிலை என்ன? தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும்- உண்மை நிலை என்ன??  ஒரு அலசல்.   1.தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் சுமார் 28000 கோடி. அதில் 60% க்கும் மேல் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. 2. நுழைவு தேர்வு ரத்துசெய்யப்பட்ட பிறகு நீட் தேர்வு வருவதற்கு முன்னால் 2006 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கல்லூரி மருத்துவ இடங்கள்(MBBS) -2925. 3. இந்த2925 இடங்களில் அரசுப்பள்ளிகளில் படித்துMBBS இடங்கள் வாங்கியவர்கள் 213. சராசரியாக ஆண்டிற்கு 19 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் இருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வானார்கள். இது 0.7% சதவிகிதத்திற்கும் குறைவானதாகும். 4. NCERT எனப்படும் 1961 ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு மத்திய மாநில அரசாங்கங்களுக்கு பாடத்திட்டத்தில் உதவி செய்வதற்காக மாதிரி பாடப்புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த பாடப்புத்தகத்தில் இருந்து…
Read More
பா.ஜ.க. போடும் அதிரடி ஸ்கெட்ச், பதறும் தி.மு.க..!

பா.ஜ.க. போடும் அதிரடி ஸ்கெட்ச், பதறும் தி.மு.க..!

இறையன்பு, சைலேந்திரபாபு திடீர் இடமாற்றமா?: பா.ஜ.க. போடும் அதிரடி ஸ்கெட்ச், பதறும் தி.மு.க..! தேசத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசுக்கும் இடையில் யுத்தம் பட்டவர்த்தனமாக துவங்கிவிட்டது தேசத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசுக்கும் இடையில் யுத்தம் பட்டவர்த்தனமாக துவங்கிவிட்டது. விளைவு, ஒருவருக்கு ஒருவர் எப்படியெல்லாம் செக் வைக்கலாம், என்னென்ன வகையில் அடிக்கலாம், திருப்பி அடிக்கலாம்! என்று முட்டி மோதிக் கொள்ள துவங்கியுள்ளனர். இந்த அதிரடி அரசியல் தேசிய அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது தமிழகத்தை ஆளும் தி.மு.க. பெரியாரின் நாத்திக சித்தாந்தத்தை தாங்கி செயல்படுவதாக தன்னை முன்நிறுத்துகிறது. அதேவேளையில் இந்தியாவின் சிறுபான்மை மதத்தினராக சுட்டிக்காட்டப்படும் கிறுத்துவர் மற்றும் இஸ்லாமியர்களின் தமிழக காவலனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆனால் பா.ஜ.க.வோ தெய்வநம்பிக்கை, இந்து மத தர்மம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படும் கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்துகிறது. ஆக, அடிப்படை சித்தாந்த அளவிலேயே இரு கட்சிகளும்…
Read More
அதிமுக பாஜக கூட்டணிக்கு வேட்டு வைத்த நயினார் நாகேந்திரன் ? சமரசம் செஞ்ச அண்ணாமலை ! தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படலை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லைன்னாலும்கூட துணிஞ்சு கேள்வி கேக்குது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில்  பேசுவதேயில்லை. நயினார் நாகேந்திரன் அதிமுக பற்றி பேசிய ‘ஆண்மை’ பேச்சு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படலை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லைன்னாலும்கூட துணிஞ்சு கேள்வி கேக்குது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில்  பேசுவதேயில்லை. நயினார் நாகேந்திரன் அதிமுக பற்றி பேசிய ‘ஆண்மை’ பேச்சு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்…
Read More
சில நேரங்களில் சில மனிதர்கள் -விமர்சனம்

சில நேரங்களில் சில மனிதர்கள் -விமர்சனம்

சில நேரங்களில் சில மனிதர்கள்., ஜெயகாந்தனின் புகழ்பெற்ற கதைகளுள் ஒன்று. இதே தலைப்பில் வெளியாகும் சினிமா ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. ஜெயகாந்தனின் கதைக்கும் இந்த சினிமாவிற்கும் தலைப்பைத்தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை. நாசர், அசோக் செல்வன், மணிகண்டன், கே.எஸ்ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அபி ஹாசன், ரித்விகா, ரியா, பிரவீன் பாலா, அஞ்சு சூரியன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த சினிமாவை இயக்கியிருக்கிறார் விஷால் வெங்கட். மணிகண்டன் வசனம் எழுதியிருக்கும் இந்த சினிமா ஒரு குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வெவ்வேறு வாழ்வியல் சூழல்களைக் கொண்ட மனிதர்களை ஒரு புள்ளியில் இணைக்க முயற்சி செய்கிறது. அசோக் செல்வனுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அன்பான அப்பா நாசர் மீது எப்போதும் கோவத்தை காட்டும் அசோக் செல்வனுக்கு வாழ்க்கை மிகப்பெரிய இழப்பைத் தருகிறது. நடு இரவில் நடந்த ஒரு விபத்துடன் மணிகண்டன், அபிஹாசன், ரித்திவிகா தம்பதிகள் என பலரும் இணைக்கப்படுகிறார்கள். பிறகு அவரவர் மனதில் குறிப்பிட்ட…
Read More
‘கொம்பு வச்ச சிங்கம்டா’

‘கொம்பு வச்ச சிங்கம்டா’

சாதியில்லை, சாமியில்லை என்று சொல்லி ஊருக்குள் புரட்சி பேசும் ஆறு நண்பர்களுக்குள் பிரச்சினை வெடித்து அவர்கள் பிரிந்ததால் உருவானது தான் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. படத்தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் ஊரே கொண்டாடி, மரியாதை செய்யும் அளவுக்கு செல்வாக்குடன் இருக்கிறார் இயக்குனர் மகேந்திரன். இவரது ஒரே மகன் சசிகுமார் பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி சமத்துவம், சகோதரத்துவம் என்று ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற நினைக்கிறார். இதனால் ஊருக்குள் இருக்கும் பல பேரின் பகையைச் சம்பாதிக்க நேர்கிறது. அந்த நேரத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் இரு பெரும் கோஷ்டிகள் மோதுகின்றன. அதில் மாமனாருக்காக சசிகுமாரும் எதிர்க்கோஷ்டிக்கு 3 நண்பர்களுமாகப் பிரிந்து தேர்தல் வேலை செய்கிறார்கள்.அதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலைச் சம்பவம் நிகழ்கிறது. இந்தக் கொலை வழக்கில் சசிகுமார், சூரி உள்ளிட்ட மூன்று பேர் கைதாகிறார்கள். நண்பர்களுக்குள் உருவான பிரச்சினை ஊர்ப் பிரச்சினையாகவும், சாதிப் பிரச்சினையாகவும் உருமாறுகிறது.…
Read More
‘நாய் சேகர்’ கலகலப்பாத்தான் இருந்தது.

‘நாய் சேகர்’ கலகலப்பாத்தான் இருந்தது.

விலங்குகள் ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சதிஷ் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரை ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் சதிஷை கடித்து விடுகிறது. இதிலிருந்து நாயின் குணாதிசயங்கள் சதிசுக்கும் வருகிறது. இதனால், சதிஷ் வாழ்க்கையில் பிரச்சனைகளும் மாற்றங்களும் ஏற்படுகிறது. மாற்று மருந்து தயாரான நிலையில் கடித்த படையப்பாங்கிற நாய் காணாமல் போகிறது. இறுதியில் நாய் கிடைத்ததா? சதிஷ் மனிதனாக மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வந்த சதிஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காமெடியை விட சென்டிமென்ட், காதல், நடனம் என தனது திறமையை கொஞ்சம் நிரூபித்திருக்கிறார். நாய்க்குள்ள குணாதிசயங்கள் வந்தவுடன் நாயைப் போல் சைகை செய்வது, பின்னர் உணர்ந்து வருந்துவது என நடிப்பில் ஸ்கோர் பண்ண முயற்சி செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா லட்சுமி அளவான…
Read More
சசிகலா என்ட்ரிக்கு ஓகே சொன்ன டெல்லி! இணைப்புக்கு தேதி குறிச்சாச்சா? Mariathangaraj Jeyapal | Samayam TamilUpdated: 21 Dec 2021, 8:20 am 1600 Subscribe அதிமுகவுக்குள்ளும், டெல்லி மேலிடத்திலும் சசிகலாவுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா அதிமுக அலுவலகத்துக்குள் கால் வைப்பதற்கான காலம் கனிந்துவிட்டதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். சமயம் தமிழ் விருதுகள் 2021 - உங்கள் வாக்கு யாருக்கு? எடப்பாடி பழனிசாமி தரப்பு சசிகலா கட்சிக்குள் வருவதற்கு கொஞ்சமும் வாய்ப்பளித்துவிடாது என்று தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சசிகலாவை காட்டி கட்சிக்குள் தனக்கான வலுவான இடத்தை தக்கவைத்து வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். இருப்பினும் சசிகலாவோ அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது தொடர் முயற்சிக்கு பலன் கிடைத்துவிட்டதாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். மதுரைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொண்டர் கூட்டம் தன் பின்னால் இருக்கிறது என்று சசிகலா ஒரு சேதி சொன்னார். ஆனால் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளோ, டெல்லி மேலிடமோ…
Read More