அரசியல்

வடசென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷின் துரோகத்தப் பத்தி தான் வட சென்னைல ஒரே பேச்சா இருக்குது. கட்சிக்கு சசிகலா தலைமை என்றாலும் சரி தினகரன் தலைமை ஏற்றாலும் சரி ஏற்றுக்கொள்வோம் என ஆதரவாளர்களிடம் சொல்லிகிட்டு கட்சியை ஒரு புறம் திமுகவுக்கு விற்று விட்டாருங்கிறாங்க. மறுபுறம் ஓபிஎஸ் உடன் கள்ள உறவு வச்சிட்டு வெளியில் சொல்றது எடப்பாடி ஆதரவு அதிமுகவின் அடிமட்ட தொண்டனின் ஆதங்கம்இது தான். 2012 இல் அவைத்தலைவராக இருந்த மதுசூதனனுக்கு ஓட்டுனராக வந்தவர் தான் ஆர் எஸ் ராஜேஷ். வந்த மறு வருடமே வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக பதவி கொடுக்கப்பட்டது எப்போதுமே திமுகவினருடன் கள்ள உறவு வைத்திருக்கும் ராஜேஷ் அம்மா மறைவுக்கு பிறகு கட்சியை கூறு போட நினைத்த ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சென்றவர் தான் ராஜேஷ் அதன் பிறகு கட்சி இணைப்பு வந்தவுடன் வடசென்னை வடக்கு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து…
Read More

அண்ணாமலை பதவி காலி ? ஆப்பு வைக்கும் நிர்வாகிகள் !

அண்ணாமலை பதவி காலி ? ஆப்பு வைக்கும் நிர்வாகிகள் ! பாஜக தேசிய தலைமை அதிரடி ப்ளானோடு களம் இறங்கி உள்ளதால் அண்ணாமலை பதவிக்கு சிக்கல் ஏற்படலாம்னு எதிர்பார்க்கப்படுது. தமிழ்நாடு பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடகா மாநிலகாவல்துறையில் எஸ் .பி ஆக பணியாற்றி வந்தார். அப்போது அந்த மாநிலத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது அண்ணாமலை எடுத்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைய செய்தது. இதன் காரணமாக, ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலையை ஏறக்குறைய கர்நாடகாவின் சிங்கம் என மக்கள் அழைக்கத்தொடங்குனதுனால மக்கள் மத்தியில அண்ணாமலைக்கு ஆதரவு பெருகுச்சு .இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் அண்ணாமலை தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செஞ்சிட்டு சொந்த ஊர் திரும்பினார். அப்போ பாஜகவில் அண்ணாமலை சேரப்போவதாக பேசப்பட்டது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக அண்ணாமலை பாஜகவில் இணைந்து ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ஷாக் கொடுத்தார். கட்சியில் சேர்ந்த…
Read More
தேய்ந்து போன தேமுதிக…

தேய்ந்து போன தேமுதிக…

தேய்ந்து போன தேமுதிக... எதனால் கட்சி காணாமப் போச்சி.விஜயகாந்த் என்ன தப்பு பண்ணுனாருன்னு பாக்கலாம். தமிழ் சினிமா உலகின் கேப்டன் என்ற அடையாளத்துடன் அரசியலில் நுழைந்த விஜயகாந்த், தமிழக அரசியலின் மாற்று சக்தியாக அடையாளம் காட்டிய தேமுதிக, இன்னைக்கு மெல்ல, மெல்ல தேய்ந்து போய் உள்ளதற்கான காரணங்களப் பத்தி பாக்கலாம். தமிழகத்தின் மாற்று கட்சியாக மாற்று சக்தியாக தேமுதிகவை அடையாளம்காட்டினாரு விஜயகாந்த். ஆனா இன்னைக்கு மெல்ல மெல்ல தேய்ந்து போய் நிற்குது தேமுதிக. தேமுதிகவின் இந்த நிலைக்கு விஜயகாந்த் செய்த தவறுகளைப் பார்ப்போம். தமிழ் சினிமாவின் கேப்டன் என்ற அடையாளத்துடன் அரசியலுக்கு வந்த விஜயகாந்த், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கும் சவால்விடும் விதத்தில தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்ற பெயரில் 2005 செப்டம்பர் 14 ஆம் தேதி புதிய கட்சியை தொடங்கினாரு. கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே வந்த 2006 இல் தமிழக சட்டமன்ற தேர்தலில் 234…
Read More
கவர்னர் ஆகிறார் ரஜினிகாந்த் ?

கவர்னர் ஆகிறார் ரஜினிகாந்த் ?

கவர்னர் ஆகிறார் ரஜினிகாந்த் ?..பச்சைக்கொடி காட்டிய பாஜக மேலிடம் ! ரஜினிகாந்த் ஆளுநராக போகிறார்ங்கிற தகவல்கள் வட்டமடிச்சிக்கிட்டு வரத் தொடங்கியிருக்குது... ரஜினியை வைத்து பாஜக மிகப்பெரிய பிளானை போட்டு வர்றதாகவும் சொல்லப்படுது. ரஜினி ஆளுநரைச் சந்திக்க ப என்ன காரணம்? இது தான் தமிழக அரசியல் களத்தில எல்லாருடைய கேள்வியும். விரைவில் எம்பி தேர்தல் வர இருக்குது.. இதுக்காக தமிழகத்தை நோக்கி இப்போதே பாஜக மேலிடம் காய் நகர்த்த தொடங்ங்கிடுச்சி. இதுக்கிடைல, சமீபத்தில் ஆளுநரை ராஜ்பவனில் ரஜினி திடீரென சந்தித்து பேசியிருந்தார்.. அரசியல் காரணங்களுக்காக இந்த சந்திப்பு நடக்கலைங்கிறார். ஆளுநர் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆளுநரை நிறைய புகழ்ந்து பேசினார். "மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.. 30 நிமிடம் பேசினேன். அரசியல் விஷயமும் அவரிடம் பேசினேன்.. அவர் காஷ்மீரில் பிறந்து, வடமாநிலங்களிலேயே இருந்தவர்.. ஆனால், தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார்.. முக்கியமாக தமிழக மக்கள், அவர்களது நேர்மை, கடின உழைப்பு இதெல்லாம் ஆளுநருக்கு…
Read More
பிடிஆரா ?:அரசு ஊழியர்களா ? ஸ்டாலின் முடிவு என்ன ?

பிடிஆரா ?:அரசு ஊழியர்களா ? ஸ்டாலின் முடிவு என்ன ?

பிடிஆரா ?:அரசு ஊழியர்களா ? ஸ்டாலின் முடிவு என்ன ? மொதல்ல அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குங்க...முதல்வரின் தூக்கத்தை கலைத்த டெல்லி! என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சு கிட்டு இருக்காரு.தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அமைச்சர்கள் டிரான்ஸ்ஃபர் லிஸ்ட்டில் நிதியமைச்சர் பிடிஆரின் பெயர்தான் முதலில் சேர்க்கப்பட வேண்டுமென அரசு ஊழியர்கள் கொந்தளிச்சிட்டு வர்றதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்குது. ஏன் என்ன காரணம்ன்னு பாக்கலாம் ? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய விவகாரம் வரை, தான் வெளிப்படுத்தும் தன்னிச்சையான கருத்துகளால அப்பப்போ சர்ச்சைகள்ல சிக்கிகிட்டு வர்றாரு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாய் போன்ற முக்கிய விவகாரங்கள்ல மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பிடிஆர் அப்பப்போ பதிலடி கொடுக்கிறதை அவர் மட்டுமில்லாம, ஒட்டுமொத்த மத்திய நிதியமைச்சகத்துக்கே…
Read More
ரஜினி தலைமையில் அதிமுக… திமுகவை வீழ்த்த பாஜகவின் திட்டம்?

ரஜினி தலைமையில் அதிமுக… திமுகவை வீழ்த்த பாஜகவின் திட்டம்?

ரஜினி தலைமையில் அதிமுக... திமுகவை வீழ்த்த பாஜகவின் மாஸ்டர் பிளான்? தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலயுடனான ரஜினியின் திடீர் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை பத்த வைச்சிருக்குது. ஓபிஎஸ்- இபிஎஸ்ஸுன்னு இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ள அதிமுகவை ரஜினியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, திமுகவை வீழ்த்தும் பாஜகவின் மாஸ்டர் பிளானின் ஆரம்பமாகவே ரஜினியின் ஆளுநர் சந்திப்பு அரசியல் ரீ என்ட்ரியாகப் பார்க்கப்படுது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ரஜினி திடீர் சந்திப்பு திமுகவை வீழ்த்த ரஜினியை வைத்து பாஜக போடும் மாஸ்டர் பிளான். அதிமுகவை ரஜினியின் கைக்கு கொண்டு வரவும் பாஜக திட்டமாம் போர் வரட்டும்... புரட்சி வெடிக்கட்டும்...என்றெல்லாம் பஞ்ச் டயலாக் பேசி, தனது ரசிகர்களை உசுப்பேத்தி அவர்களுக்கு அரசியல் ஆர்வத்தை மூட்டிய ரஜினிகாந்த், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னால , தன்னோட உடல்நிலையைக் காரணங்காட்டி தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிச்சு பல லட்சக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றினாரு. ரஜினியின் அந்த…
Read More
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையில் மூன்றாவது அணி ?

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையில் மூன்றாவது அணி ?

பாஜக தலைமையில் மூன்றாவது அணி ?  அதிர்ச்சியில் கழகங்கள்? நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமையும்ங்கிற கேள்வி எழுந்திருக்குது. பாஜக அண்மைக்காலமாக பெரும்பாலான மாநிலங்களில் அந்த மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒரு சில இடங்களை வென்று மற்ற கட்சி எம்எல்ஏக்களை நல்ல விலைக்கு வாங்கி ஆட்சியமைத்து வர்றதா எதிர்க்கட்சிகள் விமர்சனம் பண்ணிக்கிட்டு தான் வர்றாங்க.ஆனா பாஜக கவலைப்படுற மாதிரியே தெரியலை..தமிழகத்தில் ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே பாஜக வரவில்லை (வாஜ்பாய் அரசு கவிழ்ப்புக்கு பிறகு). மோடி ஒருமுறை மறைந்த முதலைமைச்சர் ஜெயலலிதாவை போயஸ் கார்டன்ல சந்திச்சு கூட்டணி பத்தி பேசுனாரு.ஆனா அம்மையார் ஒத்துக்கலை.ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதும், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளரானதும் நிலைமையே தலைகீழாக மாறிடுச்சி.. ஓபிஎஸ், இபிஎஸ் இணைஞ்சு பாஜகவுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு கூட்டணி வைச்சாங்க.இந்த கூட்டணி 2021 சட்டசபை தேர்தல் வரை தொடர்ந்துச்சு. இந்த…
Read More
கண்ணசைத்த ‘மேலிடம்’! உற்சாக ஓபிஎஸ்! கையை பிசையும் எடப்பாடி ?

கண்ணசைத்த ‘மேலிடம்’! உற்சாக ஓபிஎஸ்! கையை பிசையும் எடப்பாடி ?

கண்ணசைத்த ‘மேலிடம்’! உற்சாக ஓபிஎஸ்! கையை பிசையும் ’சேலம்’அதிமுகவில் நடைபெற்று வரும் அதிகார மோதல்களுக்கு இடையே எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வரும் நிலையில் "மேலிடம்" சில முக்கிய வாக்குறுதிகளை அளித்து இருப்பதாகவும் இதனால் அவரது தரப்பு உற்சாகம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஜுலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை நீக்குவதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிமுகவின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ், அவரது மகன்கள் ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப், அவரது ஆதவாளர்கள் என அடுத்தடுத்து நீக்கப்பட்டனர்.  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேரை.. அதிமுகவில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி! அதிரடி அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் இதனையடுத்து கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிரடி அரசியலை கையில் எடுத்திருக்கிறார் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More
என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ் ?

என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ் ?

OPS ஐ நீக்க முடியுமா முடியாதான்னு ஆளாளுக்கு கேள்வி கேட்டுட்டிருந்தாங்க. நீக்க முடியும்னு காட்டிட்டாருல்ல எடப்பாடி.இந்த நேரத்தில் பழைய சம்பவத்தை கொஞ்சம் பின்னோக்கிப் பாக்கலாம். ‘நான் தான்’ அதிமுகன்னு ஜானகியும், ஜெயலலிதாவும் பிரிந்து நடத்திய யுத்தத்தில் இரட்டை இலை சின்னம் 1988 இறுதியில் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. 1989 தேர்தலில் ஜானகிக்கு இரட்டைப் புறாவும், ஜெயலலிதாவுக்கு சேவலும் சின்னமாக கிடைச்சு, இரண்டு அணிகளும் தேர்தல்ல போட்டியிட்டாங்க. ஜானகி Vs ஜெயலலிதான்னு இருந்தாலும், அது RMV Vs ஜெயலலிதாங்கிற யுத்தமாகத் தான் பார்க்கப்பட்டது. அந்த தேர்தலில் 27 MLA க்களை பெற்று 22.37% வாக்குகளைப் பெற்றிருந்தார் ஜெயலலிதா. ஜானகி அணி 9.19% வாக்குகளையும் 2 தொகுதிகள்லயும் ஜெயிச்சிருந்தாங்க. ஆக, அதிமுகவின் 31% வாக்குகள் இரண்டாக பிரிந்ததாலத் தான் திமுக ஆட்சிக்கு வந்தது இது எல்லோருக்கும் தெரியும்.. ஒரு கட்டத்தில் ஜானகி, தான் பெற்ற 9.19% வாக்குகளுக்கான அணியை அப்படியே ஜெ.விடம் ஒப்படைத்தார். ஜெயலலிதா…
Read More
ஓபிஎஸ் ஐ புறக்கணித்த மோடி.. நிறைவேறாத ஓபிஎஸ் பிளான்?

ஓபிஎஸ் ஐ புறக்கணித்த மோடி.. நிறைவேறாத ஓபிஎஸ் பிளான்?

ஓபிஎஸ் ஐ புறக்கணித்த மோடி.. நிறைவேறாத ஓபிஎஸ் பிளான்? டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை பிரதமர் மோடி சந்திக்க மறுத்துட்டதாக தகவல்கள் வருது. இந்த சம்பவத்ததுக்கு பின்னால வேறு சில காரணங்கள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் சொல்லுது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை எப்படியாவது கைப்பற்றணும்னு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறாரு. வரும் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூட இருக்குது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுது. அதோடு பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடிக்கு கொடுப்பது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்படும்னும்னும் சொல்றாங்க. ஓபிஎஸ்ஸோட கனவு என்னவாகும்? ஓபிஎஸ் நெக்ஸ்ட் மூவ்?  இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் பொதுக்குழு முடிந்ததும் ஓ பன்னீர்செல்வம் வீட்டில் சில மணி நேரங்கள் ஆலோசனை செஞ்சிட்டு  டெல்லிக்கு புறப்பட்டுப் போனாரு. டெல்லிக்கு அவசரமாக விமானத்தில் போனவர் , நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்திக்க…
Read More