அரசியல்

இபிஎஸ், ஒபிஎஸ் யார் கை ஓங்கும்? ஒரு கட்சிக்குள் இரு தலைவர்கள்!இருவருமே ஒருவரை ஒருவர் காலி பண்ணத் துடிக்கிறார்கள்!இருவருக்குமே கட்சி மீதும் அக்கரையில்லை! ஆட்சி நிர்வாகத்திலும் அக்கரையில்லை! இருவருமே பாஜகவின் பாதந்தாங்கிகள்! இருவருமே தலைவனுக்குள்ள எந்தப் பண்பு நலனும்,தலைமை குணமும் அறவே இல்லாதவர்கள் இருவருக்குமே சுய அடையாளம் கிடையாது! இருவருமே பொதுச் சொத்தை சூறையாடுவதில் மன்னர்கள்! இருவருமே சுயநலத்தின் உச்சம்! இருவருமே சசிகலா வந்தால் சரணாகதி அடையக் காத்திருப்பவர்கள்! ஆட்சி அதிகாரம் மட்டுமே இருவரையும் இணைத்துள்ளது! அத்துடன் பாஜகவின் நிர்பந்தத்தால் மட்டுமே இவர்கள் இணைப்பு இறுக்கி பிடித்து காப்பாற்றப்பட்டு வருகிறது! திமுகவை தடுக்க பாஜகவிற்கு கிடைத்த கருவி தான் அதிமுக! பொதுமேடைகளில் பேசுவதில் ஓபிஎஸ் கொஞ்சம் பரவாயில்லை! சுயமாக பேச முடிந்தவர். எடப்பாடி எழுதி கொடுத்ததைக் கூட சரியாக படிக்க முடியாதவர்! ஆனால்,ஆட்களை பணத்தால் வளைத்துப் போடுவதில் இபிஎஸ் கில்லாடி!ஆட்சி அதிகார பலத்தில் தனக்கான செல்வாக்கை அதிகப்படுத்துவதோடு ஓபிஎஸ்சை டம்மியாக்குவதில் குறியாகவுள்ளார்.…
Read More
தமிழ்நாட்டில் வேர்விட்ட தாமரை? விட்டதை பிடிக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.. விரைவில் அதிமுகவில் மாற்றம்?

தமிழ்நாட்டில் வேர்விட்ட தாமரை? விட்டதை பிடிக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.. விரைவில் அதிமுகவில் மாற்றம்?

தமிழ்நாட்டில் வேர்விட்ட தாமரை? விட்டதை பிடிக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.. விரைவில் அதிமுகவில் மாற்றம்? பாராளுமன்ற தேர்தல் முடிவுக்காக தமிழ்நாடே ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கிறது.. ஆனால், அதற்குள் அதிமுகவுக்குள் புதிய மாற்றம் இருக்கும் என்கிறார்கள். இந்த முறை தேமுதிகவுக்கு 5, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கிவிட்டு, மிச்சமுள்ள 32 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக களம் கண்டுள்ளது.. லோக்சபா தேர்தல் 2024 தொகுதிகள் | வேட்பாளர்கள் | தேர்தல் தேதிகள் எரிந்து கிடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்.. சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.. கொதித்து எழுந்த எடப்பாடி விட்டதை பிடிப்பாரா: விட்டதை இந்தமுறையாவது பிடிக்க வேண்டும் என்ற நெருக்கடி அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. தமிழகத்தின் எதிர்க்கட்சி, தாங்கள் மட்டும்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. அதனால்தான், தமிழகமெங்கும் எடப்பாடி பழனிசாமி அனலடிக்கும் பிரச்சாரத்தை தனிநபராகவே மேற்கொண்டிருந்தார்.. அதேபோல, கோவையில் அண்ணாமலை, தேனியில் தினகரன், ராமநாதபுரத்தில்…
Read More
விஜய் அரசியலுக்கு பின்னணியில் பாஜகவா?

விஜய் அரசியலுக்கு பின்னணியில் பாஜகவா?

தமிழக வெற்றிக் கழகமாம்! கட்சியின் பெயரிலேயே ஒரு செய்தி இருக்க வேண்டாமா? விஜய் அரசியலில் இறங்குகிறாரா? அல்லது இறக்கப்படுகிறாரா? ஆனால், அரசியலில் ஈடுபடுவதற்கான அடிப்படைத் தகுதிகள் விஜய்க்கு இருக்கிறதா? அவருடைய வருகையால் பயன் யாருக்கு? பாதிப்புகள் யாருக்கு?அதென்ன தமிழகம்? தமிழ்நாடு என ஏன் குறிப்பிட முடியவில்லை..?குறிப்பிட்டால் உங்க பின்னணியில் இருப்பவர்களுக்கு பிடிக்காதோ..? ஆனால், ஒன்று! இது சரியான தருணம் தான்! அவரே குறிப்பிடுவதைப் போல மக்கள் ஒரு நல்ல அரசியல் கட்சிக்கு காத்திருக்கின்றனர் என்பது உண்மை தான்!விஜய் தன் அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய,…
Read More
அதிமுக காங்கிரஸ் கூட்டணி? அதிர்ச்சியில் பாஜக ?

அதிமுக காங்கிரஸ் கூட்டணி? அதிர்ச்சியில் பாஜக ?

மாறும் கூட்டணி !தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாத்தணும்னு டெல்லிக்கு போய் அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாகவும் அந்த கோரிக்கையை பாஜக தலைமை நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்குது. பாஜக தலைமையின் நடவடிக்கையால் போன வேகத்தில் திரும்பியிருக்கிறாங்க அதிமுக நிர்வாகிகள். எங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லைன்னு அதிமுக தலைவர்களும், அண்ணாமலையும் மாத்தி மாத்தி சொன்னாலும் பிரச்சினை நீரு பூத்த நெருப்பாத்தான் இருக்குது. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில எந்த பிளவும் இல்லைன்னும் அதிமுக நிர்வாகிகளுக்கும் அண்ணாமலைக்கும் இடையில்தான் பிரச்சினைங்கிறது தெளிவாகவே தெரியவந்திருக்குது. நான் தலைவரானதே பாஜகவை ஆட்சியில அமர வைக்கணும்ங்கிறதுக்காகத்தான். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகணும்னு நான் சொல்ல மாட்டேன்னு பகிரங்கமாகவே பேசிக்கிட்டு வர்றார் அண்ணாமலை. அண்ணாமலையைப் பொருத்தவரையில் பலமுறை வெளிப்படையாக "அதிமுக வெற்றி பெறுவதை விட பாஜகவை வளர்ப்பதே எனது கடமைன்னு ஒவ்வொரு மேடையிலும் சொல்லிக்கிட்டு வர்றார். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது லோக்சபா தேர்தலை தனித்தே சந்தித்து பிரம்மாண்ட வெற்றி பெற்றார். சட்டசபை…
Read More
அதிமுக – பாஜக கூட்டணி முறிவு

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு

பாஜக கூட்டணி வேண்டாம். அவர்களோடு கூட்டணி தொடர விரும்பலைன்னு அதிமுக அறிவித்து விட்டது. அதோடு 2024 லோக்சபா தேர்தலில் தனியாக கூட்டணி அமைத்து நிற்க போறோம்ன்னும் அதிமுக அறிவித்து விட்டது.இப்படிப்பட்ட நிலையில் தான் பாஜக – அதிமுக வட்டாரத்தில் விசாரிச்சதுல கூட்டணி உடைஞ்சது உண்மை தான். அதே சமயம் கூட்டணியை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ரகசியமா நடந்து வருதாம்.. முக்கியமாக சில கண்டிஷன்கள் இதற்காக போடப்பட்டு வருது.. அதை செய்தால் பாஜகவோடு கூட்டணியை தொடர ரெடின்னு அதிமுக சொல்லிக்கிட்டு வருதாம். அதாவது அண்ணாமலையை மாற்றுவது, குறைவான தொகுதிகளை லோக்சபா தேர்தலில் கேட்போம்ங்கிற உறுதி தருவது, டிடிவி தினகரன், ஓபன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்க்க மாட்டோம்ங்கிற வாக்குறுதி வாங்குவது போன்ற சில உறுதியை அளித்தால் மட்டுமே கூட்டணி தொடரும். இல்லைன்னா கூட்டணி நடக்க வாய்ப்பே இல்லைன்னு அதிமுக கண்டிஷன்களை போட்டு வருதாம்.இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள், ஆலோசனை எல்லாம் நடந்து கிட்டு தான் இருக்குமாம். இப்படிப்பட்ட…
Read More
பாஜகவின், வியூகத்துக்கும், வேகத்துக்கும்  எடப்பாடி பழனிசாமி ஈடு கொடுப்பாரா?

பாஜகவின், வியூகத்துக்கும், வேகத்துக்கும் எடப்பாடி பழனிசாமி ஈடு கொடுப்பாரா?

பாஜக வைத்த புள்ளியில், கோலம் போட வருகிறார் "பிரபலம்".. குழம்பும் எடப்பாடி பழனிசாமி டீம் பாஜகவின், வியூகத்துக்கும், வேகத்துக்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடு கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த முறை தேர்தலில், தென்மண்டலங்களிலும் காலூன்ற தமிழக பாஜக முயன்று வருகிறது. அதனால்தான் "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற விஷயத்தை தொடர்ந்து முன்னெடுத்து வந்தது.. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாத போக்கை, பாஜகவால் தளர்த்தவே முடியவில்லை.. ஒவ்வொருமுறையும் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோதெல்லாம், டிடிவி தினகரன் + ஓபிஎஸ் + சசிகலா மூன்று பேரையுமே இணைத்து கொள்ள வேண்டும் என்று மேலிட பாஜக வலியுறுத்திய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்தபடியே இருந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடைசியாக கடந்த மாதம் டெல்லி சென்றபோதுகூட, ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக தலைவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.. அப்போதும் எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லையாம்.. பிறகு சீட் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடியிடம், "எம்பி தேர்தலில்,…
Read More
ஸ்டாலின் அதிரடி முடிவு! கூட்டணிக் கட்சிகள் கலக்கம்.? கூட்டணி உடையுமா ?.

ஸ்டாலின் அதிரடி முடிவு! கூட்டணிக் கட்சிகள் கலக்கம்.? கூட்டணி உடையுமா ?.

ஸ்டாலின் அதிரடி முடிவு! கூட்டணிக் கட்சிகள் கலக்கம்.? கூட்டணி உடையுமா ?. வர இருக்கும் எம்பி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட திமுக தயாராகி வருகிறதாம். அதுகுறித்து சில யூகமான தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதனால் தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்த வகையில், தமிழகத்திலும் தேர்தல் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.. இதில் திமுகவை பொறுத்தவரை, மிகப்பெரிய கூட்டணியாக திகழ்ந்து வருகிறது.. ஆனால், வரும் தேர்தலில், மெகா கூட்டணியாக திமுக போட்டியிடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், திமுகவில் மேலும் சில கட்சிகள் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தேமுதிக, மநீம போன்ற கட்சிகள் திமுகவுக்குள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதேசமயம், வரப்போகும் தேர்தலில், பெரும்பான்மையான இடங்களை தன் கையில் வைத்து கொண்டு போட்டியிடவே திமுக நினைக்கிறதாம்.. மேலும், ஒரே தொகுதியை ஒரே கட்சிக்கு, பல வருடங்களாகவே ஒதுக்கி தருவதால், அந்த பகுதிகளில்…
Read More
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்..

லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்..

லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. எவ்வளவு இடங்கள்? India TV கருத்துக்கணிப்பு இப்போது நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் எனறு இந்தியா டிவி -சிஎன்எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டிவி -சிஎன்எஸ் இணைந்து நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்தியா முழுவதும் 23,871 ஆண்கள் மற்றும் 20,677 பெண்கள் என மொத்தம் 44,548 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகளை இந்தியா டிவி வெளியிட்டுள்ளது. இந்த கணிப்புகளின் படி லோக்சபா தேர்தல் இப்போது நடந்தால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எதிர்கட்சி கூட்டணியான இந்தியாவை விட அதிக இடங்களில் முன்னணியில் இருக்கும் என்று இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கான முடிவினை நேற்று வெளியிட்டது. மீதமுள்ள…
Read More

அரசியலில் களமிறங்கும் விஜய்.! 2 வது நாளாக மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை !

அரசியலில் களமிறங்கும் விஜய்.! நடிகர் விஜய் நேற்று முன்தினம் மக்கள் இயக்க நிர்வாகிகளுடனான ஆலோசனையை தொடங்கிய நிலையில், இன்றும் 2 வது நாளாக நிர்வாகிகள் சந்திப்பும் ஆலோசனையும் நடைபெற உள்ளது. தொடர்ந்து பிசியாக நடித்து வரும் நடிகர் விஜய் புஸ்ஸி ஆனந்த் மூலமாக மக்கள் இயக்கத்தின் சார்பாக அரசியலுக்கு காய் நகர்த்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகளை களமிறக்கினார் விஜய். தற்போது லியோ படத்திற்கான படப்பிடிப்பை நிறைவு செய்து இருக்கும் விஜய், வேகமாக அரசியல் நோக்கி நகர்ந்து வருகிறார். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போதே அவர் அம்பேத்கரை வைத்து அரசியலை தொடங்கி இருப்பதாக பேச்சுக்கள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக காயிதே மில்லத், பாவேந்தர்…
Read More
டெல்லி குறி வைக்கும் திமுகவின் அந்த 4 பேர்.!

டெல்லி குறி வைக்கும் திமுகவின் அந்த 4 பேர்.!

டெல்லி மத்திய விசாரணை அமைப்புகள் திமுகவை சேர்ந்த 4 முக்கிய தலைகளை குறி வைத்துள்ளது. மத்திய விசாரணை அமைப்புகளின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் திமுக இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும், வலிமையான எதிர்க்கட்சிகள் இருக்கும் பகுதிகளிலும் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றன. பல்வேறு அமைச்சர்கள், மாநில துணை முதல்வர்கள் கூட மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளனர். வட மாநிலங்களில் இந்த விசாரணைகள் அதிகம் நடந்து வந்த நிலையில் தற்போது தென் மாநிலங்கள் பக்கம் விசாரணை அமைப்புகள் திரும்பி உள்ளன. செந்தில் பாலாஜிக்கு எல்லாம் பக்கமும் எதிர்ப்பு இருக்கு அந்த வகையில் தமிழ்நாடு பக்கமும் தற்போது மத்திய விசாரணை அமைப்புகள் திரும்பி உள்ளன. அதன்படி திமுகவை சேர்ந்த 4 டாப் புள்ளிகள் மத்திய விசாரணை அமைப்புகளால் குறி வைக்கப்பட்டு…
Read More