30
Jun
இபிஎஸ், ஒபிஎஸ் யார் கை ஓங்கும்? ஒரு கட்சிக்குள் இரு தலைவர்கள்!இருவருமே ஒருவரை ஒருவர் காலி பண்ணத் துடிக்கிறார்கள்!இருவருக்குமே கட்சி மீதும் அக்கரையில்லை! ஆட்சி நிர்வாகத்திலும் அக்கரையில்லை! இருவருமே பாஜகவின் பாதந்தாங்கிகள்! இருவருமே தலைவனுக்குள்ள எந்தப் பண்பு நலனும்,தலைமை குணமும் அறவே இல்லாதவர்கள் இருவருக்குமே சுய அடையாளம் கிடையாது! இருவருமே பொதுச் சொத்தை சூறையாடுவதில் மன்னர்கள்! இருவருமே சுயநலத்தின் உச்சம்! இருவருமே சசிகலா வந்தால் சரணாகதி அடையக் காத்திருப்பவர்கள்! ஆட்சி அதிகாரம் மட்டுமே இருவரையும் இணைத்துள்ளது! அத்துடன் பாஜகவின் நிர்பந்தத்தால் மட்டுமே இவர்கள் இணைப்பு இறுக்கி பிடித்து காப்பாற்றப்பட்டு வருகிறது! திமுகவை தடுக்க பாஜகவிற்கு கிடைத்த கருவி தான் அதிமுக! பொதுமேடைகளில் பேசுவதில் ஓபிஎஸ் கொஞ்சம் பரவாயில்லை! சுயமாக பேச முடிந்தவர். எடப்பாடி எழுதி கொடுத்ததைக் கூட சரியாக படிக்க முடியாதவர்! ஆனால்,ஆட்களை பணத்தால் வளைத்துப் போடுவதில் இபிஎஸ் கில்லாடி!ஆட்சி அதிகார பலத்தில் தனக்கான செல்வாக்கை அதிகப்படுத்துவதோடு ஓபிஎஸ்சை டம்மியாக்குவதில் குறியாகவுள்ளார்.…