18
Jun
அதிமுக பொதுச்செயலாளராகும் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ்.,க்கு கல்தாவா? அதிமுக ஒற்றைத் தலைமை யாருங்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்குது. அதிமுக பொதுச்செயலர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி ! மீண்டும் முடங்கிய ஓபிஎஸ்? அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும்ங்கிற கோரிக்கை எழுந்திருக்கிற நிலையில், அதற்கான போட்டியில், எடப்பாடி பழனிசாமி தான் முன்னணியில் இருக்கிறதா தகவல் வெளியாகி இருக்குது. தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் இரட்டைத் தலைமை உருவாச்சு. இரண்டு அணிகளாக பிளவுபட்ட அதிமுகவை, எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒண்ணா இணைச்சாங்க. அதனாலத்தான் இரட்டைத் தலைமை உருவாச்சு. அதிமுக ஒருங்கிணைப்பாளரா, ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக, எடப்பாடி பழனிசாமியும் நியமனம் செய்யும் வகையில், கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதிமுக தொடங்கியதில் இருந்தே ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்கி வந்த ரத்தத்தின் ரத்தங்கள், இரட்டைத் தலைமை உருவானதால், எந்தப் பக்கம் போறதுன்னுத் தெரியாம முழி பிதுங்கி நின்னாங்க..இன்னமும்…
