தேய்ந்து போன தேமுதிக…

தேய்ந்து போன தேமுதிக… எதனால் கட்சி காணாமப் போச்சி.விஜயகாந்த் என்ன தப்பு பண்ணுனாருன்னு பாக்கலாம்.

தமிழ் சினிமா உலகின் கேப்டன் என்ற அடையாளத்துடன் அரசியலில் நுழைந்த விஜயகாந்த், தமிழக அரசியலின் மாற்று சக்தியாக அடையாளம் காட்டிய தேமுதிக, இன்னைக்கு மெல்ல, மெல்ல தேய்ந்து போய் உள்ளதற்கான காரணங்களப் பத்தி பாக்கலாம்.

தமிழகத்தின் மாற்று கட்சியாக மாற்று சக்தியாக தேமுதிகவை அடையாளம்காட்டினாரு விஜயகாந்த். ஆனா இன்னைக்கு மெல்ல மெல்ல தேய்ந்து போய் நிற்குது தேமுதிக.
தேமுதிகவின் இந்த நிலைக்கு விஜயகாந்த் செய்த தவறுகளைப் பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் கேப்டன் என்ற அடையாளத்துடன் அரசியலுக்கு வந்த விஜயகாந்த், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கும் சவால்விடும் விதத்தில தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்ற பெயரில் 2005 செப்டம்பர் 14 ஆம் தேதி புதிய கட்சியை தொடங்கினாரு.

கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே வந்த 2006 இல் தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது தேமுதிக. விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். வன்னியர்கள்அதிகம் உள்ள விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் ஜெயிச்சத எல்லாரும் ஆச்சரியமா பார்த்தாங்க. ஆனா அவர் கட்சியை சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் யாரும் அந்த தேர்தலில் வெற்றி பெறலைன்னாலும், ஒட்டுமொத்தமாக 10% வரை வாக்குகளை பெற்று அனைவரும் திரும்பி பார்க்க வைத்தது தேமுதிக. 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் கிட்டதட்ட 9-10% வாக்குகளை பெற்றது தேமுதிக. 2006, 2009 பொதுத் தேர்தல்களில் வாக்குகளை அள்ளி அசத்திய புது கட்சியான தேமுதிகவுக்கு 2011 சட்டமன்ற தேர்தலில் இரண்டு வாய்ப்புகள் காத்திருந்தது. தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைக்க கம்யூனிஸ்ட்டுகள் முயற்சிகளை முன்னெடுத்தாங்க.. அதேசமயம் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 இடங்களை ஒதுக்க ஜெயலலிதா சம்மதம் தெரிவிச்சிருந்தாரு.

ஆனா விஜயகாந்த் என்ன பண்ணுனாருன்னா கம்யூனிஸ்ட்டுகளின் கோரி்க்கைகளை புறக்கணிச்சிட்டு, சட்ட அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். தேமுதிகவும் போட்டியிட்ட 41 இடங்களில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுகவையே பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழகத்தின் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. விஜயகாந்தும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார்.

2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுக் கொண்டிருந்த வைகோவுக்கு, 7 இடங்களுக்கு மேல் தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று கறாராக கூறிய ஜெயலலிதா, தேமுதிகவுக்கு 41 இடங்களை அள்ளிக் கொடுத்தாரு

சட்டமன்றத்தில் மோதல்: அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் பஸ் கட்டண உயர்வு, பால் விலை ஏற்றம் என தமிழக மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் முதல்வர் ஜெயலலிதா. எதிர்க்கட்சியான தங்களை ஆலோசிக்காமல் அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளில் எப்படி விலையை ஏற்றலாம்னு சட்டமன்றத்தில் விஜயகாந்த் உரத்த குரலில் கேட்கவே, ஜெயலலிதாவுக்கும், அவருக்கும் இடையே உரசல் தொடங்கியது. இந்த நிகழ்வின் எதிர்விளைவாக தேமுதிகவில் 10க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி அவர்களை தனித்து செயல்பட வைச்சாருன்னு ஜெயலலிதா மீது குற்றம்சாட்டப்பட்டது.

2011 இல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக, 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்தது. பாமக, மதிமுக அங்கம் வகித்த இந்த கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியிலும் வெற்றிப் பெறவில்லை என்றாலும் ஒட்டுமொத்தமாக இக்கூட்டணி நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றது.

மக்கள் நலக் கூட்டணி: 2011 இல் அதிமுக, 2014 இல் பாஜக என வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்த தேமுதிக 2016 இல் தமது தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்கியது. மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகித்த மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லிஜயகாந்த் அறிவிக்கப்பட்டு, தேமுதிக 104 தொகுதிகளில் களம் கண்டது. ஆனால் விஜயகாந்த் உள்ளிட்ட அக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவியதுடன் தேமுதிகவின் வாக்கு வங்கியும் 2.4% ஆக சரிந்தது.

திரையிலும் சரி… நிஜத்திலும் சரி… எப்பவும் விஜயகாந்த்; துணிச்சலாக பேசினாலும் அரசியல்ல நெளிவு சுளிவு தெரியாததுனால அரசியல்ல ஜொலிக்கமுடியாம முடங்கிப் போய்ட்டாரு.திராவிடக் கட்சிகள் மேல் சலிப்போட இருந்த மக்களுக்கு தேமுதிக ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறைந்ததையடுத்து, அதிமுக -பாஜக- பாமக அங்கம் வகித்த தேசிய ஜனநாயக கூட்டணியில் 2019 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த தேமுதிகவுக்கு அந்த கூட்டணியில் வெறும் நான்கு தொகுதிகளே ஒதுக்கப்பட்டுச்சு.. ஆனால் நான்கிலும் அக்கட்சி தோல்வியையே தழுவியது.

இதனால் தேமுதிக தனித்துவிடப்பட்டது: 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படலை அதனால் , கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அறிவித்தது. வேறு வழியின்றி அமமுக கூட்டணியில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

தேமுதிக தேய்ந்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள் சொல்லப்படுது. இப்படி தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தியாக உருவெடுத்த தேமுதிக, இன்னைக்கு சீண்டுவார் இல்லாம தேய்ஞ்சு போனதுக்கு, 2011 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களை துணையாக கொண்டு தேமுதிக தலைமையில் மூன்றாவது அணியை அமைக்கும் வாய்ப்பை நழுவவிட்டு, அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைச்சது தான் முதல் காரணமாக முன்வைக்கிறாங்க அரசியல் நோக்கர்கள்.

இரண்டாவதாக, கூட்டணி கட்சிங்கிற முறையில் அதிமுகவின் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவுடன் சமூக உறவை கடைப்பிடிக்காமல் அவருடன் மோதல் போக்கை விஜயகாந்த் கடைப்பிடிச்சது அவருக்கு அரசியல் சாணக்கியத்தனம் இல்லை என்பதை காட்டியதுடன், தேமுதிக தேய்வுக்கும் ஒரு காரணமாகவும் சொல்லப்படுது.

அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டவுடனே, கட்சி நிர்வாகத்தை இரண்டாம்கட்ட தலைவர்களிடம் ஒப்படைக்காம தமது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்ளிட்ட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்த விஜயகாந்த் அனுமதிச்சதால் தேமுதிகவுக்கும் குடும்ப கட்சிங்கிற நெகட்டிவ் இமேஜ் பொதுமக்கள் மத்தியில் வந்துடுச்சு.

இந்த மூன்று தவறுகளால்தான் தேமுதிக இன்னைக்கு தேய்ந்த நிலைக்கு சென்றுவிட்டதாக கூறும் அரசியல் விமர்சகர்களிடம், விஜயகாந்தின் 70 ஆவது பிறந்த நாளான இன்று முதலாவது தேமுதிக புத்துயிர் பெறுமான்னு கேட்டால் அது இனி கஷ்டம்தான் என்ற பதில் தான் அவர்களிடம் இருந்து வருகிறது. தேமுதிக தேறுமா தேஞ்சே போய்ருமாங்கிறது பிரேமலதா கைல தான் இருக்குது.

Related posts: