08
Apr
எப்பல்லாம் தேர்தல் வருதோ ஊடகங்கள், பத்திரிகைகள், தனியார் நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது . உண்மையில் , கருத் துக் கணிப்பு என்பது புள்ளியியல் சார்ந்த அறிவியல் பூர்வமான ஆய்வு முறையாகும் , தேர்தலில் கருத்துக் கணிப்பு வெளியிடுவதுங்கிற வழக்கம் , 1824 - இல் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத் தேர்தலில் துவங்கியது . அத்தேர்தலுக்கு முன்னர் மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்புகள் தேர்தலில் முழுமையாக எதிரொலித்ததன் விளைவு , தேர்தல் முறையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக மக்களின் கருத்தை அறிவது வர்த்தகம் , அரசியல் , அரசு நிர்வாகத்தில் பெரும் பயன்களை அளிக்கும் , புள்ளியியல் முறையில் மாதிரி ( சாம்பிள் ) அளவுகள் முக்கியமானவை . கருத்துக் கணிப்பும் அந்த மாதிரிகள் பெறப்படும் இடங்களும் பரந்து இருக்க வேண்டும் . மக்களிடம் நேரடி சந்திப்பு , படிவம் மூலமாகக் கருத்தறிதல் , இணையம்…
