22
Apr
சேலத்தில் உள்ள இல்லம் மற்றும் எடப்பாடியில் உள்ள சொந்த கிராமத்தில் ஆலோசனை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக பிஸியாக இருந்து வருகிறார். அமைச்சர்கள், அதிமுக முன்னணி நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆலோசனைகளின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பதிலும், தான் முதல்வர் பதவியேற்பதிலும் எந்த மாற்றமும் இருக்காது என்று திடமான மனநிலையிலேயே பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமியை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்ந்து கலந்துரையாடி வருவதில், கொங்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிமுக முன்னணி நிர்வாகிகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களோ, அதிமுக முன்னணி நிர்வாகிகளோ முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, சேலத்திற்கே சென்று நேரில் சந்திக்கவே ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் கசிய விடப்படுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மட்டுமே சேலம் சென்று முதல்வரைச் சந்தித்து பேசிவிட்டு திரும்பியுள்ளார். இப்படி…
