29
Mar
அ.தி.மு.க., அமைச்சர்கள் ஒருத்தர் கூட வெற்றி பெறக்கூடாது' என்பதில், ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். குறிப்பாக, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ராஜேந்திர பாலாஜி, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரை தோற்கடிக்க என்ன வேண்டுமானாலும்செய்யலாம் என, அறிவாலயத்தில் இருந்து கீழ் மட்டம் வரை தகவல் போயிருக்கிறது. முந்தைய தேர்தல்களில், இப்படி குறி வைத்து தாக்கும் வியூகங்கள் இருந்ததில்லை. இப்போது, தி.மு.க., அந்த வழியில் செல்வதைக் கண்டு, முதல்வர், - துணை முதல்வருக்கு கடும் கோபம். எனவே, தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை வீழ்த்த, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என, கட்சி நிர்வாகிகளுக்கு, அவர்கள் பச்சைக்கொடி காட்டினர்.இதையடுத்து, அடையாளம் காட்டப்பட்ட தொகுதிகளில், தி.மு.க.,வினர் போலவே கரை வேட்டி கட்டி, அ.தி.மு.க.,வினர் தேர்தல் வேலையில் கலந்து, முக்கிய தகவல்கள் அனைத்தையும் திரட்டி, மேலே அனுப்பி வருகின்றனர். உளவுத் துறைக்கு தகவல் அவ்வாறு, திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து மேலிடத்துக்கு, 27ம் தேதி காலை…
