09
Jul
தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதை அடுத்து கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலையை நியமித்து பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அண்ணாமலையின் அப்பா பெயர் குப்புசாமி. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்திலுள்ள சொக்கம்பட்டி கிராமம்தான் அண்ணாமலையின் பூர்வீகம். இப்போதும் அங்கே 72 ஏக்கர் நிலமிருக்கிறது.விவசாயத்தில் அதிக ஈடுபாடு உடையவர். அப்பா பத்தாவது வரை படித்தவர். அம்மா ஆறாவது வரை படித்தவர். விவசாயக் குடும்பம். சின்ன வயதில் இருந்து கல்வி குறித்து மிகுந்த முயற்சி எடுத்தார்கள். கரூரில் ஏழாவது வகுப்பு வரை படித்தார். பரமத்தி வேலூரில் ஒரு பள்ளியில் பிளஸ் 2 வரை படித்து முடித்து விட்டு கோவையிலுள்ள பிரபல கல்வி நிறுவனம் ஒன்றில் அண்ணாமலை தனது…
