23
Jun
தேர்தல் பணம் 4 கோடி ரூபாயில் வீடு கட்டும் ஹெச்.ராஜா ? காரைக்குடி நகர பா.ஜ.க தலைவர் குற்றச்சாட்டு ! தேர்தல் செலவுக்காகக் கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை, பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஏமாற்றிவிட்டார் என அக்கட்சியின் நகரத் தலைவராக இருந்த ஒருவரே குற்றச்சாட்டை எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க முன்னணித் தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியடைந்தார். சி.ஏ.ஏ போராட்டம் உச்சத்தில் இருந்தபோது கார்த்தி சிதம்பரத்துக்கும் ஹெச்.ராஜாவுக்கும் இடையே கருத்து மோதல் உருவானது. கார்த்தி சிதம்பரம் விரைவில் கைதாகப்போகிறார் என ஆவேசமாகப் பொங்கினார் ஹெச்.ராஜா. அதற்கு பதிலடி கொடுத்த கார்த்தி சிதம்பரம், ``3,32,244 என்கிற எண் ராஜாவுக்கு நினைவிருக்கிறதா?” என்று கிண்டலடித்தார். அதாவது, தன்னிடம் 3,32,244 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜா தோல்வியடைந்ததைத்தான் குறிப்பிட்டுக் கிண்டலடித்தார் கார்த்தி சிதம்பரம். அப்போதே, மீண்டும் ஹெச்.ராஜாவுக்கு தேர்தலில்…
