அரசியல்

திட்டம்போட்டு காய் நகர்த்தும் சசிகலா! தன்னையும் கட்சியையும் காப்பாற்ற தினகரனுடன் கைக்கோர்க்கத் தயாராகும் எடப்பாடி பழனிச்சாமி !

திட்டம்போட்டு காய் நகர்த்தும் சசிகலா! தன்னையும் கட்சியையும் காப்பாற்ற தினகரனுடன் கைக்கோர்க்கத் தயாராகும் எடப்பாடி பழனிச்சாமி !

திட்டம்போட்டு காய் நகர்த்தும் சசிகலா! தன்னையும் கட்சியையும் காப்பாற்ற தினகரனுடன் கைக்கோர்க்கத் தயாராகும் எடப்பாடி பழனிச்சாமி ! சிறையிலிருந்து சசிகலா வெளியே வரும்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. கிட்டத்தட்ட 70 எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவை சந்திப்பார்கள் என அப்போது சசிகலா வட்டாரங்கள் சொன்னது. அந்த சமயத்தில் எல்லோரையும் நரேந்திர மோடியை காண்பித்து எடப்பாடி அமைதியாக்கிவிட்டார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு சசிகலா அமைதியாக இருக்கவில்லை. அதன் விளைவு தான், சமீபத்தில் நடந்த அ.தி.மு.க மா.செ.க்கள் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம். சசிகலா வெறுமனே அ.தி.மு.க., உடன்பிறப்புக்களிடம் செல்போனில் பேசவில்லை. ஒரு பெரிய லிஸ்டே எடுத்துவைத்து வேலைசெய்துவருகிறார். அ.தி.மு.க.வின் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய மா.செ.க்கள், முன்னாள் மா.செ.க்கள், நகரம், ஒன்றியம் என அனைவரையும் சசிகலா சார்பில் அவரது நலன் விரும்பிகள் தொடர்புகொண்டு பேசிவருகிறார்கள். அவர்களது தேவைகளுக்கேற்றாற்போல் கரன்சி விநியோகமும் நடை பெறுகிறது. நடராஜனின் சகோதரர்களான பழனிவேலுவும் ராமச்சந்திரனும் இதனை கவனிப்பதுதான் அ.தி.மு.க.வில் ஹாட் டாபிக்கான பேச்சாக…
Read More
கொங்கு மண்டலத்தில் திமுகவைப் பலப்படுத்த கட்சி தலைமை பல்வேறு நடவடிக்கை !

கொங்கு மண்டலத்தில் திமுகவைப் பலப்படுத்த கட்சி தலைமை பல்வேறு நடவடிக்கை !

கொங்கு மண்டலம் அல்லது மேற்கு மாவட்டங்கள் திமுகவுக்கு எப்போதும் சவாலாகவே இருந்து வருகிறது. இந்த கொங்கு மண்டலத்தில் திமுகவைப் பலப்படுத்த கட்சி தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொங்கு மண்டலம் எப்போதும்போல் அதிமுகவின் கோட்டை என இந்த 2021 சட்டமன்றத் தேர்தலும் நிரூபித்துள்ளது. இங்கு 50 தொகுதியில் 33 இடங்களில் அதிமுக வென்றுள்ளது. இந்த முறையும் திமுகவால் இங்கு பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. 50 தொகுதிகளில், 17 இடங்களில் மட்டுமே திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுகவுக்கு இந்த பகுதியில் கூடுதல் சவால் அளிக்கும் வகையில், கொங்கு பகுதியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக இருந்தார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய ஏழு மாவட்டங்களில் கரூரில் மட்டுமே திமுக முழுமையான வெற்றியைப் பெற்றது. அங்குள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. அதேநேரம் கோயம்புத்தூரில்…
Read More
அரசியல் வெளிச்சத்திற்கு வந்த ஸ்டாலினின் மனசாட்சி சபரீசன் !

அரசியல் வெளிச்சத்திற்கு வந்த ஸ்டாலினின் மனசாட்சி சபரீசன் !

மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கடந்த வாரம் பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மட்டும் அல்லாமல் பத்திரிகையாளர்களும் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர். கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் தான் திமுகவின் பவர் சென்டர் வட்டாரத்தில் முதன் முதலாக சபரீசன் பெயர் அடிபடத் தொடங்கியது. மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கடந்த வாரம் பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மட்டும் அல்லாமல் பத்திரிகையாளர்களும் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர். அத்தோடு சபரீசனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த காட்சிகளையும் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் திமுக முன்னணி நிர்வாகிகள் வெளியிட்டிருந்தனர். கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை திரைமறைவு அரசியலில் தான் சபரீசன் தீவிரம் காட்டி வந்தார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு சபரீசன் மாநிலங்களவை எம்பி ஆவார் என்று கூறினார்கள். ஆனால் சபரீசன் பிரசாந்த்…
Read More

அதிமுக அடிமடியில் கை வைக்கும் பாஜக.. அமைதி காக்கும் தலைவர்கள்..

அதிமுக அடிமடியில் கை வைக்கும் பாஜக.. அமைதி காக்கும் தலைவர்கள்.. அப்செட் தொண்டர்கள்.. என்ன நடக்கிறது? தமிழக அரசியலில் திமுகவின் நேரடி எதிரி பாஜகதான் என்று சில பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். இதற்கு அதிமுக தலைமை பதில் அளிக்காததால் அப்செட்டில் உள்ளார்கள் தொண்டர்கள். அதிமுக கொள்கையின் அடி மடியில், கூட்டணி கட்சியான பாஜக கை வைத்து விட்டது என்று அதிமுக தொண்டர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் புலம்புவதை கவனிக்க முடிகிறது. ஒரு கட்சியையும் விட்டு வைக்காத நமக்கே அதிமுக தலைகள் தண்ணி காட்டுறாங்களே... ஏமாந்து போன பங்காளி கட்சி இரு கட்சிகளின் ஆட்சி 1967ம் ஆண்டு காங்கிரசை தோற்கடித்து முதல் முறையாக திமுக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தது. அது முதல் இதுவரை தேசிய கட்சி எதுவும் தமிழ்நாட்டை ஆள முடிந்தது இல்லை. திமுகவிலிருந்து எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை உருவாக்கியது முதல் இவ்விரு கட்சிகளும்தான் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து…
Read More
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு ! என்ன காரணம்!? அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கரின் வீடு மட்டும் அலுவலகங்களில்  தீவிரமான ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த உள்ள நிலையில், முதல் ஆளாக எம். ஆர் விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்று விவரம் வெளியாகி உள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அவர்களுக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சாட்டையை சுழற்ற தொடங்கி உள்ளதாகச் சொல்றாங்க. கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு முறைகேடுகளுக்கு, ஒப்பந்தங்களுக்கு எதிரான விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. அதில் முதல் நபராக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்  எம். ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. மொத்தம் 33 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது.  கரூரில் உள்ள இவரின் வீடு, அலுவலகம், இவருக்கு சொந்தமான இடங்கள், சென்னையில்…
Read More
திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா?

திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா?

நம்ம தமிழ்நாட்டின் பொருளாதாரமே அடிமட்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை விவரமாக சொல்ல வேண்டாம் , இப்படி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்களைப் போலவே, அரசும் தவித்து வரும் வேளையில், வருமானத்தை ஈட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மது, லாட்டரி, கனிமவளம் ஆகியவைகளை கையிலெடுத்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் சொல்றாங்க முதலாவதாக அரசின் மிக முக்கிய வருவாயாக இருப்பது மதுபானம் தான். கொரோனா காலகட்டத்திலும் அப்போ அப்போ திறக்கப்பட்ட டாஸ்மாக்கின் மூலம் ரூ.300 கோடி ரூ.400 கோடி என வருவாயை ஈட்டியது அரசு. ஆக மதுபானம் என்பது மாநில வருவாயை அதிகரிக்க முதல் வழி என்பது டாஸ்மாக் மூலம் தான். 1983-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது தான் இந்த Tamil Nadu State Marketing Corporation Limited சுருக்கமாக டாஸ்மாக். அரசால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனத்தின் மூலம் கிடைத்த வருவாயால், கடந்த 10 ஆண்டுகளில் டாஸ்மாக் அரசின் வருவாய் மூலங்களில் முக்கியமானதாகிவிட்டது. தமிழ்நாட்டில்…
Read More
கொங்கு நாடு யாருக்கு ? திமுகவுடன் முட்டி மோதும் பாஜக ? என்ன செய்யப் போகிறது அதிமுக ?

கொங்கு நாடு யாருக்கு ? திமுகவுடன் முட்டி மோதும் பாஜக ? என்ன செய்யப் போகிறது அதிமுக ?

கொங்கு நாடு யாருக்கு ? திமுகவுடன் முட்டி மோதும் பாஜக ? என்ன செய்யப் போகிறது அதிமுக ? பாமக.வும் களத்தில் இறங்கி விட்டது ! கொங்கு நாடு என்று உச்சரிக்கப்பட்ட நாள் முதலாக, இந்துமத ஆதரவாளர்கள் கூட்டம் உற்சாகமாக வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள். நீலகிரி முதல் கிருஷ்ணகிரி வரையிலான கரூரை உள்ளடக்கிய 9 மாவட்டங்களில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மொத்த தொகுதிகளில் நான்கில் ஒரு பங்கு அடங்கியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக.வை விட அதிகமான தொகுதிகளில் அதிமுக கூட்டணிதான் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த 9 மாவட்டங்களிலும் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சமுதாயங்கள், கொங்கு மற்றும் வன்னியர்கள் மட்டுமே. குறிப்பா சொல்லணும்னா என்றால், கோவையில் உள்ள 10 தொகுதிகள் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகள் ஆக மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 20 இடங்களில் அமோக வெற்றிப் பெற்றிருக்கிறது. கொங்கு மண்டலமாக அடையாளப்படுத்தப்படும் இந்த…
Read More
நல்ல வாய்ப்பை நழுவ விடுகிறது பா.ஜ.,

நல்ல வாய்ப்பை நழுவ விடுகிறது பா.ஜ.,

கடந்த, 2016 தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட்டது. அப்போது, அ.தி.மு.க., -- தி.மு.க., மக்கள் நல கூட்டணி, பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் இருந்தன. எனினும், பா.ஜ., ஆறு தொகுதிகளில், 22 சதவீத ஓட்டுகளும், 14 தொகுதிகளில், 10 சதவீத ஓட்டுகளும் பெற்றது. அது செய்த ஒரே தவறு, 181 இடங்களில் போட்டியிட்டது, அதனால், 2.8 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சி என்ற பெயர் கிடைத்தது. எல். முருகன் தலைமை ஏற்ற பிறகும், அவர் வேல் யாத்திரை சென்ற பின்பும், பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகரித்து இருப்பதாகவே கள தகவல்கள் கூறுகின்றன. முக்கியமாக, கொங்கு மண்டலம், நாகை பகுதிகளில் அது, 25 சதவீத ஓட்டுகள் பெறும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது. ஆனால், சரியான திட்டமிடலும் இல்லை; முறையான பிரசாரமும் செய்யவில்லை என்பதால், பா.ஜ.,வின் உண்மையான வலிமை வெளியே தெரியாமல் இருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின், பா.ஜ., தன்னை நிலைநிறுத்தும்…
Read More
உள்ளாட்சி அமைப்புகள் கூண்டோடு கலைப்பு..!மீண்டும் புதுத் தேர்தல்..!

உள்ளாட்சி அமைப்புகள் கூண்டோடு கலைப்பு..!மீண்டும் புதுத் தேர்தல்..!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, வாக்கு சீட்டுகளை அச்சடிப்பது, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக இப்போதே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தாலும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. ஆனால் வரும் ஆக்ஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த தேர்தலில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.இதில் 4 வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவர்கள், தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தனர். இதே போல் ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய…
Read More
யூனியன் பிரதேசமாகப் போகும் கொங்கு நாட்டின் முதலமைச்சராகிறார் எடப்பாடியார் !

யூனியன் பிரதேசமாகப் போகும் கொங்கு நாட்டின் முதலமைச்சராகிறார் எடப்பாடியார் !

தனி யூனியன் பிரதேசமாகிறதா கொங்கு நாடு! மத்திய அரசை, 'ஒன்றிய அரசுன்னு', தி.மு.க.,வினர் சொல்லிட்டு வர்றதால கடும் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக சொல்றாங்க. தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை, 'கொங்கு நாடு' என்ற பெயரில், தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், அரசியல் களம் மந்த நிலையை நோக்கிச் செல்லும் என அனைவரும் நினைத்த நேரத்தில், பா.ஜ., மேலிடத்தின் அடுத்தடுத்த நகர்வுகள், அதை சூடு பிடிக்க வைத்துள்ளது . அதுக்கு என்ன காரணம்னா புதிதாக பதவியேற்ற தமிழக அரசு, ஜி.எஸ்.டி., கூட்டத்தில் எதிர்ப்பு, 'நீட்' தேர்வின் தாக்கத்தை ஆய்வு செய்ய குழு அமைத்தது என, மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருது. இதன் உச்சகட்டமாக தமிழக சட்டசபையில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை களங்கப்படுத்தி, கொங்கு…
Read More