அரசியல்

சயானுக்கு 20 கோடி கொடுத்த காண்ட்ராக்டர் யார்! அவருக்கு ‘பவர்’ கொடுக்கச் சொன்னது யார் ?

சயானுக்கு 20 கோடி கொடுத்த காண்ட்ராக்டர் யார்! அவருக்கு ‘பவர்’ கொடுக்கச் சொன்னது யார் ?

 ஜெயலலிதா ‘வசித்தது’ போயஸ் கார்டன் வேதா இல்லம்னா, அவர் ‘வாழ்ந்தது’ கொடநாடு எஸ்டேட் பங்களாவில் தான். இப்போதும் கூட அவரின் ஆன்மா, கொடநாடு எஸ்டேட்டின் மலை முகடுகளிலும், வெளிர் பச்சை நிறத்தின் தேயிலைத் துளிர் இலைகளிலும் மெதுவாக நகரும் மேகக்கூட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அங்கே நிகழ்ந்த அந்த அசம்பாவிதத்தை நினைத்து, மழையோடு மழையாக தன் கண்ணீரையும் சிந்திக் கொண்டிருக்கலாம். என்றைக்கோ எப்படியோ எப்ஃஐஆர் போடப்பட்டு, கிட்டத்தட்ட இறுதிச்சடங்கே முடிக்கப்பட்டு விட்ட கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் உயிர் பெற வைத்து உண்மையை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருவதும் அவரின் ஆன்மாவாகக் கூட இருக்கலாம். ஜெயலலிதாவை தன் இதயத்தில் ஏந்தி வாழும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டனின் உள்ளுணர்வுக்குள்ளும் இந்த நினைவுகள்தான் இப்போது ஓடிக் கொண்டிருக்குது.. அவர்கள் உட்பட எட்டுக்கோடி தமிழர்களுக்கும், இந்த வழக்கில் எல்லா உண்மைகளும் வெளி வர வேண்டும் என்பது தான் வேண்டுதலும், ஏக்கங்கள் நிறைந்த எதிர்பார்ப்புமாக இருக்கிறது. எதிர்க்கட்சி…
Read More
கேடி ராகவன் பாலியல் விவகாரம்..! கமலாலயத்தை உலுக்கும் உள்ளடி வேலைகள்..! பின்னணி என்ன?

கேடி ராகவன் பாலியல் விவகாரம்..! கமலாலயத்தை உலுக்கும் உள்ளடி வேலைகள்..! பின்னணி என்ன?

அண்ணாமலைக்கு எதிராக கமலாலயத்தில் ஒரு டீம் உருவானதாகவும், அந்த டீம் கே.டி.ராகவன் சொல்வதை கேட்டு நடந்து வந்ததாகவும் சொல்றாங்க. அதோட ராகவன் டீம் அண்ணாமலைக்கு எதிரா தனது ஊடகத் தொடர்புகளை பயன்படுத்த ஆரம்பித்தது தான் சிக்கலுக்கு மிக முக்கிய காரணம்ங்கிறாங்க. கோஷ்டி மோதலையும் காங்கிரசையும் எப்படி பிரித்து பார்க்க முடியாதோ அதே போலதான் தமிழக பாஜகவையும் பாலியல் சில்மிஷங்களையும் பிரித்து பார்க்க முடியாதுங்கிறாங்க பாஜகவின் இளம் தலைமுறை நிர்வாகிகள் சிலர். கடந்த ஜூன் மாதமே தினமலர் இந்த விவகாரம் தொடர்பாக எழுதியிருந்தது. தமிழக பாஜக நிர்வாகிகள் மீது சுமார் 130 பாலியல் புகார்கள் வரை நிலுவையில் உள்ளதாகவும் இவற்றை விசாரிக்க விரைவில் விஷாகா குழு அமைக்கப்படலாம் என்று அப்போதே தினமலர் தெரிவித்திருந்தது. இப்போ தினமலர் எழுதுனது போலவே, தமிழக பாஜக சார்பில் விஷாகா குழு அமைக்கப்பட்டு மலர்க்கொடி எனும் பாஜக மாநிலச் செயலாளர் குழுவிற்கு தலைவராக்கப்பட்டிருக்காரு. இதன் பின்னணி குறித்து விசாரிச்சப்போ…
Read More
தலைவர் பதவிக்கு அன்ஃபிட்..! அண்ணாமலைக்கு எதிராக டெல்லிக்கு பறந்த ரிப்போர்ட்..!

தலைவர் பதவிக்கு அன்ஃபிட்..! அண்ணாமலைக்கு எதிராக டெல்லிக்கு பறந்த ரிப்போர்ட்..!

அதாவது எந்த நேரத்தில் தனது பாஜக தலைவர் பதவி பறிக்கப்படலாம் என்பதை அண்ணாமலை உணர்ந்து வைத்திருப்பதாகவும் அதனால் தான் எப்போதும் தான் சாதாரண தொண்டன் என அவர் ட்வீட் போட்டிருக்கிறார் என்றும் பேச்சு அடிபடுகிறது. கே.டி.ராகவன் பாலியல் வீடியோ வெளிப்படுத்தாத தாக்கத்தை அண்ணாமலை – மதன் தொடர்புடைய  ஆடியோக்கள் ஏற்படுத்திவிட்டன என்றே சொல்ல வேண்டும். கே.டி.ராகவன் பாஜக பெண் நிர்வாகியிடம் செல்போன் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய வீடியோ வெளியான போதே இதன் பின்னணியில் அண்ணாமலை இருப்பதை ஆசியாநெட் தமிழ் கூறியிருந்தது. அதிலும் அண்ணாமலை நினைத்திருந்தால் இந்த விஷயத்தை காதும் காதும் வைத்தது போல் முடித்திருக்கலாம், ஆனால் இந்த வீடியோவை மதன் வெளியிட காரணமாக அண்ணாமலையே இருந்திருக்கலாம் என்று கூறியிருந்தோம். தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் தான் அண்ணாமலை – மதன் ஆடியோக்கள் வெளியாகியுள்ளது. அதிலும் மதன் – அண்ணாமலை ஆடியோவின் போது இரண்டு முக்கிய விஷயங்களை அண்ணாமலை கூறியுள்ளது தெரிகிறது.…
Read More
கோபத்தில் பாஜக..! காங்கிரஸ் நிழலில் சூர்யா குடும்பம்..! கை கொடுப்பாரா ராகுல்? சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் தமிழ்மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். தலையில் காந்தி குல்லாவுடன் கதர் ஆடையில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.மத்திய அரசுக்கு எதிராக கடந்த சில வருடங்களாக பேசி வருவதோடு செயல்பட்டும் வரும் சூர்யா குடும்பம் மீது பாஜக கோபத்தில் உள்ள நிலையில் திடீரென சிவக்குமார் காங்கிரஸ் நிழலில் ஒதுங்கியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் தமிழ்மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். தலையில் காந்தி குல்லாவுடன் கதர் ஆடையில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நடிகர் சிவக்குமார் இதுவரை அரசியல்…
Read More

ஸ்கெட்ச் போட்டு கே.டி.ராகவனை காலி பண்ணிய நிர்வாகிகள்.? அடுத்த 15 பேருக்கு ஆப்பு ரெடி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் 45 வயதான கேடி ராகவன். வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்தவர், தமிழக பாஜகவில் மாநிலப் பொதுச் செயலாளராக இருக்கிறார்1999ம் வருஷம் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, 2006ம் வருஷம் காஞ்சிபுரம் தொகுதி, 2011ம் வருஷம் செங்கல்பட்டு தொகுதி மற்றும் 2016ம் வருஷம் கொளத்துார் சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவர். இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்தில் பணியாற்றுபவரும், பாஜக உறுப்பினருமான மதன் ரவிச்சந்திரன்ங்கிறவர் செவ்வாய்க்கிழமைஅண்ணைக்கி அவரோட யூடியூப் சேனலில் கேடி ராகவன் பற்றிய சர்ச்சைக்குரி்ய வீடியோ ஒண்ணை வெளியிட்டாரு, அதில், கே.டி ராகவன் பாஜகவின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் செல்போனில் வீடீயோ காலில் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுருக்கு சட்டையின்றி வீட்டில் கேடி ராகவன் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கு. வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், பாஜகவின்…
Read More
திமுகவுக்கு பல வழியில பாஜக செக் வைத்துள்ளது ?

திமுகவுக்கு பல வழியில பாஜக செக் வைத்துள்ளது ?

திமுகவுக்கு பல வழியில பாஜக செக் வைத்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதுன்னு சொல்றாங்க.. விரைவில் அடுத்தடுத்த தேர்தல்கள் நடக்க இருக்கிற நிலையில், பாஜகவின் இந்த அதிரடிகள் தமிழக அரசியலை பரபரப்பாக்கிட்டு வருது. இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், இரண்டு கட்சித்தலைவர்களும் பாசமா இருக்காங்களாமங்கிறது உறுதியாக தெரியலை.. இதுக்கிடையில எல்.முருகனுக்கு ராஜ்யசபா சீட் கேட்டும் அதிமுக குடுக்கலை.இதுல வேற பாஜகவை கூட்டணியில் சேர்த்ததுதான் தங்களுக்கு ஒரு மைனஸ்னு அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்டத்தலைவர்களெல்லாம் மேடைக்கு மேடை பேசுனாங்க. எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கிறதுனாலும், தங்கள் இருப்பிடத்தை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அதிமுகவை சூழ்ந்து உள்ளது.. சசிகலா நெருக்கடி, இரட்டை தலைமை விவகாரம், ஊழல் புகார்கள் என அதிமுக அடுத்தடுத்து சிக்கல்களில் சிக்கிக்கிட்டதால அதை சமாளிக்கவே அந்த கட்சிக்கு நேரம் பத்தலை.  அதேநேரத்தில் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக அவ்வளவாக தலையிடவும் விரும்பலை... நடப்பதையெல்லாம் ஒதுங்கி நின்றே வேடிக்கை பார்த்து வருகிறது.. இதற்கு ஒரு…
Read More
அரசின் சொத்துகள் விற்பனை; ரூ.6 லட்சம் கோடி திரட்ட முடிவு !

அரசின் சொத்துகள் விற்பனை; ரூ.6 லட்சம் கோடி திரட்ட முடிவு !

அரசின் சொத்துகள் விற்பனை; ரூ.6 லட்சம் கோடி திரட்ட முடிவு; என்ன செய்கிறார் நிர்மலா சீதாராமன்? அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான மூலதனத்தை இந்தத் திட்டத்தின்மூலம் பெற மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் வசமிருக்கும் நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின் உற்பதி, மின் விநியோகம், சுரங்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் ரூ.6 லட்சம் கோடியைத் திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டத்தை (National Monetisation Pipeline) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான மூலதனத்தை இந்தத் திட்டத்தின்மூலம் பெற மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொதுவாக, ஒரு நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் பெருகினால்தான் அந்த நாட்டில் வேகமான வளர்ச்சி அடையும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவும், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சீனாவும் இப்படித்தான் அதிவேக வளர்ச்சி கண்டது. நம் நாடும் மிகப்…
Read More
*எல்.முருகனுக்கு சீட் கேட்ட பாஜக- நிராகரித்த அதிமுக!

*எல்.முருகனுக்கு சீட் கேட்ட பாஜக- நிராகரித்த அதிமுக!

  *எல்.முருகனுக்கு சீட் கேட்ட பாஜக- நிராகரித்த அதிமுக! அதனாலத்தான் ஒரு ராஜ்யசபா இடத்துக்கு இடைத்தேர்தலின் நடத்தப்படுது. மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு டெல்லி பாஜக மேலிடம் ராஜ்யசபா சீட் கேட்டதை அதிமுக நிராகரித்ததால்தான் தற்போது ஒரு இடத்துக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுறதுன்னு பாஜக வட்டாரங்கள்.சொல்லுது. தமிழகத்தில் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான 3 இடங்கள் காலியாக இருக்குது. அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைந்ததால் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கு மட்டும் அடுத்த மாதம் இடைத்தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. செப்டம்பர் 13-ந்தேதி இந்த தேர்தல் நடக்கிறது. 3 இடங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தினால் எம்.எல்.ஏ.களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக 2 இடங்களையும், அதிமுக 1 இடத்தையும் கைப்பற்ற முடியும். அதே சமயம் தனித்தனியாக நடத்தினால் 3 இடங்களையும் திமுகவே கைப்பற்ற முடியும். இதனை உணர்ந்துதான், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என…
Read More
வடிவேலு ஒரு படத்தில் கிணத்தைக் காணோம்னு ஒரு காமெடி சீன் வரும்.அதே மாதிரி 2 லட்சத்து 38 ஆயிரம் டன்நிலக்கரியக் காணலேன்னு தமிழக மின்துறை , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிருபர்களிடம் பேசும்போது சொல்லியிருக்காரு. என்ன சொல்லியிருக்கிறார் னா இங்கு நிலக்கரி கிடங்கில் இருப்பு சரிபார்க்கப்பட்டது . அப்படி சரிபார்க்கப்பட்டதில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் மட்டும் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் இருக்குது . இந்த இருப்பை சரிபார்க்க கூடிய பணியை இயக்குநர் ( உற்பத்தி ) . இயக்குநர் ( விநியோகம் ) மற்றும் தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய மூன்று பேர் சேர்ந்து கடந்த 6 ந்தேதி முதல் 9 ம் தேதிவரை ஆய்வு பண்ணினாங்க. அந்த ஆய்வின் அடிப்படையில் 2 லட்சத்து 38 ஆயிரம்…
Read More
செந்தில் பாலாஜியை வளைக்கும் வழக்குகள் !

செந்தில் பாலாஜியை வளைக்கும் வழக்குகள் !

மறைந்த ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சரா இருந்தப்போ போயஸ் தோட்டத்துக்கு செல்லப்பிள்ளையா இருந்தவர் செந்தில் பாலாஜி. இப்போ தி.மு.க ஆட்சியிலும் வலுவான இடத்தைப் பிடிச்சிகிட்டாரு.இது தான் அவருக்கு பிரச்சினையாமாறியிருக்கு. அதனால தான் அவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வந்துகிட்டே இருக்குது. தி.மு.க-வில் உள்ள சீனியர்களே கட்சித் தலைமையிடம், “எங்களுக்கு என்ன துறையை ஒதுக்கப்போறீங்கன்னு கேட்கத் தயங்கிய நேரத்தில், மின்சாரம் மதுவிலக்குத் துறைகளைப் போகிறபோக்கில் தட்டிச்சென்றவர் தான் செந்தில் பாலாஜி. இதனால், தி.மு.க சீனியர்களின் மனதிலேயே சீற்றத்தை ஏற்படுத்தியவர். இப்படி அரசியலில் அசுர வளர்ச்சி கண்டிருக்கும் செந்தில் பாலாஜிக்கு, அமலாக்கப் பிரிவால் அச்சுறுத்தல் வந்திருப்பதுதான் தமிழக அரசியல்ல பரபரப்பாகப் பேசப்படுது. 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தப்போ அவருடைய துறையில் வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக மூன்று வழக்குகளை தமிழகக் காவல்துறையினர் பதிவுசெஞ்சிருந்தாங்க. இதுல…
Read More