அரசியல்

அதிமுகவுக்கு இது சோதனையான காலகட்டம் ?

அதிமுகவுக்கு இது சோதனையான காலகட்டம் ?

அதிமுகவுக்கு இது சோதனையான காலகட்டம்னு நெனைக்கிறேன்.அடுத்தடுத்த பிரச்சனைகளில் அதிமுக மேலிடம் சிக்கி வருது.. கொடநாடு விவகாரம், புளியந்தோப்பு கட்டிடம்னு இரண்டுமுக்கிய விவகாரங்களை திமுக கையில் எடுத்திருக்குது.. இதில் இருந்து அதிமுக எப்படி மீண்டு வரும் என்பதும் எதிர்பார்ப்பாக கிளம்பியிருக்கு.. ஆட்சி அமைத்து 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் திமுக, தன்னுடைய அதிரடியை காட்ட துவங்கியாச்சு.. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணியை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைனு அதிமுக கண்டனம் தெரிவிச்சுது.ஆனா திமுக அசரலை.எல்லாம் சட்டப்படி தான் நடக்கும்னு ஸ்டாலின் உறுதியா சொல்லிட்டாரு. ஆனால், அதிமுக மேலிடத்தையே அசைத்து பார்க்கும்படியான ஒரு அஸ்திரத்தை திமுக கையிலெடுத்திருக்கு அதுதான், கொட நாடு விவகாரத்தை தூசி தட்டியிருக்குது திமுக அரசு.. கொடநாடு விவகாரம் சூடுபுடிக்க ஆரம்பிச்சதுமே உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன ரகசியமா சந்திச்சு எடப்பாடிக்கு எதிரான எவிடென்ஸ் எல்லாத்தையும் வாங்கிகிட்டாராம்.எடப்பாடிய காலி பண்ண இதுதான் நேரம்னு…
Read More
கொடநாடு கொலை வழக்கு! புதிதாக 3 சாட்சிகள்!! 2 பேர் அப்ரூவர்!!! எடப்பாடிக்கு சிக்கல்? இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான் என்பவர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு உதவிய சேலம் எடப்பாடியை சேர்ந்த ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். மீண்டும் வேகமெடுத்துள்ள கொடநாடு கொலை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குறி வைத்து போலீசார் காய் நகர்த்தி வர்றதா சொல்றாங்க. கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை தொடர்பான வழக்கு இப்போ மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்குது. கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்ற சில மாதங்களிலேயே கொடநாடு பங்களாவில் கொள்ளை அடிக்கப்பட்டது. அதனை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான் என்பவர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு உதவிய சேலம் எடப்பாடியை சேர்ந்த ஒருவர்…
Read More
வேலுமணியை தொடர்ந்து கே.சி.வீரமணி..அறப்போர் இயக்கம் வழங்கிய லிஸ்ட்..

வேலுமணியை தொடர்ந்து கே.சி.வீரமணி..அறப்போர் இயக்கம் வழங்கிய லிஸ்ட்..

வேலுமணியை தொடர்ந்து கே.சி.வீரமணி.. மேலஊழல் புகார் கொடுத்த அறப்போர் இயக்கம் இது தான் இப்ப பரபரப்பா போய்க்கிட்டிருக்கு : அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிமேல 76.75 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார்ங்கிற புகாரை, ஆதாரங்களோட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளது அறப்போர் இயக்கம். சமீபத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமானஇடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். அவருக்கு எதிரான புகார்களையும் அறப்போர் இயக்கம்தான் வெளியிட்டு இருந்தது. அந்த அடிப்படையில் தான், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, வேலுமணி அந்த வழக்கில் ஏ-1 ஆகச் சேர்க்கப்பட்டார்.இந்த நிலையில் கே.சி.வீரமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் புகார் பதிவு செய்துள்ளது. எஸ்.பி.வேலுமணி, தனது சகோதரர் அன்பரசன் மற்றும் அ.தி.மு.கவின் `நமது அம்மா' நாளிதழின் வெளியீட்டாளரான சந்திரசேகருக்குச் சொந்தமான கே.சி.பி இன்ஜீனியர்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்த நிறுவனத்தில் இன்னொரு இயக்குநராக உள்ள சந்திரபிரகாஷ், அவருக்கு நெருக்கமாக உள்ள சில நிறுவனங்களுக்கு…
Read More
பாஜக மண்ணை கவ்வ ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகளின் திட்டம் ஈடேறுமா?

பாஜக மண்ணை கவ்வ ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகளின் திட்டம் ஈடேறுமா?

ஸ்டாலினுக்கு வந்த மேலிட போன்.. வேற வழியேயில்லை.. பவரை கையில் எடுத்த ஆளுமை.. பரபரக்கும் டெல்லி டெல்லி: சோனியா காந்தி மிக முக்கியமான அதிரடி பிளான் ஒன்றை கையில் வைத்திருக்கிறாராம்.. அதை வைத்தே இனி டெல்லி அரசியல் மூவ் ஆகும் என்று தெரிகிறது. அடுத்தடுத்து மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க போகிறது.. முக்கியமாக எம்பி தேர்தலை நோக்கி தேசிய அரசியல் நகர்ந்து வருகிறது.. கடந்த மாதம், பிரசாந்த் கிஷோரும், ராகுல்காந்தியும் சந்தித்தனர்.. பிறகு பிரசாந்த் கிஷோரும் சரத்பவாரும் சந்தித்தனர்.. மம்தாவும் சோனியாவும் சந்தித்தனர்.. மம்தா அதாவது எதிர்க்கட்சிகள் ஒன்றுகூட பேசி வருகின்றன.. முக்கியமாக, எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் வேலையில் மம்தாவே இறங்கி உள்ளார்.. இப்படி ஒரு முன்னெடுப்பை, முன்பு ஒருகாலத்தில் சந்திரபாபு நாயுடுதான் செய்தார்.. இந்த முறை மம்தா ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், இப்போது வேறு ஒரு தகவல் கசிந்து வருகிறது.. அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஒற்றை அணியாக…
Read More
“குறி” வைத்த பாஜக.. கையில் எடுத்த 2 மேட்டர்கள்.. திமுகவுக்கு செக்?

“குறி” வைத்த பாஜக.. கையில் எடுத்த 2 மேட்டர்கள்.. திமுகவுக்கு செக்?

திமுகவுக்கு 2 வகைகளில், தமிழக பாஜக செக் வைத்து அடுத்த மூவ் ஆரம்பித்துள்ளது.. விரைவில் அடுத்தடுத்த தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில், பாஜகவின் இந்த அதிரடிகள் தமிழக அரசியலை நிமிர வைத்து வருகின்றன. இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், சுமூக சூழல் அவ்வளவாக இருந்து வருகிறதா என உறுதியாக தெரியவில்லை.. பாஜகவை கூட்டணியில் சேர்த்ததுதான் தங்களுக்கு ஒரு மைனஸ் என்ற கருத்து அதிமுகவில் பரவலாக உள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளதாலும், தங்கள் இருப்பிடத்தை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அதிமுகவை சூழ்ந்து உள்ளது.. சசிகலா நெருக்கடி, இரட்டை தலைமை விவகாரம், ஊழல் புகார்கள் என அதிமுக அடுத்தடுத்து சிக்கல்களில் சிக்கி கொண்டுள்ளதால், அதை சமாளிக்கவே அந்த கட்சிக்கு நேரம் போதவில்லை. சசிகலா அதேநேரத்தில் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக அவ்வளவாக தலையிடவும் விரும்பவில்லை... நடப்பதையெல்லாம் ஒதுங்கி நின்றே வேடிக்கை பார்த்து வருகிறது.. இதற்கு ஒரு காரணமும் உள்ளது.. தமிழக பாஜக அடிக்கடி…
Read More
திமுக புள்ளிகளுக்கு நெருக்கடி தர பாஜக திட்டம்..!

திமுக புள்ளிகளுக்கு நெருக்கடி தர பாஜக திட்டம்..!

திமுகவை வழிக்குக் கொண்டு வர தூசு தட்டப்படும் பழைய வழக்குகள்..! தயாராகும் சிபிஐ, வருமான வரித்துறை..! திமுக புள்ளிகளுக்கு நெருக்கடி தர பாஜக திட்டம்..!  திமுகவின் முக்கிய கஜானாக்களில் ஒருத்தர்னு சொல்லப்படுற எம்பியை முதல்ல சிபிஐ குறிவைச்சிருக்கிறதா டெல்லியிலிருந்து தகவல்கள் வருது.. இதே போல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் நேரடியாக மோதி வரும் திமுக வின் மிக முக்கிய எம்பியின் செயல்பாடுகளும் சிறப்பு கண்காணிப்பில் இருப்பதாகச் சொல்கிறாங்க.மேற்குவங்க பாணியில் ஆளும் திமுக அரசுக்கு குடைச்சல்களை கொடுக்க அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் மீதான பழைய வழக்குகளை தூசி தட்டி கையில் எடுக்கும் பணிகளில் டெல்லியில் மும்முரமாக நடைபெர்றதா டெல்லி பாஜக வட்டாரத்தில் பரபரப்பா பேசப்படுது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் தமிழகத்தில் பாஜகவை மிக முக்கியமான அரசியல் கட்சியாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார் அமித் ஷா என்கிறார்கள். அதனால் தான் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை மாநிலத் தலைவராக்கப்பட்டுள்ளார். இதே போல்…
Read More
திட்டம்போட்டு காய் நகர்த்தும் சசிகலா! தினகரனுடன் கைக்கோர்க்கும் எடப்பாடி!

திட்டம்போட்டு காய் நகர்த்தும் சசிகலா! தினகரனுடன் கைக்கோர்க்கும் எடப்பாடி!

திட்டம்போட்டு காய் நகர்த்தும் சசிகலா! தினகரனுடன் கைக்கோர்க்கும் எடப்பாடி!   சிறையிலிருந்து சசி வெளியே வரும்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. கிட்டத்தட்ட 70 எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவை சந்திப்பார்கள் என அப்போது சசிகலா வட்டாரங்கள் சொன்னது. எல்லோரையும் நரேந்திர மோடியை காண்பித்து எடப்பாடி அமைதியாக்கிவிட்டார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு சசிகலா அமைதியாக இருக்கவில்லை. அதன் விளைவு தான், சமீபத்தில் நடந்த அ.தி.மு.க மா.செ.க்கள் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம். சசிகலா வெறுமனே அ.தி.மு.க., ர.ர.க்களிடம் செல்போனில் பேசவில்லை. ஒரு பெரிய லிஸ்டே எடுத்துவைத்து வேலைசெய்துவருகிறார். அ.தி.மு.க.வின் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய மா.செ.க்கள், முன்னாள் மா.செ.க்கள், நகரம், ஒன்றியம் என அனைவரையும் சசிகலா சார்பில் அவரது நலன் விரும்பிகள் தொடர்புகொண்டு பேசிவருகிறார்கள். அவர்களது தேவைகளுக்கேற்றாற்போல் கரன்சி விநியோகமும் நடை பெறுகிறது. நடராஜனின் சகோதரர்களான பழனிவேலுவும் ராமச்சந்திரனும் இதனை கவனிப்பதுதான் அ.தி.மு.க.வில் ஹாட் டாபிக்கான பேச்சாக இருக்கிறது. தேர்தல் நேரத்தில், ஓட்டிங் மெஷினில் தில்லுமுல்லு செய்தாவது…
Read More
கோட்டையில் நிழல் முதல்வர் ! சீனியர் அமைச்சர்கள்.அப்செட்.!

கோட்டையில் நிழல் முதல்வர் ! சீனியர் அமைச்சர்கள்.அப்செட்.!

கோட்டையில் நிழல் முதல்வர் ! சீனியர் அமைச்சர்கள்.அப்செட்.! அதிகாரிகள்.குஷி.! கலைஞர் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் எல்லாருமே குறுநில மன்னர்கள் போல செயல்பட்டதா ஒரு புகார் உண்டு. ஜெயலலிதா அரசுக்கும் கலைஞர் அரசுக்கும் இது தான் வித்தியாசம் என்று கூட பேச்சுகள் எழுவதுண்டு. ஜெயலலிதா இருந்தப்போ எப்படி அரசு இயங்கியதோ அதே பாணியில் தற்போது அரசு இயங்கிக் கொண்டிருப்பதாக பொருமிக் கொண்டிருக்கிருக்கிறாங்களாம் சீனியர் அமைச்சர்கள். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போதெல்லாம் துறைகளுக்குன்னு அமைச்சர்கள் இருந்தாலும் அவர்களின் செயலாளர்கள் மூலமாகத்தான் அந்த துறை இயங்கும். டெண்டர், டிரான்ஸ்பர், புதிய திட்டம் எதுவா இருந்தாலும் துறைகளுக்கான செயலாளர்கள் மூலமாக ஃபைல்கள் நேரடியாக போயஸ் கார்டன் போகும். அங்கு அப்போ அதிகாரத்தில் இருந்த சின்னம்மா சொல்லும் அறிவுறுத்தலின் படியே டெண்டர்கள் முடிக்கப்படும், டிரான்ஸ்பர்கள் நடைபெறும். ஆனால் கலைஞர் அரசில் சீனியர் அமைச்சர்கள் வைச்சது தான் சட்டம். டிரான்ஸ்பர் மட்டுமல்ல டெண்டர்களையும் அமைச்சர்களே இறுதி செய்து முதலமைச்சர்அலுவலகத்திற்கு தகவல்…
Read More
ராஜேந்திர பாலாஜியைக் கைவிட்ட பாஜக ? காய் நகர்த்தும் விஜிலென்ஸ்..! ராஜேந்திர பாலாஜி அடுத்த டார்கெட் !

ராஜேந்திர பாலாஜியைக் கைவிட்ட பாஜக ? காய் நகர்த்தும் விஜிலென்ஸ்..! ராஜேந்திர பாலாஜி அடுத்த டார்கெட் !

ராஜேந்திர பாலாஜியைக் கைவிட்ட பாஜக ? காய் நகர்த்தும் விஜிலென்ஸ்..! ராஜேந்திர பாலாஜி அடுத்த டார்கெட் ! தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அதிமுக கட்சியில் இருந்து கொண்டு பாஜவுக்கு அதிகளவு ஆதரவு தெரிவித்து பேசிய அமைச்சர்களில் முதலிடத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருந்தாரு .அதிமுக ஆட்சி காலத்தில் உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சொத்து குவிப்புக்கான முகாந்திரம் எதுவும் இல்லைன்னு அப்போ இருந்த அதிமுக ஆட்சியில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கில் 2 நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பு காரணமா மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்ததுடன் வழக்கை விசாரிக்கவும் உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு  புகாரில் விடுபட்ட ஆவணங்களைத் திரட்டி வருவதாக தமிழக…
Read More
தமிழகத்தில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் !

தமிழகத்தில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் !

தமிழகத்தில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்.; புதிய மசோதாவால் சர்ச்சை ஏற்பட்டிருக்கு!நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்குது  இந்த புதிய மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் வரத் தொடங்கிடுச்சி. மின்சாரச் சட்டம் 2003இல் பல முக்கிய திருத்தங்களைச் செய்து புதிய திருத்தச் சட்ட வரைவை கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மக்களின் கருத்திற்காக மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கில அது நம்மள்ல பலரது கவனத்துக்கும் வராமல் போயிடுச்சு . இந்த நிலையில், நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள 19 மசோதாக்களில் முக்கியமானது இந்த மின்சார சட்டத்திருத்த மசோதா. இந்த திருத்தப்பட்ட மசோதாவில், மாநில மின்வாரியங்ளுக்கு பதிலாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதனிடம் அனுமதி பெற்று மின் விநியோகத்தில் நேரடியாக…
Read More