ஆரோக்யம்

மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.

மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.

மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து கிடைக்கிறது. பொருளாதாரம் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மருத்துவமனை செலவுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கி நின்ற அனுபவம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கவே செய்கிறது. இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள். மருத்துவ செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து கிடைக்கிறது. திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். வயதான பெற்றோருக்கு…
Read More
நுரையிரல் சார்ந்த நோய்கள் என்றாலே சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு உண்டு!

நுரையிரல் சார்ந்த நோய்கள் என்றாலே சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு உண்டு!

நுரையிரல் சார்ந்த நோய்கள் என்றாலே சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு உண்டு . சித்த மருத்துவத்தில் காணும் பல்வேறு மூலிகைகளும் மருந்துகளும் நுரையீரல் சார்ந்த நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும் , நோய் நிலையில் இருந்து மீளவும் பெரிதும் உதவும் . மேல் மற்றும் கீழ் சுவாசப்பாதை தொற்று நோய்கள் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற நாள்பட்ட இருமல் நோய் நிலைகளிலும் சித்த மருத்துவ மூலிகைகள் பெரும் பங்கு வகிப்பது நாடறிந்த உண்மை சுவாச மண்டலத்தில் மிக முக்கிய பங்கு நுரையீரலுக்கு உள்ளது . மார்பு கூட்டின் இருபுறமும் விலாஎலும்புக்குள் பாதுகாப்பாக உள்ளது நுரையீரல் . இதன் நுரையீரல் மூலமாக தான் நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் உட்கிரகிக்கப்படுகிறது . இன்னும் சொல்லப்போனால் வெட்ட வெளியாக உள்ள இந்த பிரபஞ்சத்தோடு தொடர்புடைய உள்ளுறுப்பு ஒருவருக்கு சுவாசத்துடிப்பு நிமிடத்திற்கு 15 முதல் 20 வரை இருப்பது நலம் பல்ஸ்ஆக்ஸிமீட்டர் எனும்…
Read More
அலோபதி துறைக்கு பிடிக்காத 2 விஷயங்கள் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் நடந்திருக்கின்றன.

அலோபதி துறைக்கு பிடிக்காத 2 விஷயங்கள் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் நடந்திருக்கின்றன.

கொரோனா குணமாக வேண்டும் என்று உண்மையில் அரசோ அதிகாரிகளோ விரும்புகிறார்களா? அலோபதி துறைக்கு பிடிக்காத 2 விஷயங்கள் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. 1. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த டாக்டர் என். வசந்தகுமார் 2 ரூபாய் விலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரு மாத்திரையை பரிந்துரை செய்துள்ளார். அவர் சென்னை MMC கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தவர். நியூரோ சயின்ஸ் துறையில் எம்.பில். ஆராய்ச்சி முடித்தவர். வேலூர் சி.எம்.சி.யில் எம்.டி. முடித்தவர். ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் ஆராய்ச்சியாளர். அவர் தனது பரிந்துரை விஷயத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, இதை ஆய்வு செய்து விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும் என ஐ.சி.எம்.ஆர். அமைப்புக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இது ஜூன் 11 தேதியிட்ட பத்திரிகைகளில் வெளியான செய்தி. 2. தாம்பரத்தில் உள்ள தேசிய சித்தா ஆராய்ச்சி மையம், சித்த மருந்து கொடுத்தால்…
Read More
என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இருபதாயிரம்  சித்த மருத்துவர்கள் ?

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இருபதாயிரம் சித்த மருத்துவர்கள் ?

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பட்டப் படிப்பு படித்த இருபதாயிரம் சித்த மருத்துவர்கள் ?? உலக நாடுகளின் தேசிய இனங்களின் மரபு மருத்துவ முறைகளை உள்வாங்கிக் கட்டமைக்கப்பட்ட மருத்துவ முறைதான் ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மருத்துவம். இதை அலோபதி மருத்துவர்களே மறுக்க மாட்டார்கள். பல நாடுகளின் மரபு மருத்துவங்களை அலோபதி உள்வாங்கிக் கொண்ட நிலையில் அந்த நாட்டு மரபு மருத்துவ முறைகள் பல முற்றிலுமாகத் தனித்தன்மையை இழந்துவிட்டன. அந்த வகையில் இந்தியாவின் தேசிய இனங்களின் மரபு மருத்துவ முறைகள் என்ற பட்டியலில் இருப்பவை சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் யுனானி . உடன், Naturopathy எனும் இயற்கை மருத்துவ முறைகளும் உள்ளன. இவை, தங்கள் தனித்தன்மைகளை அலோபதிக்குக் காவு கொடுக்காமல் இன்னமும் இருக்கின்றன. ஆனால் சித்தர்கள் ஆழ்ந்த ஞானம்கொண்டவர்கள். மக்களுக்கு வரக்கூடிய வியாதிகளை அனுபவ பூர்வமாகத் தெரிந்துகொண்டவர்கள். ஆகையால், அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற…
Read More
பைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி !

பைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி !

ஹெமோராய்டுகள் பைல்ஸ் என்னும் மூல நோயுடன் தொடர்புடையது. ஹெமோராய்டுகள் என்பவை ஆசனவாயின் வெளியே அல்லது கீழ் மலக்குடலைச் சுற்றியுள்ள நரம்புகளின் வீக்கம் ஆகும். மலக்குடல் என்பது ஆசனவாய்க்கு வழிவகுக்கும் மனித உணவுக் கால்வாயின் கடைசி பகுதியாக உள்ளது. இங்கு தான் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. பைல்ஸ் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு. குடலியக்கத்தின் போது, நோயாளி கடுமையான வலி, எரிச்சல் மற்றும் இரத்த போக்குக்கு ஆளானால், அவருக்கு பைல்ஸ் உள்ளது என்று அர்த்தம். ஒருவருக்கு பைல்ஸ் டயட்டில் போதுமான நார்ச்சத்து இல்லாமை, உடல் பருமன், மலம் கழிக்கும் போது மலக்குடலில் அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுப்பது போன்றவற்றால் ஏற்படலாம். அதோடு வயது அதிகரிப்பதாலும் ஏற்படலாம். ஏனெனில் ஒருவரின் வயது அதிகரிக்கும் போது, இணைப்புத் திசுக்களும் முதுமையாவதால், மலக்குடல் மற்றும் ஆசன வாய் பலவீனமாகிறது. சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பைல்ஸ் பிரச்சனையை ஏற்படலாம். ஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு…
Read More
உடலுறவின் போது வலி உண்டாவதற்கு என்னென்ன காரணங்கள் ?

உடலுறவின் போது வலி உண்டாவதற்கு என்னென்ன காரணங்கள் ?

சில சமயங்களில் உடலுறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வலி மிகுந்ததாக அமைகிறது. இந்த மாதிரியான வலி உண்டாவதற்கு என்னென்ன காரணங்கள் ஏற்படலாம், அதற்கு நிவாரணம் அளிப்பது எப்படி என பார்ப்போம் பொதுவாக உடலுறவு என்பது இன்பகரமான ஒன்றாக கூறப்படுகிறது. ஆனால் அதே உடலுறவு சில பேருக்கு மகிழ்ச்சிகரமானதாக இருப்பதில்லை. உடலுறவின்போது வேதனை, வலி, டிஸோர்காஸ்மியா போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன. வலி மிகுந்த புணர்ச்சி என்பது எந்தவொரு உடற்கூறியல் நிபுணரும் அனுபவிக்கும் ஒன்று. இதுகுறித்து பிசிகல் தெரபி மருத்துவர் கூறுகையில் வலிமிகுந்த புணர்ச்சி என்பது ஒரு ஆரோக்கியமற்ற ஒன்று. இது ஒருவருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. ​உறவின்போது வலி உண்டாதல் டிஸோர்காஸ்மியா என்பது ஒரு அசாதாரணமானது அல்ல. வலிமிகுந்த புணர்ச்சியை அனுபவிக்கிறார்கள் என்பதற்கான உறுதியான சான்றுகள் இதில் இல்லை.இது குறித்து சிறுநீரக மருத்துவர் மற்றும் பெண் இடுப்பு மருத்துவ நிபுணர் கூறுகையில் சுமார் 10 சதவீத மக்கள் தங்கள் வாழ்நாளில்…
Read More
ஆணுறுப்பு விறைப்புத்தன்மை இன்றி சுருங்கிய நிலையில் இருக்க  என்ன காரணம் தெரியுமா?

ஆணுறுப்பு விறைப்புத்தன்மை இன்றி சுருங்கிய நிலையில் இருக்க என்ன காரணம் தெரியுமா?

உங்களோட ஆணுறுப்பு விறைப்புத்தன்மை இன்றி சுருங்கிய நிலையில் இருக்க என்ன காரணம் தெரியுமா? நிறைய ஆண்களுக்கு ஆண்குறி சுருங்கிப் போகும் பிரச்சனை இருக்கிறது. இது அவர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படுகின்றன. இது போன்று எந்தெந்த காரணங்களால் ஆண்குறியில் சுருங்குதல் பிரச்சனை உண்டாகிறது என்பதைப் பற்றி வாங்க தெரிஞ்சுக்கலாம்! ஆண்களின் ஆண்குறி எலாஸ்டிக் தன்மை வாய்ந்தது என்பது தெரியும். நார்மலாக ஆண்களின் ஆண்குறி சுமார் 5.2 அங்குல நீளமும் 4.6 அங்குல சுற்றளவுடன் காணப்படும். இது ஒவ்வொரு ஆணுக்கும் வித்தியாசப்படவும் செய்யலாம். ஆண்குறி சுருங்குவது 1 அங்குலத்தை விட குறைவாக இருக்கும். ஆனால் சில பேருக்கு இந்த சுருங்குதல் கொஞ்சம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களின் சுறுசுறுப்பான, திருப்திகரமான பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். சில பேருக்கு இந்த சுருக்கம் நிரந்தரமான ஒன்றாகவோ அல்லது சில பேருக்கு அவர்களுடைய வாழ்க்கை முறை மாற்றங்களால் கூட நிகழலாம். இது…
Read More
வலிப்பு வருபவர்கள் நிறைய பேர் இறந்து போக என்ன காரணம்  தெரியுமா?

வலிப்பு வருபவர்கள் நிறைய பேர் இறந்து போக என்ன காரணம் தெரியுமா?

வலிப்பு வியாதி என்பது பல வருடங்களாக உலகம் முழுவதும் இருந்து வருகிறது. இதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.சிலருக்கு இருப்பதை பார்த்து இருப்போம். இருந்தாலும் இதைப் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இது ஒரு வகையான நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி ஆகும். இதை பற்றின ஆய்வுகளும் மிகவும் குறைவாகவே நடந்து உள்ளது. மிகவும் சிலருக்கு இந்த வியாதி வருவதினால் இதைப் பற்றி பலரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்த வியாதி வரும் சிலர் இந்த நோயினால் அவதிப்பட்டு ஒரு சில சமயம் உயிர்இழக்க நேரிடுகிறது என்று சில ஆய்வின் தகவல்கள் வெளியாகி உள்ளன. நம்மில் பலரும் வலிப்பு வியாதியை கேள்விப்பட்டிருந்தாலும் சிலருக்கு இதைப் பற்றி தெரியாது. இது ஒரு வகையான நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மூலம் வருகிறது. ஒரு சில நரம்புகள் சில சமயம் உறைந்துபோய் பாதித்துவிடுகிறது. இதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்துமே மிகவும் துல்லியமாக…
Read More
நீரிழிவு நோயாளிகள்  சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள் !

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள் !

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி , மனநலன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. உடல் கட்டுக்கோப்புடன் இருப்பது உடல் ஆரோக்கியம், நல்வாழ்வின் நிலையாகும். மேலும் குறிப்பாக திறனுடன் தினசரி வேலைகளை செய்யக் கூடிய திறன் கிடைக்கும். எனவேதான், ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருப்பதுடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரத்தில் நீரழிவு நோயாளிகள் என்று வரும்போது ரத்த த்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பது, உடல் கட்டுக்கோப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களாகும் என்று நீரழிவு நோயில் இருந்து விடுதலை என்ற அமைப்பின் நிறுவனர் டாக்டர் பிரமோத் திரிபாதி கூறுகிறார்.நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி , மனநலன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. சில எளிய பயிற்சிகளை இங்கே பார்க்கலாம். தொடர்ந்து உங்கள் உணவு கட்டுப்பாட்டுமுறையை மேற்கொள்ளுங்கள் நடுநிலையான உணவு…
Read More
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவங்களை அறிவோம். !

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவங்களை அறிவோம். !

கொரோனா வைரஸால் உலக நாடுகள் நடுங்கி ஒடுங்கிப்போய் நிற்கின்றன. அலோபதி மருத்துவம் அபார வளர்ச்சி அடைந்திருந்தாலும் கொரோனா வைரஸுக்கு 'மருந்து இருக்கு ஆனா இல்லை' என்று கூறும் நிலையே. ஆனால் பாரம்பரிய தமிழ் மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் மருந்து இருக்கிறது என்று உரக்கச் சொல்லி யாரும் பயப்பட வேண்டாம் என்று நம்பிக்கை தருகிறது தமிழகம். சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவங்களை அறிவோம். ஆனால் நம்மில் பலரும் அறியாத சிந்தாமணி மருத்துவம் ராவணனால் உருவாக்கப்பட்டது. ராமாயண ராவணனின் மறுபக்கத்தில் அவன் சிறந்த சிவபக்தனும், மருத்துவ சித்தனும் ஆவான். ராவணன் இயற்றிய ஆயிரக் கணக்கான மருத்துவ குறிப்புகள் சிந்தாமணி மருத்துவம் என்ற நுாலில் கிடைக்கின்றன. அகத்தியர் இயற்றிய சித்த மருத்துவம் இதற்கு பிந்தைய காலத்தில் உருவானது என்பது ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு. நுரையீரலின் குழந்தை சிறுநீரகம். அக்குபஞ்சர் மருத்துவ சித்தாந்தத்தின் படி 'சிறுநீரகம் நுரையீரலின் குழந்தை' என்றால் வியப்பாக இருக்கிறதா! ஆம், உடலின் உறுப்புகள்…
Read More