அரசியல்

யார் இந்த பிடிஆர் ?

யார் இந்த பிடிஆர் ?

தமிழகத்தின் நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நீண்ட அரசியல் பாரம்பரியமும், கல்வி அறிவும் கொண்ட அரசியல் தலைவர் ! யார் இந்த பிடிஆர் ? தமிழகத்தின் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கும் நிலையில், கொரோனா கழுத்தை நெறிக்கும் இக்கட்டான சூழ்நிலையில்.. தமிழகத்தின் நிதித்துறையை கவனிக்க பன்முகத் தன்மை கொண்ட ஒருவரை களமிறக்கி உள்ளார் முக ஸ்டாலின்! மத்திய மதுரை சட்டமன்ற உறுப்பினர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். நீதிக்கட்சி சார்பில் தமிழகத்தின் முதல்வராக இருந்த பி.டி. ராஜனின் பேரனான இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக  மத்திய மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலத்திலும் மக்கள் மத்தியிலும், கட்சியிலும் நற்பெயரைச் சம்பாதித்திருந்த இவருக்கு, இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.இந்தத்தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவர், தற்போது தமிழகத்தின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.…
Read More
எல்.முருகனை தோற்கடித்த சீனியர்கள்

எல்.முருகனை தோற்கடித்த சீனியர்கள்

தமிழக பாஜக வளராததுக்குக் காரணமே மூத்த பாஜக தலைவர்களின் ஈகோ பிரச்சினைகள் தான் காரணம்.தமிழக பாஜகன்னாலே அது பிராமணர்கள் கட்சின்னு சொல்வாங்க.அந்த பிம்பத்தை முதல்ல ஒடைச்சது தமிழிசை சௌந்தரராஜன் தலைவராக வந்த பிறகு தான். காங்கிரஸில் இருக்கும் கோஷ்டிகள் வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியும்.ஆனா பாஜகவில் எத்தனை கோஷ்டிகள் இருக்குங்கிறத கண்டுபிடிக்கவே முடியாது. தமிழக பாஜகவுக்குள் நடைபெற்று வரும் அதிகார மோதல்கள் பற்றி அரசல் புரசலாக இப்போ செய்திகள் வெளியே வரத்தொடங்கியிருக்கு. தேசிய எஸ்.சி, எஸ்டி ஆணையத்தின் தலைவராக இருந்த எல்.முருகன், யாரும் எதிர்பாராத வகையில் பாஜக தேசியத் தலைமையால், தமிழக பாஜக தலைவராக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டார். பட்டியல் பிரிவில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவரான எல்.முருகனை பாஜக தலைவராக அறிவித்தது, பட்டியல் பிரிவினரில் ஒரு பகுதியினரின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவும், கட்சியில் பட்டியல் இனத்தவருக்கு இதுவரை முக்கிய பொறுப்புகளை அளிக்காத திமுக, அதிமுகவுக்கு இதன் மூலம் பட்டியல் இன மக்களிடம் இருந்து அழுத்தம்…
Read More
யார் இந்த சபரீசன்?

யார் இந்த சபரீசன்?

தி.மு.க ஆட்சியில் அதிகார மையமாக மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்பமுமே இருந்தது. அதற்கு இப்போது முடிவுரை எழுதப்பட்டு, பல குடும்பங்களாக இருந்த அதிகார மையங்கள் இந்த முறை ஒற்றைக் குடும்பமாக மாறியிருக்கிறது. அந்த ஒற்றைக் குடும்பத்திலும் தனி மனிதராகக் கோலோச்சுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்” தேர்தலில் வெற்றிபெற்று சென்னை சித்தரஞ்சன் வீட்டுக்கு வந்த வேட்பாளர்கள், ஸ்டாலினிடம் காட்டிய பணிவை விட சபரீசனிடம் காட்டிய பணிவே இதற்கு சாட்சி என்றார்கள்.! யார் இந்த சபரீசன்? திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் அரியநாயகிபுரத்தில் ஒரு ஆசிரியருக்கு மகனாக பிறந்தவர்தான் சபரீசன். சபரீசன் தந்தை தினமும் சைக்கிளில் மதிய உணவை கட்டிக் கொண்டு பள்ளிக்கு சென்று வரும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். எப்படியோ, ஸ்டாலின் மகளின் பின்னால் சுற்றி காதலித்து விரும்பி திருமணம் செய்துகொண்டார். சபரீசனும், ரஜினி கட்சியிலிருந்த அர்ஜுனமூர்த்தி மருமகனும் குடும்ப சொந்தங்கள். ஸ்டாலின் மகள் செந்தாமரையும்,…
Read More
திமுகவை தோற்கடித்த நடமாடும் நகைக்கடை ஹரி நாடார் கைது!

திமுகவை தோற்கடித்த நடமாடும் நகைக்கடை ஹரி நாடார் கைது!

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் போட்டியிட்ட , பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ‘நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் அவரது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் தன்னிடம் ரூ. 4.73 கோடி மதிப்புள்ள 11.200 கி.கி தங்க நகை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய அசையும் சொத்தின் மதிப்பு ரூ.12,61,19,403 எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.11,50,000 எனவும் தெரிவித்துள்ளார். ஹரி நாடாரின் அசையும் சொத்துக்களில் அவர் வைத்துள்ள பார்ச்சூனர், இனோவா கிறிஸ்டா, மஹிந்திரா எக்ஸ்யூவி, டாடா சஃபாரி மற்றும் பொலிரோ போன்ற கார்களும் உள்ளடங்கும். இவை தவிர அவர் மீது 15 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அவருடைய வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார், பெரும்பாண்மையான வாக்குகளை பெற்று 3ம் இடத்தில் இருந்தார். ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், தனக்கு சிறுவயது முதலே தங்க ஆபரணங்கள் மீது…
Read More
யாரால் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது.?

யாரால் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது.?

யாரால் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது.? உள் இட ஒதுக்கீட்டு சட்டம் கொண்டுவந்த, அ.தி.மு.க ஏன் தோற்றது ? இப்படி பல கேள்விகள், சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில், தி.மு.க வின், நிலையான, ஓட்டு வங்கி 28 முதல் 30 சதவிகிதம் ஜெயலலிதா, உயிரோடு இருந்த போது, அ.தி.மு.க வின் நிலையான ஓட்டு வங்கி 30 சதவிகிதத்துக்கு மேல் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க வின் ஓட்டு வங்கி, OPS ன் தர்மயுத்தம், தினகரன் சசிகலா, வெளியேற்றம், இரட்டை தலைமை ஆகியவைகளால், அ.தி.மு.க வின் பலம் வலுவிழந்து போனது. இதற்கிடையில், எடப்பாடியார், சசிகலாவால், முதலமைச்சர் ஆனார். அ.தி.மு.க, 2019 பாராளுமன்ற தேர்தலை, பா.ஜ.க, பா.ம.க, கூட்டணியுடன், சந்தித்தது. பதிவான வாக்குகளில், தி.மு.க, 51 சதவிகித வாக்குகளையும், அ.தி.மு.க, 38 சதவிகித வாக்குகளையும் பெற்று, 13 சதவிகித வித்தியாசத்தில், அ.தி.மு.க, 38 பாராளுமன்ற தொகுதிகளிலும், தோற்றுப்போனது. 2019 தேர்தலில், 3 சதவிகித ஓட்டுகளே…
Read More
2014 -ல் பேங்க் ஆபிஸர்… 2021 -ல் மாநில நிதியமைச்சர்! யார் இந்த பழனிவேல் தியாகராஜன்..?

2014 -ல் பேங்க் ஆபிஸர்… 2021 -ல் மாநில நிதியமைச்சர்! யார் இந்த பழனிவேல் தியாகராஜன்..?

  தமிழகத்தின் நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் பழனிவேல் தியாகராஜன் நீண்ட அரசியல் பாரம்பரியமும், கல்வி அறிவும் கொண்ட அரசியல் தலைவர் ஆவார்! யார் இந்த பிடிஆர் ? தமிழகத்தின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கும் நிலையில், கொரோனா கழுத்தை நெறிக்கும் இக்கட்டான சூழ்நிலையில்.. தமிழகத்தின் நிதித்துறையை கவனிக்க மாஸ்டர்மைண்ட் ஒருவரை களமிறக்கி உள்ளார் மு. க ஸ்டாலின்! மத்திய மதுரை சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிக்கட்சி சார்பில் தமிழகத்தின் முதல்வராக இருந்த பி.டி. ராஜனின் பேரனான இவர் முதன்முறையாகக் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மத்திய மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த முறை தேர்தலிலும், அதன்பின்னதான சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலத்திலும் மக்கள் மத்தியிலும், கட்சியிலும் நற்பெயரைச் சம்பாதித்திருந்த இவருக்கு, இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இத்தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவர், தற்போது தமிழகத்தின் நிதியமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.…
Read More
பா.ம.க., கோட்டையை பிடித்த  விடுதலை சிறுத்தைகள் கட்சி !

பா.ம.க., கோட்டையை பிடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி !

பா.ம.க., கோட்டையாக கருதப்படுகிற, திருப்போரூர் பொது தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அத்தொகுதியில் ஆய்வு நடத்த நிர்வாகிகளுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், நான்கு தனித் தொகுதிகள், இரண்டு பொது தொகுதிகளில், அக்கட்சி போட்டியிட்டது. பொதுத் தொகுதிகளான திருப்போரூரில், வி.சி., துணை பொதுச்செயலர் எஸ்.எஸ்.பாலாஜி, நாகப்பட்டினம் தொகுதியில், ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றுள்ளனர். தனி தொகுதிகளான காட்டுமன்னார் கோவிலில், சிந்தனை செல்வன், செய்யூர் தொகுதியில், பனையூர் பாபு வெற்றி பெற்றுள்ளனர். திருப்போரூர் தொகுதியில், வன்னியர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அத்தொகுதியில் அடங்கிய திருக்கழுக்குன்றத்தில் தான், முதல் முறையாக வன்னியர் சங்கம் துவக்கப்பட்டது. பா.ம.க., துணை தலைவரும், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவருமான ஆறுமுகம், இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மீண்டும் வெற்றி பெறுவார் எனக்கருதி, பா.ம.க., தலைமை, 'சீட்' வழங்கியது. ஆனால், அவரை எதிர்த்த எஸ்.எஸ்.பாலாஜியும்,…
Read More
ரங்கசாமி அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து!

ரங்கசாமி அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து!

  நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் என்.ரங்கசாமிக்காக விழுந்த வாக்குகள்தான் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக - அதிமுக கூட்டணிக்கு அதிக சீட்டுகள் கிடைக்க முக்கியக் காரணமே... ஆனால் பாஜவுடன் கூட்டணி வைத்ததால் ஏற்படும் பலனை தற்போது ரங்கசாமி அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறார்.நடந்து முடிந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் சேர்த்து 16 தொகுதிகள்ல ஜெயிச்சிருக்காங்க. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 2 இடத்திலும் திமுக 6 இடங்களிலும் சுயேட்சை 1 இடத்திலும் ஜெயிச்சிருக்காங்க. இந்த சூழ்நிலையில பாஜகவின் 3 நியமன எம்.எல்.ஏக்கள் சைலண்ட்டா நியமனம் பண்ணியிருக்காங்க.. அதனால் பாஜக பலம் 9 ஆக உயர்வு- புதுச்சேரி வழக்கமாக பல மாநிலங்களில் அமல்படுத்திய பார்முலாவுடன்தான் புதுச்சேரியிலும் களம் இறங்கியிருக்கிறது பாஜக. இதை என். ரங்கசாமி எதிர்பார்க்கவில்லை என்று கூற முடியாது. அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் ரங்கசாமி. இதை விட அதிரடிகளையும், திட்டங்களையும் பார்த்த பழுத்த அரசியல்வாதிதான் ரங்கசாமி.…
Read More
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்: தர்மம் மறுபடியும் வெல்லும்” !

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்: தர்மம் மறுபடியும் வெல்லும்” !

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்: தர்மம் மறுபடியும் வெல்லும்";.இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்ம சபாநாயகர் அப்பாவு கச்சிதமா பொருந்துது. ........ 2016 ல் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.... முடிவுகள் அறிவிப்பதற்கு முன்னரே மோடியிடம் இருந்து ஜெயலலிதாவிற்கு வாழ்த்து செய்தி வருகிறது....முடிவு அறிவிக்கப்படாத தொகுதிகளில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றதாக அவசர அவசரமாக அறிவிக்கப்படுகிறது...அதில் ஒன்றுதான் ராதாபுரம்...திமுகவின் அப்பாவு வெறும் 49 ஓட்டுகளில் தோற்றதாக அறிவிக்கிறார்கள்... தபால் ஓட்டுகளை எண்ணி பிறகு முடிவு அறிவிக்கலாம் என வாதிடுகிறார்...வாதம் மறுக்கப்படுகிறது... காவல்துறையால் பலவந்தமாக வெளியேற்றப்படுகிறார்.... நீதி கேட்டு நீதி மன்றம் செல்கிறார் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தணும்னு ..வழக்கு கொடுக்கிறார் நான்கு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு , பிறகு ஒரு நாள் நீதி மன்றம் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடுகிறது... நீதிமன்றத்தில் வாக்குககள் எண்ணப்படுகிறது.... திடீரென்று எதிர்கட்சியினர் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க தடை கோரி வழக்கு தொடுக்கின்றனர்...…
Read More
ஓ.பி.எஸ்ஸை எதிர்ப்பையும் மீறி எதிர்க்கட்சித் தலைவரான ஈ.பி.எஸ்! மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா ஓ.பி.எஸ் ?

ஓ.பி.எஸ்ஸை எதிர்ப்பையும் மீறி எதிர்க்கட்சித் தலைவரான ஈ.பி.எஸ்! மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா ஓ.பி.எஸ் ?

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, அதிமுக கூட்டணி 75 இடங்களை பிடித்தது. இதில் 66 இடங்களை அதிமுக கைப்பற்றியது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 158 இடங்களிலும், திமுக தனித்து 125 இடங்களையும் கைப்பற்றி, கடந்த 7 ந் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது. எதிர்க்கட்சி நிலைக்குத் தள்ளப்பட்ட, அதிமுகவின் இரட்டைத் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு? எடப்பாடி பழனிசாமிக்கா? ஓ.பன்னீர்செல்வத்துக்கா? என்று விவாதங்கள் கட்சிக்குள் எழுந்தது ஏன்னா , எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு கேபினட் அந்தஸ்து உண்டு, அமைச்சர்களுக்கு உரிய சலுகைகள் அனைத்தும் உண்டு. தேசியக்கொடி கட்டிய காரில் பவனி வரலாம். அதிமுகவின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 7 ந் தேதி மாலை, சென்னை இராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடியது. கூட்டம் நடைபெற்ற அதிமுக தலைமை நிலைய வாசல்லேயே,…
Read More