21
May
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.. இதையடுத்து கோவை தெற்கு தொகுதி மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது..! கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட போறார்ன்னதுமே கமல்ஹாசனைப் பார்க்கணும்னு பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்தாங்க . ஆரம்பத்தில் இருந்தே வாக்காளர்களைப் பரபரப்பில் வைத்திருந்த தொகுதியாகும்.. நாளுக்கு நாள் இந்த தொகுதியின் பிரச்சாரங்கள் எல்லா ஊடகங்களிலும் இடம்பெற்றது. கமல்ஹாசன் எங்க போட்டியிடப் போறாருங்கிறது ரகசியமாக இருந்தது.மைலாப்பூர் அல்லது ஆலந்தூரில் போட்டியிடப் போவதாகச் சொன்னார்கள்.ஆனால் யாரும் எதிர்பாராத மாதிரி கோவைத் தெற்கில் பாஜக வானதி சீனிவாசனை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.கமலஹாசன் கோவை தெற்கில் போட்டியிடச் சொன்னது துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் தான்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் கோவையில் மகேந்திரன் போட்டியிட்டு 1 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.அதனால் கமல்ஹாசன் ஆர்வமாக வேட்புமனு தாக்கல்…
