கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை ?

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது..

இதையடுத்து கோவை தெற்கு தொகுதி மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது..! கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட போறார்ன்னதுமே கமல்ஹாசனைப் பார்க்கணும்னு பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்தாங்க . ஆரம்பத்தில் இருந்தே வாக்காளர்களைப் பரபரப்பில் வைத்திருந்த தொகுதியாகும்.. நாளுக்கு நாள் இந்த தொகுதியின் பிரச்சாரங்கள் எல்லா ஊடகங்களிலும் இடம்பெற்றது. கமல்ஹாசன் எங்க போட்டியிடப் போறாருங்கிறது ரகசியமாக இருந்தது.மைலாப்பூர் அல்லது ஆலந்தூரில் போட்டியிடப் போவதாகச் சொன்னார்கள்.ஆனால் யாரும் எதிர்பாராத மாதிரி கோவைத் தெற்கில் பாஜக வானதி சீனிவாசனை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.கமலஹாசன் கோவை தெற்கில் போட்டியிடச் சொன்னது துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் தான்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் கோவையில் மகேந்திரன் போட்டியிட்டு 1 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.அதனால் கமல்ஹாசன் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தார்.இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.அதாவது ஜீசஸ் கால்ஸ் பால் தினகரனின் காருண்யா பல்கலைக்கழகம் கோவை தெற்கு தொகுதியில் இருக்கிறது.
கமலஹாசனின் தேர்தல் செலவுகள் அனைத்தையும் பால் தினகரன் பார்த்துக் கொண்டாராம். தேர்தல் பிரச்சாரத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர்.

தேர்தலுக்கு முந்திய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் பல வெளிவந்தாலும், இந்த தொகுதியின் வெற்றி குறித்து கடைசிவரை யாராலும் எதையும் உறுதியாக சொல்ல முடியாமலேயே இருந்தது.அதனால், இந்த தொகுதியின் ரிசல்ட் அளவுக்கு அதிகமாகவே எதிர்பார்க்கப்பட்டது.. அதுவும் ரிசல்ட் தினத்தன்று, மக்களுக்கே பிரஷர் எகிறிவிட்டது.. ஆனால் கமல் சறுக்கலை சந்தித்தார்.. அதிலும் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்.. அதுவும் கடைசி நேரத்தில் தவறவிட்டார்..

வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் கமல்ஹாசனை வீழ்த்தினார். அதனால்தான், மய்ய உறுப்பினர்களால் இந்த தோல்வியை இப்போது வரை ஜீரணிக்கவே முடியவில்லை.. கமல் ரொம்ப அப்செட் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வந்தன.ரிசல்ட் வந்த உடனேயே, மய்யத்தினரின் மறுவாக்கு எண்ணிக்கை என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.. வானதி சீனிவாசனுக்கு வெற்றி சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று கோவை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.. ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி சார்பில் கோவை தெற்கில் சுயேட்சையாக போட்டியிட்ட ராகுல் காந்தி என்ற வேட்பாளர் இதுதொடர்பாக கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.அதில், “வானதி சீனிவாசனின் வெற்றியில் சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை தீர்க்க வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். எனவே இங்கு மறு வாக்கு எண்ணிக்கையை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார். இதைத்தவிர சென்னை ஹைகோர்ட்டிலும் மறுவாக்குப்பதிவு வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்ததால் தான் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றிப் பெற்றுள்ளார்… எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வழக்கு ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டு .. சுயேச்சையாகப் போட்டியிட்ட கே.ராகுல் காந்தி 73 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை கோவையில் மறுபடியும் வாக்குப்பதிவு நடந்தால், மறுபடியும் நமக்கெல்லாம் டென்ஷன் எகிற ஆரம்பித்துவிடும்.

Related posts:

HLL பயோடெக் கம்பெனி திறக்காததற்கு யார் காரணம் ?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா ? அல்லது கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணி அமைக்குமா?

எஸ்.பி.வேலுமணியின் அதிகாரம் எல்லாம் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு அப்படியே அடங்கிவிட்டதாம்.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி !

ஸ்டிரெயிட்டா மேட்டருக்கு வந்த ஸ்டாலின்.. யாருமே சொல்லாததை ராகுலிடம் சொன்னாரே.. "அது" நடக்குமா?! !

தமிழ்நாடு அரசின் அமைச்சகங்கள் - துறைகளின் பெயர் மாற்றம்"

தமிழக அரசியலில் ஒரே வாரத்தில் 3 டிவிஸ்ட்.. பரபரக்கும் களம் !

எஸ்.பி.வேலுமணியை காப்பாற்றும் அரசு அதிகாரிகள் ? கோவை மாநகராட்சியில் என்ன நடக்கிறது?