01
Jun
வன்னிய சமூகத்துக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தி.மு.க ஆர்வம் காட்டவில்லை' என வன்னிய அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. இதுதொடர்பாக அறவழியில் போராடவும் அவை ஆயத்தமாகி வருகின்றன. என்ன நடக்கிறது? கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளன்று, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் புதிய பிரிவு ஒன்று (MBC-V) ஏற்படுத்தப்பட்டு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. `இது தற்காலிகமானதுதான். சாதிகள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரித்த பிறகு 6 மாதம் கழித்து மசோதா மாற்றியமைக்கப்படும்' எனவும் பேரவையில் அப்போது எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அ.தி.மு.க அரசு வழங்கிய உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள் பேசி வந்தனர். தேர்தல் பிரசாரத்தில் அவர்கள் பேசும்போது, `இந்த உள்ஒதுக்கீடு தற்காலிகமானதுதான்' என்றனர். இதன்மூலம் தென்மாவட்ட மக்கள் மத்தியில்…
