08
Jun
ஒன்றிய அரசின் தடுப்பூசிக் கொள்கையை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி , நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி கொடுப்பதாக அறிவித்துள்ளார். இனிமேல்ஒன்றிய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக ஒன்றிய அரசே நடத்தும்னு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கையை உச்ச நீதிமன்றம் கடந்த வாரங்களில் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமே தானாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இதில் ஒன்றிய அரசு தனது தடுப்பூசி கொள்முதலின் முழு விவரத்தையும் தேதி வாரியாக பிரமாண பத்திரமாக 2 வாரங்களில் சமர்ப்பிக்கணும்னு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அமர்வு அடுக்கடுக்கான…
