வன்னிய சமூகத்துக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தி.மு.க ஆர்வம் காட்டவில்லை ?

 

வன்னிய சமூகத்துக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தி.மு.க ஆர்வம் காட்டவில்லை’ என வன்னிய அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. இதுதொடர்பாக அறவழியில் போராடவும் அவை ஆயத்தமாகி வருகின்றன. என்ன நடக்கிறது?

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளன்று, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் புதிய பிரிவு ஒன்று (MBC-V) ஏற்படுத்தப்பட்டு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. `இது தற்காலிகமானதுதான். சாதிகள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரித்த பிறகு 6 மாதம் கழித்து மசோதா மாற்றியமைக்கப்படும்’ எனவும் பேரவையில் அப்போது எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அ.தி.மு.க அரசு வழங்கிய உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள் பேசி வந்தனர். தேர்தல் பிரசாரத்தில் அவர்கள் பேசும்போது, `இந்த உள்ஒதுக்கீடு தற்காலிகமானதுதான்’ என்றனர். இதன்மூலம் தென்மாவட்ட மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியைக் களைய முடியும் என நம்பினர். இதற்கு பதில் அளித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், `வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை நீக்க முடியாது. அது நிரந்தரமானது. இந்தச் சட்டம் தற்காலிகமானது என சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறுகின்றனர்’ என விமர்சித்தார்.

மேலும், `சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் அது நிரந்தரமான சட்டம் தான். சட்டத்தில் தற்காலிக சட்டம் என ஒன்று கிடையாது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், அதற்கு மாற்றாக மற்றொரு சட்டம் கொண்டு வரப்படும் வரையில் நீடிக்கும்’ என விளக்கமும் கொடுத்தார்.

3,500 காலி பணியிடங்கள் இந்நிலையில், வன்னியர் உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் காலதாமதம் செய்யும் பணிகளில் தி.மு.க அரசு ஈடுபடுவதாக வன்னிய சமூக அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.

வன்னிய சமூகத்துக்கு உள்ஒதுக்கீடு கொடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி உயர்கல்வித்துறையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னமும் மாணவர் சேர்க்கை நடைபெறாததால் இந்த அரசாணை எந்தவகையில் செயல்படுத்தப்பட உள்ளது என்பது தெரியவில்லை.

அதேநேரம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு இணையவழியில் விண்ணப்பங்களை பெற்று வருகின்றன. சுமார் 3,500 காலிப் பணியிடங்கள் இவற்றில் வருகின்றன.

இதுதொடர்பாக, உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், `வன்னிய உள்ஒதுக்கீடு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதனை பரிசீலிக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.

அதேபோல், கொரோனா பேரிடர் நேரத்தில் மருத்துவத்துறையில் நடைபெறும் நியமனங்களிலும் 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

உயர்கல்வித்துறைக்கு அரசாணை வெளியிட்டதுபோல, மற்ற துறைகளுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை. தற்போது அரசுப் பணியாளர் தேர்வாணையம், பொதுப்பணித்துறை ஆகியவற்றில் நேர்முகத் தேர்வை ஒத்தி வைத்துள்ளனர். இதிலும் உள்ஒதுக்கீட்டை அரசு பரிசீலிக்கவில்லை. அதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதையே உணர முடிகிறது” என்கிறார்.

காலம் தாழ்த்தும் எண்ணமா?

தொடர்ந்து பேசுகையில், “ வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் 5 பேர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை. இந்த உள்ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் தி.மு.க அரசு அக்கறை செலுத்தவில்லை.

தேர்தல் பரப்புரையின்போதும், `வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததை ஓ.பி.எஸ் கண்டுகொள்ளவில்லை’ என தென்தமிழகத்தில் தி.மு.க நிர்வாகிகள் பிரசாரம் செய்தனர். இப்படிப்பட்ட சூழலில், புதிய அரசு இதனை நடைமுறைப்படுத்துமா என்ற சந்தேகமும் உள்ளது. மீண்டும் அ.தி.மு.க ஆட்சியமைத்திருந்தால் இந்தச் சட்டம் நடைமுறையில் சாத்தியமாகியிருக்கும்.

தற்போதுள்ள அரசு இந்த உள்ஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும். அது தற்போது சாத்தியமில்லை என்பதால் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து சிலர் இடையூறு செய்ய நினைக்கிறார்கள்.

இதனை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தும் வேலைகளும் நடக்கின்றன. இந்த விவகாரத்தை முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். அவரும், `இந்த அரசு என்ன செய்கிறது என்பதைப் பார்த்துவிட்டு முடிவு செய்வோம்’ எனக் கூறியுள்ளார்.

விக்ரவாண்டி இடைத்தேர்தலின்போது, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உள்ஒதுக்கீடு தருவோம்’ என ஸ்டாலின் கூறினார். ஆனால், இதனை செயல்படுத்துவதற்கு தயக்கம் காட்டுவதாகவே பார்க்கிறோம். இதுதொடர்பாக, விரைவில் 40 வன்னிய சங்கங்கள் இணைந்து அகிம்சை வழியில் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்கிறார்.

வட மாவட்டங்களை குழப்புகிறதா வன்னியர் இடஒதுக்கீடு? ராமதாஸை கொதிக்க வைத்த ஓ.பன்னீர்செல்வம் “10.5% உள்ஒதுக்கீடு ஓட்டுக்காக நடத்தப்படும் நாடகம்” – குற்றம்சாட்டும் மு.க. ஸ்டாலின் “அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வுக்கு 10.5 சதவிகித ஒதுக்கீட்டை அ.தி.மு.க அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால், புதிய அரசு அமைந்த பிறகு எதிலும் அக்கறை செலுத்தவில்லை. சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில் மசோதா தாக்கல் செய்துவிட்டால், அதனை நீதிமன்றத்தால் தடுக்க முடியாது. மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துதான் சரிசெய்ய முடியும். 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு உள்ளேதான் வன்னியர் உள்ஒதுக்கீடு என்பது இருக்கிறது. எனவே, யார் நினைத்தாலும் 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் தலையிட முடியாது”

` சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுத்த பிறகு 69 சதவிகித இடஒதுக்கீட்டை வேண்டுமானால் மாற்றியமைக்கலாம். அதேநேரம், யாருடைய பங்கையும் யாரும் எடுத்துக் கொள்ள முடியாத வகையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொகுப்பு இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. ஆனால், சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் இதுபோன்ற முறை அமலில் இல்லை. வன்னியர் உள்ஒதுக்கீட்டில் கை வைத்தால், ஆட்சியாளர்களுக்குத்தான் சிக்கல் வரும்” என்கிறார்.

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: “40 வருஷ உழைப்பு, தியாகம்” – கண்ணீர் விட்ட அன்புமணி 10.5 % வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு, அரசுக்கு நோட்டீஸ் அமைச்சர் சொல்வது என்ன?

உள்ஒதுக்கீட்டை நீர்த்துப் போக வைக்கும் வேலைகள் நடப்பதாகச் சொல்கிறார்களே?’ “இதுதொடர்பாக வழக்கு போட்ட அமைப்புகள் எல்லாம் அ.தி.மு.கவுக்கு சார்பாக இருந்தவர்கள்தான். வழக்கு நிலுவையில் இருக்கும்போது எங்களால் அடுத்தகட்டத்துக்கு போக முடியாது. நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக வேண்டி வரும். இதுதொடர்பாக, சிலர் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர். அதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ரிட் மனுவின் எண்ணையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ அதை முதலமைச்சர் செய்வார். நீதிமன்றம் முடிவு செய்வதற்கு முன்னால் நாங்கள் என்ன சொல்லிவிட முடியும்? சிலர் இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறார்கள்” என்கிறார்.