கல்வி

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

படித்தவுடன் வேலை.. டிசைன் துறையில் ஸ்காலர்ஷிப் உடன் படிக்க செம சான்ஸ்!

படித்தவுடன் வேலை.. டிசைன் துறையில் ஸ்காலர்ஷிப் உடன் படிக்க செம சான்ஸ்!

+2விற்கு பின் என்ன?.. படித்தவுடன் வேலை.. டிசைன் துறையில் ஸ்காலர்ஷிப் உடன் படிக்க செம சான்ஸ்! 12ம் வகுப்பிற்கு பிறகு வித்தியாசமான மேற்படிப்பை படிக்க வேண்டுமா? உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படி என்றால் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட கல்லூரிதான் டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design). சிறப்பான ஸ்காலர்ஷிப் உதவியுடன் நீங்கள் இங்கு டிசைன் சார்த்த படிப்புகளை படிக்கலாம். தமிழகத்தில் டிசைன் படிப்புகளுக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கும் ஒரே கல்லூரி டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design). தற்போது டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) 75% ஸ்காலர்ஷிப் உடன் பிடெஸ் ( B.Des) படிப்புகளை வழங்குகிறது. சென்னையில் அமைந்து இருக்கும் இந்த டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) முன்னணி டிசைனர்ஸ் மற்றும் கட்டிடக்கலை வல்லுனர்களால் நடத்தப்படுகிறது. இந்த டாட்…
Read More
நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் இல்லை ? என்ன காரணம் ?

நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் இல்லை ? என்ன காரணம் ?

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள நவோதயா பள்ளி கல்வித்திட்டம் இதுவரை தமிழகத்தில் இல்லை. இதற்குக் காரணம் இந்தியை மறைமுகமாக திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்பதுதான். மத்திய அரசால் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தின் கீழ், 1986ம் ஆண்டு மஹாராட்டிர மாநிலத்தில் அமராவரி என்ற இடத்தில் முதல் பள்ளி தொடங்கப்பட்டது. கிராமப்புற, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக, தரமான படிப்பினை விடுதிகளில் தங்கி படிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தற்போது தமிழ்நாடு தவிர இதர மாநிலங்களில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பள்ளி என்ற விகிதத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடங்கள் மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் தொடங்கப்படாமல் இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்காளம் இந்த பள்ளிகளை நிறுவ அனுமதி அளித்தது. நவோதயா பள்ளிக்கூடங்களை அமைக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஏனென்றால்…
Read More
படிக்கும் போதே இந்த சான்றிதழ் படிப்புகளையும் படித்தால் வேலை நிச்சயம்!

படிக்கும் போதே இந்த சான்றிதழ் படிப்புகளையும் படித்தால் வேலை நிச்சயம்!

படிக்கும் போதே இந்த சான்றிதழ் படிப்புகளையும் படித்தால் வேலை நிச்சயம்! இந்தியாவில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் சான்றிதழ் படிப்புகள் (Certificate Courses for Jobs) பட்டியலை இங்கு பார்க்கலாம். அறிவியல், கலை, தொழில்நுட்ப மாணவர்கள் இதனை படிக்கலாம். இனி வரும் காலங்களில் வெறும் டிகிரி மட்டும் படித்துவிட்டு, வேலை கிடைத்துவிடுமா என்றால் சந்தேகமே. படிக்கும் போதே வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில் நிறுவனங்களின் தேவையை ஒப்பிடும் போது நம்முடைய பாடத்திட்டங்களை பொறுத்தவரையில் சற்று பின்தங்கி தான் உள்ளது. எனவே, தொழில்நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன் உள்ளவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பை பெற முடியும். பெரும்பாலான மாணவர்களுக்கு தெரிவதில்லை உதாரணத்திற்கு ELT (English Language Teaching) என்ற சான்றிதழ் படிப்பு உள்ளது. ஆங்கில ஆசிரியராக வேண்டும் என்றால், வெறும் பிஏ ஆங்கிலம், பி.எட் முடித்தால் மட்டும் போதாது. இந்த ELT சான்றிதழ் படிப்பு படித்தால், வேலைவாய்ப்பு பெறுவதற்கு உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.…
Read More
மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த படிப்புகளுக்காகவே உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் !

மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த படிப்புகளுக்காகவே உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் !

மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த படிப்புகளுக்காகவே உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஹரியானாவில் செயல்பட்டுவருகிறது. இப் பல்கலைக்கழகம் 1997ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவரான அப்துல்கலாம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. சுருக்கமாக NBRC என்று சொல்லப்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்துஸ்துடன் செயல்படும் National Brain Research Centre மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட்டுவருகிறது. இப்பல்கலைக்கழகம் ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா, ஃப்ரான்ஸ் என சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சர்வதேசத் தரத்திலான மூளை நரம்பியல் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் முதுகலைப் படிப்புகளை வழங்கிவருகிறது. இக்கல்விநிறுவனத்தில் 2020ம் கல்வி ஆண்டுக்கான முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது. வழங்கப்படும் படிப்புகள் இரண்டு வருட கால அளவிலான M.Sc. (Neuroscience) மற்றும் மூளை நரம்பியல் சார்ந்த ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. முதுகலை படிப்பவர்கள் விரும்பினால் தொடர்ந்து ஒருங்கிணைந்த முனைவர் படிப்பும் படிக்கலாம். தேவையான கல்வித் தகுதி ஆராய்ச்சிப் படிப்புகளைத்…
Read More
வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வேண்டுமா? செம வாய்ப்பு !

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வேண்டுமா? செம வாய்ப்பு !

நீங்கள் 2019 அல்லது அதற்குப்பிறகு நீட்தேர்வில் தகுதி பெற்றிருந்தால் மிகவும் குறைந்த கட்டணத்தில் அதுவும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கமுடியும்! மாணவர்கள் பெரும்பாலும் தாங்கள் ஒரு நல்ல வருமானம் தரகூடிய பணியில் இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், அதுஒரு பொறியாளர், மருத்துவர், வழக்கறிஞர், பட்டய கணக்காளர் அல்லது இது போன்ற பல தொழில்களாக இருக்கலாம். இருப்பினும், +2இல் அறிவியலைத் தேர்ந்தெடுப்பவர்கள், அவர்களின் முதல் விருப்பமாக மருத்துவப் படிப்பை (எம்பிபிஎஸ்) கனவு காண்கின்றனர். மருத்துவப்படிப்பில் சேரவிரும்பும் மாணவர்களுக்கான பொதுவான நுழைவுத் தேர்வாக நீட் (NEET) நடத்தப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான இடங்களுக்கு பல லட்சம் மாணவர்களுக்கு இடையே போட்டி நடக்கிறது. நாட்டின் புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் சிலவற்றில் இடம் பிடிக்க மாணவர்கள் இடையே போட்டி நிலவுகிறது. இதில் இடம் பிடிக்க நீட் (NEET) தேர்வில் முதல் 4000-5000 தரவரிசையில் இருந்தால் மட்டுமே முடியும். இந்தியாவில் தெற்குப் பகுதியில் நீட் (NEET) தேர்வில் குறைந்த…
Read More
எப்படி நடைபெறுகின்றன ஆன்லைன் வகுப்புகள்?

எப்படி நடைபெறுகின்றன ஆன்லைன் வகுப்புகள்?

பொது முடக்கக் காலத்தில் கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து, பொது இடங்களில் கூடுதல் ஆகியன தடை செய்யப்பட்டுள்ள நிலையில, இப்போது தனியார் பள்ளிகள் விறுவிறுப்பாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கியிருக்கின்றன. எப்படி நடைபெறுகின்றன ஆன்லைன் வகுப்புகள் ? கல்லூரி மாணவர்களுக்கு குறிப்பாக பொறியியல் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பலவேறு வகையான செயலிகளைக் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் கடந்த மாதமே தொடங்கிவிட்டன ஏதாவதொரு குறிப்பிட்ட நேரத்தில் செல்லிடப்பேசியோ , கணினி வழியாகவோ இந்த வகுப்பில் பங்கேற்கலாம் பள்ளி மாணவர்களுக்கு பல பள்ளிகளில் செல்லிடப்பேசி செயலிகளைக் கொண்டும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர் வீட்டிலிருந்தே பாடம் எடுப்பார். மாணவர்கள் அந்த நோத்தில் இணையம் மூலம் ஆன்லைன் வகுப்பில் இணைந்து கொள்ள வேண்டும்.பாடம் முடிந்த பிறகு மாணவர்களின் கேள்வி நேரம் தொடங்கும். மற்ற நேரங்களில் மாணவர்களின் இணைப்புகளை ஓசையில்லாமல் செய்வதற்கும் செயலிகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன . இந்த முறையில் ஏற்கெனவே ஐ.டி நிறுவனங்களின்…
Read More
சீனாவுக்கு பிறகு, இந்தியாவிலிருந்து அதிக மாணவர்கள் வெளிநாட்டிற்கு படிக்க செல்கின்றனர்.

சீனாவுக்கு பிறகு, இந்தியாவிலிருந்து அதிக மாணவர்கள் வெளிநாட்டிற்கு படிக்க செல்கின்றனர்.

சீனாவுக்கு பிறகு, இந்தியாவிலிருந்து தான் அதிகமான அளவில் மாணவர்கள் வெளிநாட்டிற்கு படிக்க செல்கின்றனர். 10 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படித்து வருகின்றனர் என 2019 ஜூலை மாதத்தில் இந்திய வெளியுறவுத் துறை கூறியிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் தான் மாணவர்கள் விசா மையத்தில் குவிந்து வெளிநாடு சென்று படிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த வருடம் அப்படி நடக்க இயலவில்லை. "மன அழுத்தம், குழப்பம், பதற்றம் என நிறைய மனநிலைகளில் இருக்கின்றனர் மாணவர்கள். ஆனால் யாருக்கும் தெளிவு இல்லை" என்கிறார் பிரிட்டன் சென்று இதழியல் படிக்க விரும்பும் மாணவர் ஒருவர். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு தங்களுடைய படிப்பை அடுத்த வருடம் அல்லது அதற்கடுத்த செமஸ்டருக்கு தள்ளி வைக்கலாம் என்ற ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. அதே சமயம் சில பல்கலைக்கழகங்கள் நிலமை சரியாகும் வரை ஆன்லைன்…
Read More
மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் திட்டம் !  யுஜிசி ஒப்புதல் !!

மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் திட்டம் ! யுஜிசி ஒப்புதல் !!

ஒரு கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர், அதே கல்லூரியிலோ அல்லது மற்ற கல்வி நிறுவனத்திலோ, தொலைநிலைக்கல்வி, ஆன்லைன் முறையில் மற்றுமொரு பட்டப்படிப்பை இனி படிக்கலாம் என யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. மாணவர்கள் தங்கள் படிக்கும் படிப்புகளுக்கு ஏற்ற வேலை தற்போது பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பது பெரும்பாலான மாணவர்களின் குற்றச்சாட்டுகளாக உள்ளது. படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததால், அவர்கள் கிடைக்கும் வேலையிலும் அவர்களால் திறம்பட செயலாற்ற முடிவதில்லை. இதன்காரணமாக, அவர்கள் பல வேலைகளில் மாறிக்கொண்டே உள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில், மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் திட்டத்துக்கு பல்கலைக்கழக மானிய குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஒரு கல்லூரி, பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர், அதே கல்லூரியிலோ அல்லது வேறு எந்தவொரு கல்வி நிறுவனத்திலோ, ஆன்லைன் வழியிலோ அல்லது அஞ்சல் தொலைநிலைக்கல்வி முறையிலோ அவருக்கு பிடித்த (பொருளாதாரம், அறிவியல்) என வேறொரு துறையில் மற்றொரு…
Read More
என்.ஐ.ஓ.எஸ். கல்வி முறை பற்றி தெரியுமா?

என்.ஐ.ஓ.எஸ். கல்வி முறை பற்றி தெரியுமா?

தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் ஏதேனும் ஒன்றை படிக்கவும், எழுதவும் தெரிந்திருந்தால் போதும், பள்ளிக்கூடம் செல்லாதவர்கள்கூட 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதலாம். இதற்கு என்.ஐ.ஓ.எஸ். கல்வி முறை வாய்ப்பளிக்கிறது. அதுபற்றி விளக்கும் கட்டுரை இதோ.. என்.ஐ.ஓ.எஸ். கல்வி முறை என்.ஐ.ஓ.எஸ். என்பது, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் திறந்தவெளி கல்விமுறை திட்டம். இதில் வீட்டில் இருந்தே கல்வி பயிலலாம். தினந்தோறும் பள்ளிக்கு செல்லவேண்டிய கட்டாயம் இல்லை. புரியாத பாடங்களை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக, ஒரு வருடத்திற்கு சில வகுப்புகள் (அதிகபட்சமாக 15 வகுப்புகள்) மட்டுமே, அருகில் இருக்கும் பள்ளிகளில் நடத்தப்படும். அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. கல்வித் தகுதி இதில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லை. ஏதேனும் ஒரு மொழியை பேசவும், எழுதவும் தெரிந்திருந்தால் போதும். இந்த கல்வித்திட்டத்தின் வழியே 10-ம் வகுப்பு…
Read More
வேண்டாம் மனப்பாடம்; வேண்டும் முன்னேற்றம்!

வேண்டாம் மனப்பாடம்; வேண்டும் முன்னேற்றம்!

இன்றைக்கு பெரும்பாலான மாணவர்களிடம், ஆராய்ச்சி ஆர்வம் வெகு குறைவாக காணப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பை முடித்தவுடன் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டுவதில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர்! வளர்ந்த நாடுகளில் பின்பற்றுப்படுவது போன்று, நாம் செயல்முறை வடிவிலான பாடத்திட்டத்திற்கு முன்னேற வேண்டும். இதற்கு, நமது பல்கலைக்கழகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களைப் பெற்றவர்களாக, இன்றைய மாணவர்களால் பிரகாசிக்க முடியும். கல்லூரிகளும், ஒவ்வொரு துறையிலும் சிறந்த விளங்கும் தொழில் வல்லுனர்களை, தங்கள் கல்வி நிறுவனத்திற்கு அவ்வப்போது அழைத்துவந்து, மாணவர்களிடம் கலந்துரையாடச் செய்ய வேண்டும். அப்போதுதான், தொழில் நிறுவனங்கள், பணியாளர்களிடம் எதிர்பார்க்கும் திறன்கள் எவை? என்பதை மாணவர்களால் புரிந்து கொண்டு, அதற்கேட்ப தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். இதற்கு ஏதுவாக, அனைத்து கல்லூரிகளும், முடிந்தவரை தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். திறன் வளர்ப்பு மற்றும் பாடத்திட்டம் போதிப்பு ஆகியவற்றோடு கல்வி நிறுவனத்தின் கடமை முடிந்து…
Read More