கல்வி

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

தொலைநிலைக் கல்வி வழங்கும் ஐ.சி.எம்.ஏ.ஐ !

தொலைநிலைக் கல்வி வழங்கும் ஐ.சி.எம்.ஏ.ஐ !

(ICMAI, earlier known as ICWAI) ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் அக்கவுண்டிங் துறையில் ஐ.சி.எம்.ஏ.ஐ என்பது மிக முக்கியமான ஒரு ஆராய்ச்சிபடிப்பாகும். மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில், அந்நிறுவனம் பலவிதமான படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கி வருகிறது. அப்படிப்புகளின் விபரங்கள் மற்றும் சேர்க்கை முறைகளைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். ICWA அடிப்படைப் படிப்பு FOUNDATION COURSE சேர்க்கைத் தகுதி 17 வயது பூர்த்தியடைய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட முறையில் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களும், தற்காலிக சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம்(போஸ்டல் கோச்சிங்) போஸ்டல் டியூஷன் உள்ளிட்டவைகளுக்கு ரூ.2000 விவரக் கையேடுக்கு ரூ.150(பதிவுக் கட்டணம் இல்லை) அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு வங்கியில் எடுக்கப்பட்ட டிடி(ICWAI, Payable at Kolkatta) மூலமாக பணம் செலுத்தலாம். விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் வங்கி வரைவோலை(DD) சான்றளிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் சான்றிதழ் நகல் சான்றளிக்கப்பட்ட 10+2…
Read More
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு !

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு !

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு சிறப்பு சட்டம் கொண்டுவர பரிசீலிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீட் தேர்வின் விளைவால் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகையால், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் கொண்டுவருவதற்கு பரிசீலிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ‘சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு’ என்ற தலைப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகம் உட்பட நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள்…
Read More
60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?

60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?

60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்? நம் மாணவர்கள் மத்தியில், எப்போதுமே இந்த சதவீதம்தான் அதிகம் எனலாம். ஆனாலும், முதல் ரேங்க், கோல்ட் மெடலிஸ்ட் இவர்களையெல்லாம் விட, 60% முதல் 80% வரை மதிப்பெண்கள் வாங்கியவர்கள், பிற்காலத்தில், வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது நாம் கண்கூடாக கண்ட உண்மை. காரணம், இவர்கள் பாடத்தைத் தாண்டி, கலை, விளையாட்டு என பிற விஷயங்களிலும் ஈடுபாடு உடையவர்களாக, முழுமையான பர்சனாலிட்டியாக இருப்பதுதான். +2 முடித்தவுடன் இவர்கள் என்ன மாதிரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று பார்க்கும்போது, எவர்கிரீன் படிப்புகளான மெடிக்கல், இன்ஜினியரிங் தாண்டி, ஏராளமான வித்தியாசமான தேர்வுகள் உள்ளன என்றாலும், பாப்புலரான இந்த இரண்டு வகைகளையும் நாம் போகிற போக்கில் விட்டுவிட முடியாது. எனவே, முதலில், இவை இரண்டையும் பார்த்துவிட்டு, பிறகு மற்றவற்றைப் பட்டியலிடுவோம். இன்ஜினியரிங் படிப்பைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள…
Read More
கியூபாவிடம் கற்போம் வாழ்க்கைக் கல்வி ! 

கியூபாவிடம் கற்போம் வாழ்க்கைக் கல்வி ! 

சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கல்வி கருத்தரங்கம் ஒன்றில் கியூபாவின் ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்ற கியூபவைச் சேர்ந்த ஏழெட்டு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் அறிவுபூர்வமாகக் கருத்தரங்கில் உரை ஆற்றியது மட்டுமல்லாமல், இனிமையாகப் பாடினார்கள், நளினமாக நடனம் ஆடினார்கள், அற்புதமாகக் கிட்டார் புல்லாங்குழல் வாசித்தார்கள், சிறப்பாக நாடகமாக்கம் குறித்துப் பேசினார்கள். எப்படி இத்தனை திறன்களை வளர்த்துக்கொண்டார்கள் என ஆச்சரியப்பட்டபோது, கியூபா கல்வி முறைப்படி அங்குள்ள அனைவருக்கும் இத்திறன்கள் பயிற்றுவிக்கப்படுவதாகச் சொன்னார்கள். அதைக் கேட்டதும், வெற்று கட்டளைகளையும் அரசாணைகளையும் நம்பி இருக்கும் நமது ஆரம்பக் கல்வி ஆசிரியர் பயிற்சி எவ்வளவு மேம்படவேண்டி இருக்கிறது என மனம் நொந்தது. பாடத்திட்டத்தைத் தேர்வு செய்வதிலிருந்து வகுப்பறை பயிற்று முறை வரை ஆசிரியர்களையும் மாணவர்களையும் குழுவாக அமைத்து அனைத்திலும் அவர்களது பங்கேற்பை உறுதி செய்கிறது கியூபா. யுனெஸ்கோவின் உலகக் கல்வி தர வரிசைப் பட்டியலில் இப்போதெல்லாம் முதல் இரண்டு மூன்று இடங்களில் ஏதேனும்…
Read More
நாடு முழுவதும் பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு ? யுஜிசி ஆலோசனை ?

நாடு முழுவதும் பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு ? யுஜிசி ஆலோசனை ?

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், பலவகையான நுழைவுத் தேர்வுகள் எழுதுவதற்கு பதிலாக, ஒற்றை பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம் பட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு உள்ளிட்ட இரண்டு நிபுணர் குழுக்கள் சமர்ப்பித்த பரிந்துரைகளை அனைத்தையும் விவாதிக்க பல்கலைக்கழக மானியக் குழு ஆணையம் (யுஜிசி) விவாதித்தது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, இந்தியாவில் அனைத்து கல்வி நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக கடந்த மார்ச் 16ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்வி அட்டவணையும் ஆன்லைன் கற்றலை ஊக்குவிப்பதற்கான வழிகளையும் பரிந்துரைக்க,யுஜிசி இந்த மாதத்தில் இரண்டு குழுக்களை அமைத்தது. 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்வி அட்டவணை தொடர்பாக, ஆர்.சி குஹாத் தலைமையிலான பரிந்துரை குழு, இளங்கலை மற்றும் முதுகலை அளவில் பொது நுழைவுத் தேர்வுகளை நடத்த பரிந்துரைத்ததாக அறியப்படுகிறது. நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், பலவகையான நுழைவுத் தேர்வுகள் எழுதுவதற்கு பதிலாக, ஒற்றை பொது…
Read More
வேலைவாய்ப்பை பெற்று தரும் 5 தொழிற்படிப்புகள்! வீட்டிலிருந்து இலவசமாக படிக்கலாம்!!

வேலைவாய்ப்பை பெற்று தரும் 5 தொழிற்படிப்புகள்! வீட்டிலிருந்து இலவசமாக படிக்கலாம்!!

வேலைவாய்ப்பை பெற்று தரும் 5 தொழிற்படிப்புகள்! வீட்டிலிருந்து இலவசமாக படிக்கலாம்!! கொரோனா வைரஸ் விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் டாப் 5 தொழிற்திறன் படிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுமா என்பது தெரியாது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது கற்றலை தொடருவதற்கு பல்வேறு ஆன்லைன் படிப்புகள் உள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போட்டித்தேர்வு, நேர்முகத்தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ளலாம். தற்போது படித்து முடித்தவுடன் வேலை கிடைப்பது என்பது அரிதாக உள்ளது. இந்த சூழலை எதிர்கொள்ளும் வகையில் 5 தொழிற்படிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இந்த படிப்புகளை இலவசமாக ஆன்லைனில் படித்தால், அந்தந்த துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு எளிதாக இருக்கும் ஆன்லைன் டிஜிட்டல் மார்க்கெட்டிங்: தற்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி மார்க்கெட்டிங் (சந்தைப்படுத்துதல்) என்பது வளர்ந்து கொண்டே செல்லும் துறையாக உள்ளது.…
Read More
நீட் தேர்வுக்கான சில முக்கிய டிப்ஸ் !

நீட் தேர்வுக்கான சில முக்கிய டிப்ஸ் !

2020 ஆம் ஆண்டு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு,(மார்ச்-27) வெளியிடப்படும் என்றும்,மே மாதம் மூன்றாம் தேதி தேர்வு நடைபெறும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுமா? இல்லையா? என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் நிலவி வருகிறது கொரோனா வைரஸ் தொற்று மே மாதத்திற்குள் கட்டுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள். இருப்பினும், இந்த விவகாரத்தில் உறுதியான தகவல் என்று எதுவுமே இல்லை. இந்த ஆண்டு மொத்தம் 15,93,452 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தங்களை தனிமைப் படுத்திக் கொள்ளும் அதே வேளையில், மாணவர்கள் தேர்வுக்கும் தயாராக வேண்டிய சூழ்நிலை உள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகா, இந்த பொது முடக்க காலங்களில், 2020ம் ஆண்டிற்கான சிஇடி மற்றும் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில், “GetCETGo” எனும் ஆன்லைன் இலவச பயற்சி செயலியை வடிவமைத்துள்ளது. வீடியோக்கள், பொருளடக்கம், ஆன்லைன் டெஸ்ட் போன்றவைகளுடன் கூடிய ஒரு ஆன்லைன் பயற்சி மையமாக இந்த…
Read More
இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம் !

இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம் !

விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்திய மொழிகளுக்கிடையிலான கட்டுரைகள் எழுதும் போட்டியில் தமிழ் மொழி முதல் இடத்தை பெற்றுள்ளது.கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த வேங்கைத் திட்டம் 2.0 என்றழைக்கப்படும் இந்த போட்டியில் தமிழ், இந்தி, பஞ்சாபி, மராத்தி, உருது உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், போட்டிக்கான காலகட்டத்தில் அதிகபட்ச கட்டுரைகள் மட்டுமின்றி, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையிலும் தமிழ் மொழி முதலிடத்தை பெற்றுள்ளது.இரண்டாவது முறையாக நடத்தப்பட்டுள்ள இந்த போட்டியின் முக்கியத்துவம் என்ன? இது மொழிகளின் வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவும்? இந்த போட்டியில் தமிழ்மொழி முதலிடம் பெறுவதற்கு வித்திட்டவர்கள் யார், யார்? என்று இந்த கட்டுரை அலசுகிறது.நீங்கள் கூகுள் உள்ளிட்ட எந்த தேடுபொறியில் எந்தவொரு விடயத்தை தேடினாலும் பெரும்பாலான சமயங்களில் முதல் முடிவாக விக்கிப்பீடியாவே காட்டப்படும். கட்டற்ற கலைக்களஞ்சியமாக விளங்கும் விக்கிப்பீடியாவில் உலகின் பெரும்பாலான மொழிகளில் எண்ணற்ற தலைப்புகளில் கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன. துறைசார்…
Read More