கல்வி

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா?

மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா?

மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா?திமுக தேர்தல் வாக்குறுதி சாத்தியமா ? மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா?திமுக தேர்தல் வாக்குறுதி சாத்தியமா ?மாணவர்களின் கல்விக் கடன் சார்ந்த திமுகவின் தேர்தல் வாக்குறுதி தமிழக மாணவர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டுவருது. பல்வேறு யூகங்களை வைத்து, விதவிதமான வியூகங்களை வகுப்பதில் பெற்றோர் ஆர்வம் காட்டி வர்றாங்களாம். எனவே இதுதொடர்பான மிகத்தெளிவான விளக்கத்தைத் தருவது தான் திமுக முன் இருக்கின்ற முக்கியமான சவால். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களில் ஒன்று இதோ: “30 வயதுக்கு உட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்”. இதுதொடர்பாகத் தான் மாணவர்கள் பரவலாகப் பேசி வருகின்றனர். முதல்ல கல்விக் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பயன் அடையப் போகும் மாணவர்கள் யார் யார், அவர்களின் தகுதிகள் என்னென்ன என்று தமிழக அரசு முதல்ல தீர்மானிக்கணும். ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின்…
Read More
சிவசங்கர் பாபா மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

சிவசங்கர் பாபா மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

சிவசங்கரன் என்கிற சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ ராமராஜ்யா என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவரின் இயற்பெயர் சிவசங்கரன். 72 வயதான இவர், கடந்த 20 ஆண்டுகளாக கேளம்பாகத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியை நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சமூகவலைத்தளங்களில் சிவசங்கர் பாபா மீது அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் புகார்களைக் கூறியிருந்தனர். இதையடுத்து மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் சார்பில் சிவசங்கர்பாபா, பள்ளி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியது. சிவசங்கர் பாபாவுக்கு உடல் நலம் சரியில்லை என ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகிகள் ஆணையத்தில் ஆஜராகினர். இந்தநிலையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 3…
Read More
‘நீட்’ தேர்வை கட்டாயமாக்கியது மத்திய அரசு

‘நீட்’ தேர்வை கட்டாயமாக்கியது மத்திய அரசு

நீட்' தேர்வை கட்டாயமாக்கியது மத்திய அரசு… தமிழ் உள்பட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம் 'நீட்' என்று சொல்லக் கூடிய அகில இந்திய மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்பட 8 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வினை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்தத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தப்பட முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, இந்தியா முழுவதும் 2017-18 முதல் நீட் நுழைவுத் தேர்வினை கட்டாயமாக்கி அறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. இதனால், கடந்த ஆண்டு நீட் தேர்வு இல்லாமல்…
Read More
கல்லூரி பக்கமே போகாதவர்கள் எல்லாம் நீட் தேர்வு குறித்து அறிவுரை சொல்றாங்க”.?

கல்லூரி பக்கமே போகாதவர்கள் எல்லாம் நீட் தேர்வு குறித்து அறிவுரை சொல்றாங்க”.?

காலேஜே போகாதவங்க அறிவுரை சொல்றாங்க"..மாஸ்க்கிலேயே மெசேஜ் அனுப்பிய அமைச்சர் பிடிஆர்.. சரமாரி கேள்வி கல்லூரி பக்கமே போகாதவர்கள் எல்லாம் நீட் தேர்வு குறித்து தமிழ்நாட்டிற்கு அறிவுரை சொல்கிறார்கள் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார். அதிரடி பேச்சு.. மலைக்க வைத்த பின்னணி.. யார் இந்த PTR ? தமிழ்நாட்டில் மீண்டும் நீட் தேர்வுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக பதவி ஏற்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நீட் தேர்வை கண்டிப்பாக தடை செய்வோம் என்று அறிவித்துள்ளது. இதை சட்ட ரீதியாக முறையாக தடை செய்ய வசதியாக, இது பற்றி ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த குழு கொடுக்கும் அறிக்கையின் படி நீட் தேர்வு தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்தார்.…
Read More
ஐசிஎஃப் ரெயில்பெட்டி தொழிற்சாலை பணிக்கு விண்ணப்பிக்க வட மாநிலத்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் !

ஐசிஎஃப் ரெயில்பெட்டி தொழிற்சாலை பணிக்கு விண்ணப்பிக்க வட மாநிலத்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் !

தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளை வடமாநிலத்தவர்களே ஆக்கிரமித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மத்தியஅரசு பணிகளிலும், மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்தியஅரசு மாற்றான்தாய் போக்கில் செயல்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில், ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரெயில்பெட்டி தொழிற்சாலை பணிக்கு விண்ணப்பிக்க வட மாநிலத்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ரயில்வே நிர்வாகம் சார்பில், ரெயில்பெட்டி தொழிற்சாலையில், அப்ரண்டீஸ் பணிக்காக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு கடந்த 20ந்தேதி வெளியானது. அதன்படி 510 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.  இந்த பணிகளுக்கு தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகஅரசின் நடவடிக்கை காரணமாக, ரெயில்வே நிர்வாகம் இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழக மக்களிடையே…
Read More
‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’? இது சாத்தியமா?

‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’? இது சாத்தியமா?

'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். இது, கல்விக் கடன் வாங்கியோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது சாத்தியமா? இத்தகைய வாக்குறுதி நாட்டுக்கு அவசியமா என்ற, கேள்விகள் எழுந்துள்ளன. இதுநாள் வரை, அரசு நினைத்தால் அனைத்தும் சாத்தியம் என்று நம்பி வந்தவர்கள், தி.மு.க.,வின் இந்த வாக்குறுதி சாத்தியமா என, கேள்வி கேட்க துவங்கியுள்ளதன் காரணம், தி.மு.க.,வின் லோக்சபா தேர்தல் வாக்குறுதியான, தங்க நகை கடன் தள்ளுபடி தான். அந்த வாக்குறுதியை நம்பி பலர், புதிய தங்க நகை கடன் எடுத்தனர். தமிழகம் எங்கும், தி.மு.க.,வும் அமோக வெற்றி கண்டது. ஆனால், 'மத்தியில் ஆட்சியை பிடிக்காததால், எங்களால் நகை கடன் பற்றி ஏதும் செய்ய இயலாது' என்ற பாணியில், தி.மு.க., கைவிரித்தது. மத்திய அரசில், தி.மு.க., பங்கு பெற்றிருந்தாலும், தங்க நகை…
Read More
ஐ.ஐ.டி, என்.ஐ.டி ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது !

ஐ.ஐ.டி, என்.ஐ.டி ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது !

இந்தியாவில் தொழில்நுட்ப படிப்பிற்கு மிகவும் பிரபலமான இடமாக என்.ஐ.டி மற்றும் ஐ.ஐ.டி பார்க்கப்படுகிறது. 2021- 2022 கல்வி அமர்வுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது என கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சரான ரமேஷ் போக்ரியால் நிஷாங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவானது புதிய கல்வி கொள்கைக்கு ஏற்ப ஒருவர் முடிந்தவரை தனது தாய் மொழியிலேயே கல்வியை பெற வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டுள்ளது. தொழில்நுட்ப கல்வியை துவங்க இங்கு ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொறியியல் படிப்புகளை தாய் மொழியில் வழங்கும் திட்டம் அடுத்த கல்வியாண்டில் துவங்கப்படும். ஒரு சில ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி கல்வி நிறுவனங்கள் இதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளை பற்றி ஒரு மூத்த அதிகாரி கூறும்போது பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் பனாரஸில்…
Read More
10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.!

10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நடப்பு கல்வியாண்டு முற்றிலும் புரட்டி போடப்பட்டிருக்கிறது. பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வாயிலாக பாடம் கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் வகுப்புகள் கால தாமதமாக தொடங்கியதால் முழு பாடத்திட்டத்தையும் முடிக்க முடியாத நிலை உண்டாகியிருக்கிறது. அதிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி மிகவும் அத்தியாவசியமானது. எதிர்காலக் கல்விக்கு அடித்தளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையில் நடப்பாண்டு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டம் குறைப்பு பற்றி சிந்திக்க நேரிட்டது. இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடர் ஆலோசனை நடத்தி வந்தது. இந்த சூழலில் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே பொதுத்தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் வரும் 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு…
Read More
இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். !

இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். !

இந்த கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அனைத்து மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் . குறிப்பாக , ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிப் படிப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றது உலக வரலாற்றிலேயே முதல் நிகழ்ச்சியாகும் . ' அனைவரும் தேர்ச்சி ' என்னும் அறிவிப்பு , மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தற்போது ஒரு மகிழ்ச்சியான விஷயமாக இருக்கலாம் . ஆனால் இந்தச் சமயத்தில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழையும் போது தான் இதன் பின்விளவுகள் தெரிய வரும் . அனைவருக்கும் அரசுப்பணி கிடைக்க வாய்ப்பே இல்லை . வேலை வாய்ப்பு உள்ள தனியார் நிறுவனங்களிலும் கூட , பன்னாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் பணிக்காக இவர்கள் நேர்முகத் தேர்வுகளில் பல கட்டங்களைக் கடக்க வேண்டியிருக்கும் , அவ்வாறான சூழ்நிலைகளில் , தொழிற்கல்வித் திறமை , கல்விச் சான்றிதழ் காட்டும் படிப்புக்கான அறிவு போன்றவை சோதனைக்கு…
Read More
இந்தி மட்டும் அல்ல உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை! ஆனால்….

இந்தி மட்டும் அல்ல உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை! ஆனால்….

இந்தி மட்டும் அல்ல உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை! ஆனால்.... இந்தியாவில் இந்தி தேசிய மொழியும் அல்ல. அதிகப்படியான மக்கள் பேசும் மொழியும் இல்ல. இந்தியாவில் 22 பிரதான மொழிகள் கொண்ட முப்பது மாநிலங்கள் இருக்கிறது. இதில் இந்தியும் ஒரு மொழி அவ்வளவே. இந்தியுடன் ஒத்துப்போகும் ஒரு சில மொழிகளையும் சேர்த்து கொண்டு இந்தி அதிகப்படியான மக்களால் பேசப்படும் மொழியாக சித்தரிக்கப்படுகிறது. சரி.. இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் என்ன? என்ன குறைந்துவிட போகிறது ? இது தானே உங்கள் கேள்வி..!முதலில் பலதரப்பட்ட வரிகள் இருந்தது. அதை மாற்றி ஒரே தேசம், ஒரே வரி என்று GST கொண்டு வந்தார்கள். அப்போது அவர்கள் சொன்னது. இனி விலைவாசி குறையும் மாநிலங்களின் வருமானம் அதிகரிக்கும். அதன் மூலம் மாநிலங்கள் வளர்ச்சி பெறும் என்று தானே. ஆனால் நடந்தது என்ன? தமிழகத்துக்கு வழங்கவேண்டிய மாநில GST பணமான 12 ஆயிரம் கோடியை இன்று வரை…
Read More