கல்வி

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது ?

பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது ?

பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது. அதாவது 103 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதம் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. தமிழகத்தில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 836 இடங்களுக்கான பொதுப்பிரிவுக்கான பொறியியல் கலந்தாய்வு கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதியோடு நிறைவடைந்தது. இதில், 56. 1 சதவீத இடங்கள் நிரப்பப்பட வில்லை என்ற தகவல் கல்வியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழக அரசு பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட 461 பொறியியல் கல்லூரிகளில், 33 சதவீத கல்லுரிகள் 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்களை மட்டுமே நிரப்பியுள்ளன. 103 கல்லூரிகள் வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்களை மட்டுமே நிரப்பியுள்ளன. 20 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை பூஜ்யமாக உள்ளது.என்னதான் பொறியியல் படிப்பை படித்தாலும் வேலை கிடைப்பதில்லை.தகுதியும் திறமையும் உள்ள ஆசிரியர்களைக் கொண்டு பாடம் கற்பிப்பதில்லை.இது போன்ற காரணங்களினால் மாணவர்களின் பொறியியல் படிப்புக்கான ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால், அநேக பொறியியல் கல்லூரிகள்…
Read More
ஆசிரியர் தகுதிச் சான்று ஆயுள் முழுவதும் செல்லும்!

ஆசிரியர் தகுதிச் சான்று ஆயுள் முழுவதும் செல்லும்!

இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ( NCTE ) தெரிவித்தது. இந்த முடிவால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏழு வருடம் என்ற வரம்பைத் தாண்டி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்புக் கிடைக்கும். இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளில் ஆசிரியராக வேண்டும் என்றால் கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். சிபிஎஸ்சி நடத்தும் தேர்வின் பெயர் சிடெட் (CTET) என்று அழைகப்படுகிறது. மாநில அரசு நடத்தும் தேர்வின் பெயர் டெட்(TET) என்றும் அழைக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே (சிடெட் – டெட்) சான்றிதழ் செல்லுபடியாகும் என்ற கால வரம்பு, தற்போது வாழ்நாள் முழுதும் செல்லும் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர்…
Read More
‘ஐஐடியைக் குறி வையுங்கள்..’

‘ஐஐடியைக் குறி வையுங்கள்..’

இந்தியா முழுவதும் பல ஐஐடியும், பல்வேறு மத்தியப் பல்கலைகழகங்களும் இயங்கி வருகின்றன. அதில் பெரும்பாலும் வட இந்தியர்களே பயில்கின்றனர். இதன் விளைவாக, இந்தியாவின் உயர் பொறுப்புகளில் அவர்கள் எளிதாக நுழைந்துவிடுகின்றனர். பெல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி நிலையம், கல்பாக்கம், கூடங்குளம், சேலம் இருப்பாலை என்று எல்லா மத்திய நிறுவனங்களிலும் அவர்கள்தான் உயர் பொறுப்பில் அமர்ந்துள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டும். வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நிதானமாகத் திட்டமிட்டு படித்து, அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதி, ஐஐடி, ஐஐஏஸி, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எல்லா இடங்களையும் கைப்பற்றுகின்றனர். இந்த விடயத்தில் அவர்கள் அவசரப்படுவதே இல்லை. 'முந்துகின்ற கல் அடிக் கல்லாக மாறும், பொறுத்திருந்த கல் கோபுரம் செல்லும்' என்பார்களே, அதுதான் இந்த விடயத்தில் நடக்கிறது. நம் குழந்தைகளுக்கு நாம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்? 12-ஆம் வகுப்பு படித்தவுடன், அவசர அவசரமாக ஏதேனும் ஒருக் கல்லூரியில் பிஎஸ்ஸி, பிஇ போன்ற…
Read More
நீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம்.

நீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம்.

உன் கழுத்துல அந்த stethoscope மாட்டி ஒரு வாட்டி பாத்துரனும். பாத்துட்டேனா நா நிம்மதியா கண்ணை மூடுவேன்" இந்த மாறி குழந்தைகளிடம் பேசும் பெற்றோர்களுக்கு இந்த பதிவு. நீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம். அது மட்டுமில்லாமல் இப்போது ஏகப்பட்ட டாக்டர்கள் உள்ளார்கள் தமிழகத்தில். இனிமே புதுசா டாக்டராகி survive பண்றது ரொம்ப கஷ்டம். 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் 100இற்கு 98,99 வாங்கிய மாணவர்கள் MBBS முதலாம் ஆண்டில் JUST PASS ஆகி தேர்ச்சி பெற முடியாமல் அவ்வளவு பேர் FAIL ஆவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ? அப்படி FAIL ஆனவர்கள் , ARREARS உடன் 2ND YEAR செல்ல முடியாது . முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பிறகு தான் 2ND YEAR போக முடியும். நீங்கள் நினைப்பது போல MBBS படிப்பு 5 ஆண்டுகள் கிடையாது. 1ST YEAR -1 ஆண்டு…
Read More
தமிழகத்தைச் சேர்ந்த 34 பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020’’ பட்டியல் ?   

தமிழகத்தைச் சேர்ந்த 34 பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020’’ பட்டியல் ?   

தமிழகத்தைச் சேர்ந்த 34 பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020’’ பட்டியல். தமிழகத்தில் பொறியியல், கலைக் கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை முறை ஆன்லைன் மூலம்  நடைபெற்று வருகிறது. பொறியியல் மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. விண்ணப்பப் பதிவிற்கான கடைசி நாள் ஆகஸ்டு 16 ஆகும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் ஒற்றைச் சாளரமுறையில் இணைய வழி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக  பெறப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், சிறந்த கல்லூரிகளை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பதை இங்கே காண்போம்: தரவரிசைப் பட்டியல்: உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020’’ பட்டியல்: இந்தியாவில் செயல்படும் உயர் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல், கற்றல், ஆதாரங்கள், ஆராய்ச்சி, தொழில்முறைப் பயிற்சி, பட்ட முடிவுகள் போன்ற அனைத்து முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் உருவாக்கப்படுகிறது. இந்த…
Read More
நீட் தற்கொலை ? கல்வித் துறையில் வாக்கு அரசியலுக்கு வழிவகுத்து விடும் !

நீட் தற்கொலை ? கல்வித் துறையில் வாக்கு அரசியலுக்கு வழிவகுத்து விடும் !

நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவத் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும்.மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில்  2010 - ம் ஆண்டு  திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தபோது நீட் தேர்வு குறித்த அறிவிப்பு மத்திய அரசின் கெஜட்டில் முதன்முதலில் வெளியானது. காங்கிரஸ் திமுக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக , தனியார் மருத்துவமனைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது .இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் , 2013 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது . இந்தத் தீர்ப்பை எதிர்த்து , 2013 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி மேல்முறையீடு செய்தது . இதே…
Read More
IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. !

IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. !

IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. அமெரிக்கா சொன்ன செம விஷயம்.. என்ன அது..! அமெரிக்காவில் பணியாற்றி கொண்டிருக்கும் ஹெச் 1பி விசாதாரர்களில் அதிகம் இந்தியர்கள் தான்.இதனால் அமெரிக்காவில் ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும், அது இந்தியா வரை பிரதிபலிக்கிறது.இன்று உலகமே கொரோனாவால் சீர்குலைந்து கொண்டு இருக்கும் நிலையில், அதில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவும் இந்தியாவும் தான். அமெரிக்கர்கள் வேலையிழப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸினை கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளும் லாக்டவுனை அமல்படுத்தின. இதற்கிடையில் பல லட்சம் பேர் உலகம் முழுக்க தங்களது வேலையினை இழந்தனர். இது வல்லரசு நாடான அமெரிக்காவில் மிக அதிகம் என்றே கூறலாம். அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை இதற்கிடையில் தான் கடந்த ஜுன் 22 அன்று அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் ஹெச் 1பி விசாவினை தடை செய்தார். இது அமெரிக்கர்கள் பல லட்சம் பேர் வேலையினை இழந்து வரும் நிலையில், அவர்களுக்கு…
Read More
இந்தியாவின் மினி அப்துல் கலாம் Mr.Pratap

இந்தியாவின் மினி அப்துல் கலாம் Mr.Pratap

இந்த பையனுக்கு வயது 21 தான் ஆகிறது. 1 மாதத்திற்கு குறைந்தது 28 நாட்கள் விமானத்திலேயே வெளிநாட்டிற்கு பயணம் செய்கிறார். "FRANCEல் இருந்து அழைப்பு. மாதம் 16 லட்சம் தருகிறோம். 5 Bedroom வீடு தருகிறோம். 2.5Cr மதிப்புள்ள Car தருகிறோம். எங்கள் நாட்டிற்கு வந்து பணிபுரியுங்கள் என்று கெஞ்சுகின்றது" ஆனால் மறுத்து விட்டார். "பிரதமர் இவரை அழைத்து உயரிய விருது அளித்து கௌரவித்துள்ளார். மற்றும் DEFENCE DRDOவில் இணைந்து அத்துறையை மேம்படுத்தும்படி கேட்டுள்ளார்" கர்நாடகாவில் பிறந்த இவர் அப்படி என்னதான் சாதித்து விட்டார்? விரைவில் எதிர்பாருங்கள்..... DRONEBOY Pratap இவர் சாதனை பற்றி 3 பாகமாக பார்க்கலாம். பாகம் 1 இவர் பிறந்தது கர்நாடக மாநிலத்தில் கடைக்கோடியில் உள்ள ஒரு சிறு குக்கிராமம். தந்தைக்கு விவசாயம். மாத வருமானம் சுமார் Rs.2000/-. சிறு வயதிலேயே Electronics மேல் விருப்பம். College படிப்பு +2 படித்துக்கொண்டே Electronics துறையில் இருந்த தாகத்திற்கும்…
Read More
பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்த  முடிவு செய்துள்ளன!

பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளன!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்த வியாழக்கிழமை முடிவு செய்துள்ளன. இந்த ஆன்லைன் தேர்வுகள் செப்டம்பர் 30ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளின் இறுதி ஆண்டு பருவத் தேர்வுகள், ஆன்லைனில் நடைபெறுமா அல்லது வழக்கம் போல, நேரடி எழுத்து தேர்வாக நடைபெறுமா என்று தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர். மாணவர்களின் இந்த குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், கோரோனாவைக் கருத்தில் கொண்டு இறுதி ஆண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தமிழக பல்கலைக்கழகங்கள் வியாழக்கிழமை முடிவு செய்தன. ஆன்லைன் தேர்வுகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட உள்ளன. மாநில உயர்கல்வித் துறை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தைக் கூட்டியது. இந்த கூட்டம் ஆன்லைனில் தேர்வுகளை நடத்த ஒருமனதாக ஒப்புக் கொண்டது. ஆனால், முறைகள் – கேள்விகள் மற்றும் அதற்கான இணையதளங்களை உருவாக்கும்…
Read More
நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும்- உண்மை நிலை என்ன??-

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும்- உண்மை நிலை என்ன??-

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும்- உண்மை நிலை என்ன??- மக்களுக்கு உண்மை தன்மையை புரிய வைப்பதற்காகத் தான் இந்த பதிவு. 1.தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் சுமார் 28000 கோடி. அதில் 60% க்கும் மேல் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. 2. நுழைவு தேர்வு ரத்துசெய்யப்பட்ட பிறகு நீட் தேர்வு வருவதற்கு முன்னால் 2006 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கல்லூரி மருத்துவ இடங்கள்(MBBS) -29,925. 3. இந்த 29,925 இடங்களில் அரசுப்பள்ளிகளில் படித்து MBBS இடங்கள் வாங்கியவர்கள் 213 பேர் தான். சராசரியாக ஆண்டிற்கு 19 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் இருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வானார்கள். இது 0.7% சதவிகிதத்திற்கும் குறைவானதாகும். 4. NCERT ( NATIONAL COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING ) எனப்படும் 1961 ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு மத்திய மாநில அரசாங்கங்களுக்கு பாடத்திட்டத்தில் உதவி…
Read More