சினிமா

மாரடைப்பு ஏற்பட்டால், செய்ய வேண்டியது என்ன ?

மாரடைப்பு ஏற்பட்டால், செய்ய வேண்டியது என்ன ?

உடனிருப்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், செய்ய வேண்டியது பற்றி, டாக்டர் ஜோஸ்: மாரடைப்பு என்பது, இதயத்திற்கு வரும் ரத்தக் குழாயில், ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படுகிறது. ஒரு மனிதனுக்கு, 15 ஆயிரம் லிட்டர் காற்று தேவை. தினமும், 15 ஆயிரம் முதல், 30 ஆயிரம் லிட்டர் வரை காற்றை சுவாசித்தால், ரத்தக் குழாய்கள் உள்ளிட்ட உடலின் எந்த உறுப்பும் பழுதாகாது; மாரடைப்பும் வராது.மாரடைப்பு ஏற்பட்ட நபர், நினைவோடு இருந்தால், அவருக்கு சில முதலுதவி சிகிச்சை அளித்தபடியே, ஆம்புலன்ஸ் வரவழைத்து, மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அந்த நபர் அறிந்ததும், பயத்தால் பாதிப்பு அதிகமாகும். அச்ச உணர்வு அதிகரிக்கும் போது, உடலில் ரத்தக் குழாய்கள் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் தான், பயம் ஏற்படும் போது, சிலருக்கு மயக்கம் வருகிறது. எனவே, மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதலில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.ஒரு டம்ளர் சுடுநீரை குடிக்க கொடுக்கலாம். அந்த நேரத்தில், 'ஆஸ்பிரின்…
Read More
MSME-க்கு 5,000 கோடி ரூபாய் இடர்பாட்டு நிதி -மத்திய அரசு திட்டம்!

MSME-க்கு 5,000 கோடி ரூபாய் இடர்பாட்டு நிதி -மத்திய அரசு திட்டம்!

வரவிருக்கும் 2020-21 வரவுசெலவுத் திட்டத்தில் பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்ளும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) 5,000 கோடி ரூபாய் இடர்பாட்டு நிதியை அரசாங்கம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.MSME துறையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள தனியார் ஈக்விட்டி நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு அரசு வழங்கும் நிதியுதவி ரூ.10,000 கோடியுடன் வரவுசெலவுத் திட்டம் வெளிவரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டு நிதிகளும் கடந்த ஆண்டு சிறுதொழில்களுக்காக முன்னாள் பத்திரங்கள் மற்றும் இந்திய பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) முன்னாள் தலைவர் UK சின்ஹாவின் கீழ் அமைக்கப்பட்ட ரிசர்வ் வங்கி குழுவால் பரிந்துரைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது."இந்த இரண்டு நிதிகளும் பட்ஜெட் அமர்வில் ஒப்புதல் பெறும், இந்த நிதி செயல்பாட்டைப் பெறுவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த நிதியின் நன்மைகளைப் பெற சிறு வணிகங்கள் சில அளவுருக்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் தகவல் அறிந்த அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன."வறட்சி, வெள்ளம்…
Read More
‘சோனி விஷன் -எஸ்’ மின்சார கார்!

‘சோனி விஷன் -எஸ்’ மின்சார கார்!

இனி மின்சார வாகனங்களுக்குத்தான் எதிர்காலம். இதை புரிந்துகொண்ட ஜப்பானின், 'சோனி' அண்மையில் ஒரு மின்சார காரின் மாதிரியை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறது. 'சோனி விஷன் -எஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாதிரி காரில், 33 வகை மின்னணு உணரிகள் உள்ளன. அது மட்டுமல்ல, காருக்குள் இசை, ரேடியோ, வீடியோ என்று பொழுதுபோக்கு கருவிகள் அனைத்தையும் பொருத்தியுள்ளது சோனி. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்கும் பிரமாண்டமான நுகர்வோர் மின்னணு கண்காட்சியில், யாரும் எதிர்பாராத விதத்தில் விஷன் எஸ் மின் வாகனத்தை சோனி அறிமுகப்படுத்தியது. காரின் வடிவமைப்பு வித்தியாசமாக இருந்தாலும், விலையுயர்ந்த, 'போர்ஸ்ச்' கார்களின் சாயல் இருப்பதாக விமர்சகர்கள் சொல்கின்றனர். தவிர, மின் காரின் இயந்திரப் பகுதி, கார் பாகங்களைத் தயாரிக்கும் மேக்னாவால் உருவாக்கப்பட்டது என்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் தானோ என்னவோ, சோனி தற்போதைக்கு தன் மின்சார கார் திட்டத்தைப் பற்றி விரிவாக எதையும் சொல்லாமல் மவுனம் காக்கிறது. ஆனாலும், மின் வாகனத்…
Read More
ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ !

ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ !

ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ - நமது பாரம்பரிய கலை, இசை, கலாச்சார வடிவங்களை பாதுகாத்து பராமரிக்கும் ஒரு முற்றிலும் புதுமையான கூட்டு முயற்சி. கலாச்சாரம் என்பது தொடர்ச்சியானது; கலாச்சாரம் என்பது கால அடைவுகளுக்கு அப்பாற்பட்டது; அத்தகைய ஒரு பாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும் பாதுகாத்து பராமரிக்கும் ஒரு புதிய, புதுமையான கூட்டு முயற்சியாக ‘தa பியூச்சர்ஸ்’ உருவாகி இருக்கிறது. இந்த பிரமிப்பூட்டுமொரு மகத்தான முயற்சியில், அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் - இசை விஞ்ஞானி ஏ.ஆர். ரஹ்மான், மற்றும் உலகின் மிக முக்கியமான இசை கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட எம்ஐடியின் புகழ்பெற்ற ஊடக ஆய்வகத்தின் இசையமைப்பாளர் - இசை விஞ்ஞானி டோட் மக்கோவர், மற்றும் காலத்தால் அழியாத தமிழ்நாட்டு…
Read More
வசீகர குரல் மன்னன்’ சித் ஸ்ரீராமின் ‘All Love No Hate’-தென்னிந்திய இசைப் பயணம் 2020 !

வசீகர குரல் மன்னன்’ சித் ஸ்ரீராமின் ‘All Love No Hate’-தென்னிந்திய இசைப் பயணம் 2020 !

2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்து துவங்குகிறார். ‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்குதல், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டு வரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, எஸ் பி பாலசுப்பிரமணியம் - யேசுதாசின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சிகளை…
Read More
“பண்டிகை காலங்களில் சிறிய படங்களை வெளியிட முன்னுரிமை !‘அடவி’ இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேச்சு !!

“பண்டிகை காலங்களில் சிறிய படங்களை வெளியிட முன்னுரிமை !‘அடவி’ இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேச்சு !!

“பண்டிகை காலங்களில் சிறிய படங்களை வெளியிட முன்னிரிமை அளித்திட வேண்டும்” – ‘அடவி’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பேச்சு.‘ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ்’ சார்பாக கே சாம்பசிவம் தயாரிப்பில், ஆழ்வார், திருடா திருடி, கண்ணோடு காண்பதெல்லாம், கிங் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு இயக்குனராக இருந்து திரைப்பட இயக்குனராக உயர்ந்திருக்கும் ரமேஷ் ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கிறது ‘அடவி’. இந்த சமுதாயத்தில், ‘இயற்கை வளங்கள் அனைவருடைய தேவைக்கும் போதுமானதாக இருக்கிறது. ஆனால் ஒரே ஒருவருடைய பேராசைக்கு கூட அது பத்தாது’ எனும் முதுமொழிக்கேற்ப, இப்படம் இயற்கை, இயற்கையோடு இயைந்து வாழும் மக்கள் என்றிருக்கும் வாழ்க்கை, ஒரே ஒருவரது பேராசையால் என்ன கதிக்கு உள்ளாகிறது என்பதை உணர்வுபூர்வமாக படம் பிடித்து காட்டி இருக்கிறது. வியப்பூட்டும் திருப்புமுனைகளும், பசுமையான காட்சி அமைப்புகளும், சுவராஸ்யமான அதிரடி காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் விதத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…
Read More
சென்னையில் நடிகர் மோகன்–ரசிகர்கள் சந்திப்பு!

சென்னையில் நடிகர் மோகன்–ரசிகர்கள் சந்திப்பு!

1980களின் அனைத்து திரையுலக ரசிகர்கள் மற்றும் இசைப்பிரியர்களின் மனங்கவர்ந்த நாயகனாக வலம் வந்த நடிகர் மோகன் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார்.வெகுகால அமைதிக்குப் பின், சென்னை மைலாப்பூர் வி ஏ தெருவில் அமைந்துள்ள நிவேதனம் ஹாலில் அவர் தனது ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்தார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு செய்தி வெளியான உடனேயே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும் அவரது ரசிகர்கள் அவரை சந்திப்பதற்கு முன்பதிவு செய்து, மிகுந்த ஆவலுடன் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர், சுமார் 200 பேருக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர் ரமேஷ், குமாரசாமி, ஜெரால்டு, அம்மாப்பேட்டை கருணாகரன், கிருபானந்தம் ஆகியோரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்து, தங்களது வாழ்வில் இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியதற்காக நன்றியும் தெரிவித்தனர்.
Read More
திருவள்ளூர் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் ஏ ஆர் ரகுமான்

திருவள்ளூர் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் ஏ ஆர் ரகுமான்

திருவள்ளூர் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் முயற்சி த என்ற புதிய இசை திட்டத்தை ஏ ஆர் ரகுமான் தனது பிறந்த நாளான நேத்திக்கு வெளியிட்டார். இதன் மூலம் தமிழக கிராமபுரத்தில் உள்ள இசையை உலக அளவில் கொண்டு செல்வதே தனது இலக்கு என்று அவர் கூறினார். கொஞ்சம் கிராமிய மணம் கமழும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஐயர் கண்டியிலுள்ள திரைப்பட இசை ஒளிப்பதிவு மற்றும் படப்பிடிப்பு ஸ்டுடியோ வில் நடைபெற்ற விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய வகையில் கொண்டு செல்லும் முயற்சியாக த என்ற இசை ஆசையை தனது பிறந்த நாளையொட்டி வெளியிட்டார்.. இதையடுத்து செய்தியாளர் பேசிய அவர் தற்போது நடைபெற்று வரும் விரும்பத்தகாத போர் போராட்டங்களால் இளைஞர்கள் மனதில் தவறான எண்ணங்கள் வேரூன்றி வருவதாகவும் இதிலிருந்து விடுபட இசை பேருதவி புரியும் என்றும் கூறியவர்…
Read More

ரஜினியின்’தர்பார்’ அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஏர்டெல்.!

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியில் நேர்காணல்கள் மற்றும் திரைக்குப்பின்னால் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்கள் உட்பட ' தர்பார் திரைப்பட உள்ளடக்கத்திற்கு பிரத்யேக அணுகுவசதியை இது வழங்குகிறது • ஏர்டெல் ரீடெய்ல் ஸ்டோர்களில் குறுகிய பதிப்பாக ' தாபார் ' பிராண்டுடன் கூடிய சிம்கள் கிடைக்கப் பெறுகின்றன. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியில் அதிக அளவிலான இன்ட்ராக்டிவ் முறையிலான தர்பார் க்விஸ் ( வினாடி வினா ) செயல் திட்டத்தில் பங்கேற்பதன் மூலம் தர்பார் திரைப்பட டிக்கட்டுகளையும் மற்றும் தர்பார் திரைப்பட நட்சத்திரங்களையும் வாடிக்கையாளர்கள் வெல்லும் வாய்ப்பை பெறுவார்கள். ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவைகள் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான பார்தி ஏர்டெல் " ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ' தர்பார் திரைப்படத்துடனான ஒரு பிரத்யேக கூட்டு வகிப்பு செயல்பாட்டை அறிவித்திருக்கிறது . இந்த ஒத்துழைப்பு செயல்பாட்டின் ஒரு பகுதியாக தனது வாடிக்கையாளர்களுக்கு தர்பார் " திரைப்படத்தின் மீது வரம்பற்ற அபைவத்தை தரும் உறுதிமொழியோடு கிளர்ச்சியூட்டும்…
Read More