சினிமா

கேப்டன் விஜயகாந்த் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு ! கூட்டணிக்கு ஆச்சாரமா !!

கேப்டன் விஜயகாந்த் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு ! கூட்டணிக்கு ஆச்சாரமா !!

இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். இந்த திடீர் சந்திப்பு பல கேள்விகளை எழுப்பி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இல்லத்திற்கே சென்று அவருடன் சந்திப்பு நடத்தினார். உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் ஆக்டிவாக இல்லாத விஜயகாந்தின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் இன்று நேரில் கேட்டறிந்தார். இந்த சந்திப்பில் கொரோனா நிவாரண நிதி ரூ.10 லட்சத்தை முதல்வரிடம் விஜயகாந்த் வழங்கினார். இந்த சந்திப்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடன் இருந்தார். முன்னதாக கடந்த லோக்சபா தேர்தலின் போது துரைமுருகன் மற்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துரைமுருகனும், பிரேமலதாவும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர்.லோக்சபா தேர்தலின் போது துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சார்பாக ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. அவரின் வீடு, அலுவலகத்தில் ஐடி…
Read More
நல்ல காலம் பொறக்குது ! உடன்பிறப்புகளுக்கு நல்ல காலம் பொறக்குது !!

நல்ல காலம் பொறக்குது ! உடன்பிறப்புகளுக்கு நல்ல காலம் பொறக்குது !!

தமிழக அரசுக்கு அதிகப்படியான வருமானம் வருதுன்னா அது டாஸ்மாக் கடைகள்ல  விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் மூலம் மட்டும்தான். அதாவது ஆண்டு ஒன்றுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வர்றதாலத்தான், எண்ணற்ற இலவசங்களை மக்களுக்கு எந்தவொரு ஆளும்கட்சியாலும் வாரி வழங்க முடியுது. மதுபானங்கள் விற்பனை மூலம் நேரடியாக அரசுக்கு வருமானம் கிடைத்து வருவது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம், டாஸ்மாக் மதுபானக் கடைகளையொட்டி இயங்கும் பார்கள் மூலம் (மது அருந்தும் இடம்) அரசுக்கும், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் பணமழை கொட்டுது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், 1983 ஆம் ஆண்டு எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஒரு மாநில அரசு நிறுவனம். தமிழ் நாடு அரசே இதன் நூறு சதவிகித உரிமையாளர். இந்நிறுவனம் அரசின் மதுவிலக்கு மற்றும் சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதன் இயக்குநர் குழுமத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்திய…
Read More
ஓ.பி.எஸ் ஐ கைவிட்டது பாஜக.

ஓ.பி.எஸ் ஐ கைவிட்டது பாஜக.

கைவிட்டது பாஜக... ஓ.பி.எஸ்-ன் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கப் போகும் எடப்பாடி-சசிகலா அதிமுகவில் மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அடிக்கடி ஆடியோ வெளியிடும் சசிகலாவும் அனேகமாக ஓ. பன்னீர்செல்வம் என்னும் மற்றொரு மாஜி முதல்வரின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்காமல் ஓயமாட்டார்கள் என்றே தெரிகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜகவின் தயவால் முதல்வராக்கப்பட்டார் ஓ. பன்னீர்செல்வம். தமக்குப் பின்னால் மத்தியில் ஆளும் பாஜக இருக்கிறது என்கிற அதீத நம்பிக்கையில் இருந்தார் ஓ. பன்னீர்செல்வம். னால் அப்போது முதல்வர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டார். இதனால் பதவி பறிபோகிறதே என கொந்தளித்த ஓ. பன்னீர்செல்வம், அதே பாஜகவின் தயவில்தான் தர்மயுத்தம் நடத்தினார். அன்று இதே ஓ. பன்னீர்செல்வத்துக்காகவே சசிகலாவும் பழிவாங்கப்பட்டார். 3 மணி நேரம்.. அனல் பறந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. ஓபிஎஸ் பாஜக கன்ட்ரோலில் அதிமுக ஓ. பன்னீர்செல்வம் எனும் தர்மயுத்த நாயகனை வைத்து அதிமுகவை ஒட்டுமொத்தமாக தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பாஜக. பின்னர்…
Read More
ரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்..

ரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்..

ரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்.. சூடுபிடிக்கும் தனியார்மய நடவடிக்கை..! இந்தியாவில் ஒரு புறம் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக அரசு பலவேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   அதன் ஒரு பகுதியாக கொரோனாவிற்கு முன்பே, பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான நடவடிக்கையில் அரசும் ஈடுபட்டு வந்த நிலையில் தான், கொரோனா வந்து குறுகிட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் நிதியைத் திரட்ட உள்ளது.இதன் படி இந்திய ரயில்வே துறை மத்திய asset monetisation திட்டத்திற்காகச் சுமார் 87 நிலங்களையும், 84 ரயில்வே காலனிகளையும், 4 மலை ரயில் சேவைகளையும், 3 ஸ்டேடியங்களையும் விற்பனை செய்ய ஏற்றது எனக் கண்டறிந்துள்ளது. எனினும் தற்போது மீண்டும் தற்போது தனியார்மயம் என்னும் ஆயுதத்தினை மீண்டும் கையில் எடுத்துள்ளது.…
Read More
யோகியே முதல்வர் வேட்பாளர் ?  சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உத்தரப் பிரதேச பாஜக?!

யோகியே முதல்வர் வேட்பாளர் ?  சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உத்தரப் பிரதேச பாஜக?!

யோகியே முதல்வர் வேட்பாளர் ?  சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உத்தரப் பிரதேச பாஜக?! உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் வருகிற தேர்தலில் பாஜக தேர்தலை சந்திக்காது என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு அம்மாநில பாஜக தலைவர் விளக்கம் கொடுத்து, 'யோகியே முதல்வர் வேட்பாளர்' என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த அரவிந்த் குமார் சர்மா, சமீபத்தில் உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக ஆக்கப்பட்டார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்தவர் இந்த அரவிந்த் குமார் சர்மா. சில வாரங்களாக இவர், மோடியின் வாரணாசி தொகுதியில் நேரடியாக முகாமிட்டு கொரோனா நிவாரண பணிகளை பார்வையிடுவது, பின்னர் அதுபற்றி மோடி - அமித் ஷாவுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்துவது என உத்தரப் பிரதேசத்தில் சுற்றிச் சுழன்று வருகிறார். கடைசியாக மத்திய அரசு பணியில் இருந்த இவர், கடந்த…
Read More
யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..!

யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..!

ரஜினி இப்போது கட்சி தொடங்குவார், அப்புறமாக தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 31ம் தேதி ஆரம்பிக்க போகிறேன் என்று கூறி உள்ள நிலையில் அரசியலில் அவரது தர்பார் பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது? இந்நிலையில், ஏற்கனவே நடிகராக இருந்து அரசியல் அரிதாரம் பூசி தனக்கென தனி முத்திரை பதித்துள்ள விஜயகாந்தை போன்று ரஜினியும் அரசியலில் அரிச்சுவடி காண்பாரா? சாதனை படைப்பாரா? என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது. ஆனால் திரைத்துறையில் ரஜினி சாதித்தது என்ன? தன்னுடைய துறை சாந்தவர்களுக்கு ரஜினி செய்தது என்ன? மக்களுக்கு ஒரு நடிகனாக அவர் செய்தது என்ன? போன்ற பல கேள்விகளை எழுப்புகின்றனர் பொது நல விரும்பிகள். அதே போன்று கேள்விகளுக்கு விஜயாகாந்திடம் உள்ள பதில் என்ன? ரஜினி மற்றும் விஜயகாந்த் ஓர் ஒப்பீடு 1. எளிமை ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த போதும் சொகுசாக வாழ்ந்து வருபவர் ரஜினி கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் எளிமையான வாழ்க்கை…
Read More
சினிமா தொடர்பான படிப்புகள் எப்படிப்பட்டவை?

சினிமா தொடர்பான படிப்புகள் எப்படிப்பட்டவை?

பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகள்தான் சிறந்த எதிர்காலத்தை அமைத்து தருபவை என்று நினைத்த காலமெல்லாம் போய்விட்டது. இன்று இளைஞர்களின் கவனம் பல பக்கங்களிலும் திரும்பிவிட்டது. படத் தயாரிப்புத் துறை என்ற ஒரு பிரிவு, பல இளைஞர்களை அதன்பால் ஈர்த்து வருகிறது. எடிட்டிங், அனிமேஷன், திரைக்கதை எழுதுதல், டைரக்ஷன் மற்றும் நடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இத்துறையில் இருப்பதால், மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமானதை தேர்வு செய்துகொள்ள முடிகிறது. இதுபோன்ற தொழில்துறைகளில் பணியாளர் குறைப்பு, பொருளாதார மந்தநிலை போன்ற பிரச்சினைகள் பாதிப்பதில்லை. மேலும், சம்பளம் பெறுவதற்காக 1ம் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.சினிமா தொடர்பான படிப்பின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அதன் பணி தன்மைகள் ஆகியவைப் பற்றி இப்போது அலசலாம். சவுன்ட் டிசைனர் ஒரு திரைப்படத்திற்கான ஒலி அமைப்புகளை, திட்டமிடுதல் மற்றும் வழங்குதல் பணியை சவுன்ட் டிசைனர் மேற்கொள்கிறார். ஒரு படத்தின் ஸ்கிரிப்டை படித்து, சவுன்ட் டிசைனர்களும், கம்போசர்களும், அந்த காட்சிகளுக்கு…
Read More
தமிழகத்தில் கொரோனா பிளாஸ்மா சிகிச்சை!

தமிழகத்தில் கொரோனா பிளாஸ்மா சிகிச்சை!

தமிழகத்தில் கொரோனா பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்து இருக்கிறது. வேகமாக குணமாகும் கொரோனா நோயாளிகள்... இதான் காரணமா? கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா சிகிச்சை தற்போது உலகம் முழுக்க பிரபலம் அடைந்து வருகிறது. இந்த சிகிச்சையை மேற்கொள்ள உலகம் முழுக்க பல நாடுகள் முயன்று வருகிறது. ஏற்கனவே தென்கொரியாவில் இந்த சிகிச்சை மூலம் பலர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அமெரிக்காவிலும் தற்போது இதை வைத்து சோதனைகளை செய்து வருகிறார்கள். விரைவில் அங்கும் பிளாஸ்மா கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்று கூறுகிறார்கள். பிளாஸ்மா தெரபி என்பது ஒருவரின் ரத்தத்தில் இருந்து இன்னொருவரின் ரத்த செல்களுக்கு ஆண்டிபாடிகளை கடத்துவது ஆகும். அதாவது ஒருவரின் ரத்தத்தின் பிளாஸ்மாவில் இருக்கும் எதிர்ப்பு சக்தி செல்களை இன்னொருவரின் ரத்தத்திற்கு அனுப்புவார்கள். பொதுவாக கொரோனா தாக்கி அதில் இருந்து குணமடைந்த ஒருவரின் உடலில் அந்த கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி செல்கள் அதிகம் இருக்கும். இந்த…
Read More
மீண்டும் திறக்கப்படுமா தியேட்டர்கள் ?

மீண்டும் திறக்கப்படுமா தியேட்டர்கள் ?

திரைப்பட தயாரிப்பு அதிகம் ரிஸ்க் உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள்.அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும் அப்படத்தை வெளியிட யாரும் முன்வருவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இத்தகைய பிரச்சனைகள் பெரிய நடிகர்கள்-இயக்குனர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை.இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். ஹிந்தி, தெலுங்கு மற்றும் பல மொழி திரைப்படங்களை இந்த கொரோனா லாக் டவுன் சூழ்நிலையில் அங்குள்ள தயாரிப்பாளர்கள் அவர்களின்…
Read More
நாட்டிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட சேனலாக மாறிய தூர்தர்ஷன் !

நாட்டிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட சேனலாக மாறிய தூர்தர்ஷன் !

கடந்த வாரத்தில் நாட்டிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட சேனலாக தூர்தர்ஷன் சேனல் மாறியுள்ளதாக தொலைக்காட்சி பார்வையாளர் ஆய்வு அமைப்பு (பிஏஆர்சி) தெரிவித்துள்ளது.கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி 21 நாட்கள் லாக் டவுனை பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது மக்கள் வீட்டுக்குள்ளே இருக்கும் விதத்தில் மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தத் தொடரால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலையும் மாலையும் ஒளிபரப்பான ராமாயணத் தொடரை மக்கள் ஆர்வத்துடன் பார்த்ததால், பார்வையாளர்கள் சதவீத்தில் 40 சதவீத வளர்ச்சியை தூர்தர்ஷன் சேனல் பெற்றுள்ளது. தூர்தர்ஷன் சேனல் மட்டுமல்லாமல் தனியார் சேனல்களுக்கும் பார்வையாளர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர் என தொலைக்காட்சி பார்வையாளர் ஆய்வு அமைப்பு (பிஏஆர்சி) தெரிவித்துள்ளது.ராமாயணம் மட்டுமல்லாமல் மகாபாரதம், சக்திமான், புனியாத் ஆகிய தொடர்களையும் மக்கள் விரும்பிப் பார்த்துள்ளனர். இதில் தூர்தர்ஷன் சேனலுக்கு ராமாயணம், மகாபாரதவ்ம் தொடர்கள்தான் பெரும் பார்வையாளர்களைப்…
Read More