அதிமுக பாஜக கூட்டணிக்கு வேட்டு வைத்த நயினார் நாகேந்திரன் ? சமரசம் செஞ்ச அண்ணாமலை !
தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படலை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லைன்னாலும்கூட துணிஞ்சு கேள்வி கேக்குது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில் பேசுவதேயில்லை.
நயினார் நாகேந்திரன் அதிமுக பற்றி பேசிய ‘ஆண்மை’ பேச்சு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்.
தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படலை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லைன்னாலும்கூட துணிஞ்சு கேள்வி கேக்குது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில் பேசுவதேயில்லை.
நயினார் நாகேந்திரன் அதிமுக பற்றி பேசிய ‘ஆண்மை’ பேச்சு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்.
அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வைக்கணும்னு தமிழக பாஜக சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக துணை தலைவரும் சட்டப்பேரவை பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையானது. அவர் பேசும்போது, “தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படலை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லைன்னாலும்கூட துணிஞ்சு கேள்வி எழுப்புது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில் பேசுவதில்லை. பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு கேள்வி கேக்கிறார், எதிர்க்கட்சியாக இல்லைன்னாலும் கூட ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமேன்னு நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்.
நயினார் நாகேந்திரனின் பேச்சு சர்ச்சையான நிலையில், அதிமுகவினர் கொந்தளித்தனர். ஆண்மை இருந்தால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செஞ்சிட்டு, தனியாகப் போட்டியிட்டு ஆண்மையை நிரூபியுங்கள்னு சமூக ஊடகங்களில் அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்தனர். அதிமுக நிர்வாகிகளும் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்திருந்தனர். இதனையத்து தன்னுடைய பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக நயினார் நாகேந்திரன் விளக்கம் அளிச்சாருன்னாலும் அதிமுகவினர் நயினார் நாகேந்திரனை தொடர்ந்து விமர்சிச்சுகிட்டு வர்றாங்க.
இந்தநிலையில் நயினார் நாகேந்திரன் ‘ஆண்மை பேச்சு’ தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை கூறுகையில், “நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜகவின் நிலைப்பாடு கிடையாது. நயினார் நாகேந்திரனுக்கே அதில் உடன்பாடு கிடையாது. அவர் சொல்ல வந்த விஷயம் வேறு. ஆனால், வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தேன். அதிமுக எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த சலனமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம். 2019 முதலே இக்கட்டான சூழ்நிலைகளில் பாஜக அரசுக்கு அதிமுக துணையாக நின்றுள்ளது.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில், கூட்டணிக்குக் குண்டு வைக்கும் வகையில் நயினார் நாகேந்திரனின் பேச்சு அமைந்ததால், அதிமுகவில் கொந்தளிப்பு ஏற்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்பது கீழ்மட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். நயினார் நாகேந்திரனின் பேச்சு தொடர்ந்து பெரிதான நிலையில், இது கீழ்மட்ட அளவில், தேர்தலுக்கு அதிமுக நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், அவசரமாக எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்புகொண்டு, வருத்தம் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. இதன்மூலம், அதிமுகவினர் கூல் ஆவார்கள் என்பது பாஜக தலைவர் அண்ணாமலையின் கணக்கு.ஆனா அதிமுகல இதை யாரும் ஏத்துக்கலை.அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பாஜகவை கூட்டணியில இருந்து கழட்டி விடச் சொல்றாங்க. இபிஎஸ் ஓபிஎஸ் பாஜகவை கழட்டி விடுற மாதிரித் தெரியலை
நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சை, அ.தி.மு.க-வுக்கு எதிரான அஸ்திரமாகத்தான் பலரும் பார்க்கிறார்கள். ஆனால், இதில் உண்மையிலேயே தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வேலைகளும் இருக்கின்றன” என அதிர வைக்கிறார்கள் பா.ஜ.க வட்டாரத்தில்
2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி இப்போதுவரை அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்தாலும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைப்பேசி, அவர்களைச் சீண்டிப் பார்ப்பது தமிழக பா.ஜ.க-வினரின் வழக்கமாக இருக்கிறது. கடந்த காலங்களில் எல்.முருகன், சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி பலரும் அ.தி.மு.க-வை உசுப்பேற்றும் விதத்தில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்த நிலையில், இப்போது அந்த இடத்தைப் பிடித்திருக்கிறார், சட்டமன்ற பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன். ஆனால்,“நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு, அ.தி.மு.க-வுக்கு எதிரான அஸ்திரமாகத்தான் பலரும் பார்க்கிறார்கள். ஆனால், இதில் உண்மையிலேயே தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வேலைகளும் இருக்கின்றன” என அதிர வைக்கிறது கமலாலய வட்டாரம்.
அரியலூர் மாணவி தற்கொலை குறித்து சி.பி.ஐ விசாரணை கோரியும், அவரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கோரியும் தமிழக பா.ஜ.க-வின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சட்டமன்ற பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “சட்டமன்றத்தில் ஆண்மையோடு முதுகெலும்போடு பேசக்கூடிய அ.தி.மு.க-வைப் பார்க்க முடியவில்லை. எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்படவில்லை. சட்டமன்றத்தில் பேசாமல் இருந்தாலும், ஒரு எதிர்க்கட்சியாக பா.ஜ.க திறம்பட செயல்படுகிறது” என்று கூறினார். அவரின் பேச்சு அ.தி.மு.க-வினரை கடும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. அதையடுத்து, உடனடியாக அ.தி.மு.க தரப்பிலிருந்து எதிர்வினை கிளம்பியது.
“நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியது தவறாக திரிக்கப்பட்டு விட்டது. பல இக்கட்டான சூழ்நிலைகளில் பா.ஜ.க-வுக்கு அதிமுக துணை நின்றுள்ளது… அ.தி.மு.க – பா.ஜ.க உறவு ஒரு இயற்கையான உறவு. இரு கட்சிகளுக்கிடையிலான அரசியல் உறவு சுமுகமாக இருக்கிறது. அந்த உறவில் எந்த பதற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.”
தவிர நயினார் நாகேந்திரனும், “என்னுடைய கருத்து தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது” என விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் தொடர்ந்தும் அ.தி.மு.க தரப்பில் இருந்து கடுமையான எதிர்வினைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. “கூட்டணி தர்மத்தைக் கடைபிடிக்கவேண்டும். குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் வேலையை பா.ஜ.க இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரம் குறித்து கொதிப்புடன் பேசியிருந்தார். “நகர்புற உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது. அதற்கான முன்னோட்டம்தான் நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு” என தமிழக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், “பா.ஜ.கவுக்குள்ளேயே நடக்கும் பனிப்போரின் வெளிப்பாடுதான் நயினாரின் இந்தப் பேச்சு” என பா.ஜ.க முன்னணி நிர்வாகி ஒருவர்,விரிவா சொல்றாரு..
“சமீபத்தில் சென்னையில் எங்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பற்றியும் பேசப்பட்டது. அப்போது, மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும், நயினார் நாகேந்திரனும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலைச் சந்திப்பது குறித்து பேசினாங்க.. அதற்கு அவர்கள் அரசியல் ரீதியாக சில காரணங்களையும் அடுக்கினர். ஆனால், அவர்கள் அங்கு பேசாத அரசியல் கணக்குகளும் இருக்கின்றன. திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மூன்று முனைப் போட்டி இருந்தால் மட்டுமே தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என இருவருமே விரும்புகின்றனர். அவர்கள் இருவருக்கும் இடையில் சில கசப்புகள் இருந்தாலும், இந்த விஷயத்தில் ஒற்றுமையாக செயல்பட்டனர். காரணம், தமிழகத்தின் மற்ற பகுதிகளைவிட, தங்களின் மாவட்டத்தில் அதிக இடங்களில் வென்று டெல்லி தலைமைக்கு தங்களின் செல்வாக்கை நிரூபிக்க நினைத்தனர். ஆனால், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகமும் அதற்கு ஒப்புக்கொள்ளலையாம்
அதுமட்டுமல்ல, சமீபத்தில் திருநெல்வேலியில் பா.ஜ.க மாவட்டத் தலைமை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகைல நயினார் நாகேந்திரனின் புகைப்படம் இடம் பெறவில்லை. அதனால், அண்ணாமலையுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் நயினார் நாகேந்திரன். எல்.முருகன் மத்திய அமைச்சரான பிறகு தலைவர் பதவி தனக்குக்குத்தான் கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார் நயினார். ஆனால், அது கிடைக்காமல் போனபோதே கடுமையான ஏமாற்றமடைந்தார். தொடர்ந்து, அவரைப் புறக்கணிக்கும் விதத்தில் சில சம்பவங்கள் கட்சிக்குள் நடக்கவும் எப்படியாவது அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும் என நினைத்தார். அதனால்தான், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படியொரு குண்டைத் தூக்கிப் போட்டு கூட்டணியைப் பதம் பார்க்க நினைத்துவிட்டார். கடந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, திருநெல்வேலியில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன்.,
`அ.தி.மு.க என்பது ஒரு காட்டாற்று வெள்ளம். வெள்ளம் அதிகமாக வரும்போது சற்று வழுக்கி ஓடும். அதைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. அதற்காக அ.தி.மு.க-வுக்கு எந்தக் குறையும் வராது’ என உணர்ச்சி பொங்கப் பேசினார். இப்போது, அவரே அ.தி.மு.க-வை விமர்சித்துப் பேசுவதை அந்தக் கட்சிக்கு எதிரான விமர்சனமாக பார்ப்பதைவிட அண்ணாமலைக்கு எதிரான ஸ்கெட்சாகத்தான் நாம் பார்க்கவேண்டும். ஆனால், நயினாரின் இந்த எரிகணையை மிகச் சாதுர்யமாகக் கையாண்டிருக்கிறார் அண்ணாமலை. வழக்கமாக, அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்குள் ஏதாவது பிரச்னைகள் வந்தால், அதைக் காதோடு காதாக பேசிச் சரிசெய்வதுதான் பா.ஜ.க தலைவர்களின் வழக்கம். ஆனால், முதன்முறையாக வெளிப்படையாக, வருத்தம் தெரிவித்து, எடப்பாடி பழனிசாமியிடம் பேசியதையும் வெளிப்படையாக சொல்லியதன் மூலம் நயினாரை டெல்லி தலைமைக்கு எப்படி அடையாளப்படுத்த நினைத்தாரோ அதைச் செய்துவிட்டார்.இதுவரை, ஓ.பி.எஸ்ஸுக்கு மட்டுமே நெருக்கமாக, ஆதரவாக இருந்தவந்தார் அண்ணாமலை. இந்தச் சம்பவத்தின்மூலம் எடப்பாடியையும் சமாதானப்படுத்தி அவருடனும் நெருங்கிவிட்டார். ஆக மொத்தத்தில், பா.ஜ.க – அ.தி.மு.க- வுக்கு இடையிலான ஒரு விவகாரம் அல்ல இது. அ.தி.மு.கவைப் பகடையாகப் பயன்படுத்தி பா.ஜ.க-வுக்குள்ளேயே நடந்த யுத்தம்” என்றார் அவர். ஆனால், வேறுசிலரோ, “ தலைமையின் அனுமதியோ, ஆதரவோ இல்லாமல் நயினார் இப்படிப் பேசியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை. கண்டிப்பாக இது அ.தி.மு.க-வுக்கு எதிரான ஸ்கெட்ச்தான்” என அடித்துச் சொல்கின்றனர்.
எது உண்மை என்று இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும். ஆகமொத்தம், தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் இன்னும் சூடாகும் என்பது மட்டும் தெரிகிறது.