சினிமா

தமிழ் இயக்குநர்களிடம் கேளுங்கள் நான் நடிக்க ரெடி.! அல்லு அர்ஜூன்பேட்டி!

தமிழ் இயக்குநர்களிடம் கேளுங்கள் நான் நடிக்க ரெடி.! அல்லு அர்ஜூன்பேட்டி!

டிசம்பர் 17- ஆம் தேதி வெளியாகவுள்ள புஷ்பா: தி ரைஸ் படத்தின் முன் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்பதிப்பின் முன்வெளியீட்டுக்காக தமிழ் சினிமா பிரபலங்களுடன், நடிகர் அல்லு அர்ஜீன், உட்பட படக்குழுவினர் சென்னையில்  பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் திருப்பதி பிரசாத் பேசியதாவது… அல்லு அர்ஜூன், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், இயக்குநர் சுகுமார் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அல்லு அர்ஜூன் இங்கு சென்னையில் தி நகரில் தான் வளர்ந்தார். சின்னக்குழந்தையிலேயே ஒழுக்கத்தில் சிறந்தவராக இருந்தார். இந்தப்படம் காட்டுக்குள் அதிகம் படமாக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பா வெற்றிப்படமாக இப்படம் இருக்கும். தமிழ் ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும். எல்லோருக்கும் வாழ்த்துகள். லைகா புரடக்சன்ஸ் சார்பாக தமிழ்க்குமரன் பேசும்போது,.… பிரமாண்ட படங்களை வழங்குவதில் லைகா புரடக்சன்ஸ் பெருமை கொள்கிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமான புஷ்பா படத்தை நாங்கள் வெளியிடுவது பெருமை. இது வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. படக்குழுவினருக்கு லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன்…
Read More
ரஜினி சாரை வைத்து படமெடுக்க எனக்கும் ஆசை இருக்கிறது.

ரஜினி சாரை வைத்து படமெடுக்க எனக்கும் ஆசை இருக்கிறது.

இந்த வருடத்தின் இந்திய பிரமாண்டம் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் வரலாற்று திரை அனுபவம், பாகுபலியின் பிரமாண்டத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்). இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் பிரமாண்ட படைப்பாக Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா ஆகியோர் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்கள். இந்திய திரைத்துறையில் மொழி, மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம். தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் “RRR” திரைப்படத்தில் பாலிவுட் முன்னணி நாயகி ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள்…
Read More
அமைச்சரவை மாற்றம் ? ஸ்டாலின் மனமாற்றம் ! என்ன காரணம் !! முதல்வர் ஸ்டாலினுக்கு உளவுத்துறை மூலம் ஒரு ரிப்போர்ட் வந்ததாகவும், அதை அடிப்படையாக வைத்து 2 வித முடிவுகளை அவர் எடுக்க போவதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கசிஞ்சு வருது திமுக ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த சில நாட்களில் இருந்தே, அமைச்சரவை மாற்றம்ங்கிற செய்தி கசிஞ்சிகிட்டே வருது.. அமைச்சர்களில் சிலர் மாற்றப்பட உள்ளதாகவும், அதனால் சீனியர்கள் பலர் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருது. இதற்கு 2 விதமான காரணங்கள் சொல்லப்பட்டது.. ஒன்று, சீனியர்களுக்கு இலாகாவை குறைத்து தந்ததால் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் தங்கள் பணிகளை சரியாக செய்வதில்லை என்றும் கூறப்பட்டது.. மற்றொன்று சீனியர் அமைச்சர்களே சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டி கொண்டதால், அமைச்சரவை மாற்றப்படலாம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை அப்படி எதுவுமே நடக்கலை.. ஏன்னா, மிகக்குறுகிய காலத்தில் அமைச்சர்களை மாற்றுவது கட்சிக்கு நல்லதல்ல என்பது மட்டுமல்ல, அமைச்சர்கள் நியமனத்தில்…
Read More
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம்… 4 வருடத்தில் 4 ஆலோசகர்களுக்கு 4 கோடி சம்பளம்… ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்!! கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில், நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகளில், நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் தரப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த ஆட்சி ஏராளமான ஊழல்களும் முறைகேடுகளும் நடந்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களையும் முறைகேடுகளையும் களைய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில், நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகளில், நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் தரப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 1,142 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பில் 73 பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, இதுவரை 322.62 கோடி ரூபாய் மதிப்பிலான 56…
Read More
விஜய் சேதுபதி கதை சொல்லும் ‘கடைசீல பிரியாணி’…

விஜய் சேதுபதி கதை சொல்லும் ‘கடைசீல பிரியாணி’…

நிஷாந்த் கலிதிண்டியின் கடசீல பிரியாணி முழுக்க முழுக்க சினிமா விறுவிறுப்பும், ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை கவர்ந்து இழுத்துச் செல்லும். இருண்ட காமிக் அதிர்வுடன் கூடிய த்ரில்லர் போல இந்த படம் விரிவடைகிறது மற்றும் வண்ணமயமான கதாபாத்திரங்களால் நிரம்பியுள்ளது. பெரிய பாண்டியின் கொதித்தெழுந்த ஆத்திரம் இருந்தபோதிலும், பாண்டி சகோதரர்கள் தங்கள் லீக்கிலிருந்து வெளியேறும் ஏதோவொன்றில் இறங்கிய புத்திசாலித்தனமான மனிதர்களாக வருகிறார்கள். எதிரி மிகவும் வன்முறையான ஒரு மனிதன், அவர் ஒரே நேரத்தில் பயங்கரமாகவும் கேலிச்சித்திரமாகவும் உணர்கிறார். ஒளிப்பதிவு இயக்கவியல் (கதாப்பாத்திரங்களுடன் கேமரா நகரும் போது, ​​நாம் அவர்களுடன் சேர்ந்து நகர்வதைப் போல உணர்கிறோம்) மற்றும் மிகவும் கச்சிதமாக (ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப் மற்றும் ஆசீம் முகமது உருவாக்கும் காட்சி தொனி பளபளப்பாகவோ அல்லது மோசமான புதுப்பாணியானதாகவோ இல்லை, ஆனால் உணர்கிறது. ஃபிலிம் ஸ்டாக் மீது யாரோ மணல துகள்கள் கொண்ட காகிதத்தை தேய்த்தது போல). கதாபாத்திரங்கள் அனைத்தும் கரடுமுரடான விளிம்புகள்…
Read More

ஜாக்கிரதை, நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!

நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பது மட்டும் நிச்சயம். நம்மில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.   அண்மையில் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள ஒரு முடிவு நமது நாட்டின் ஜனநாயக உணர்வுகளின் மீதான தாக்குதலாக அமைந்திருக்கிறது. மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசு என்பது ஆபிரஹாம் லிங்கன் ஜனநாயக அரசுக்குக் கொடுத்த அற்புதமான விளக்கம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த நாட்டை விட்டுச் சென்ற பிறகு நமக்கு அமையும் அரசு இத்தகைய ஜனநாயக உணர்வு கொண்ட அரசாக இருக்கும் என்று நாம் நம்பினோம். கடந்த 70 ஆண்டுகளில் இந்த நம்பிக்கை பல முறை ஆட்டம் கண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அது மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது.இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்த பாஜக, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. 40 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்களின் ஆதரவைப் பெற்ற அக்கட்சி பெரும்பான்மை வாக்காளர்களின் விருப்பத்தின் பேரில் தனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்திருப்பதாகச் சொல்லிக்கொள்கிறது. பெரும்பான்மை பெறும்…
Read More
ஸ்மார்ட் சிட்டி ஊழல் ? சிக்குகிறார் வேலுமணி? சென்னையில் ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்னு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அந்தப் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனங்கள் இப்போது ஆடிப் போயிருக்காங்க. மேலும் ஒப்பந்தத்தை நிறுவனங்களுக்கு கொடுக்க காரணமான அதிகாரிகள் முதல் அப்போது அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி வரை பலர் இந்த விவகாரத்தில் சிக்குவாங்கங்கிறாங்க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானதாக கூறப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தத்தில் பணிகள் கொடுக்கப்பட்டதாக தெரியுது. அந்த வகையில் சென்னை தி.நகர் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தப் பணியை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்ட பெரிய நிறுவனத்துக்கு மொத்தமாக கொடுக்கப்பட்டு, பிறகு அந்த நிறுவனம் பணிகளை சப் காண்ட்டிராக்ட் முறையில் பிரித்து கொடுத்ததாக சொல்லப்படுது. மனிதர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் உருவாக்குவதன் அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்தவகையில் எங்கு ஸ்மார்ட்…
Read More
அரசு வேலை வாங்கித்தர்றேன்னு சொல்லி ரூ70 லட்சம் மோசடி; அதிமுக மாஜி அமைச்சர் சரோஜா தலைமறைவு? அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ70 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வர்றாங்க. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த அதிமுகவை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் சரோஜா. இவர், அமைச்சராக இருந்த போது சத்துணவு திட்டத்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று கொண்டு மோசடி செஞ்சிட்டதா அவரது உறவினர் குணசீலன் பரபரப்பு புகார் அளிச்சிருந்தாரு. இதன்பேரில் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் மேல மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செஞ்சிருக்காங்க. இந்த புகாரின் பேரில் ரூ70 லட்சம் வரை பலரிடம் சரோஜா பணம் வாங்கி கொண்டு மோசடி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தவுடன், சரோஜா மற்றும் அவரது…
Read More
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் படம் பற்றிய பேச்சுகள் இன்னமும் முடியவில்லை. அந்த படத்தில் பழங்குடியின இளைஞர் ராஜாக்கண்ணு என்பவரை கொலை செய்த காவல்துறை அதிகாரியின் உண்மையான பெயரான அந்தோணிசாமி என்பதற்கு பதில் குருமூர்த்தி என்று சூட்டப்பட்ட இருக்கும். இந்த படத்தில் வன்னியர் சமுதாயத்தை திட்டமிட்டு இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் எழுப்பி இருந்தார். அவரது கேள்விகள் பற்றிய விமர்சனங்கள் மீம்சுகளாக மாறி இணையத்தில் உலா வந்தன. படைப்பு சுதந்திரத்தில் தலையிட வேண்டும் என்றும் கருத்துகள் கூறப்பட்டன. உங்க ஜாதிக்காரங்க எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்தீங்க... அன்புமணியை அட்டாக் செய்த ஜோதிகா..! உங்களுக்கு அடிமையா பத்து பேர்... அடியாளுங்களா பத்து பேரை உருவாக்கியிருக்கீங்களே தவிர வேறு என்ன செய்திருக்கீங்க தலைவரே பதில் சொல்லுங்க நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் படம்…
Read More
5 ஆயிரம் கோடியை வாயில் போட்ட S.P வேலுமணி ? வேலுமணி தப்பிக்க வாய்ப்பில்லை. ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை நிச்சயம் ? ஸ்டாலின் அதிரடி!! 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்ற சென்னையின் முக்கிய நகர்களில் உள்ள சாலைகள் ஒரு நாள் மழைக்கே தாக்குபிடிக்காமல் வெள்ளக்காடாக மாறியது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் மூன்றாவது நாளாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. தியாகராயர் நகர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் தவிச்சுகிட்டு வர்றாங்க.சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி திநகர்லேயே முகாமிட்டு மழை நீரை வெளியேற்றும் முயற்சில இருக்காரு.யாரோ செஞ்சு தப்புக்கு யாருக்கு தண்டனைன்னு பாருங்க. தியாகராயர் நகரில் முக்கிய சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரால் போக்குவரத்து பாதிப்போட வியாபாரமும்…
Read More