சினிமா

நாயாடி – விமர்சனம் !

நாயாடி – விமர்சனம் !

ஆதர்ஷ் மதிகாந்தம் தயாரித்து இயக்கி நடித்துள்ள 'நாயாடி' படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படம் வெளியாகியிருக்குது. தமிழ்நாட்டை சேர்ந்த ஆதர்ஷ் மதிகாந்தம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்மூலம் தான் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்துள்ளார். அதன்படி, ‘நாயாடி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி, ஹீரோ கேரக்டரிலும் நடித்துள்ளார். ஹீரோயினாக காதம்பரி, பிரபல யூடியூபர் பேபி  ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அருண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கேரளாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்த வரலாறோடு இப்படம் தொடங்குகிறது. இதுவரை கேள்விப்படாத சமூகமாக இருக்கிறது.அடிமைகளாக இருந்த அம்மக்கள் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பில்லி சூனியம் உள்ளிட்ட மாந்தீரிகங்களை கற்றுக்கொள்கின்றனர். இதனிடையே யூட்யூப் சேனல் நடத்தும் ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, பேபி உள்ளிட்ட 6 பேர் கொண்ட நண்பர்கள் குழு வாயாடி சமூகத்தைப் பற்றி வீடியோவாக எடுத்து வெளியிட வருகிறார்கள்.…
Read More
கார்கேவை பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ்  முயற்சி!

கார்கேவை பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ் முயற்சி!

அடுத்த பிரதமர் யார் ?கார்கே VS மோடி ? மோடி அலை காரணமாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக தொடருது. இன்னும் சரியா ஒரு வருடத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் பாஜக மீண்டும் வென்று வரலாறு படைக்கும் நிலமை தான் இப்ப இருக்குது. இதை தடுக்கும் முயற்சியில், ஐக்கிய ஜனதா தளத் தலைவரான பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் இறங்கியிருக்காரு.?. இவரது முயற்சியால் எதிர்க்கட்சித் தலைவர்களில் பெரும்பாலானோர் நாளை பிஹாரின் பாட்னாவில் கூடுகின்றனர். முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவதுங்கிறதப்பத்தி ஆராய எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. ஏன்னா அந்தப்பதவிக்கு அவங்ககிட்டேயே பலரும் போட்டியில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை வெல்ல அவருக்கு நிகரான ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது அவசியம். இந்நிலையில் காந்தி குடும்பத்தினரை பிரதமர் வேட்பாளராக்க திமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகளைத் தவிர, இதர எதிர்க்கட்சிகளுக்கு கொஞ்சம் கூட…
Read More
பள்ளி வேலை நேரத்தில் மாற்றம்... இனிமே காலை 7.30 மணிக்கே... மாநில அரசு அதிரடி! கோடை வெயிலின் தாக்கம் பெரிய அளவில் காணப்படுவதால் பள்ளி மாணவர்கள் சிலர் மயங்கி விழும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. இதனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ​வெயிலின் தாக்கம் கோடை வெயில் இன்னும் குறையவில்லை. குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் சொல்லவே தேவையில்லை. வடகிழக்கு மாநிலங்களில் இதமான வானிலை நிலவும் என்று கேள்விப்பட்டிருப்போம். அங்கேயும் வெயில் வாட்டி எடுப்பதாக மக்கள் கூறுகின்றனர். அசாம் மாநிலத்தில் அனல் காற்று வீசி வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. பள்ளிகள் திறப்பு இதற்கிடையில் கோடை விடுமுறை முடிந்து அசாமில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் வெயிலை தாக்குப் பிடிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்திய…
Read More
புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’ !

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’ !

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் 'பேட்ட ராப்' டி இமான் இசையில் உருவாகவுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த 'பேட்ட ராப்' திரைப்படத்தில் வேதிகா நாயகியாக நடிக்கிறார் நடிகர்-நடன இயக்குநர்-இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் 'பேட்ட ராப்' என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. ஜூன் 15, 2023 அன்று புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். 'தேரு' (2023) மற்றும் 'ஜிபூட்டி' (2021) போன்ற மலையாளப் படங்களை எஸ் ஜே சினு இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.…
Read More
நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன்  இணைகிறது!

நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது!

குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து அறிவித்தார். புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட வி மெகா பிக்சர்ஸ், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ வெற்றிப் படங்களை தயாரித்த அகில இந்திய தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைந்துள்ளது. அபிஷேக் அகர்வால் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது வி மெகா பிக்சர்ஸ் உடன் இணைந்து புதுமையான ஒரு படைப்பை பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது. பான்-இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இதில், இளம் நாயகன் ஒருவர் முதன்மை வேடத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் இயக்க உள்ளார். திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதர தகவல்களும் விரைவில் வெளியாக உள்ளன. வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால்…
Read More
கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68 !

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68 !

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றவுள்ளார். 'பிகில்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. #Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது. சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், #தளபதி68 அதன் மிகச்சிறந்த படமாக…
Read More
அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டுள்ள புதிய ஓடிடி தளமான எம்.எஸ்.எஃப் !

அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டுள்ள புதிய ஓடிடி தளமான எம்.எஸ்.எஃப் !

புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டுள்ள புதிய ஓடிடி தளமான எம்.எஸ்.எஃப்-பின் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) முதல் பிரத்தியேக வெளியீடாக முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ரிங் ரிங்' திறமைமிகுந்த புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தொழில்முனைவர் ராஜேஷ் கண்ணா, தொழில்நுட்ப தொழில்முனைவோரும் ஓடிடி தளங்களின் கைதேர்ந்தவருமான சுதாகர் சோழங்கத்தேவர் ஆகியோர் இணைந்து அகில இந்திய அளவில் முதல் முன்முயற்சியாக எம்.எஸ்.எஃப் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) என்ற புதிய ஓடிடி தளத்தை சமீபத்தில் தொடங்கினர். இந்த ஓடிடி தளத்தின் முதல் பிரத்தியேக வெளியீடாக முழு நீள நகைச்சுவை திரைப்படமான 'ரிங் ரிங்' வரும் ஜூலை மாதம் 5-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. திருமணத்திற்குப் பிந்தைய பிரச்சினைகளை மிகவும் நகைச்சுவையான முறையில் 'ரிங் ரிங்' விவரிக்கிறது. சக்திவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக் பிரசன்னா,…
Read More
யாதும் ஊரே யாவரும் கேளிர் -விமர்சனம் !!

யாதும் ஊரே யாவரும் கேளிர் -விமர்சனம் !!

இலங்கை தமிழர் பிரச்சனைகளை பற்றி பேசும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் பலர் வீராவேசமாக உணர்ச்சி பொங்க பேசுவார்கள். ஆனால் நம் ஊரில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் பற்றி பேசமாட்டார்கள். அகதிகளுக்கு வாக்குரிமை இல்லாததே இதற்கு காரணம்.வாக்குரிமை மட்டும் இருந்தால் அரசியல்வாதிகள் கொண்டாடுவார்கள். ஒரு இலங்கை அகதியின் பார்வையில் சந்திக்கும் பிரச்சனையாக வந்துள்ளது யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம். இப்படத்தை வெங்கட கிருஷ்ணா ரோஹிந்த் இயக்கி உள்ளார். இலங்கையின் மோசமான போர் சூழலில் ஆதரவு அற்ற சிறுவன் புனிதனை பாதிரியார் ஒருவர் லண்டனில் உள்ள இசை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சிக்கிறார். செல்லும் வழியில் ராணுவத்தினர் பிடியில் மாட்டி சிறையில் அடைக்கப் படுகிறான். விடுதலை அடைந்து கள்ள தோணியில் கேரளா செல்கிறான்.அங்கே உள்ள இசை கருவிகள் செய்யும் கடையில் வேலை செய்கிறான். இந்நிலையில் லண்டன் இசைப்பள்ளியில் போட்டியில் ஆன் லைன் மூலமாக கலந்து கொள்கிறான்.எந்த ஒரு நாட்டின் குடியுரிமையும்…
Read More
அதிகார பலம், பணபலம், பொய்ப் பிரச்சாரங்கள்..எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது! பாஜகவின் தோல்விக்கான காரணங்கள் காத்திரமானவை! காங்கிரசின் வெற்றிக்கான சூத்திரங்கள் நுட்பமானவை! இந்த தோல்வி பாஜகவிற்கு தேசிய அளவிலும், தமிழக அளவிலும் என்னென்ன பின்னடைவுகளைத் தரும்? கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற தன் முழு பலத்தையும் பிரயோகித்தது பாஜக! பிரதமர் மோடி ஆறுமுறை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்ததோடு தெருத்தெருவாக சென்று ஓட்டு கேட்டார்! உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து முழங்கினார்! தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பெருந்தலைகளின் பிரச்சாரம் எதுவுமே மக்களிடையே எடுபடாமல் போய்விட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கின்ற ஹோதாவில் பாஜக இந்த தேர்தலில் செய்த அத்துமீறல்களும் கொஞ்ச, நஞ்சமல்ல! அத்தனையையும் கடந்து குழப்பமில்லாத தெளிவான வெற்றியை மக்கள் காங்கிரஸுக்கு தந்துள்ளனர். பாஜகவிற்கு பெருத்த பின்னடைவாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டன! காரணம், இந்த நான்கு வருட ஆட்சியில் பாஜக அரசு செய்த மிதமிஞ்சிய…
Read More
எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இயங்கும் விழி ஒளி பரிசோதகர் பயிற்சி பள்ளியின் 60ஆம் ஆண்டு விழா மற்றும் உலக விழி ஒளி ஆய்வாளர் தினம் சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மருத்துவ கல்வி இயக்குனர் மரு.R.சாந்தி மலர் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது:- இந்த பயிற்சிப் பள்ளி 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது.எழும்பூர் கண்மருத்துவமனை இயக்குநராக இருந்த RGS முத்தையா அவர்கள்பிரைமரி ஹெல்த் கேர் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த பயிற்சிப் பள்ளியைத் துவக்கினார். என்றும் ஆரம்பத்தில் டிப்ளமா இன் ஆத்தால்மாலஜியாகத் தொடங்கி பின்னர் பிஎஸ்சி ஆப்தாலமாலாஜியாக விரிவு செய்ய படுத்தப்பட்டது.தற்போது எம்எஸ்சி ஆப்தாலமாலஜியாக ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார் . ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை கல்லூரி டீன் மரு.E.தேரணிராஜன், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் மரு.M.R.சித்ரா மற்றும் விழி ஒளி…
Read More