23
Jun
ஆதர்ஷ் மதிகாந்தம் தயாரித்து இயக்கி நடித்துள்ள 'நாயாடி' படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படம் வெளியாகியிருக்குது. தமிழ்நாட்டை சேர்ந்த ஆதர்ஷ் மதிகாந்தம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்மூலம் தான் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்துள்ளார். அதன்படி, ‘நாயாடி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி, ஹீரோ கேரக்டரிலும் நடித்துள்ளார். ஹீரோயினாக காதம்பரி, பிரபல யூடியூபர் பேபி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அருண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கேரளாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்த வரலாறோடு இப்படம் தொடங்குகிறது. இதுவரை கேள்விப்படாத சமூகமாக இருக்கிறது.அடிமைகளாக இருந்த அம்மக்கள் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பில்லி சூனியம் உள்ளிட்ட மாந்தீரிகங்களை கற்றுக்கொள்கின்றனர். இதனிடையே யூட்யூப் சேனல் நடத்தும் ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, பேபி உள்ளிட்ட 6 பேர் கொண்ட நண்பர்கள் குழு வாயாடி சமூகத்தைப் பற்றி வீடியோவாக எடுத்து வெளியிட வருகிறார்கள்.…
