சினிமா

‘கொம்பு வச்ச சிங்கம்டா’

‘கொம்பு வச்ச சிங்கம்டா’

சாதியில்லை, சாமியில்லை என்று சொல்லி ஊருக்குள் புரட்சி பேசும் ஆறு நண்பர்களுக்குள் பிரச்சினை வெடித்து அவர்கள் பிரிந்ததால் உருவானது தான் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. படத்தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் ஊரே கொண்டாடி, மரியாதை செய்யும் அளவுக்கு செல்வாக்குடன் இருக்கிறார் இயக்குனர் மகேந்திரன். இவரது ஒரே மகன் சசிகுமார் பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி சமத்துவம், சகோதரத்துவம் என்று ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற நினைக்கிறார். இதனால் ஊருக்குள் இருக்கும் பல பேரின் பகையைச் சம்பாதிக்க நேர்கிறது. அந்த நேரத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் இரு பெரும் கோஷ்டிகள் மோதுகின்றன. அதில் மாமனாருக்காக சசிகுமாரும் எதிர்க்கோஷ்டிக்கு 3 நண்பர்களுமாகப் பிரிந்து தேர்தல் வேலை செய்கிறார்கள்.அதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலைச் சம்பவம் நிகழ்கிறது. இந்தக் கொலை வழக்கில் சசிகுமார், சூரி உள்ளிட்ட மூன்று பேர் கைதாகிறார்கள். நண்பர்களுக்குள் உருவான பிரச்சினை ஊர்ப் பிரச்சினையாகவும், சாதிப் பிரச்சினையாகவும் உருமாறுகிறது.…
Read More
‘நாய் சேகர்’ கலகலப்பாத்தான் இருந்தது.

‘நாய் சேகர்’ கலகலப்பாத்தான் இருந்தது.

விலங்குகள் ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சதிஷ் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரை ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் சதிஷை கடித்து விடுகிறது. இதிலிருந்து நாயின் குணாதிசயங்கள் சதிசுக்கும் வருகிறது. இதனால், சதிஷ் வாழ்க்கையில் பிரச்சனைகளும் மாற்றங்களும் ஏற்படுகிறது. மாற்று மருந்து தயாரான நிலையில் கடித்த படையப்பாங்கிற நாய் காணாமல் போகிறது. இறுதியில் நாய் கிடைத்ததா? சதிஷ் மனிதனாக மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வந்த சதிஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காமெடியை விட சென்டிமென்ட், காதல், நடனம் என தனது திறமையை கொஞ்சம் நிரூபித்திருக்கிறார். நாய்க்குள்ள குணாதிசயங்கள் வந்தவுடன் நாயைப் போல் சைகை செய்வது, பின்னர் உணர்ந்து வருந்துவது என நடிப்பில் ஸ்கோர் பண்ண முயற்சி செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா லட்சுமி அளவான…
Read More
சசிகலா என்ட்ரிக்கு ஓகே சொன்ன டெல்லி! இணைப்புக்கு தேதி குறிச்சாச்சா? Mariathangaraj Jeyapal | Samayam TamilUpdated: 21 Dec 2021, 8:20 am 1600 Subscribe அதிமுகவுக்குள்ளும், டெல்லி மேலிடத்திலும் சசிகலாவுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா அதிமுக அலுவலகத்துக்குள் கால் வைப்பதற்கான காலம் கனிந்துவிட்டதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். சமயம் தமிழ் விருதுகள் 2021 - உங்கள் வாக்கு யாருக்கு? எடப்பாடி பழனிசாமி தரப்பு சசிகலா கட்சிக்குள் வருவதற்கு கொஞ்சமும் வாய்ப்பளித்துவிடாது என்று தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சசிகலாவை காட்டி கட்சிக்குள் தனக்கான வலுவான இடத்தை தக்கவைத்து வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். இருப்பினும் சசிகலாவோ அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது தொடர் முயற்சிக்கு பலன் கிடைத்துவிட்டதாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். மதுரைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொண்டர் கூட்டம் தன் பின்னால் இருக்கிறது என்று சசிகலா ஒரு சேதி சொன்னார். ஆனால் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளோ, டெல்லி மேலிடமோ…
Read More
மோடிக்கு எதிராக காங். அல்லாத கூட்டணிக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு- மமதா முயற்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுது. 2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) எதிராக காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்குவதில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இம்முயற்சிகளை திமுக மீண்டும் மீண்டும் எதிர்த்து வருவதால் மமதா பானர்ஜிக்கு இது பின்னடைவாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்திதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என முதன் முதலில் திமுக தலைவரும் இன்றைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்போது பல எதிர்க்கட்சிகள் இதனை ரசிக்காமல் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டன. ஆனாலும் திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தது. அத்தேர்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்று மத்தியில் 2-வது முறையாக ஆட்சியை…
Read More
ராக்கி -ரத்தக்களறி !!

ராக்கி -ரத்தக்களறி !!

இலங்கையிலிருந்து தமிழகம் வர்றவங்க எல்லோரும் இன்றளவும் முக்கால்வாசி பேர் அகதி முகாமில் தான் அடைக்கப்பட்டு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் இருக்கும் சூழலில் அப்படியான இலங்கையிலிருந்த தமிழ்வாசியை வைத்து ஒரு குரூரமான அதுவும் பாரதிராஜாவையும் நடிக்க வைத்து இப்படி ஒரு கரூரமான ஒரு பக்கா சிகப்பு படத்தை கொடுத்து அசத்த முயன்றிருக்கும் இயக்குநருக்கு முதலில் ஒரு சபாஷ் சொல்லித்தான் ஆக வேண்டும்.தரமணி படத்தில் மிரட்டிய நடிகர் வசந்த் ரவி இந்த படத்திலும் வேற லெவலில் மிரட்டி உள்ளார். வசந்த் ரவி 8 அடி பாய்ந்தால் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிப்பில் 16 அடி பாய்ந்துள்ளார்.  கேங்ஸ்டர் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது என்பதால் கதை எதுவே இல்லாமல் பழிவாங்குவதற்குண்டான சரியான காரணம் இல்லாமல் காட்சிகளை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டது போல இருக்கும் ராக்கி ரசிக்க வைக்கிறதான்னு கேட்டா நிச்சயமா இல்லைன்னு தான் சொல்லணும். கையில் சுத்தியல்.. முகத்தில்…
Read More
புஷ்பா : தி ரைஸ் – எழுச்சி !

புஷ்பா : தி ரைஸ் – எழுச்சி !

ஆந்திர பகுதியில் ஷேஷாசலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. மேலும், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை ஓரளவுக்கு பூர்த்தி செய்திருக்குதுன்னு தான் சொல்லணும். திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளன. அதில் முதல் பாகமான புஷ்பா : தி ரைஸ் மிகப்பெரிய அளவில் வெளியாகி உள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் லாரி டிரைவராக நடித்துள்ளார். சாதாரண கூலி வேலை செய்யும் புஸ்பா டிரைவராக செல்கிறார். அங்கு திடீரென போலீஸ் வருவதை அறிந்து செம்மரக்கட்டைகளை மறைத்து வைக்கிறார். பின் தான் மட்டும் போலீசிடம் சரணடைகிறார் புஷ்பா. - இதனை கேள்விப்படும் செம்மர கடத்தல் தலைவர்களில் ஒருவரான கொண்டா ரெட்டி புஷ்பாவை பெயிலில் எடுக்கிறார். பின் புஷ்பா அவருடன் சேர்ந்து செம்மரக்கடத்தல் தொழிலில்…
Read More

அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து

திமுக அமைச்சர்கள் சிலரின் பேச்சுக்கள் அத்துமீறல் என்பதைத் தாண்டிப் பல ஆபத்துகளைக் கொண்டவை.   ஹைலைட்ஸ்: துரைமுருகன் உள்ளிட்ட சில அமைச்சர்களின் பேச்சுக்கள் சர்ச்சைகளையும் ஆட்சிக்குக் கெட்ட பெயரையும் கொண்டுவருகின்றன. அமைச்சர் நாசரின் பேச்சு பகுத்தறிவுக்கும் மதச்சார்பின்மைக்கும் முரணாக உள்ளது. பிகார் மாநிலத்தவர்களைப் பற்றி அமைச்சர் நேரு இழிவாகப் பேசினார். திமுக அரசின் செயல்பாடுகள் பல முனைகளிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றுவரும் நிலையில் அதன் அமைச்சர்கள் சிலர் பேசும் பேச்சுக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்துவதுடன் ஆட்சிக்குக் கெட்ட பெயரையும் கொண்டுவருகின்றன. சர்ச்சைகள், கெட்ட பெயர்களையெல்லாம் தாண்டி, இந்தப் பேச்சுக்கள் சிலரை ஆழமாகக் காயப்படுத்துவதும் இந்தப் பேச்சுக்களுக்குப் பின்னால் இருக்கும் மனப்போக்கும்தான் இதிலுள்ள முக்கியமான பிரச்சினைகள்.மிக மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனின் பேச்சு வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம் திமுகவின் தற்போதைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று. பரவலான பாராட்டைப் பெற்ற திட்டம் இது. எனினும், சென்னையில் இலவசப் பயணம் மேற்கொள்ளும்…
Read More
துரத்தும் தோல்விகள்: பரிகார பூஜைக்குத் தயாராகும் சசிகலா? முக்கியமான அரசியல் சக்தியாக விளங்கிவந்த சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இறங்குமுகம்தான்.   ஹைலைட்ஸ்: சசிகலாவின் கோரிக்கையை ரஜினிகாந்த் ஏற்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. குடும்பத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது என்று சசிகலா தன் உறவினர்களிடம் கூறியிருக்கிறார் என்று தெரிகிறது. தை மாதத்திற்குப் பிறகு பரிகார பூஜைகள் நடத்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. ‘ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறது’ என்பார்களே! கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவின் நிழலாக இருந்து தமிழக அரசியலில் கடந்த பல ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இவர் செயல்பட்டுவந்ததை நாடு நன்கறியும். சசிகலாவின் ஒரு நிமிடப் பார்வைக்காக அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் எனப் பலரும் நாள் கணக்கில் காத்திருந்த காலங்கள் உண்டு. ஆனால் என்றைக்கு ஜெயலலிதா இறந்தாரோ அன்றுமுதல் இவருக்கு இறங்குமுகம்தான்.சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைவாசம், எடப்பாடியின் துரோகம், குடும்பத்தினரின் குத்து வெட்டு, தினகரனின் தனி…
Read More
  அண்ணாமலைக்கு எதிராகப் புயல்: கொதிக்கும் கமலாலய சீனியர்கள் அதிரடி அரசியல் செய்துவரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்குக் கட்சிக்குள் எதிர்ப்பு நிலவுகிறது.   ஹைலைட்ஸ்: அண்ணாமலையின் அசுர வேக வளர்ச்சியை மூத்த தலைவர்கள் ரசிக்கவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்ற சீனியர்கள் அண்ணாமலையுடன் இணைந்து செயல்படுவதில்லை. கட்சிக்காகப் பாடுபட்ட மூத்தவர்களை அண்ணாமலை போன்றவர்கள் கொஞ்சமும் மதிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. ‘பொது வெளியில் புலி ; கமலாலயத்தில் எலி’. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இப்படித்தான் வர்ணிக்கிறார்கள் அந்த கட்சியின் மூத்த புள்ளிகள். கூடவே இந்த மாஜி ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக டெல்லிக்கு புகார் கடிதங்களையும் சீனியர்கள் அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரம்பக் கட்டங்களில் பத்தோடு பதினொன்றாவது கட்சியாகத்தான் பாஜகவும் இருந்தது. தமிழிசை தலைவரான பிறகே அந்தக் கட்சி ஜனரஞ்சக வடிவம் எடுத்தது. நாள் தவறாமல் அவர் எதையாவது மீடியாக்களில் கொளுத்திப்போட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்து வந்த முருகனும்…
Read More
கோவையை கைப்பற்றும் திமுக.. பயத்தில் எஸ்.பி வேலுமணி.. ஸ்கெட்ச் போட்ட செந்தில் பாலாஜி.. எம்ஜிஆர் காலம்தொட்டே அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. பின்னர் செல்வி ஜெயலலிதாவின் காலத்தில் கோவை அதிமுகவின் எங்கு கோட்டையாகவே மாறியது. பின்னர் அவரது மறைவிற்குப் பிறகு அதிமுகவிற்கு வலுவான தலைமை இல்லாததால் இனி பெரிய அளவில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும் தமிழகத்தின் தனக்கான தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக பாஜகவும் கொங்கு மண்டலத்திலேயே தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் இல்லாத வகையில் கொங்குவில் பாஜகவின் அரசியல் கணக்கு வேலை செய்ய தொடங்கியுள்ளது. இதே நேரத்தில் அதிமுக-பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரிய அளவில் கொங்கு மண்டலத்தில் இக்கூட்டணி வெற்றியை அறுவடை செய்துள்ளது. திமுக ஆட்சியை…
Read More