07
Mar
மேயர் தேர்வு: யார் பாணியைப் பின்பற்றினார் ஸ்டாலின்?! ` ``தலைவர் கலைஞர் பாணி வேறு... என் பாணி வேறு" என்று கருணாநிதி மறைந்த பிறகு நடந்த தி.மு.க பொதுக்குழுவில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் சொல்லியிருந்தார். அதைத்தான் இன்றளவும் கடைபிடித்து வருகிறார்' என்கிறார்கள். ``தலைவர் கலைஞர் பாணி வேறு... என் பாணி வேறு" என்று கருணாநிதி மறைந்த பிறகு நடந்த தி.மு.க பொதுக்குழுவில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் சொல்லியிருந்தார். அதைத்தான் இன்றளவும் கடைபிடித்து வருகிறார். 9 மாதகால ஆட்சியில் அவ்வளவாக கருணாநிதி சாயல் எங்குமே தென்படவில்லை. மாறாக ஸ்டாலினுக்கு சமீபகாலமாக ஜெயலலிதா சாயல் தென்படத் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள் சிலர். அரசியல் பார்வையாளர் ஒருவர் இதுபற்றி நம்மிடம் விளக்கமாக பேசுகையில், ``ஜெயலலிதாவின் பாணி எப்போதுமே அதிகாரம் என்பது ஒற்றை இடத்தில்தான் இருக்க வேண்டும் என்பதுதான். 32 அமைச்சர்கள் இருந்தபோதும், எவரையுமே முழுமையாக செயல்படவிடாமல் அதிகாரத்தை தன் கையிலேயே வைத்திருந்தார்.…
