சினிமா

இன்பினிட்டி – விமர்சனம்: !

மென்பனி புரொடக்ஷன்ஸின் கீழ் சாய் கார்த்திக் இயக்கிய படம் இன்ஃபினிட்டி. இப்படத்தில் நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப், முனிஷ்காந்த், வினோத் சாகர், ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் இசையமைக்க, சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார்."படத்தின் ஆரம்பத்தில், ஒரு இளம் பெண் எரித்துக் கொல்லப்பட்டார். இதற்கிடையில், பாரில் ஒருவரும் ஒரு எழுத்தாளரும், இரண்டு பேர் கொல்லப்பட்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இதை விசாரிக்க சென்ற போலீஸ் அதிகாரியும் கொல்லப்படுகிறார்.இந்த வழக்கை சிபிஐ அதிகாரி நட்டி விசாரித்து வருகிறார்.பல கட்ட விசாரணைக்கு பின் எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணுக்கும் இந்த தொடர் கொலைகளுக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்தார். .உண்மையான கொலையாளி யார்?ஏன் இத்தனை கொலைகள்?இன்ஃபினிட்டியின் இயக்குனர் சாய் கார்த்திக் சுற்றி வளைக்க முயன்றுள்ளார். மோசமான திரைக்கதை "இன்ஃபினிட்டியின் ட்ரெய்லரைப் பார்த்த பிறகு, ரசிகர்களுக்கு நல்ல விசாரணை த்ரில்லர் படம் கிடைக்கும் என்று உறுதியாக நம்பினர். ஆனால் மந்தமான திரைக்கதை அந்த அபிப்ராயத்தை…
Read More
பம்பர்–விமர்சனம் !

பம்பர்–விமர்சனம் !

பிரமாண்டமான பொருட்செலவு பெரிய நடிகர், நடிகைகள் எதுவும் இல்லாமல் கதையை நம்பி உருவாகும் படங்களின் வரிசையில் ‘பம்பர்.’ நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து திருடுவது, டாஸ்மாக் ‘லாக்’கான நாட்களில் ‘கள்’ளத்தனமாக கல்லா கட்டுவது என்றெல்லாம் குற்றங்களோடு குதூகலமாய் குடும்பம் நடத்துகிற இளைஞன் புலிப்பாண்டி. லோக்கல் போலீஸ் ஏட்டு அவனுக்கு ரொம்பவே சப்போட்டு.அப்புறமென்ன… பணத்துக்காக அதுவரை செய்யாத பெரிய குற்றத்தை செய்யத் தயாராகிறான். அந்த நேரமாகப் பார்த்து புதிதாக வருகிற போலீஸ் எஸ்பி புலிப்பாண்டியையும் அவனுடன் திரியும் கூட்டாளிகளையும் சுற்றி வளைத்து சுளுக்கெடுக்க முயற்சிக்கிறார். புலிப்பாண்டியும் அவனுடைய நண்பர்களும சபரிமலைக்கு மாலை போட்டு, தற்காலிக நல்லவனாகி சபரிமலை ஏறுகிறான். அங்கு தென்பட்ட லாட்டரி வியாபாரியிடம் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்குகிறான். வாங்கியவன் தூக்கக் கலக்கத்தில் அந்த சீட்டை அங்கேயே விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து விடுகிறான்.மாலை போட்ட புண்ணியமோ என்னவோ அவன் வாங்கிய லாட்டரிக்கு 10 கோடி பம்பர் பரிசு விழுகிறது. அந்த கோடிகளை…
Read More
வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா” படத் தலைப்பு “மாவீரா படையாண்டவன்” என பெயர் மாறுகிறது.

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா” படத் தலைப்பு “மாவீரா படையாண்டவன்” என பெயர் மாறுகிறது.

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் "மாவீரா" படத் தலைப்பு "மாவீரா படையாண்டவன்" என பெயர் மாறுகிறது. வி.கே. புரடக்க்ஷன்ஸ் தயாரிக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் ஒரு மாவீரனின் வீர வரலாற்றை வ.கௌதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதை நாயகனாகவும் நடிக்கிறார். அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க "கவிப்பேரரசு" வைரமுத்து பாடல்கள் எழுத எஸ்.கோபிநாத் கேமராவை கையாள "ஸ்டண்ட்" சில்வா சண்டை காட்சியமைக்க தினேஷ் நடனம் அமைக்க பாலமுரளி வர்மன் வசனம் எழுத ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய நிகில் முருகன் மக்கள் தொடர்பை கவனிக்கிறார். விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல் கட்ட படபிடிப்பு நடத்திய நிலையில் விரைவில் "மாவீரா படையாண்டவன்" இரண்டாம் கட்ட படபிடிப்பினை தொடங்கவிருக்கிறது.…
Read More
Infinity Movie Review in Tamil: மென்பனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சாய் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இன்ஃபினிட்டி’. இந்த படத்தில் நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப், முனீஷ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர், ஜீவா ரவி என பலரும் நடித்துள்ளனர். சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளார். ‘இன்ஃபினிட்டி’ படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம். படத்தின் கதை படத்தின் ஆரம்பத்தில் இளம்பெண் ஒருவர் எரித்து கொல்லப்படுகிறார். இதனிடையே பாரில் ஒருவர், எழுத்தாளர் ஒருவர் என இருவர் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இதனை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரியும் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு சிபிஐ அதிகாரியாக உள்ள நட்டியிடம் விசாரணைக்கு வருகிறது. பல கட்ட விசாரணைக்குப் பின் எரித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கும், இந்த தொடர் கொலைக்கும் சம்பந்தம் உள்ளதை கண்டறிகிறார். உண்மையான கொலையாளி யார்? எதற்காக இத்தனைக் கொலை நடந்தது? என சுற்றி வளைத்து சொல்ல முயற்சித்திருக்கிறார் ‘இன்ஃபினிட்டி’…
Read More
காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Sakti Ciinee Productions Pvt Ltd சார்பில், டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர்  சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில், மண் மணக்கும் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’. வரும் ஜூலை 7 அன்று திரைக்குவரள்ள இப்படத்தின் பத்திரிக்கை ஊடகவியலாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. தயாரிப்பாளர் டாக்டர் முருகானந்தம் வீரராகவன் பேசியதாவது… எங்கள்  விழாவிற்கு வருகைக்குத் தந்துள்ள அனைவருக்கும் நன்றி. நான் அறிவியல் துறையில் பணியாற்றி வந்தவன், ஆனாலும் என்னிடம் கலை ஆர்வம் குறையவே இல்லை. எனவே என் துறையில் சாதித்த பிறகு எனக்குப் பிடித்த துறைக்கு வந்துள்ளேன். சினிமா எனக்கு இன்ஸ்பிரேஷன். எனது ஆர்வம் தான் உங்கள் முன் என்னைத் தயாரிப்பாளராக நிறுத்தியுள்ளது.  ‘காடப்புறா கலைக்குழு’ படத்தில் உங்களை ரசிக்க வைக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளது. தொடர்ந்து எங்கள் நிறுவனம்…
Read More

பம்பர் -விமர்சனம்!

பணமே எல்லாமே என்று நினைக்கும் பொறுப்பற்ற இளைஞனான புலிப்பாண்டி, இந்த முடிவினால் தன் வாழ்க்கை எடுக்கும் பெரிய திருப்பத்தை அறியாமல் கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்குகிறான். பம்பர் திரைப்பட விமர்சனம்:திரைக்கதை மெதுவானதாகத் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் சில நிகழ்வுகள் யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், வெற்றியின் உலகத்தில் பார்வையாளர்களை மூழ்கடிக்கும் இயக்குனரின் முயற்சிகள் உண்மையான நோக்கத்தின் தருணங்களைத் தருகின்றன. பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் பொறுப்பற்ற இளைஞனாக புலிப்பாண்டி (வெற்றி) நமக்கு அறிமுகமாகிறார். காந்தி ஜெயந்தியின் போது மது விற்பதன் மூலம் நிறைய சம்பாதிக்கலாம் என்று தனது தாயிடம் ஒரு வணிக யோசனையை முன்மொழிகிறார். ஒரு கட்டத்தில் புலிப்பாண்டியும் அவனது நண்பர்களும் தாங்கள் செய்யாத ஒரு அரசியல்வாதியின் கொலையில் சிக்கிக் கொள்கிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரியிடம் இருந்து தப்பிக்க, சபரிமலைக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். அந்தப் பயணத்தின் போது தன் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படும் என்பது புலிப்பாண்டிக்குத்…
Read More
மதுரை காவல்துறை ஆணையராக இருந்த போது காவல் துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் போலி பாஸ்போர்ட் வழங்கியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல், இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வராகி என்பவரும் கடந்த மே மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை ஆகியவற்றிற்கு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் மதுரை மாநகர காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த போது வெளிநாட்டினருக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன என்றும் அவரது மனைவி நடத்தி வந்த டிராவல் ஏஜென்சி மூலமாக இந்த முறைகேடு நடந்துள்ளது" என்று கூறியிருந்தார். இதனிடையே, போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாக கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கை நாட்டை சேர்ந்த முத்துராமன் மற்றும்…
Read More
“தலைநகரம் 2”  திரைப்பட  நன்றி  அறிவிப்பு விழா !!

“தலைநகரம் 2” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது… வழக்கமான இந்த மாதிரி விழாக்களில் தான் நன்றி சொல்ல வேண்டும் ஆனால் இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. அதனால் இசை விழாவிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுகிறோம். நான் இந்தப்படத்திற்கு எத்தனை தியேட்டர் என துரையிடம் கேட்டேன் அவர் 350க்கும் அதிகம் என்று சொன்ன போது, பயந்துவிட்டேன்.…
Read More
பம்பர் படத்தின் இசை & டிரைலர் வெளியீட்டு விழா !

பம்பர் படத்தின் இசை & டிரைலர் வெளியீட்டு விழா !

வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'பம்பர்'. ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் கே பாக்யராஜ், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொருளாளர் திரு இராதாகிருஷ்ணன், இயக்குநர் முத்தையா, இயக்குநர் கோபிநாத், இயக்குநர் மந்திரமூர்த்தி, இயக்குநர் கணேஷ் கே பாபு, இயக்குநர் அனீஷ், இயக்குநர் ரஃபீக் முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொருளாளர் திரு இராதாகிருஷ்ணன் பேசியதாவது… பம்பர் படம் வெற்றி பெற அனைவரும் வாழ்த்து சொல்லியுள்ளார்கள். தயாரிப்பாளர்கள் காக்கப்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் ஜெயித்தால் அவர்கள் மீண்டும் மீண்டும் படமெடுப்பார்கள். தயாரிப்பாளர்கள் முதலீட்டை எந்த வகையிலும்…
Read More
G.V.பிரகாஷ் குமார் வெளியிட்ட “ இருளில் ராவணன் “ படத்தின் FIRST LOOK போஸ்டர்  !

G.V.பிரகாஷ் குமார் வெளியிட்ட “ இருளில் ராவணன் “ படத்தின் FIRST LOOK போஸ்டர் !

ராவண தேசத்தில் நடைபெறும் கிரைம் திரில்லர் படம் “ இருளில் ராவணன் “ DUNSTAN INTERNATIONAL FILM CORPORATION என்ற பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள படத்திற்கு “ இருளில் ராவணன் என்று வித்யாசமாக பெயரிட்டுள்ளனர்.அதிரடியாக முதல் படத்திலேயே மூன்று வேடங்களில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகிறார் துஷாந் பத்து என்றதுக்குள்ள, ரங்கூன் போன்ற படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் அஜித் கோஷி, பாய்ஸ் ராஜன், சந்திரமௌலி, போராளி திலீபன், விஜய் டிவி முல்லை, யூடியுபர் கட்டெறும்பு ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெமரீஸ், க் போன்ற படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஸ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஆற்றல், சிக்லேட்ஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் R.கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துவருகிறார். அப்பா, போராளி, நாடோடிகள், ஈசன் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த A.L.ரமேஷ் இந்த படத்திற்கும் எடிட்டிங் செய்கிறார். விஜய்,…
Read More