24
Dec
இந்தியர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியாகியுள்ள டிரான்ஸ் யூனியன் சிபில் அறிக்கை, இந்தியர்கள், 3.69 கோடி கிரெடிட் கார்டு கணக்கு பெற்றிருப்பதாக தெரிவிக்கிறது. அதே போல, கிரெடிட் கார்டு பாக்கித்தொகையை செலுத்தாமல் நிலுவையில் கொண்டு செல்வதும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையை தவிர்ப்பதற்கான வழிகள்:கிரெடிட் கார்டு பயன்பாடு வசதியானது, பல அனுகூலங்கள் கொண்டது என்றாலும், அதில் இடர்களும் அதிகம். கிரெடிட் கார்டை சரியாக நிர்வகிக்காமல், இஷ்டம் போல பயன்படுத்தினால், அளவுக்கு அதிகமாக செலவு செய்ய நேரலாம். எனவே, மாத அடிப்படையில் திருப்பி செலுத்தக்கூடிய தொகைக்கு மட்டும் கார்டை பயன்படுத்துவது நல்லது. பொதுவாக கிரெடிட் கார்டு பயனாளிகளால் கார்டு பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இது மாதாந்திர பில்லில் வெளிப்படலாம். இதனால், பகுதி அளவு தொகையை செலுத்தி, சுழலும் கடன் முறைக்கு நிர்ப்பந்திக்கலாம். இதனால் கடன் சுமை அதிகமாகும். சுழலும் கடனை தவிர்க்கும் உறுதி வேண்டும்.கிரெடிட் கார்டு தொகையை…
